All Songs by david

Bavani Selkirar – பவனி செல்கின்றார் ராசா

Bavani Selkirar
பவனி செல்கின்றார் ராசா – நாம்
பாடிப் புகழ்வோம் நேசா

அவனிதனிலே மறிமேல் ஏறி
ஆனந்தம் பரமானந்தம்

1. எருசலேமின் பதியே – சுரர்
கரிசனையுள்ள நிதியே!
அருகில் நின்ற அனைவர் போற்றும்
அரசே, எங்கள் சிரசே!

2. பன்னிரண்டு சீஷர் சென்று – நின்று
பாங்காய் வஸ்திரம் விரிக்க
நன்னயம்சேர் மனுவின் சேனை
நாதம் கீதம் ஓத

3. குருத்தோலைகள் பிடிக்க – பாலர்
கும்புகும்பாகவே நடிக்க
பெருத்த தொனியாய் ஓசன்னாவென்று
போற்ற மனம் தேற்ற

Hosanna Paduvom – ஓசன்னா பாடுவோம்

Hosanna Paduvom
ஓசன்னா பாடுவோம், ஏசுவின் தாசரே,
உன்னதத்திலே தாவீது மைந்தனுக்கு ஓசன்னா!

1. முன்னும் பின்னும் சாலேம் நகர் சின்னபாலர் பாடினார்
அன்று போல இன்றும் நாமும் அன்பாய்த் துதி பாடுவோம்

2. சின்ன மறி மீதில் ஏறி அன்பர் பவனி போனார்
இன்னும் என் அகத்தில் அவர் என்றும் அரசாளுவார்

3. பாவமதைப் போக்கவும் இப்பாவியைக் கைதூக்கவும்
பாசமுள்ள ஏசையாப் பவனியாகப் போகிறார்

4. பாலர்களின் கீதம் கேட்டுப் பாசமாக மகிழ்ந்தார்
ஜாலர் வீணையோடு பாடித் தாளைமுத்தி செய்குவோம்

5. குருத்தோலை ஞாயிற்றில் நம் குருபாதம் பணிவோம்
கூடி அருள் பெற்று நாமும் திரியேகரைப் போற்றுவோம்

Hosannaa Paaduvom, Yesuvin Thaasarae,
Unnathathilae Thaaveethu Mainthanuku Hosannaa!

1. Munnum Pinnum Saalaem Nagar Sinnapaalar Paatinaar
Andru Pola Intrum Naamum Anbaai Thuthi Paaduvom

2. Sinna Mari Meethil Yeri Anbar Pavani Ponaar
Innum En Akathil Avar Endrum Arasaaluvaar

3. Paavamathai Pokkavum Ippaaviyai Kaithookkavum
Paasamulla Aesaiyaa Pavaniyaaka Pokiraar

4. Paalarkalin Geetham Kaettu Paasamaaka Makilnthaar
Jaalar Veennaiyodu Paatith Thaalaimuthi Seikuvom

5. Kurutholai Njaayitil Nam Kurupaatham Pannivom
Kooti Arul Pettu Naamum Thiriyaekarai Pottuvom

Kurusinil Thongiye – குருசினில் தொங்கியே

Kurusinil Thongiye
குருசினில் தொங்கியே குருதியும் வடிய
கொல்கதா மலைதனிலே – நம்
குருவேசு சுவாமி கொடுந் துயர் பாவி
கொள்ளாய் கண் கொண்டு

1. சிரசினில் முள்முடி உறுத்திட அறைந்தே
சிலுவையில் சேர்த்ததையோ – தீயர்
திருக்கரங் கால்களில் ஆணிகளடித்தார்
சேனைத்திரள் சூழ – குருசினில்

2. பாதகர் நடுவில் பாவியினேசன்
பாதகன் போல் தொங்க – யூத
பாதகர் பரிகாசங்கள் பண்ணிப்
படுத்திய கொடுமைதனை – குருசினில்

3. சந்திர சூரிய சகல வான் சேனைகள்
சகியாமல் நாணுதையோ – தேவ
சுந்தர மைந்த னுயிர் விடுகாட்சியால்
துடிக்கா நெஞ்சுண்டோ – குருசினில்

4. ஈட்டியால் சேவகன் எட்டியே குத்த
இறைவன் விலாவதிலே – அவர்
தீட்டிய தீட்சைக் குருதியும் ஜலமும்
திறந்தூற்றோடுது பார் – குருசினில்

5. எருசலேம் மாதே மறுகி நீயழுது
ஏங்கிப் புலம்பலையோ – நின்
எருசலையதிபன் இள மணவாளன்
எடுத்த கோல மிதோ – குருசினில்

Kurusinil Thongiye Kuruthiyum Vatiya
Kolkothaa Malaithanilae Nam
Kuruvaesu Suvaami Kodunthuyar Paavi
Kollaay Kann Konndu

1. Sirasinil Mulmuti Uruththida Arainthae
Siluvaiyil Serththaiyo – Theeyar
Thirukkarang Kaalkalil Aannikalatiththaar
Senaiththiral Soola – Kurusinil

2. Paathakar Naduvil Paaviyinaesan
Paathakanpol Thonga – Yootha
Paathakar Parikaasangal Pannnni
Patiththiya Kodumaithanai – Kurusinil

3. Santhirasooriya Sakala Vaan Senaikal
Sakiyamaal Naanuthaiyo – Deva
Sunthara Mainthanuyir Vidukaatchiyaal
Thutikkaaka Nenjunntoo – Kurusinil

4. Eettiyaal Sevakan Ettiyae Kuththa
Iraivan Vilaavathilae – Avar
Theettiya Theetchai Kuruthiyum Jalamum
Thiranthoorthoduthu Paar – Kurusinil

5. Yerusalaem Maathae Maruthi Neeyaluthu
Aengip Pulampalaiyo – Nin
Erusalaiyathipan Ila Manavaalaan
Eduththa Kolamitho – Kurusinil

Yesuvin Namame Thirunamam – இயேசுவின் நாமமே திருநாமம்

Yesuvin Namame Thirunamam
இயேசுவின் நாமமே திருநாமம் – முழு
இருதயத்தால் தொழுவோம் நாமும்

1. காசினியில் அதனுக் கிணையில்லையே – விசு
வாசித்த வர்களுக்குக் குறையில்லையே – இயேசுவின்

2. இத்தரையில் மெத்தவதி சயநாமம் – அதை
நித்தமுந் தொழுபவர்க்கு ஜெய நாமம் – இயேசுவின்

3. உத்தம மகிமைப் பிரசித்த நாமம் – இது
சத்திய விதேய மனமொத்த நாமம் – இயேசுவின்

4. விண்ணவரும் பண்ணுடன் கொண்டாடும் நாமம்- கடி
கண்டதிர்ந்து பயந்தோடு தேவநாமம் – இயேசுவின்

5. பட்சமுடன் ரட்சைசெயு முபகாரி – பெரும்
பாவப்பிணிகள் நீக்கும் பரிகாரி – இயேசுவின்

Yaesuvin naamamae thirunaamam muzhu
Irudhayathaal thozhuvoam naamum

Kaasiniyil adhanu kinaiyillaiyae
Visuvaasithavargaluku kuraiyillaiyae – Yaesu

Iththaraiyil metha adhisayanaamam
Adhai nithamun thozhubavarku jeyanaamam – Yaesu

Uththama magimai pirasitha naamam
Idhu saththiya vidhaeya manamoththa naamam – Yaesu

Vinnavarum pannudan kondaadum naamam
Nammai andidumpaei payandhoadum dhaevanaamam – Yaesu

Patchamulla rachai seiyum ubagaari
Perum paava pinigal neekkum parigaari – Yaesu

Rasa Rasa Pitha – ராச ராச பிதா

Rasa Rasa Pitha
ராச ராச பிதா மைந்த தேகலாவுசதா நந்த
யேசு நாயகனார் சொந்த மேசியா நந்தனே!

ஜெகதீசு ரேசுரன் சுக நேச மீசுரன் மக – ராச

1. மாசிலா மணியே! மந்த்ர ஆசிலா அணியே! சுந்தர
நேசமே பணியே, தந்திர மோசமே தணியே!
நிறைவான காந்தனே! இறையான சாந்தனே! மறை – ராச

2. ஆதியந்த மில்லான் அந்த மாதினுந்தியிலே, முந்த
வேத பந்தனமாய் வந்த பாதம் வந்தனமே,
பத ஆமனாமனா! சுதனாமனாமனா! சித – ராச

3. மேன்மையா சனனே, நன்மை மேவுபோசனனே தொன்மை
பான்மை வாசனனே, புன்மை பாவ மோசனனே
கிருபா கரா நரா! சருவேசுரா, பரா ஸிரீ – ராச

4. வீடு தேடவுமே, தந்தை நாடு கூடவுமே, மைந்தர்
கேடு மூடவுமே, விந்தையோடு பாடவுமே
நரவேட மேவினான், சுரராடு கோவினான், பர – ராச

Amen Alleluia – ஆமென் அல்லேலூயா

Amen Alleluia
ஆமென் அல்லேலூயா! மகத்துவத் தம்பராபரா,
ஆமென் அல்லேலூயா! ஜெயம்! ஜெயம்! அனந்த ஸ்தோத்திரா

தொல்லை அனாதி தந்தார் வந்தார் இறந்
துயிர்த் தெழுந்தாரே உன்னதமே! – ஆமென்

1. வெற்றிகொண்டார்ப் பரித்து – கொடும்வே
தாளத்தைச் சங்கரித்து – முறித்து
பத்ராசனக் கிறிஸ்து – மரித்து
பாடுபட்டுத்தரித்து முடித்தார் – ஆமென்

2. சாவின் கூர் ஒடிந்து – மடிந்து
தடுப்புச் சுவர் இடிந்து – விழுந்து
ஜீவனே விடிந்து – தேவாலயத்
திரை இரண்டாய்க் கிழிந்து ஒழிந்தது – ஆமென்

3. வேதம் நிறைவேற்றி – மெய் தோற்றி
மீட்டுக் கரையேற்றி – பொய் மாற்றி
பாவிகளைத் தேற்றி – கொண்டாற்றி
பத்ராசனத் தேற்றி வாழ்வித்தார் – ஆமென்

Vaarum Naam Ellarum – வாரும் நாம் எல்லாரும்

Vaarum Naam Ellarum
வாரும் நாம் எல்லாரும் கூடி
மகிழ் கொண்டாடுவோம் – சற்றும்
மாசிலா நம் இயேசு நாதரை
வாழ்த்திப் பாடுவோம் ஆ!

1. தாரகம் அற்ற ஏழைகள் தழைக்க நாயனார் – இந்தத்
தாரணி யிலே மனுடவ தாரம் ஆயினார் – வாரும்

2. மா பதவியை இழந்து வறியர் ஆன நாம் – அங்கே
மாட்சி உற வேண்டியே அவர் தாழ்ச்சி ஆயினார் – வாரும்

3. ஞாலமதில் அவர்க்கிணை நண்பர் யாருளர் – பாரும்
நம் உயிரை மீட்கவே அவர் தம் உயிர் விட்டார் – வாரும்

4. மா கொடிய சாவதின் வலிமை நீக்கியே – இந்த
மண்டலத்தி னின்றுயிர்த் தவர் விண்டலஞ் சென்றார் – வாரும்

5. பாவிகட் காய்ப் பரனிடம் பரிந்து வேண்டியே – அவர்
பட்சம் வைத்துறும் தொழும் பரை ரட்சை செய்கிறார் – வாரும்

Vaarum Naam Ellaarum Kooti
Makil Kondaaduvom – Sattum
Maasilaa Naam Yesu Naatharai
Vaalththi Paaduvom Aa!

1. Thaarakam Atta Aelaikal Thalaikka Naayanaar – Inthath
Thaaranni Yilae Manudava Thaaram Aayinaar – Vaarum

2. Maa Pathaviyai Ilanthu Variyar Aana Naam – Angae
Maatchi Ura Vaenntiyae Avar Thaalchchi Aayinaar – Vaarum

3. Njaalamathil Avarkkinnai Nannpar Yaarular – Paarum
Nam Uyirai Metkavae Avar Tham Uyir Vittar – Vaarum

4. Maa Kotiya Saavaththin Valimai Neekkiyae – Intha
Manndalaththi Nintuyirth Thavar Vinndalanj Sentar – Vaarum

5. Paavikat Kaayp Paranidam Parinthu Vaenntiyae – Avar
Patcham Vaiththurum Tholum Parai Ratchamo Seykiraar – Vaarum

Anandame Jeya Jeya – ஆனந்தமே ஜெயா ஜெயா

Anandame Jeya Jeya
ஆனந்தமே! ஜெயா! ஜெயா!
அகமகிழ்ந்தனைவரும் பாடிடுவோம்

ஞானரட்சகர் நாதர் நமை – இந்த
நாள்வரை ஞாலமதினில் காத்தார் – புகழ் – ஆனந்தமே

1. சங்கு கனம் வளர் செங்கோலரசிவை
தளராதுள கிறிஸ்தானவராம்
எங்கள் ரட்சகரேசு நமை – வெகு
இரக்கங் கிருபையுடன் ரட்சித்ததால் – புகழ் – ஆனந்தமே

2. முந்து வருட மதினில் மனுடரில் வெகு
மோசகஸ்திகள் தனிலேயுழல
தந்து நமக்குயிருடையுணவும் – வெகு
தயவுடன் இயேசு தற்காத்ததினால் – புகழ் – ஆனந்தமே

3. பஞ்சம் பசிக்கும் பட்டயத்துக்கும் வெகு கொடும்
பாழ் கொள்ளை நோய் விஷதோஷத்திற்கும்
தஞ்ச ரட்சகர் தவிர்த்து நமை – இத்
தரை தனில் குறை தணித்தாற்றியதால் – புகழ் – ஆனந்தமே

Ennalume Thuthipai – எந்நாளுமே துதிப்பாய்

Ennalume Thuthipai
எந்நாளுமே துதிப்பாய் – என்னாத்துமாவே நீ
எந்நாளுமே துதிப்பாய்
இந்நாள் வரையிலே உன்னாதனார் செய்த
எண்ணில்லா நன்மைகள் யாவு மறவாது- எந்நாளுமே

1. பாவங்கள் எத்தனையோ – நினையாதிருந்தாருன்
பாவங்கள் எத்தனையோ
பாழான நோயை அகற்றிக் குணமாக்கிப்
பாரினில் வைத்த மா தயவை நினைத்து – எந்நாளுமே

2. எத்தனையோ கிருபை – உன்னுயிர்க்குச் செய்தாரே
எத்தனையோ கிருபை
நித்தமுனை முடி சூட்டினதுமன்றி
நித்தியமாயுன் ஜீவனை மீட்டதால் – எந்நாளுமே

3. நன்மையாலுன் வாயை – நிறைத்தாரே பூர்த்தியாய்
நனமையாலுன் வாயை
உன் வயது கழுகைப்போல் பலங்கொண்டு
இன்னும் இளமை போலாகவே செய்ததால் – எந்நாளுமே

4. பூமிக்கும் வானத்துக்கும் – உள்ள தூரம் போலவே
பூமிக்கும் வானத்துக்கும்
சாமி பயமுள்ளவர் மேல் அவர் அருள்
சாலவும் தங்குமே சத்தியமேயிது – எந்நாளுமே

5. மன்னிப்பு மாட்சிமையாம் – மா தேவனருளும்
மன்னிப்பு மாட்சிமையாம்
எண்ணுவாயோ கிழக்கும் மேற்கும் தூரமே
மண்ணில் உன்பாவன் அகன்றத் தூரமே – எந்நாளுமே

6. தந்தை தன பிள்ளைகட்கு – தயவோ டிரங்கானோ
தந்தை தன பிள்ளைகட்கு
எந்த வேளையும் அவரோடு தங்கினால்
சொந்தம் பாராட்டியே தூக்கிச் சுமப்பாரே – எந்நாளுமே

Ennaalumae thudhippaai – ennaathumaavae, nee
Ennaalumae thudhippaai
Innaal varaiyilae unnadhanaar seidha
Ennillaa nanmaigal yaavum maravaadhu – Ennaalumae

1. Paavangal ethanaiyoa – ninaiyaa dhirundhaarun
Paavangal ethanaiyoa
Paazhaana noayai agatri gunamaakki
Paarinil vaitha magaa thayavai enni – Ennaalumae

2. Ethanaiyoa kirubai – unnuyirkku seidhaarae
Ethanaiyoa kirubai
Nithamunai mudi soottinadhumandri
Nithiyamaai un jeevanai meettadhaal – Ennaalumae

3. Nanmaiyaalun vaayai – niraithaarea poorthiyaai
Nanmaiyaalun vaayai
Un vayadhu kazhugaippoal balangondu
Oangu ilamaipoal aagave seidhadhaal – Ennaalumae

4. Boomikkum vaanathukkum – ulla dhooram poalavae
Boomikkum vaanathukkum
Saami bayamullavar mael avar arul
Saalavum thangumae sathiyamae idhu – Ennaalumae

5. Mannippu maatchmaiyaam – maadhaevan arulum
Mannippu maatchimaiyaam
Ennuvaayoa kizhakku maerkin thooramae
Mannil unpaavam agandrathooramae – Ennaalumae

6. Thandhaithan pillaikadku – thayavoadirangaanoa
Thandhaithan pillaikadku
Endha vaelaiyum avaroadu thanginaal
Sondham paaraattiyae thookki sumappaarae – Ennaalumae

Immattum Jeevan Thantha – இம்மட்டும் ஜீவன் தந்த

Immattum Jeevan Thantha
இம்மட்டும் ஜீவன் தந்த கர்த்தாவை அத்தியந்த
எண்ணமாய் ஸ்தோத்தரிப்போமாக

நம்மை ரட்சிக்க வந்து தம்மைப் பலியாய்த் தந்து
நற்சுகம் மேவவும் அற்புதமாகவும்

1. காலம் சொல் போல் கழியும் தண்ணீரைப் போல் வடியும்
கனாவைப் போலேயும் ஒழியும்
வாலிபமும் மறையும் சீலம் எல்லாம் குறையும்
மண்ணின் வாழ்வொன்றும் நிற்க மாட்டாது
கோலப் பதுமைக்கும் நீர்க்குமிழிக்கும் புகைக்குமே
கொண்ட உலகத்தில் அண்ட பரண் எமைக்
கண்டு கருணைகள் விண்டு தயவுடன் – இம்

2. பலவித இக்கட்டையும் திகில்களையும் கடந்தோம்
பரம பாதையைத் தொடர்ந்தும்
வலிய தீமையை வென்றோம் நலியும் ஆசையைக் கொன்றோம்
வஞ்சர் பகைக்கும் தப்பி நின்றோம்
கலி என்றதெல்லாம் விண்டோம் கர்த்தாவின் மீட்பைக் கண்டோம்
காய்ந்த மனதொடு பாய்ந்து விழு கணம்
சாய்ந்து கெடவும் ஆராய்ந்து நெறியுடன் – இம்

3. சன சேதம் வருவிக்கும் கேடுகட்கோர் முடிவு
தந்து நொறுக்கினதைக் கட்டிக்
கன சபையை ஆதரித் தன்பாய் ஆசீர்வதித்துக்
கண்ணோக்கி எல்லார் மேல் அன்றன்று
தினமும் அருள் உதிக்கச் செய்து தமது தேவ
சிந்தை யினோடதி விந்தையதாய் உயிர்
மைந்தனால் எங்களை இந்த விநோதமாய் – இம்