All Songs by david

Karaiyeri Umathandai – கரையேறி உமதண்டை

Karaiyeri Umathandai
1. கரையேறி உமதண்டை
நிற்கும்போது ரட்சகா
உதவாமல் பலனற்று
வெட்கப்பட்டுப் போவேனோ

ஆத்மா ஒன்றும் இரட்சிக்காமல்
வெட்கத்தோடு ஆண்டவா
வெறுங்கையனாக உம்மைக்
கண்டுகொள்ளல் ஆகுமா

2. ஆத்துமாக்கள் பேரில் வாஞ்சை
வைத்திடாமல் சோம்பலாய்க்
காலங்கழித்தோர் அந்நாளில்
தூக்கிப்பார் நிர்ப்பந்தராய்

3. தேவரீர் கை தாங்க சற்றும்
சாவுக்கஞ்சிக் கலங்கேன்
ஆயினும் நான் பெலன் காண
உழைக்காமற் போயினேன்

4. வாணாள் எல்லாம் வீணாளாகச்
சென்று போயிற்றே ஐயோ
மோசம் போனேன் விட்ட நன்மை
அழுதாழும் வருமோ

5. பக்தரே உற்சாகத்தோடு
எழும்பிப் பிரகாசிப்பீர்
ஆத்துமாக்கள் யேசுவண்டை
வந்துசேர உழைப்பீர்

Manthayil Sera Aadugale – மந்தையில் சேரா ஆடுகளே

Manthayil Sera Aadugale
மந்தையில் சேரா ஆடுகளே
எங்கிலும் கோடி கோடி உண்டே
சிந்தையில் ஆன்ம பாரம் கொண்டே
தேடுவோம் வாரீர் திருச்சபையே
மந்தையில் சேரா ஆடுகளே

அழைக்கிறார் இயேசு
அவரிடம் பேசு
நடத்திடுவார்

1. காடுகளில் பல நாடுகளில் என்
ஜனம் சிதறுண்டு சாகுவதா
பாடுபட்டேன் அதற்காகவுமே
தேடுவோர் யார் என் ஆடுகளை

2. சொல்லப்பட்டிராத இடங்கள் உண்டு
எனை அங்கு கொண்டு செல்ல இங்கு ஆட்கள் உண்டு
அழைப்புப் பெற்றோர் யாரும் புறப்படுவீர்
இது ஆண்டவர் கட்டளை கீழ்ப்படிவீர்

3. எனக்காய்ப் பேசிட நாவு வேண்டும்
என்னைப்போல் அலைந்திட கால்கள் வேண்டும்
என்னில் அன்புகூர ஆட்கள் வேண்டும்
இதை உன்னிடம் கேட்கிறேன் தர வேண்டும்

Ennai Undakiya En Devathi Devan – என்னை உண்டாக்கிய

Ennai Undakiya En Devathi Devan
என்னை உண்டாக்கிய என் தேவாதி தேவன்
அவர் தூங்குவது மில்லை உறங்குவதுமில்லை (2)

1. என்மேல் அவர் கண்ணை வைத்து ஆலோசனை சொல்லுவார்
சத்தியத்தின் பாதையிலே நித்தமும் நடத்துவார்
பரிசுத்த ஆவியால் உள்ளத்தை நிரப்புவார்
பரிசுத்தர் பரிசுத்தர் அவர் பெயரே – என்னை

2. பெலவீன நாட்களிலே பெலன் தந்து தாங்குவார்
பலவித சோதனையில் ஜெயம் நமக்களிப்பார்
ஆபத்துக் காலத்தில் அரணான கோட்டையும்
கேடகமும் துருகமும் பெலன் அவரே – என்னை

3. ஆவியான தேவனுக்கு ரூபமொன்றுமில்லையே
ரூபமொன்றுமில்லையதால் சொரூபமொன்றுமில்லையே
வாஞ்சையுள்ள ஆத்துமாவின் இருதயந்தன்னிலே
வார்த்தையாலே பேசுகின்ற ஆண்டவர் இவர் – என்னை

Manavalan Karthar Yesu – மணவாளன் கர்த்தர் இயேசு

Manavalan Karthar Yesu
மணவாளன் கர்த்தர் இயேசு வருகின்றாரே
மணவாட்டி சந்திக்க ஆயத்தம்தானா?

பிரியமே நீ ரூபவதி
எழுந்து வா உன் நேசரைச் சந்திக்கவே – மணவாளன்

1. குருவிகள் பாடும் சத்தம் எங்கும் கேட்குதே
காட்டுப்புறா சப்தம் நம் தேசம் நிறையுதே
அத்திமரம் காய்காய்க்க காலம் வந்தததே
திராட்சைக் கோடி பூ பூத்து வாசம் பெருகுதே – என் பிரியமே

2. மாரிக்காலம் சென்றது மழையும் வந்தது
பூமியிலே புஷ்பங்கள் பூத்துக் குலுங்குதே
கன்மலையின் சிகரங்களில் தங்கும் புறாவே
கர்த்தர் இயேசு வரும் நாளை சொல்லிப் பாடிடு – என் பிரியமே

3. சாரோனின் ரோஜாவாம் கர்த்தர் இயேசு
பள்ளத்தாக்கின் லீலியாம் பரமன் இயேசு
தாகம் தீர்க்கும் ஜீவ நதி கர்த்தர் இயேசு
பாவம் போக்கும் பரிகாரி பரமன் இயேசு – என் பிரியமே

Elunthar Iraivan – எழுந்தார் இறைவன்

Elunthar Iraivan
எழுந்தார் இறைவன் – ஜெயமே ஜெயமெனவே
எழுந்தார் இறைவன்

1. சாவின் பயங்கரத்தை ஒழிக்கக் – கெட்ட
ஆவியின் வல்லமையை அழிக்க – இப்
பூவின் மீதுசபை செழிக்க – எழுந்தார்

2. செத்தவர் மீண்டுமே பிழைக்க – உயர்
நித்திய ஜீவனை அளிக்கத் – தேவ
பக்தர் யாவரும் களிக்க – எழுந்தார்

3. விழுந்தவரைக் கரையேற்றப் – பாவத்
தழுந்து மனுக்குலத்தை மாற்ற – விண்ணுக்
கெழுந்து நாம் அவரையே போற்ற – எழுந்தார்

4. கருதிய காரியம் வாய்க்கத் – தேவ
சுருதி மொழிகளெல்லாம் காக்க – நம்
இரு திறத்தாரையும் சேர்க்க – எழுந்தார்

5. ஏதுந் தீவினை செய்யாத் தூயன் – எப்
போதுமே நன்மைபுரி நேயன் – தப்
பாது காத்திடும் நல்லாயன் – எழுந்தார்

Elunthaar Iraivan – Jeyamae Jeyamenavae
Elunthaar Iraivan

Chorus

1. Saavin Payangaraththai Olikkak – Ketta
Aaviyin Vallamaiyai Alikka – Ip
Poovinmeethu Sapai Selikka – Elunthaar

2. Seththavar Meenndumae Pilaikka – Uyar
Niththiya Jeevanai Alikkath – Deva
Pakthar Yaavarum Kalikka — Elunthaar

3. Vilunthavarai Karaiyaetta – Paavath
Thelunthu Manukkulaththai Maatta – Vinnnuk
Kelunthu Naam Avaraiyae Potta – Elunthaar

4. Karuthiya Kaariyam Vaaykkath – Thaeva
Suruthi Molikalellaam Kaakka – Nam
Iru Thiraththaaraiyum Serkka – Elunthaar

5. Yethuthivenai Seiyathuvan – Ep
Pothumae Nanmaipuri Noyan – Thap
Pakathidum Nallayan – Elunthaar

Innalil Yesu Nathar – இந்நாளில் ஏசுநாதர்

Innalil Yesu Nathar
1. இந்நாளில் ஏசுநாதர் உயிர்த்தார் கம்பீரமாய்
இகல் அலகை சாவும் வென்றதிக வீரமாய்

மகிழ் கொண்டாடுவோம்
மகிழ் கொண்டாடுவோம்

2. போர்ச்சேவகர் சமாதி சூழ்ந்து காவலிருக்க
புகழார்ந் தெழுந்தனர் தூதன் வந்து கல்மூடிப் பிரிக்க – மகிழ்

3. அதிகாலையில் சீமோனோடு யோவானும் ஓடிட
அக்கல்லறையினின் றேகினர் இவர் ஆய்ந்து தேடிட – மகிழ்

4. பரிசுத்தனை அழிவுகாண வொட்டீர் என்று முன்
பகர் வேதச் சொற்படி பேதமற் றெழுந்தார் திருச்சுதன் – மகிழ்

5. இவ்வண்ணமாய் பரன் செயலை எண்ணி நாடுவோம்
எல்லோருமே களி கூர்ந்தினி துடன் சேர்ந்து பாடுவோம் – மகிழ்

1. Innaalil Yesunaathar Uyirththaar Kampeeramaai
Ikal Alakai Saavum Ventathika Veeramaai

Magil Konndaaduvom
Magil Konndaaduvom

2. Porchevakar Samaathi Soolnthu Kaavalirukka
Pukalaar Thelunthanar Thoothan Vanthu Kalmooti Pirikka – Magil

3. Athikaalaiyil Seemonodu Yovaanum Otida
Akkallaraiyinin Raekinar Ivar Aaynthu Thaetida – Magil

4. Parisuththanai Alivukaana Vottir Entu Mun
Pakar Veda Sorpadi Paethamaryelunthaar Thiruchchuthan – Magil

5. Ivvannnamaay Paran Seyalai Ennnni Naaduvom
Ellorumae Kali Koornthini Thudan Sernthu Paaduvom – Magil

Jehovah Nissi – யெகோவா நிசியை ஏற்றிப் பாடுவோம்

Jehovah Nissi
யெகோவா நிசி (4)
யெகோவா நிசியை ஏற்றிப் பாடுவோம்
எங்கள் கொடி வெற்றிக் கொடியே அல்லேலூயா (2)

1. கர்த்தர் துணை நின்று யுத்தம் செய்வாரே
கலங்கி நிற்க காரணங்கள் இல்லையே
கைகளை தளர்த்திடாமல் தாங்கியே
கர்த்தர் இயேசு சத்திய ஆவி நிற்கிறார்
கர்த்தர் நல்ல யுத்த வீரரே – நம்

2. நமக்கிருக்கும் இந்த பெலன் போதுமே
நாதன் இயேசு அனுப்புவதால் போவோமே
பட்டயமோ புயபெலமோ தேவையா
பரம தேவ ஆவி நம்மில் இல்லையா
ஜீவ தேவ சேனை அல்லவா – நம்

3. அல்லேலூயா தேவ நாமம் வாழ்கவே
அல்லேலூயா இயேசு ராஜா வருகவே
அல்லேலூயா ஆவி புகழ் ஓங்கவே
அல்லேலூயா தேவ படை வெல்கவே
வாழ்க வாழ்க வாழ்க வாழ்கவே – என்றும்

Nam Devan Anbullavar – நம் தேவன் அன்புள்ளவர்

Nam Devan Anbullavar
நம் தேவன் அன்புள்ளவர் நம் தேவன் பரிசுத்தர்
நம் தேவன் நீதிபரர் நமக்காக ஜீவன் தந்த இயேசு அவரே

1. நன்மை ஏதும் நம்மில் ஒன்றும் இல்லையே
என்ற போதும் நம்மை நேசித்தாரே
ஆ..அந்த அன்பில் மகிழ்வோம்
அன்பரின் பாதம் பணிவோம்

2. அத்திமரம் துளிர் விடாமல் போனாலும்
திராட்சைச் செடி கனி கொடாமற் போனாலும்
ஆ..அவர் காயம் நோக்குவோம்
அதுவே என்றும் போதுமே

3. வான மீதில் இயேசு இறங்கி வருவார்
தேவ தூதர் போல மகிமை அடைவோம்
ஆ … எங்கள் தேவா வாருமே
அழைத்து வானில் செல்லுமே

4. அல்லேலூயா கீதம் நாம் என்றும் பாடுவோம்
ஆண்டவரோடென்றும் நாம் ஆளுகை செய்வோம்
ஆ..அந்த நாள் நெருங்குதே
நினைத்தால் நெஞ்சம் பொங்குதே

Paavikku Pugalidam – பாவிக்கு புகலிடம் இயேசு

Paavikku Pugalidam
பாவிக்கு புகலிடம் இயேசு இரட்சகர்
பாரினில் பலியாக மாண்டாரே

பரிசுத்தரே பாவமானாரே
பாரமான சிலுவை சுமந்தவரே

1. காட்டிக் கொடுத்தான் முப்பது வெள்ளிக்
காசுக்காகவே கர்த்தன் இயேசுவை
கொலை செய்யவே கொண்டு போனாரே
கொல்கொதா மலைக்கு இயேசுவை – பாவி

2. கள்ளர் மத்தியில் ஒரு கள்ளன் போல்
குற்றமற்ற கிறிஸ்தேசு தொங்கினார்
பரிகாசமும் பசிதாகமும்
படுகாயமும் அடைந்தாரே – பாவி

3. கால்கள் கைகளில் ஆணி பாய்ந்திட
கிரீடம் முட்களில் பின்னி சூடிட
இரத்த வெள்ளத்தில் கர்த்தர் தொங்கினார்
இதைக்காணும் உள்ளம் தாங்குமோ – பாவி

4. உலகத்தின் ரட்சகர் இயேசுவே
உயிர் கொடுத்தார் உயிர்த்தெழுந்தார்
தம்மை நம்பினால் உம்மைக் கைவிடார்
தளராமல் நம்பி ஓடி வா – பாவி

Paavikku Pukalidam Yesu Iratchakar
Paarinil Paliyaaka Maanndaarae

Parisuththarae Paavamaanaarae
Paaramaana Siluvai Sumanthavarae

1. Kaatti Koduththaan Muppathu Velli
Kaasukkaakavae Karththan Yesuvai
Kolai Seyyavae Konndu Ponaarae
Kolkothaa Malaikku Yesuvai – Paavi

2. Kallar Maththiyil Oru Kallan Pol
Kuttamatta Kiristhaesu Thonginaar
Parikaasamum Pasithaakamum
Padukaayamum Atainthaarae – Paavi

3. Kaalkal Kaikalil Aanni Paaynthida
Kireedam Mutkalil Pinni Sootida
Iraththa Vellaththil Karththar Thonginaar
Ithaikkaanum Ullam Thaangumo – Paavi

4. Ulakaththin Ratchakar Yesuvae
Uyir Koduththaar Uyirththelunthaar
Thammai Nampinaal Ummaik Kaividaar
Thalaraamal Nampi Oti Vaa – Paavi

Yerukindrar Thalladi – ஏறுகின்றார் தள்ளாடி

Yerukindrar Thalladi
ஏறுகின்றார் தள்ளாடித் தவழ்ந்து களைப்போடே
என் இயேசு குருசை சுமந்தே
என் நேசர் கொல்கொதா மலையின்மேல்
நடந்தே ஏறுகின்றார்

1. கன்னத்தில் அவன் ஓங்கி அடிக்கச்
சின்னப் பிள்ளைபோல் ஏங்கி நின்றார்
அந்தப் பிலாத்தும் கையைக் கழுவி
ஆண்டவரை அனுப்புகின்றான் – ஏறு

2. மிஞ்சும் பெலத்தால் ஈட்டி எடுத்தே
நெஞ்சைப் பிளந்தான் ஆ! கொடுமை
இரத்தமும் நீரும் ஓடி வருதே
இரட்சகரை நோக்கியே பார் – ஏறு

3. இந்தப்பாடுகள் உந்தன் வாழ்வுக்காய்ச்
சொந்தப்படுத்தி ஏற்றுக்கொண்டார்
நேசிக்கின்றாயோ இயேசு நாதரை
நேசித்து வா குருசெடுத்தே – ஏறு

4. சேவல் கூவிடும் மூன்று வேளையும்
சொந்த குருவை மறுதலித்தான்
ஓடி ஒளியும் பேதுருவையும்
தேடி அன்பாய் நோக்குகின்றார் – ஏறு

5. பின்னே நடந்த அன்பின் சீஷன்போல்
பின்பற்றி வா சிலுவை வரை
காடியைப் போல் கசந்திருக்கும்
கஷ்டங்களை அவரிடம் சொல் – ஏறு

6. செட்டைகளின் கீழ் சேர்த்தனைத்திடும்
சொந்தத் தாயின் அன்பிதுவே
எருசலமே! எருசலமே!
என்றழுதார் கண் கலங்க – ஏறு

Yerukindrar Thalladi
Aerukintar Thallaatith Thavalnthu Kalaippotae
En Yesu Kurusai Sumanthae
En Naesar Kolkothaa Malaiyinmael
Nadanthae Aerukintar

1. Kannaththil Avan Ongi Atikkach
Sinnap Pillaipol Aengi Nintar
Anthap Pilaaththum Kaiyaik Kaluvi
Aanndavarai Anuppukintan – Yeru

2. Minjum Pelaththaal Eetti Eduththae
Nenjaip Pilanthaan Aa! Kodumai
Iraththamum Neerum Oti Varuthae
Iratchakarai Nnokkiyae Paar – Yeru

3. Inthappaadukal Unthan Vaalvukkaaych
Sonthappaduththi Aettukkonndaar
Naesikkintayo Yesu Naatharai
Naesiththu Vaa Kuruseduththae – Yeru

4. Seval Koovidum Moontu Vaelaiyum
Sontha Kuruvai Maruthaliththaan
Oti Oliyum Paethuruvaiyum
Thaeti Anpaay Nnokkukintar – Yeru

5. Pinnae Nadantha Anpin Seeshanpol
Pinpatti Vaa Siluvai Varai
Kaatiyaip Pol Kasanthirukkum
Kashdangalai Avaridam Sol – Yeru

6. Settakalin Geel Serththanaiththidum
Sonthath Thaayin Anpithuvae
Erusalamae! Erusalamae!
Entaluthaar Kann Kalanga – Yeru