All Songs by david

Kalvariye Kalvariye – கல்வாரியே கல்வாரியே

Kalvariye Kalvariye
கல்வாரியே கல்வாரியே
கல் மனம் உருக்கிடும் கல்வாரியே – என்

1. பாவி துரோகி சண்டாளன் நானாயினும்
பாதகம் போக்கிப் பரிவுடன் இரட்சித்த – கல்வாரியே

2. பாவியை மீட்கவே நாயகன் இயேசு தம்
ஜீவனின் இரத்தத்தைச் சிந்தின உன்னத – கல்வாரியே

3. நாதன் எனக்காக ஆதரவற்றோராய்ப்
பாதகர் மத்தியில் பாதகன் போல் தொங்கும் – கல்வாரியே

4. முள்முடி சூடியே கூர் ஆணி மீதிலே
கள்ளனை போல என் நாயகன் தொங்கிடும் – கல்வாரியே

5. சர்வம் படைத்தாளும் சொர்லோக நாயகன்
கர்மத்தின் கோலமாய் நிற்பதைக் காண்பேனோ – கல்வாரியே

6. எண்ணும் நன்மை ஏதும் என்னிலே இல்லையே
பின்னை ஏன் நேசித்தீர் என்னை என் பொன் நாதா – கல்வாரியே

7. இவ்வித அன்பை நான் எங்குமே காணேனே
எவ்விதம் இதற்கீடு ஏழை நான் செய்குவேன் – கல்வாரியே

Kalvariye Kalvariye
Kalvaariyae Kalvaariyae
Kal Manam Urukkidum Kalvaariyae – En

1. Paavi Thuroki Sanndaalan Naanaayinum
Paathakam Pokkip Parivudan Iratchiththa – Kalvaariyae

2. Paaviyai Meetkavae Naayakan Yesu Tham
Jeevanin Iraththaththaich Sinthina Unnatha – Kalvaariyae

3. Naathan Enakkaaka Aatharavatroraai
Paathakar Maththiyil Paathakan Pol Thongum – Kalvaariyae

4. Mulmuti Sootiyae Koor Aanni Meethilae
Kallanai Pola En Naayakan Thongidum – Kalvaariyae

5. Sarvam Pataiththaalum Sorloka Naayakan
Karmaththin Kolamaay Nirpathaik Kaannpaeno – Kalvaariyae

6. Ennnum Nanmai Aethum Ennilae Illaiyae
Pinnai Aen Naesiththeer Ennai En Pon Naathaa – Kalvaariyae

7. Ivvitha Anpai Naan Engumae Kaanneenae
Evvitham Ithargeedu Aelai Naan Seykuvaen – Kalvaariyae

Aaviyanavare Aaviyanavare – ஆவியானவரே ஆவியானவரே

Aaviyanavare Aaviyanavare
ஆவியானவரே ஆவியானவரே
பரிசுத்த ஆவியானவரே
அன்பின் ஆவியே
அபிஷேகம் இன்று தாருமே

1. பாத்திரம் நிரம்பி வழிய வேண்டுமே
கன்மலை தடாகமாக வேண்டுமே
கற்பாறை நீரூற்றாக வேண்டுமே
வரப்புகள் யாவும் தணிய வேண்டுமே – ஆவியானவரே

2. ஜனத்தின்மேல் அசைவாட வேண்டுமே
ஜனத்தின் பாவம் உணர்த்த வேண்டுமே
ஒழுங்கின்மை மாற வேண்டுமே
வெறுமை நிறைவாக வேண்டுமே – ஆவியானவரே

3. நாவிலே அக்கினி வேண்டுமே
உள்ளத்திலே ஜீவ நதி ஓடவே
பெருங்காற்று முழக்கம் வேண்டுமே
இருக்குமிடம் அசைய வேண்டுமே – ஆவியானவரே

4. அந்நிய பாஷைகளைப் பேசியே
மண்ணிலே சாட்சியாக வாழுவேன்
விண்ணிலே உம்மை நான் சந்திக்க
புண்ணியரே என்னையும் நிரப்புமே – ஆவியானவரே

5. வல்லமை வரங்கள் வேண்டுமே
சொல்லவும் வாக்கு வேண்டுமே
கள்ளங்கபடு மாற வேண்டுமே
உள்ளத்திலே தேவ அன்பு ஊற்றுமே – ஆவியானவரே

6. உள்ளத்திலே ஆறுதல் வேண்டுமே
வாழ்விலே மாறுதல் வேண்டுமே
ஊழியத்தில் எழுப்புதல் வேண்டுமே
பாழிடங்கள் அரண்மனையாகவே – ஆவியானவரே

Nee Mathram Mathi – നീ മാത്രം മതി

Nee Mathram Mathi
1. യാഹോവ്വാ യിരെ ദാദാവം ദൈവം
നീ മാത്രം മതി എനിക്ക്
യാഹോവ്വാ രാഫാ സൌഖ്യ ദായകന്‍
തന്‍ അടിപ്പിണരാല്‍ സൌഖ്യം
യാഹോവ്വാ ശമ്മ കൂടെ ഇരിക്കും
നല്‍കും എന്‍ ആവശ്യങ്ങള്‍

നീ മാത്രം മതി
നീ മാത്രം മതി
നീ മാത്രം മതി എനിക്ക്

2. യാഹോവ്വാ എലോഹിം സൃഷ്ടാവം ദൈവം
നിന്‍ വചനത്താല്‍ ഉലവായെല്ലാം
യാഹോവ്വാ ഇല്യോന്‍ അത്യുന്നതന്‍ നീ
നിന്നെപ്പോലെ മറ്റാരുമില്ല
യാഹോവ്വാ ശാലോം എന്‍ സമാധാനം
നല്‍കി നിന്‍ ശാന്തിയെന്നില്‍

Jehovah Jirah Dadavam Deivam
Nee Maathram Mathi Enikku
Jehovah Raphah Soukkya Daayakan
Than Adippinaraal Soukkyam
Jehovah Shamma Koode Irikkum
Nalkum En Aavasyangal

Nee Maathram Mathi
Nee Maathram Mathi
Nee Maathram Mathi Enikku

Jehovah Elohim Srishtaavam Daivam
Nin Vachanathal Ulavayellam
Jehovah Elyon Athyunnathan Nee
Ninneppole Mattarumilla
Jehovah Shaalom En Samaadhanam
Nalki Nin Shaanthiyennil

Varavenum Enatharasae – வரவேணும் எனதரசே

varavenum enatharasae
வரவேணும் எனதரசே
மனுவேல், இஸ்ரேல் சிரசே
அருணோதயம் ஒளிர் பிரகாசா
அசரீரி ஒரே சரு வேசா

1. வேதா கருணாகரா மெய்யான பராபரா
ஆதார நிராதரா அன்பான சகோதரா
தாதாவும் தாய் சகலமும் நீயே
நாதா, உன் தாபரம் நல்குவாயே – வரவேணும்

2. படியோர் பவ மோசனா, பரலோக சிம்மாசனா
முடியாதருள் போசனா, முதன் மாமறை வாசனா
இடையர் குடிலிடை மேவி எழுந்தாய்
இமையவர் அடி தொழு மேன்மையின் எந்தாய் – வரவேணும்

3. வானோர் தொழும் நாதனே, மறையாகம போதனே
கானாவின் அதீதனே, கலிலேய வினோதனே
ஞானாகரமே, நடு நிலை யோவா
நண்பா, உனத நன்மையின் மகா தேவா! – வரவேணும்

Yesu Kristuvin Anbu – இயேசு கிறிஸ்துவின் அன்பு

Yesu Kristuvin Anbu
இயேசு கிறிஸ்துவின் அன்பு என்றும் மாறாதது
இயேசு கிறிஸ்துவின் மாறா கிருபை என்றும் குறையாதது

1. உன் மீறுதல்கட்காய் இயேசு காயங்கள் பட்டார்
உன் அக்கிரமங்கட்காய் இயேசு நொறுக்கப்பட்டார்
உனக்காகவே அடிகள் பட்டார்
உன்னை உயர்த்த தன்னைத் தாழ்த்தினார் – இயேசு கிறிஸ்துவின்

2. பாவி என்றுன்னை அவர் தள்ளவே மாட்டார்
ஆவலாய் உன்னை இயேசு அழைக்கிறாரே
தயங்கிடாதே தாவி ஓடி வா
தந்தை இயேசுவின் சொந்தம் கொள்ள வா – இயேசு கிறிஸ்துவின்

Yesu Kristuvin Anbu
Entum Maaraathathu
Yesu Kiristhuvin Maaraa Kirupai
Entum Kuraiyaathathu

1. Un Meeruthalkalkaay Yesu Kaayangal Pattar
Un Akkiramangalkaay Yesu Norukkappattar
Unakkaakavae Avar Adikkappattar
Unnai Uyarththa Thannai Thaalththinaar – (2) – Yesu

2. Paavi Entennai Avar Thallavae Maattar
Aavalaai Unnai Alaikkiraarae
Thayangidaathae Thaavi Otivaa
Thanthai Yesuvin Sontham Kollavaa – (2) – Yesu

Kalvari Anbai Ennidum Velai – கல்வாரி அன்பை எண்ணிடும்

Kalvari Anbai Ennidum Velai
கல்வாரி அன்பை எண்ணிடும் வேளை
கண்கள் கலங்கிடுதே
கர்த்தா உம் பாடுகள் இப்போதும் நினைத்தால்
நெஞ்சம் நெகிழ்ந்திடுதே

கெத்சமனே பூங்காவிலே
கதறி அழும் ஓசை
எத்திசையும் தொனிக்கிறதே
எங்கள் மனம் திகைக்கின்றதே
கண்கள் கலங்கிடுதே – கல்வாரி

சிலுவையில் மாட்டி வதைத்தனரோ
உம்மை செந்நிறம் ஆக்கினரோ
அப்போதும் அவர்காய் வேண்டினீரே
அன்போடு அவர்களை கண்டீரன்றோ
அப்பா உம் மனம் பெரிதே – கல்வாரி

எம்மையும் உம்மைபோல் மாற்றிடவே
உம் ஜீவன் தந்தீரன்றோ
என் தலை தரைமட்டும் தாழ்த்துகின்றேன்
தந்து விட்டேன் அன்பின் கரங்களிலே
ஏற்று என்றும் நடத்தும் – கல்வாரி

Kalvaari anbai ennidum vaelai
Kangal kalangidudhae
Karththaa um paadugal ippoadhum ninaithaal
Nenjam negizhndhidudhae

Gethsamanae poongaavilae
Kadhari azhum oasai
Eththisaiyum dhonikkindradhae
Engal manam thigaikkindradhae
Kangal kalangidudhae – Kalvaari

Siluvaiyil maatti vadhaithanaroa
Ummai senniram aakkinaroa
Appoadhum avarkaai vaendineerae
Anboadu avargalai kandeerandroa
Appaa um manam peridhae – Kalvaari

Emmaiyum ummaipoal maatridavae
Um jeevan thandheerandroa
En thalai tharaimattum thaazhthukindraen
Thandhu vittaen anbin karangalilae
Aetru endrum nadathum – Kalvaari

Thanthen Yennai Yesuve – தந்தேன் என்னை ஏசுவே

Thanthen Yennai Yesuve
தந்தேன் என்னை ஏசுவே
இந்த நேரமே உமக்கே
உந்தனுக்கே ஊழியம் செய்ய
தந்தேன் என்னை தாங்கியருளும்

1. ஜீவ காலம் முழுதும்
தேவ பணி செய்திடுவேன்
பூவில் கடும் போர் புரிகையில்
காவும் உந்தன் கரந்தனில் வைத்து – தந்தேன்

2. உந்தன் சித்தம் நான் செய்வேன்
எந்தன் சித்தம் ஒழித்திடுவேன்
எந்த இடம் எனக்கு கட்டினும்
ஏசுவே அங்கே இதோ போகிறேன் – தந்தேன்

3. ஒன்றுமில்லை நான் ஐயா
உம்மால் அன்றி ஒன்றும் செய்யேன்
அன்று சீடருக்கு அளித்த ஆவியால்
இன்றே அடியேனை நிரப்பும் – தந்தேன்

4. உலகோர் என்னை நெருக்கிப்
பலமாய் யுத்தம் செய்திடினும்
நலமாய் சர்வ ஆயுதம் பூண்டு
நானிலத்தினில் நாதா வெல்லுவேன் – தந்தேன்

5. கஷ்டம், நஷ்டம் வந்தாலும்
துஷ்டர் கூடி சூழ்ந்திட்டாலும்
அஷ்டதிக்கும் ஆளும் தேவனே
அடியேன் உம்மில் அமரச் செய்திடும் – தந்தேன்

Vilaintha Palanai Arupparillai – விளைந்த பலனை

Vilaintha Palanai Arupparillai

விளைந்த பலனை அறுப்பாரில்லை
விளைவின் நற்பலன் வாடிடுதே
அறுவடை மிகுதி ஆளோ இல்லை
அந்தோ! மனிதர் அழிகின்றாரே

அவர் போல் பேசிட நாவு இல்லை
அவர் போல் அலைந்திட கால்கள் இல்லை
எண்ணிலடங்கா மாந்தர் சத்தம்
உந்தன் செவியினில் தொனிக்கலையோ – விளைந்த

1. ஆத்ம இரட்சண்யம் அடையாதவர்
ஆயிரம் ஆயிரம் அழிகின்றாரே
திறப்பின் வாசலில் நிற்பவர் யார்?
தினமும் அவர் குரல் கேட்கலையோ – விளைந்த

2. ஆத்தும தரிசனம் கண்டிடுவாய்
ஆண்டவர் வாக்கினை ஏற்றிடுவாய்
விரைந்து சென்று சேவை செய்வாய்
விளைவின் பலனை அறுத்திடுவாய் – விளைந்த

3. ஒரு மனம் ஒற்றுமை ஏக சிந்தை
சபைதனில் விளங்கிட செயல்படுவாய்
நிமிர்ந்து நிற்கும் தூண்களைப் போல்
நிலைவரமாய் என்றும் தாங்கி நிற்பாய் – விளைந்த

4. ஆவியின் வரங்கள் ஒன்பதனை
ஆவலுடன் நீயும் பெற்றிடுவாய்
சபையின் நன்மைக்காய் உபயோகிப்பாய்
சந்ததம் சபையினில் நிலைத்திருப்பாய் – விளைந்த

5. தேவனின் சேவையில் பொறுப்பெடுப்பாய்
உந்தனின் பங்கினை ஏற்றிடுவாய்
கர்த்தர் நாட்டின தோட்டத்திலே
கடைசிவரை நீயும் கனி கொடுப்பாய் – விளைந்த

Parama Kuyavanae Ennai Vanaiyumae – பரம குயவனே என்னை

Parama Kuyavanae Ennai Vanaiyumae
பரம குயவனே என்னை வனையுமே
உம் சித்தம் போல் என்னை வனையுமே (2)

உமக்காக என்னை வனையுமே
களிமண்ணான என்னை வனைந்திடுமே

1. உம் கரத்தாலே மண்ணை பிசைந்து
மனிதனை உருவாக்கினீர் (2)
எந்தனையும் தொட்டு உம் சாயலாக வனையும்
உம்மை போல மாற்றிடுமே – என்னை – பரம

2. உமக்குகந்ததாய் உடைத்து என்னை
உம்முடைமை ஆக்கிடுமே (2)
விருப்பம் போல என்னை உந்தன் கரத்தால்
அருமையாக வனைந்திடுமே – உமக்கு – பரம

3. உமது சித்தத்தின் மையத்தில் என்னை
வைத்து என்றும் வழி நடத்திடும் (2)
உந்தன் சித்தம் செய்ய என்னை தத்தம் செய்தேன்
முழுமையாக அர்ப்பணம் செய்தேன் – என்னை – பரம

Parama Kuyavanae Ennai Vanaiyumae
Um Sithatham Pol Ennai Vanayumae(2)

Umakkaaga Ennai Vanayumae
Kalimanaana Ennai Vanaindhidumae(2)

1. Um Karaththalae Mannai Pisaindhu
Manidhanai Uruvaakkineer (2)
Endhanayum Thottu Um Saayalaaga Vanayum
Ummai Pola Maatridumae
Ennai Ummai Pola Maatridumae – Ennai – Parama

2. Umakkugandhathai Udaiththu Ennai
Um udamai Aakkidumae (2)
Viruppam Pola Ennai
Thiruththum Undhan Karathal
Arumayaaga Vanaindhidumae
Umakku Arumayaaga Vanaindhidumae

3. Umadhu Siththathin Maiyathil Ennai
Vaithu Endrum Vazhinadathidum(2)
Undhan Siththam Seiya
Ennai Thatham Seidhaen
Muzhumayaaga Arpanam Seidhaen
Ennai Muzhumayaaga Arpanam Seidhaen

Enthan Ullam Thangum

Enthan Ullam Thangum Yesu Naayaga
Unthan Veedaai Kollum Yesu Naayaga
Yesu Naayaga Yesu Naayaga
Unthan Veedaai Kollum Yesu Naayaga

1. Maamsa Kiriyai Pokkum Yesu Naayaga
Kuzhanthai Ullam Aakkum Yesu Naayaga
Yesu Naayaga Yesu Naayaga
Kuzhanthai Ullam Aakkum Yesu Naayaga

2. Thirumba Vizhathu Paarum Yesu Naayaga
Kirubai Izhathu Kaarum Yesu Naayaga
Yesu Naayaga Yesu Naayaga
Kirubai Izhathu Kaarum Yesu Naayaga

3. Ennai Umakku Thanthen Yesu Naayaga
Ini Naan Alla Neerey Yesu Naayaga
Yesu Naayaga Yesu Naayaga
Ini Naan Alla Neerey Yesu Naayaga

1. எந்தன் உள்ளம் தங்கும் இயேசு நாயகா
உந்தன் வீடாய் கொள்ளும் இயேசு நாயகா
இயேசு நாயகா இயேசு நாயகா
உந்தன் வீடாய் கொள்ளும் இயேசு நாயகா

2. மாம்ச கிரியை போக்கும் இயேசு நாயகா
குழந்தை உள்ளம் ஆக்கும் இயேசு நாயகா
இயேசு நாயகா இயேசு நாயகா
குழந்தை உள்ளம் ஆக்கும் இயேசு நாயகா

3. திரும்ப விழாது பாரும் இயேசு நாயகா
கிருபை இழாது காரும் இயேசு நாயகா
இயேசு நாயகா இயேசு நாயகா
கிருபை இழாது காரும் இயேசு நாயகா

4. என்னை உமக்குத் தந்தேன் இயேசு நாயகா
இனிநான் அல்ல நீரே இயேசு நாயகா
இயேசு நாயகா இயேசு நாயகா
இனி நான் அல்ல நீரே இயேசு நாயகா