All Songs by david

Vanthen Mel Irangum – வந்தென் மேல் இறங்கும்

Vanthen Mel Irangum
வந்தென் மேல் இறங்கும் வல்ல ஆவியே
தந்தேன் என்னை இன்று உந்தன் கையிலே
சுட்டெரிக்கும் வல்ல அக்கினியாலே
சுத்திகரித்தென்னை மாற்றிடுவீரே

வல்லமை தாரும் வரங்கள் தாரும்
தாகம் தீர்த்து அபிஷேகியும்

1. சத்தியத்தில் நடத்தும் சத்தியாவியே
கேள்விப்பட்ட யாவையும் சொல்பவரே
கீழ்ப்படிவோர் பெற்றிடும் உந்தன் வல்லமை
சீக்கிரமாய் பெற்றிட அருள் தாருமே

2. காத்திருப்போம் உந்தன் சமூகத்திலே
உன்னதத்தின் பெலனால் நிரப்பும் மட்டும்
வாக்குத்தத்தம் செய்த உந்தன் ஆவியை
வல்லமையாய் பெற்றிட அருள் தாருமே

3. சாட்சியாக மாற உந்தன் பெலத்தால்
மாற்றுவீரே என்னை உந்தன் ஆவியால்
தந்தேன் என்னை முற்றும் உந்தன் சொந்தமாய்
வரங்களால் பெற்றிட அருள் தாருமே

Naanum En Veetaarumovendral – நானும் என் வீட்டாருமோவென்றால்

Naanum En Veetaarumovendral
நானும் என் வீட்டாருமோவென்றால்
கர்த்தரையே சேவிப்போம்
நீயும் சேவிப்பாயா – நீயும் சேவிப்பாயா?

1. கர்த்தரையே சேவிப்பது
ஆகாத தென்று கண்டால்
யாரை நீ சேவிப்பாய் யென்பதை
இன்றே தீர்மானம் செய்வாய்

2. அடிமையான நம்மையுமே
தேவாதி தேவன் மீட்டார்
மாபெரும் அடையாளங்கள் செய்திட்ட
கர்த்தரை சேவிப்பாயா?

3. நம் பாதையில் காப்பாற்றியே
கர்த்தர் நடத்தினாரே
கர்த்தர் தந்த ஆசீர் யாவும் கண்டு
நன்றியாய் சேவிப்பாயா?

4. நன்மையான ஈவுகளை
தேவாதி தேவன் தந்தார்
கீழ்படிந்தே அவர் சப்தம் கேட்டு
சாட்சியாய் ஜீவிப்பாயா?

Naanum en veetaarumovendral
Kartharaiye sevippom
neeyum sevippaayaa – neeyum sevippaayaa

Kartharaiye sevippathu
aagaatha thendru kandaal
yaarai nee sevippaai enbathai
indre theermaanam seivaai

Adimaiyaana nammaiyume
thevaathi thevan meetaar
maaperum adaiyaalangalai seithitta
kartharai sevippaayaa?

Nam paadhaiyil kaapaattriye
karththar nadathinaare
karththar thantha asir yaavum kandu
nadriyaai sevippaayaa?

Nanmaiyaana eevugalai
thevaathi thevan thanthaar
Keezhpadinthe avar saptham kettu
saatchiyaai jeevippaayaa?

Kirubaiyethe Deva Kirubaiyethe – கிருபையிதே தேவ கிருபையிதே

Kirubaiyethe Deva Kirubaiyethe

கிருபையிதே தேவ கிருபையிதே
தாங்கி நடத்தியதே
இயேசுவிலே பொன் நேசரிலே
அகமகிழ்ந்தே நாம் ஆனந்திப்போம்

1. ஆருயிர் அன்பராய் எங்….களுடனே
ஜீவியப் பாதையிலே – இயேசு பரன்
அனுதினமும் வழி நடந்தே
அவரது நாமத்தில் காத்தனரே – கிருபையிதே

2. வார்த்தையினால் அவர் தீர்த்….தார் எந்தன்
வியாதியும் வேதனையும் வைத்தியராய்
இயேசுவல்லால் சார்ந்திடவோ
இகமதில் வேறெமக் காருமில்லை – கிருபையிதே

3. அன்பின் அக….லமும் நீ….ளம் உயரமும்
ஆழமும் அறிந்துணர – அனுக்கிரகித்தார்
கிறிஸ்துவிலே ஒரு மனையாய்
சிருஷ்டித்தே நிறுத்தினார் அவர் சுதராய் – கிருபையிதே

4. நல்ல போராட்டம் போரா….டி ஜெயித்தே
நித்திய ஜீவனை நாம் – பற்றிடவே
விசுவாசத்தில் நிலைத்திடுவோம்
அசையாது அழைப்பினைக் காத்துக் கொள்வோம் – கிருபையிதே

5. ஆவியும் மணவாட்டியும்… ஆவலுடன்
வாருமென்றழைக்கின்றாரே – வாருமென்பீர்
சீயோனே நீ பார் உனக்காய்
நாயகன் இயேசு தாம் வெளிப்படுவார் – கிருபையிதே

6. எத்தனையோ பரிசுத்தர்கள் மறைந்தே
மகிமை சேர்த்தனரே – பூரணமாய்
காத்தனரே கர்த்தர் எமை
கருணையினால் தூய சேவை செய்ய – கிருபையிதே

Kirubaiyidhe Deva Kirubaiyithe
Thaangi Nadatthiyathe
Yesuvile Pon Nesarile
Agamagizhnthe Naam Aananthippom

1. Aaruyir Anbaraai Eng…aludane
Jeeviya Paadhayile – Yesu Paran
Anuthinamum Vazhi Nadanthe
Avarathu Naamathil Kaathanare – Kirubayidhe

2. Vaartthayinaal Avar Theerth…thaar Endhan
Vyathiyum Vedhanayum Vaithiyaraai
Yesuvallaal Saarnthidavo
Igamadhil Veremak Kaarumillai – Kirubayidhe

3. Anbin Aga…lamum Nee…lam Uyaramum
Aazhamum Arinthunara – Anukkrakitthaar
Kiristhuvile Oru Manayaai
Sirushtitthe Niruthinaar Avar Sudharaai – Kirubayidhe

4. Nalla Poraattam Poraa…di Jeyitthe
Nithiya Jeevanai Naam Pattridave
Visuvaasatthil Nilaitthiduvom
Asaiyaathu Azhaippinai Kaathukkolvom – Kirubayidhe

5. Aaviyum Manavaattiyum… Aavaludan
Vaarumendrazhaikkindraare – Vaarumenpeer
Siyone Nee Paar Unakkaai
Naayagan Yesu Thaam Velippaduvaar – Kirubayidhe

6. Eththanaiyo Parisuththargal Marainthe
Magimai Serththanare – Pooranamaai
Kaaththanare Karththar Emai
Karunaiyinaal Thooya Sevai Seiyya – Kirubayidhe

 

Sthothiram Paadiye Potriduven – ஸ்தோத்திரம் பாடியே

Sthothiram Paadiye Potriduven
ஸ்தோத்திரம் பாடியே போற்றிடுவேன்
தேவாதி தேவனை ராஜாதி ராஜனை
வாழ்த்தி வணங்கிடுவேன்

1. அற்புதமான அன்பே – என்னில்
பொற்பரன் பாராட்டும் தூய அன்பே
என்றும் மாறா தேவ அன்பே
என்னுள்ளம் தங்கும் அன்பே – ஸ்தோத்திரம்

2. ஜோதியாய் வந்த அன்பே – பூவில்
ஜீவன் தந்து என்னை மீட்ட அன்பே
தியாகமான தேவ அன்பே
திவ்விய மதுர அன்பே – ஸ்தோத்திரம்

3. மாய உலக அன்பை – நம்பி
மாண்ட என்னைக் கண்டழைத்த அன்பே
என்னை வென்ற தேவ அன்பே
என்னில் பொங்கும் பேரன்பே – ஸ்தோத்திரம்

4. ஆதரவான அன்பே – நித்தம்
அன்னை போல் என்னையும் தாங்கும் அன்பே
உன்னத மா தேவ அன்பே
உள்ளங் கவரும் அன்பே – ஸ்தோத்திரம்

5. வாக்கு மாறாத அன்பே – திரு
வார்த்தை உரைத்தென்னைத் தேற்றும் அன்பே
சர்வ வல்ல தேவ அன்பே
சந்ததம் ஓங்கும் அன்பே – ஸ்தோத்திரம்

Intha Kaalam Pollathathu – இந்த காலம் பொல்லாதது

Intha Kaalam Pollathathu
இந்த காலம் பொல்லாதது
உன்னைக் கர்த்தர் அழைக்கிறார்
நீ வாழும் உலகம் தான்
அது வாடகை வீடு தான்

1. உன்னை ரட்சிக்க உன் கூடவே இருக்கிறேன்
என்று வாக்கு அளித்தவர்
இன்னும் காத்து வருகிறார்

2. வாலிப நாட்களில் உன் தேவனைத் தேடிவா
சாத்தான் களத்தினில் போராட
ஜெய வீரனாய் திகழ வா

3. பாவத்தின் சம்பளம் எரிநரகம் தான் திண்ணமே
சத்திய தேவனின் கிருபையோ
நித்திய ஜீவனை அருளுமே

4. காலமோ முடியுதே தேவ ராஜ்ஜியம் நெருங்குதே
மனம் திரும்பி நீ வாழவே
மன்னன் இயேசுன்னை அழைக்கிறார்

Kathiravan Thondrum – கதிரவன் தோன்றும் காலையிதே

Kathiravan Thondrum
கதிரவன் தோன்றும் காலையிதே
புதிய கிருபை பொழிந்திடுதே – நல்
துதி செலுத்திடுவோம் இயேசுவுக்கே

1. வான சுடர்கள் கானக ஜீவன்
வாழ்த்திடவே பரன் மாட்சிமையே
காற்று பறவை ஊற்று நீரோடை
கர்த்தருக்கே கவி பாடிடுதே – கதிரவன்

2. காட்டில் கதறி கானக ஓடை
கண்டடையும் வெளி மான்களைப் போல்
தாகம் தீர்க்கும் ஜீவத் தண்ணீராம்
தற்பரன் இயேசுவைத் தேடிடுவோம் – கதிரவன்

3. கர்த்தர் கிருபை என்றென்றும் ஓங்க
கர்த்தரே நல்லவர் என்றுரைப்போம்
கேருபீன்கள் மத்தியில் வாழும்
கர்த்தர் இக்காலையில் எழுந்தருள்வார் – கதிரவன்

4. எந்தன் உதடும் உந்தனைப் போற்றும்
என் கரங்கள் குவிந்தே வணங்கும்
பாக்கியம் நான் கண்டைந்தேனே
யாக்கோபின் தேவனே என் துணையே – கதிரவன்

5. காலை விழிப்பே கர்த்தரின் சாயல்
கண்களும் செவியும் காத்திருக்கும்
பாதம் அமர்ந்து வேதமே ருசித்து
கீதங்கள் பாடியே மகிழ்ந்திடுவேன் – கதிரவன்

6. வானம் பூமி யாவையும் படைத்தீர்
வானம் திறந்தே தோன்றிடுவீர்
ஆவல் அடங்க என்னையும் அழைக்க
ஆத்தும நேசரே வந்திடுவீர் – கதிரவன்

Kalvariye Kalvariye – கல்வாரியே கல்வாரியே

Kalvariye Kalvariye
கல்வாரியே கல்வாரியே
கல் மனம் உருக்கிடும் கல்வாரியே – என்

1. பாவி துரோகி சண்டாளன் நானாயினும்
பாதகம் போக்கிப் பரிவுடன் இரட்சித்த – கல்வாரியே

2. பாவியை மீட்கவே நாயகன் இயேசு தம்
ஜீவனின் இரத்தத்தைச் சிந்தின உன்னத – கல்வாரியே

3. நாதன் எனக்காக ஆதரவற்றோராய்ப்
பாதகர் மத்தியில் பாதகன் போல் தொங்கும் – கல்வாரியே

4. முள்முடி சூடியே கூர் ஆணி மீதிலே
கள்ளனை போல என் நாயகன் தொங்கிடும் – கல்வாரியே

5. சர்வம் படைத்தாளும் சொர்லோக நாயகன்
கர்மத்தின் கோலமாய் நிற்பதைக் காண்பேனோ – கல்வாரியே

6. எண்ணும் நன்மை ஏதும் என்னிலே இல்லையே
பின்னை ஏன் நேசித்தீர் என்னை என் பொன் நாதா – கல்வாரியே

7. இவ்வித அன்பை நான் எங்குமே காணேனே
எவ்விதம் இதற்கீடு ஏழை நான் செய்குவேன் – கல்வாரியே

Kalvariye Kalvariye
Kalvaariyae Kalvaariyae
Kal Manam Urukkidum Kalvaariyae – En

1. Paavi Thuroki Sanndaalan Naanaayinum
Paathakam Pokkip Parivudan Iratchiththa – Kalvaariyae

2. Paaviyai Meetkavae Naayakan Yesu Tham
Jeevanin Iraththaththaich Sinthina Unnatha – Kalvaariyae

3. Naathan Enakkaaka Aatharavatroraai
Paathakar Maththiyil Paathakan Pol Thongum – Kalvaariyae

4. Mulmuti Sootiyae Koor Aanni Meethilae
Kallanai Pola En Naayakan Thongidum – Kalvaariyae

5. Sarvam Pataiththaalum Sorloka Naayakan
Karmaththin Kolamaay Nirpathaik Kaannpaeno – Kalvaariyae

6. Ennnum Nanmai Aethum Ennilae Illaiyae
Pinnai Aen Naesiththeer Ennai En Pon Naathaa – Kalvaariyae

7. Ivvitha Anpai Naan Engumae Kaanneenae
Evvitham Ithargeedu Aelai Naan Seykuvaen – Kalvaariyae

Aaviyanavare Aaviyanavare – ஆவியானவரே ஆவியானவரே

Aaviyanavare Aaviyanavare
ஆவியானவரே ஆவியானவரே
பரிசுத்த ஆவியானவரே
அன்பின் ஆவியே
அபிஷேகம் இன்று தாருமே

1. பாத்திரம் நிரம்பி வழிய வேண்டுமே
கன்மலை தடாகமாக வேண்டுமே
கற்பாறை நீரூற்றாக வேண்டுமே
வரப்புகள் யாவும் தணிய வேண்டுமே – ஆவியானவரே

2. ஜனத்தின்மேல் அசைவாட வேண்டுமே
ஜனத்தின் பாவம் உணர்த்த வேண்டுமே
ஒழுங்கின்மை மாற வேண்டுமே
வெறுமை நிறைவாக வேண்டுமே – ஆவியானவரே

3. நாவிலே அக்கினி வேண்டுமே
உள்ளத்திலே ஜீவ நதி ஓடவே
பெருங்காற்று முழக்கம் வேண்டுமே
இருக்குமிடம் அசைய வேண்டுமே – ஆவியானவரே

4. அந்நிய பாஷைகளைப் பேசியே
மண்ணிலே சாட்சியாக வாழுவேன்
விண்ணிலே உம்மை நான் சந்திக்க
புண்ணியரே என்னையும் நிரப்புமே – ஆவியானவரே

5. வல்லமை வரங்கள் வேண்டுமே
சொல்லவும் வாக்கு வேண்டுமே
கள்ளங்கபடு மாற வேண்டுமே
உள்ளத்திலே தேவ அன்பு ஊற்றுமே – ஆவியானவரே

6. உள்ளத்திலே ஆறுதல் வேண்டுமே
வாழ்விலே மாறுதல் வேண்டுமே
ஊழியத்தில் எழுப்புதல் வேண்டுமே
பாழிடங்கள் அரண்மனையாகவே – ஆவியானவரே

Nee Mathram Mathi – നീ മാത്രം മതി

Nee Mathram Mathi
1. യാഹോവ്വാ യിരെ ദാദാവം ദൈവം
നീ മാത്രം മതി എനിക്ക്
യാഹോവ്വാ രാഫാ സൌഖ്യ ദായകന്‍
തന്‍ അടിപ്പിണരാല്‍ സൌഖ്യം
യാഹോവ്വാ ശമ്മ കൂടെ ഇരിക്കും
നല്‍കും എന്‍ ആവശ്യങ്ങള്‍

നീ മാത്രം മതി
നീ മാത്രം മതി
നീ മാത്രം മതി എനിക്ക്

2. യാഹോവ്വാ എലോഹിം സൃഷ്ടാവം ദൈവം
നിന്‍ വചനത്താല്‍ ഉലവായെല്ലാം
യാഹോവ്വാ ഇല്യോന്‍ അത്യുന്നതന്‍ നീ
നിന്നെപ്പോലെ മറ്റാരുമില്ല
യാഹോവ്വാ ശാലോം എന്‍ സമാധാനം
നല്‍കി നിന്‍ ശാന്തിയെന്നില്‍

Jehovah Jirah Dadavam Deivam
Nee Maathram Mathi Enikku
Jehovah Raphah Soukkya Daayakan
Than Adippinaraal Soukkyam
Jehovah Shamma Koode Irikkum
Nalkum En Aavasyangal

Nee Maathram Mathi
Nee Maathram Mathi
Nee Maathram Mathi Enikku

Jehovah Elohim Srishtaavam Daivam
Nin Vachanathal Ulavayellam
Jehovah Elyon Athyunnathan Nee
Ninneppole Mattarumilla
Jehovah Shaalom En Samaadhanam
Nalki Nin Shaanthiyennil

Varavenum Enatharasae – வரவேணும் எனதரசே

varavenum enatharasae
வரவேணும் எனதரசே
மனுவேல், இஸ்ரேல் சிரசே
அருணோதயம் ஒளிர் பிரகாசா
அசரீரி ஒரே சரு வேசா

1. வேதா கருணாகரா மெய்யான பராபரா
ஆதார நிராதரா அன்பான சகோதரா
தாதாவும் தாய் சகலமும் நீயே
நாதா, உன் தாபரம் நல்குவாயே – வரவேணும்

2. படியோர் பவ மோசனா, பரலோக சிம்மாசனா
முடியாதருள் போசனா, முதன் மாமறை வாசனா
இடையர் குடிலிடை மேவி எழுந்தாய்
இமையவர் அடி தொழு மேன்மையின் எந்தாய் – வரவேணும்

3. வானோர் தொழும் நாதனே, மறையாகம போதனே
கானாவின் அதீதனே, கலிலேய வினோதனே
ஞானாகரமே, நடு நிலை யோவா
நண்பா, உனத நன்மையின் மகா தேவா! – வரவேணும்