All Songs by david

Bethlehem Oororam – பெத்லகேம் ஊரோரம்

Bethlehem Oororam
1. பெத்லகேம் ஊரோரம் சத்திரத்தை நாடி
கர்த்தன் இயேசு பாலனுக்கு துத்தியங்கள் பாடி
பக்தியுடன் இத்தினம் வா ஓடி

2. காலம் நிறைவேறின போதிஸ்திரியின் வித்து
சீல கன்னி கர்ப்பத்தில் ஆவியால் உற்பவித்துப்
பாலனான இயேசு நமின் சொத்து

3. எல்லையில்லா ஞானபரன் வெல்லைமலையோரம்
புல்லனையிலே பிறந்தார் இல்லமெங்குமீரம்
தொல்லை மிகும் அவ்விருட்டு நேரம்

4. வான் புவி வாழ் ராஜனுக்கு மாட்டகந்தான் வீடோ
வானவர்க்கு வாய்த்த மெத்தை வாடின புல்பூண்டோ
ஈனக் கோலமிது விந்தையல்லோ

5. அந்தரத்தில் பாடுகின்றார் தூதர் சேனை கூடி
மந்தை ஆயர் ஓடுகின்றார் பாடல் கேட்கத் தேடி
இன்றிரவில் என்ன இந்த மோடி

6. ஆட்டிடையர் அஞ்சுகின்றார் அவர் மகிமை கண்டு
அட்டியின்றி காபிரியேல் சொன்ன செய்தி கொண்டு
நாட்டமுடன் ரட்சகரைக் கண்டு

7. இந்திரியுடு கண்டரசர் மூவர் நடந்தாரே
சந்திரத் தூபப் போளம் வைத்துச் சுதனைப் பணிந்தாரே
விந்தையது பார்க்கலாம் வா நேரே

1. Bethalakem Oororam Sathirathai Naadi
Karthan Yesu Paalanuku Thuthiyangal Paadi
Bathiyudan Ithinam Vaa Odi.. Odi..

2. Kaalam Niraiverina Poothiyaathiriyin Vithu
Seela Kanni Karpavathil Aaviyaal Upuvithu
Baalanaana Yesu Namin Sothu

3. Ellaiyillaa Njaanaparan – Vella
Malaiyoram Pullannaiyilae
Piranthaar Illamengum Eeram -Thollai
Mikum Avviruttu Naeram… Naeram…

4. Vaan Puvi Vaal Raajanuku – Maattakanthaan
Veedoo Vaanavarku Vaaytha Methai
Vaadina Pul Pootoo – Aana Palang
Kanthai Enna Paatoo… Paatoo…

5. Antharathil Paadukindaar
Thoothar Senai Kooti – Manthai Aayar
Odukindar Paadalkaeta Thedi
Indiravil Enna Intha Modi… Modi…

6. Aattitaiyar Anjukiraar Avar
Magimai Kandu -Andiyindri
Gaapiriyael Sonna Sethi Kondu
Naattamudan Iratchakarai Kandu… Kandu…

Pareer Arunodhayam – பாரீர் அருணோதயம் போல்

Pareer Arunodhayam
பாரீர் அருணோதயம் போல்
உதித்து வரும் இவர் யாரோ
முகம் சூரியன் போல் பிரகாசம்
சத்தம் பெரு வெள்ள இரைச்சல் போல

இயேசுவே! ஆத்ம நேசரே!
சாரோனின் ரோஜாவே லீலி புஷ்பமும் ஆ!
பதினாயிரங்களில் சிறந்தோர் – ஆ

1. காட்டு மரங்களில் கிச்சிலி போல்
எந்தன் நேசர் அதோ நிற்கிறார்
நாமம் ஊற்றுண்ட பரிமளமே
இன்பம் ரசத்திலும் அதி மதுரம் – இயேசுவே

2. அவர் இடது கை என் தலை கீழ்
வலக்கரத்தாலே தேற்றுகிறார்
அவர் நேசத்தால் சோகமானேன்
என் மேல் பறந்த கோடி நேசமே! – இயேசுவே

3. என் பிரியமே ரூபவதி
என அழைத்திடும் இன்ப சத்தம்
கேட்டு அவர் பின்னே ஓடிடுவேன்
அவர் சமூகத்தில் மகிழ்ந்திடுவேன் – இயேசுவே

4. என் நேசர் என்னுடையவரே
அவர் மார்பினில் சாய்ந்திடுவேன்
மணவாளியே வா என்பாரே
நானும் செல்வேன் அந்நேரமே – இயேசுவே

Pareer Arunodhayam pol
Udhithu Varum Ivar Yaaro — 2
Mugam Sooriyan Pol Pragasam
Saththam Peruvella Irachal pola – 2

Yesuvae Aathma Nesarae
Saaronin Rojavum Leeli Pushpamumaam
Padhinaayirangalil Sirandhor – 2

1. En piriyame rubavathi
Yena allaithidum inbasattham – 2
Ketru aavar pinne odiduven
Aavar samugathil magildhiduven – 2 – Yesuvae

2. En nesar en udayavare
Aavar marbinil sainthidave – 2
Manavatiye vaa enbare
Naanum selven aanerame – 2 – Yesuvae

3. Kaattu Marangalil Kichilipol
Endhan Nesar Adho Nirkiraar – 2
Naamam Ootrunda Parimalamae
Inbam Rasathilum Adimaduram – 2 – Yesuvae

4. Avar Idadhu Kai En Thalikeel
Valakarathalae Thetrugiraar – 2
Avar Nesathal Sogamaanen
En Mel Parandha Kodi Nesame – 2 – Yesuvae

Kanmani Nee Kanvalarai – கண்மணி நீ கண்வளராய்

Kanmani Nee Kanvalarai
கண்மணி நீ கண்வளராய்
விண்மணி நீ உறங்கிடுவாய்
கண்மணி நீ கண்வளராய்

1. தூங்கு கண்ணே தூதர் தாலாட்ட
நீங்கும் துன்பம் நித்திரை வர
ஏங்கும் மக்கள் இன்னல் நீங்கிட
தாங்கா துக்கம் துயர் மிஞ்சும் கடும் குளிரில்
கந்தை துணி பொதிந்தாயோ

2. சின்ன இயேசு செல்லப்பாலனே
உன்னை நானும் ஏற்பேன் வேந்தனே
என்னைப் பாரும் இன்ப மைந்தனே
உன்னத தேவ வாக்குன்னில் நிறைவேற
ஏழை மகவாய் வந்தனையோ

3. வீடும் இன்றி முன்னனைதானோ
காடும் குன்றும் சேர்ந்ததேனோ
பாடும் கீதம் கேளாயோ நீயும்
தேடும் மெய்யன்பர் உன்னடி பணிய
ஏழ்மைக் கோலம் கொண்டனையோ

Kanden En Kan Kulira – கண்டேன் என் கண்குளிர

Kanden En Kan Kulira
கண்டேன் என் கண்குளிர – கர்த்தனையின்று
கொண்டாடும் விண்ணோர்கள் கோமானைக் கையிலேந்திக் – கண்

1.பெத்தலேம் சத்திர முன்னணையில்
உற்றோருக் குயிர்தரும் உண்மையாம் என் ரட்சகனைக் – கண்

2.தேவாதி தேவனை, தேவசேனை
ஓயாது – தோத்தரிக்கும் ஒப்புநிகர் அற்றவனைக் – கண்

3.பார்வேந்தர் தேடிவரும் பக்தர் பரனை,
ஆவேந்தர் – அடிதொழும் அன்பனை என் இன்பனை நான் – கண்

4.முத்தொழிற் கர்த்தாவாம் முன்னவனை,
இத்தரை – மீட்க எனை நடத்தி வந்த மன்னவனைக் – கண்

5.மண்ணோர் இருள் போக்கும் மாமணியை
விண்ணோரும் – வேண்டிநிற்கும் விண்மணியைக் கண்மணியைக் – கண்

6.அண்டினோர்க் கன்புருவாம் ஆரணனை
கண்டோர்கள் – கலி தீர்க்கும் காரணனை, பூரணனைக் – கண்

7.அன்னையாம் – கன்னியும் ஐயனுடன்
முன்னறி – யாப்பசுவின் புல்லணையில் உன்னழகைக் – கண்

Siluvai Naadhar Yesuvin – சிலுவை நாதர் இயேசுவின்

Siluvai Naadhar Yesuvin
சிலுவை நாதர் இயேசுவின்
பேரொளி வீசிடும் தூய கண்கள்
என்னை நோக்கி பார்க்கின்றன
தம் காயங்களை பார்க்கின்றன

1. என் கையால் பாவங்கள் செய்திட்டால்
தம் கையின் காயங்கள் பார்க்கின்றாரே
தீய வழியில் என் கால்கள் சென்றால்
தம் காலின் காயங்கள் பார்க்கின்றாரே – சிலுவை நாதர்

2. தீட்டுள்ள எண்ணம் என் இதயம் கொண்டால்
ஈட்டி பாய்ந்த நெஞ்சை நோக்குகின்றார்
வீண்பெருமை என்னில் இடம்பெற்றால்
முள்முடி பார்த்திட ஏங்குகின்றார் – சிலுவை நாதர்

3. அவர் இரத்தம் என் பாவம் கழுவிடும்
அவர் கண்ணீர் என்னை மெருகேற்றிடும்
கலங்கரை விளக்காக ஒளி வீசுவேன்
கலங்குவோரை அவர் மந்தை சேர்ப்பேன் – சிலுவை நாதர்

4. திருந்திடா பாவிக்காய் அழுகின்றார்
வருந்திடா பிள்ளைக்காய் கலங்குகின்றார்
தம் கண்ணீர் காயத்தில் விழுந்திட
கண்ணீரும் இரத்தமும் சிந்துகின்றார் – சிலுவை நாதர்

Siluvai Naadhar Yaesuvin
Paeroli Veesidum Thooya Kangal
Ennai Noakki Paarkkindrana
Tham Kaayangalai Paarkkindrana

1. En Kaiyaal Paavangal Seidhittaal
Tham Kaiyin Kaayangal Paarkkindraarae
Theeya Vazhiyil En Kaalgal Sendraal
Tham Kaalin Kaayangal Paarkkindraarae – Siluvai Naadhar

2. Theettulla Ennam En Idhayam Kondaal
Eetti Paaindha Nenjai Noakkukindraar
Veenperumai Ennil Idampetraal
Mulmudi Paarththida Aengukindraar – Siluvai Naadhar

3. Avar Rattham En Paavam Kazhuvidum
Avar Kanneer Ennai Merugaetridum
Kalangarai Vilakkaaga Oli Veesuvaen
Kalanguvoarai Avar Mandhai Saerpaen – Siluvai Naadhar

4. Thirundhidaa Paavikkaai Azhukindraar
Varundhidaa Pillaikkaai Kalangukindraar
Tham Kanneer Kaayaththil Vizhundhida
Kanneerum Ratthamum Sindhukindraar – Siluvai Naadhar

Salemin Raja – சாலேமின் ராசா

Salemin Raja
1. சாலேமின் ராசா, சங்கையின் ராசா
ஸ்வாமி வாருமேன் – இந்த
தாரணி மீதினில் ஆளுகை செய்திட
சடுதி வாருமேன்
2. சீக்கிரம் வருவேனென்று ரைத்துப்போன
செல்வக் குமாரனே – இந்த
சீயோனின் மாதுகள் தேடித் திரிகின்ற
சேதி கேளீரோ?
3. எட்டி எட்டி உம்மை அண்ணாந்து பார்த்துக்
கண் பூத்துப் போகுதே;- நீர்
சுட்டிக் காட்டிப் போன வாக்குத்தத்தம்
நிறைவேறலாகுதே
4. நங்கை எருசலேம் பட்டினம் உம்மை
நாடித் தேடுதே ; – இந்த
நானிலத்திலுள்ள ஜீவ பிராணிகள்
தேடிவாடுதே
5. சாட்சியாக சுபவிசேஷம்
தாரணிமேவுதே; – உந்தன்
சாட்சிகளுடைய இரத்தங்களெல்லாம்
தாவிக்கூவுதே

 

Athisayangal Seigiravar – அதிசயங்கள் செய்கிறவர்

Athisayangal Seigiravar
அதிசயங்கள் செய்கிறவர் நம் அருகில் இருக்கிறார்
அற்புதங்கள் செய்கிறவர் ஏசு நமக்குள் வருகிறார் (2)

1. தண்ணீரை இரத்தமாய் மாற்றினார் அதிசயம் – எகிப்தின்
ஜாடி தண்ணீரை திராட்சை ரசமாய் மாற்றினார் அதிசயம்

2. குருடருக்கும் செவிடருக்கும் சுகம் தந்தார் அதிசயம் – பிறவி
ஒரு சொல்லாலே புயல் காற்றினையும் அதட்டினார் அதிசயம்

3. பாவியான என்னையுமே மாற்றினார் அதிசயம் – இந்த
ஏழை என் மீது நேசக்கரம் நீட்டினார் அதிசயம்

Appa Um Kirubai Galal – அப்பா உம் கிருபைகளால்

Appa Um Kirubai Galal
அப்பா உம் கிருபைகளால் – என்னை
காத்துக் கொண்டீரே
அப்பா உம் கிருபைகளால் – என்னை
அணைத்துக் கொண்டீரே

1. தாங்கி நடத்தும் கிருபையிது
தாழ்வில் நினைத்த கிருபையிது – 2
தந்தையும் தாயும் கைவிட்டாலும்
தயவாய் காக்கும் கிருபையிது – 2

2. வியாதியின் நேரத்தில் காத்த கிருபை
விடுதலை கொடுத்த தேவ கிருபை – 2
சூழ்நிலைகள் மாறினாலும்
மாறாமல் தாங்கிட்ட தேவ கிருபை – 2

3. கஷ்டத்தின் நேரத்தில் காத்த கிருபை
கண்ணீரை மாற்றின தேவ கிருபை – 2
தடைகள் யாவையும் உடைத்து எறிந்து
வெற்றியை தந்திட்ட தேவ கிருபை – 2

Yesuvai Nambinor Mandathillai – இயேசுவை நம்பினோர்

Yesuvai Nambinor Mandathillai
1. இயேசுவை நம்பினோர் மாண்டதில்லை
என்னென்ன துன்பங்கள் நேரிட்டாலும்
சிங்கத்தின் வாயினின்றும் இரட்சிப்பார்
பங்கம் வராதென்னை ஆதரிப்பார்

நெஞ்சமே நீ அஞ்சிடாதே
நம்பினோரைக் கிருபை சூழ்ந்திடுதே
இம்மட்டும் காத்தவர் இம்மானுவேல்
இன்னமும் காத்துன்னை நடத்துவார்

2. நாசியில் சுவாசமுள்ள மாந்தரை
நம்புவதல்ல தம் ஆலோசனை
கோர பயங்கரக் காற்றடித்தும்
கன்மலை மேல் கட்டும் வீடு நிற்கும்

3. விசுவாசத்தால் நீதிமான் பிழைப்பான்
வறட்சி மிகுந்த காலத்திலும்
பக்தன் வலதுபாரிசத்திலே
கர்த்தர் தாம் நிற்பதால் அசைந்திடான்

4. இயேசுவின் நாமத்தில் ஜெயம் பெற்றே
ஏகிப் பறந்தோடும் பக்தரோடே
சேர்ந்தென்றும் வாழ்ந்திடும் ஐக்கியத்திலே
ஜெய கெம்பீரமே உனக்குண்டே

5. ஏழை உன் ஆத்மா பாதாளத்தில்
என்றும் அழிந்திடவிட்டு விடார்
தம் சமூகம் நித்ய பேரின்பமே
சம்பூர்ண ஆனந்தம் பொங்கிடுமே

6. அங்கே அனேக வாசஸ் தலங்கள்
அன்பின் பிதா வீட்டில் ஜொலிக்குதே
நேர்த்தியான இடங்களில் உந்தன்
நித்திய பங்கு கிடைத்திடுமே

En Nesar Vellai Pola – என் நேசர் வெள்ளைப் போள

En Nesar Vellai Pola
என் நேசர் வெள்ளைப் போளச் செண்டு
என் அன்பர் மரிக்கொழுந்து பூங்கொத்து
நான் அவர்க்குள் மலர்ந்து மணக்கும் ரோஜாவே
பள்ளத்தாக்கின் லீலி புஷ்பமே – நான் (2)

அருமையானவர் எந்தன் நேசர்
இன்பமானவர் ஆத்ம நேசர்
மதுரமானவர் எந்தன் நேசர்
பிரியமானவர் மதுரமானவர் – என் நேசர்

1. காட்டு மரங்களுக்குள்ளே கிச்சிலி
மரம் போல் ஆனவர் இவர்
கன்மலைக் குன்றின் வெடிப்பிலே
ஓடிவரும் மானுக்கு சமானமாவார் – என் நேசர்

2. வெண்மையும் சிவப்புமானவர்
புறாவின் கண்கள் கொண்டவர் அவர்
கேதுரு மரம்போல் ஆனவர்
பதினாயிரம் பேரில் சிறந்தவராவார் – என் நேசர்