All Songs by david

Kanmani Nee Kanvalarai – கண்மணி நீ கண்வளராய்

Kanmani Nee Kanvalarai
கண்மணி நீ கண்வளராய்
விண்மணி நீ உறங்கிடுவாய்
கண்மணி நீ கண்வளராய்

1. தூங்கு கண்ணே தூதர் தாலாட்ட
நீங்கும் துன்பம் நித்திரை வர
ஏங்கும் மக்கள் இன்னல் நீங்கிட
தாங்கா துக்கம் துயர் மிஞ்சும் கடும் குளிரில்
கந்தை துணி பொதிந்தாயோ

2. சின்ன இயேசு செல்லப்பாலனே
உன்னை நானும் ஏற்பேன் வேந்தனே
என்னைப் பாரும் இன்ப மைந்தனே
உன்னத தேவ வாக்குன்னில் நிறைவேற
ஏழை மகவாய் வந்தனையோ

3. வீடும் இன்றி முன்னனைதானோ
காடும் குன்றும் சேர்ந்ததேனோ
பாடும் கீதம் கேளாயோ நீயும்
தேடும் மெய்யன்பர் உன்னடி பணிய
ஏழ்மைக் கோலம் கொண்டனையோ

Kanden En Kan Kulira – கண்டேன் என் கண்குளிர

Kanden En Kan Kulira
கண்டேன் என் கண்குளிர – கர்த்தனையின்று
கொண்டாடும் விண்ணோர்கள் கோமானைக் கையிலேந்திக் – கண்

1.பெத்தலேம் சத்திர முன்னணையில்
உற்றோருக் குயிர்தரும் உண்மையாம் என் ரட்சகனைக் – கண்

2.தேவாதி தேவனை, தேவசேனை
ஓயாது – தோத்தரிக்கும் ஒப்புநிகர் அற்றவனைக் – கண்

3.பார்வேந்தர் தேடிவரும் பக்தர் பரனை,
ஆவேந்தர் – அடிதொழும் அன்பனை என் இன்பனை நான் – கண்

4.முத்தொழிற் கர்த்தாவாம் முன்னவனை,
இத்தரை – மீட்க எனை நடத்தி வந்த மன்னவனைக் – கண்

5.மண்ணோர் இருள் போக்கும் மாமணியை
விண்ணோரும் – வேண்டிநிற்கும் விண்மணியைக் கண்மணியைக் – கண்

6.அண்டினோர்க் கன்புருவாம் ஆரணனை
கண்டோர்கள் – கலி தீர்க்கும் காரணனை, பூரணனைக் – கண்

7.அன்னையாம் – கன்னியும் ஐயனுடன்
முன்னறி – யாப்பசுவின் புல்லணையில் உன்னழகைக் – கண்

Siluvai Naadhar Yesuvin – சிலுவை நாதர் இயேசுவின்

Siluvai Naadhar Yesuvin
சிலுவை நாதர் இயேசுவின்
பேரொளி வீசிடும் தூய கண்கள்
என்னை நோக்கி பார்க்கின்றன
தம் காயங்களை பார்க்கின்றன

1. என் கையால் பாவங்கள் செய்திட்டால்
தம் கையின் காயங்கள் பார்க்கின்றாரே
தீய வழியில் என் கால்கள் சென்றால்
தம் காலின் காயங்கள் பார்க்கின்றாரே – சிலுவை நாதர்

2. தீட்டுள்ள எண்ணம் என் இதயம் கொண்டால்
ஈட்டி பாய்ந்த நெஞ்சை நோக்குகின்றார்
வீண்பெருமை என்னில் இடம்பெற்றால்
முள்முடி பார்த்திட ஏங்குகின்றார் – சிலுவை நாதர்

3. அவர் இரத்தம் என் பாவம் கழுவிடும்
அவர் கண்ணீர் என்னை மெருகேற்றிடும்
கலங்கரை விளக்காக ஒளி வீசுவேன்
கலங்குவோரை அவர் மந்தை சேர்ப்பேன் – சிலுவை நாதர்

4. திருந்திடா பாவிக்காய் அழுகின்றார்
வருந்திடா பிள்ளைக்காய் கலங்குகின்றார்
தம் கண்ணீர் காயத்தில் விழுந்திட
கண்ணீரும் இரத்தமும் சிந்துகின்றார் – சிலுவை நாதர்

Siluvai Naadhar Yaesuvin
Paeroli Veesidum Thooya Kangal
Ennai Noakki Paarkkindrana
Tham Kaayangalai Paarkkindrana

1. En Kaiyaal Paavangal Seidhittaal
Tham Kaiyin Kaayangal Paarkkindraarae
Theeya Vazhiyil En Kaalgal Sendraal
Tham Kaalin Kaayangal Paarkkindraarae – Siluvai Naadhar

2. Theettulla Ennam En Idhayam Kondaal
Eetti Paaindha Nenjai Noakkukindraar
Veenperumai Ennil Idampetraal
Mulmudi Paarththida Aengukindraar – Siluvai Naadhar

3. Avar Rattham En Paavam Kazhuvidum
Avar Kanneer Ennai Merugaetridum
Kalangarai Vilakkaaga Oli Veesuvaen
Kalanguvoarai Avar Mandhai Saerpaen – Siluvai Naadhar

4. Thirundhidaa Paavikkaai Azhukindraar
Varundhidaa Pillaikkaai Kalangukindraar
Tham Kanneer Kaayaththil Vizhundhida
Kanneerum Ratthamum Sindhukindraar – Siluvai Naadhar

Salemin Raja – சாலேமின் ராசா

Salemin Raja
1. சாலேமின் ராசா, சங்கையின் ராசா
ஸ்வாமி வாருமேன் – இந்த
தாரணி மீதினில் ஆளுகை செய்திட
சடுதி வாருமேன்
2. சீக்கிரம் வருவேனென்று ரைத்துப்போன
செல்வக் குமாரனே – இந்த
சீயோனின் மாதுகள் தேடித் திரிகின்ற
சேதி கேளீரோ?
3. எட்டி எட்டி உம்மை அண்ணாந்து பார்த்துக்
கண் பூத்துப் போகுதே;- நீர்
சுட்டிக் காட்டிப் போன வாக்குத்தத்தம்
நிறைவேறலாகுதே
4. நங்கை எருசலேம் பட்டினம் உம்மை
நாடித் தேடுதே ; – இந்த
நானிலத்திலுள்ள ஜீவ பிராணிகள்
தேடிவாடுதே
5. சாட்சியாக சுபவிசேஷம்
தாரணிமேவுதே; – உந்தன்
சாட்சிகளுடைய இரத்தங்களெல்லாம்
தாவிக்கூவுதே

 

Athisayangal Seigiravar – அதிசயங்கள் செய்கிறவர்

Athisayangal Seigiravar
அதிசயங்கள் செய்கிறவர் நம் அருகில் இருக்கிறார்
அற்புதங்கள் செய்கிறவர் ஏசு நமக்குள் வருகிறார் (2)

1. தண்ணீரை இரத்தமாய் மாற்றினார் அதிசயம் – எகிப்தின்
ஜாடி தண்ணீரை திராட்சை ரசமாய் மாற்றினார் அதிசயம்

2. குருடருக்கும் செவிடருக்கும் சுகம் தந்தார் அதிசயம் – பிறவி
ஒரு சொல்லாலே புயல் காற்றினையும் அதட்டினார் அதிசயம்

3. பாவியான என்னையுமே மாற்றினார் அதிசயம் – இந்த
ஏழை என் மீது நேசக்கரம் நீட்டினார் அதிசயம்

Appa Um Kirubai Galal – அப்பா உம் கிருபைகளால்

Appa Um Kirubai Galal
அப்பா உம் கிருபைகளால் – என்னை
காத்துக் கொண்டீரே
அப்பா உம் கிருபைகளால் – என்னை
அணைத்துக் கொண்டீரே

1. தாங்கி நடத்தும் கிருபையிது
தாழ்வில் நினைத்த கிருபையிது – 2
தந்தையும் தாயும் கைவிட்டாலும்
தயவாய் காக்கும் கிருபையிது – 2

2. வியாதியின் நேரத்தில் காத்த கிருபை
விடுதலை கொடுத்த தேவ கிருபை – 2
சூழ்நிலைகள் மாறினாலும்
மாறாமல் தாங்கிட்ட தேவ கிருபை – 2

3. கஷ்டத்தின் நேரத்தில் காத்த கிருபை
கண்ணீரை மாற்றின தேவ கிருபை – 2
தடைகள் யாவையும் உடைத்து எறிந்து
வெற்றியை தந்திட்ட தேவ கிருபை – 2

Yesuvai Nambinor Mandathillai – இயேசுவை நம்பினோர்

Yesuvai Nambinor Mandathillai
1. இயேசுவை நம்பினோர் மாண்டதில்லை
என்னென்ன துன்பங்கள் நேரிட்டாலும்
சிங்கத்தின் வாயினின்றும் இரட்சிப்பார்
பங்கம் வராதென்னை ஆதரிப்பார்

நெஞ்சமே நீ அஞ்சிடாதே
நம்பினோரைக் கிருபை சூழ்ந்திடுதே
இம்மட்டும் காத்தவர் இம்மானுவேல்
இன்னமும் காத்துன்னை நடத்துவார்

2. நாசியில் சுவாசமுள்ள மாந்தரை
நம்புவதல்ல தம் ஆலோசனை
கோர பயங்கரக் காற்றடித்தும்
கன்மலை மேல் கட்டும் வீடு நிற்கும்

3. விசுவாசத்தால் நீதிமான் பிழைப்பான்
வறட்சி மிகுந்த காலத்திலும்
பக்தன் வலதுபாரிசத்திலே
கர்த்தர் தாம் நிற்பதால் அசைந்திடான்

4. இயேசுவின் நாமத்தில் ஜெயம் பெற்றே
ஏகிப் பறந்தோடும் பக்தரோடே
சேர்ந்தென்றும் வாழ்ந்திடும் ஐக்கியத்திலே
ஜெய கெம்பீரமே உனக்குண்டே

5. ஏழை உன் ஆத்மா பாதாளத்தில்
என்றும் அழிந்திடவிட்டு விடார்
தம் சமூகம் நித்ய பேரின்பமே
சம்பூர்ண ஆனந்தம் பொங்கிடுமே

6. அங்கே அனேக வாசஸ் தலங்கள்
அன்பின் பிதா வீட்டில் ஜொலிக்குதே
நேர்த்தியான இடங்களில் உந்தன்
நித்திய பங்கு கிடைத்திடுமே

En Nesar Vellai Pola – என் நேசர் வெள்ளைப் போள

En Nesar Vellai Pola
என் நேசர் வெள்ளைப் போளச் செண்டு
என் அன்பர் மரிக்கொழுந்து பூங்கொத்து
நான் அவர்க்குள் மலர்ந்து மணக்கும் ரோஜாவே
பள்ளத்தாக்கின் லீலி புஷ்பமே – நான் (2)

அருமையானவர் எந்தன் நேசர்
இன்பமானவர் ஆத்ம நேசர்
மதுரமானவர் எந்தன் நேசர்
பிரியமானவர் மதுரமானவர் – என் நேசர்

1. காட்டு மரங்களுக்குள்ளே கிச்சிலி
மரம் போல் ஆனவர் இவர்
கன்மலைக் குன்றின் வெடிப்பிலே
ஓடிவரும் மானுக்கு சமானமாவார் – என் நேசர்

2. வெண்மையும் சிவப்புமானவர்
புறாவின் கண்கள் கொண்டவர் அவர்
கேதுரு மரம்போல் ஆனவர்
பதினாயிரம் பேரில் சிறந்தவராவார் – என் நேசர்

Aasirvathikum Devan – ஆசீர்வதிக்கும் தேவன்

Aasirvathikum Devan

ஆத்ம நேசரோடு அன்பின் ஆழம் சென்று
ஆவலோடே நான் கெஞ்சிக்கேட்ட போது – 2
அபிஷேக நதி என்னில் பாய்ந்து வந்தது
ஆனந்தத்தினால் என்னை அபிஷேகித்தார் – 2

அன்பே நிரப்பும் உயிரே நிரப்பும்
பெலனே நிரப்பும் இனிதே நிரப்பும் – 2

1. ஆத்ம நேசரோடு உன்னதங்கள் சென்று
மெய் மறந்து நான் அவர் மார்பில் சாய்ந்த போது – 2
மகிமையின் ஒளியை என் மேல் வீசச் செய்தார்
மகிழ்ச்சியினால் எந்தன் உள்ளம் துள்ளுதே – 2 (…அன்பே)

2. ஆத்ம நேசரோடு அகமகிழ்வேனே
இக்காலத்து பாடுகள் ஓய்ந்தொழிந்து போகும் – 2
மகிமை மகத்துவம் என்னை மூடிக்கொள்ளும்
மறுரூபமாவேன் என் நேசர் சாயலாய் – 2 (…அன்பே)

3. தேவ ஜனத்தோடே நித்ய நித்யமாக
ஆராதிப்பேனே என் நேசர் இயேசுவை – 2
தூதர் பாடும் தேசம் என் சொந்தமான தேசம்
கண்ணீரில்லையே இனி கவலையில்லையே – 2 (…அன்பே)

4. ஆவியானவரே நன்றி நன்றி நன்றி
அக்கினியினால் என்னை நிறைத்திட்டீரே – 2
இன்னும் வேண்டும் என்று கெஞ்சுதே என் ஆவி
நிரப்பும் நிரப்பும் என்று உள்ளம் ஏங்குதே – 2 (…அன்பே)

Aathma Nesarodu Anbin Aazham Sendru
Aavalode Naan Kenjik Kettapodhu – 2
Abishega Nadhi Ennil Paaindhu Vandhadhu
Aanandhaththinaal Ennai Abishehiththaar – 2

Anbe Nirappum Uyire Nirappum
Belane Nirappum Inithe Nirappum – 2

1. Aathma Nesarodu Unnadhangal Sendru
Meimarandhu Naan Avar Maarbil Saaindha Podhu – 2
Magimaiyin Oliyai En Mel Veesachcheidhar
Magizhchchiyinaal Endhan Ullam Thulludhe – 2 (…Anbe)

2. Aathma Nesarodu Agamagizhvene
Ikkalaththuppaadugal Oindhozhindhu Pogum – 2
Magimai Magaththuvam Ennai Moodikkollum
Maruroobamaaven En Nesar Saayaalai – 2 (…Anbe)

3. Deva Janaththode Nithya Nithyamaaga
Aaradhippene En Nesar Yesuvai – 2
Thoodhar Paadum Desam En Sondhamaana Desam
Kanneer Illaiye Ini Kavalai Illaiye – 2 (…Anbe)

4. Aaviyanavare Nandri Nandri Nandri
Akkiniyinaal Ennai Niraiththiteere – 2
Innum Vendum Endru Kenjuthe En Aavi
Nirappum Nirappum Endru Ullam Yenguthe – 2 (…Anbe)

Anbaram Yesuvai Parthu Konde – அன்பராம் இயேசுவை பார்த்துக்கொண்டே

Anbaram Yesuvai Parthu Konde
அன்பராம் இயேசுவை பார்த்துக்கொண்டே
இன்பமாக அவர் பாதையோடே
தாமே வழியும் சத்தியமும் ஜீவனுமே(2)

துன்ப பெருக்கிலே சோர்ந்திடாதே
அன்பர் அறியாமல் வந்திடாதே
கண் விழிபோல் நான் காத்திடுவேன் என்றனரே

1. முட்செடி போலே பற்றிடுவேன்
மோசம் அடையாய் நீ முற்றீலுமே
ஏங்கிடாதே நீ நேசர் அதில் தோன்றுவாரே

2. சுற்றிலும் சத்துரு சூழ்ந்திடினும்
வியாகுலம் உன்னை நெருக்கிடினும்
ஆ.. நேசரே தம் இன்ப சத்தம் ஈந்தீடுவார்

3. மாயையான இந்த லோகமதில்
மாய்ந்தழியும் இம்மாந்தர் அன்று
நேற்றும் இன்றென்றும் மாறிடாரே உன் நேசரே