Siluvai Naadhar Yesuvin
சிலுவை நாதர் இயேசுவின்
பேரொளி வீசிடும் தூய கண்கள்
என்னை நோக்கி பார்க்கின்றன
தம் காயங்களை பார்க்கின்றன
1. என் கையால் பாவங்கள் செய்திட்டால்
தம் கையின் காயங்கள் பார்க்கின்றாரே
தீய வழியில் என் கால்கள் சென்றால்
தம் காலின் காயங்கள் பார்க்கின்றாரே – சிலுவை நாதர்
2. தீட்டுள்ள எண்ணம் என் இதயம் கொண்டால்
ஈட்டி பாய்ந்த நெஞ்சை நோக்குகின்றார்
வீண்பெருமை என்னில் இடம்பெற்றால்
முள்முடி பார்த்திட ஏங்குகின்றார் – சிலுவை நாதர்
3. அவர் இரத்தம் என் பாவம் கழுவிடும்
அவர் கண்ணீர் என்னை மெருகேற்றிடும்
கலங்கரை விளக்காக ஒளி வீசுவேன்
கலங்குவோரை அவர் மந்தை சேர்ப்பேன் – சிலுவை நாதர்
En Nesar Vellai Pola
என் நேசர் வெள்ளைப் போளச் செண்டு
என் அன்பர் மரிக்கொழுந்து பூங்கொத்து
நான் அவர்க்குள் மலர்ந்து மணக்கும் ரோஜாவே
பள்ளத்தாக்கின் லீலி புஷ்பமே – நான் (2)
1. ஆத்ம நேசரோடு உன்னதங்கள் சென்று
மெய் மறந்து நான் அவர் மார்பில் சாய்ந்த போது – 2
மகிமையின் ஒளியை என் மேல் வீசச் செய்தார்
மகிழ்ச்சியினால் எந்தன் உள்ளம் துள்ளுதே – 2 (…அன்பே)
2. ஆத்ம நேசரோடு அகமகிழ்வேனே
இக்காலத்து பாடுகள் ஓய்ந்தொழிந்து போகும் – 2
மகிமை மகத்துவம் என்னை மூடிக்கொள்ளும்
மறுரூபமாவேன் என் நேசர் சாயலாய் – 2 (…அன்பே)
3. தேவ ஜனத்தோடே நித்ய நித்யமாக
ஆராதிப்பேனே என் நேசர் இயேசுவை – 2
தூதர் பாடும் தேசம் என் சொந்தமான தேசம்
கண்ணீரில்லையே இனி கவலையில்லையே – 2 (…அன்பே)
4. ஆவியானவரே நன்றி நன்றி நன்றி
அக்கினியினால் என்னை நிறைத்திட்டீரே – 2
இன்னும் வேண்டும் என்று கெஞ்சுதே என் ஆவி
நிரப்பும் நிரப்பும் என்று உள்ளம் ஏங்குதே – 2 (…அன்பே)