All Songs by david

Kuyavane Kuyavane – குயவனே குயவனே படைப்பின்

Kuyavane Kuyavane

குயவனே குயவனே
படைப்பின் காரணனே
களிமண்ணான என்னையுமே
கண்ணோக்கிப் பார்த்திடுமே – 2

1. வெறுமையான பாத்திரம் நான்
வெறுத்து தள்ளாமலே
நிரம்பி வழியும் பாத்திரமாய்
விளங்க செய்திடுமே – 2

வேதத்தில் காணும் பாத்ரமெல்லாம்
இயேசுவைப் போற்றிடுமே
என்னையும் அவ்வித பாத்திரமாய்
வனைந்து கொள்ளுமே (…குயவனே)

2. விலை போகாத பாத்திரம் நான்
விரும்புவாரில்லையே
விலையெல்லாம் உம் கிருபையால்
உகந்த தாக்கிடுமே – 2

தடைகள் யாவும் நீக்கி என்னை
தம்மைப் போல் மாற்றிடுமே
உடைத்து என்னை உந்தனுக்கே
உடைமை ஆக்கிடுமே (…குயவனே)

3. மண்ணாசையில் நான் மயங்கியே
மெய்வழி விட்டகன்றேன்
கண்போன போக்கை பின்பற்றினேன்
கண்டேனில்லை இன்பமே – 2

காணாமல் போன பாத்ரம் என்னை
தேடி வந்த தெய்வமே
வாழ்நாள் எல்லாம் உம் பாதம் செல்லும்
பாதையில் நடத்திடுமே

மேய்ப்பனே மேய்ப்பனே
மந்தையை காப்பவனே
மார்க்கம் அகன்ற என்னையுமே
கண்ணோக்கி பார்த்திடுமே

Kuyavane Kuyavane
Padaippin Kaaranane
Kalimannaana Ennaiyume
Kannokki Paarththidume – 2

1. Verumaiyaana Paaththiram Naan
Veruththu Thallaamale
Nirambi Vazhiyum Paaththiramaai
Vilanga Seithidume – 2

Vethaththil Kaanum Paathramellaam
Yesuvai Pottridume
Ennaiyum Avvitha Paaththiramaai
Vanainthu Kollume (…Kuyavane)

2. Vilai Pogaatha Paaththiram Naan
Virumbuvaarillaiye
Vilaiyellaam Um Kirubaiyaal
Ugantha Thaakkidume – 2

Thadaigal Yaavum Neekki Ennai
Thammai Pol Maattridume
Udaiththu Ennai Unthanukke
Udaimai Aakkidume (…Kuyavane)

3. Mannaasaiyil Naan Mayangiye
Meivazhi Vittagandren
Kanpona Pokkai Pinpattrinen
Kandenillai Inbame – 2

Kaanaamal Pona Paathram Ennai
Thedi Vantha Deivame
Vaazhnaal Ellaam Um Paatham Sellum
Paathaiyil Nadaththidume

Meippane Meippane
Manthaiyai Kaappavane
Maarkkam Agandra Ennaiyume
Kannokki Paarththidume

Adaikalame Umathadimai Naanae – அடைக்கலமே உமதடிமை நானே

Adaikalame Umathadimai Naanae
அடைக்கலமே உமதடிமை நானே
ஆர்ப்பரிப்பேனே அகமகிழ்ந்தே
கர்த்தர் நீர் செய்த நன்மைகளையே
நித்தம் நான் நினைப்பேன்

1. அளவற்ற அன்பினால் அரவணைப்பவரே
எண்ணற்ற நன்மையால் நிறைப்பவரே
மாசில்லாத நேசரே மகிமை பிரதாபா
மாசற்ற உம் பாதம் பற்றிடுவேனே

2. கர்த்தரே உம் கிரியைகள் பெரியவைகளே
சுத்தரே உம் செயல்கள் மகத்துவமானதே
நித்தியரே உம் நியாயங்கள் என்றும் நிற்குமே
பக்தரின் பேரின்ப பாக்கியம் நீரே

3. என்னை என்றும் போதித்து நடத்துபவரே
கண்ணை வைத்து ஆலோசனை சொல்லுபவரே
நடக்கும் வழிதனை காட்டுபவரே
நம்பி வந்தோனை கிருபை சூழ்ந்துகொள்ளுதே

4. கரம் பற்றி நடத்தும் கர்த்தர் நீரல்லோ
கூப்பிட்ட என்னை குணமாக்கினீரல்லோ
குழியில் விழாதபடி காத்துக்கொண்டீரே
அழுகையை களிப்பாக மாற்றிவிட்டீரே

5. பாவங்களை பாராதென்னைப் பற்றிக்கொண்டீரே
சாபங்களை நீக்கி சுத்த உள்ளந்தந்தீரே
இரட்சண்யத்தின் சந்தோஷத்தை திரும்ப தந்தீரே
உற்சாக ஆவி என்னை தாங்கச் செய்தீரே

Adaikkalame Umathadimai Naane
Aarpparippene Akamakizhnthe
Karththar Neer Seytha Nanmaikalaiye
Niththam Niththam Naan Ninaippene

1. Alavattra Anbinaal Anaippavare
Ennattra Nanmaiyaal Niraippavare
Maasillaatha Nesare Makimai Prathaapaa
Paasaththaal Umpaatham Pattriduvene

2. Karththare Um Seykaikal Periyavaikale
Suththare Um Seyalkal Makaththvamaanathe
Niththiyare Um Nyaayangal Entrum Nirkume
Bhaktharin Perinba bhaakkiyamithe

3. Ennai Entrum Bothiththu Nadaththupavare
Kannai Vaiththu Aalosanai Sollupavare
Nadakkum Vazhithanai Kaattupavare
Nambi Vanthonai Krupai Soozhnthu Kolluthe

4. Karam Pattri Nadaththum Karththar Neerallo
Kooppitta Ennai Kunamaakkineerallo
Kuzhiyil Vizhaathapadi Kaaththuk Kondeere
Azhukaiyai Kalippaaka Maattrivittire

5. Paavangalai Paaraathennai Pattri Konteere
Saabangalai Neekki Suththa Ullam Thantheere
Ratchanyaththin Santhoshaththai Thirumba Thantheere
Ursaaga Aavi Ennai Thaangach Seytheere

Agni Agni Elupudhal – அக்கினி அக்கினி எழுப்புதல்

Agni Agni Elupudhal
அக்கினி அக்கினி எழுப்புதல்
தந்திடும் அக்கினி (2)
அக்கினி அபிஷேகம் தேவா
இப்போ ஊற்றிடுமே (2)

1. பெந்தெகொஸ்தே நாளில் இறங்கிய
பரிசுத்த அக்கினி (2)
இந்த வேளையிலே எங்கள்
மீதே இறங்கட்டுமே (2) -அக்கினி
2. மேல்வீட்டறையிலே நிரப்பிய
பரலோக அக்கினி (2)
இந்த வேளையிலே எங்கள்
மீதே இறங்கட்டுமே (2) – அக்கினி
3. உன்னத பெலத்தினாலே
எம்மை இடைக்கட்டும் அக்கினி (2)
எங்கள் தேசத்திலே பற்றிப்
பிடித்து பரவட்டுமே (2) – அக்கினி

Aadhavan Uthikkum Mun – ஆதவன் உதிக்கும் முன்

Aadhavan Uthikkum Mun
ஆதவன் உதிக்கும் முன் எழுவீர்,
நம் ஆண்டவர் தோன்றி விட்டார்,
இயேசு ஆண்டவர் தோன்றி விட்டார்!

காற்றாய் அலையாய் கடலாய் நதியாய்
வூற்றாய் உயிராய் உலகத்தின் ஒளியாய்
உத்தமர் தோன்றி விட்டார்!
நம் உத்தமர் தோன்றி விட்டார்!!

ஆதவன் உதிக்கும் முன் எழுவீர் – நம்
ஆண்டவர் தோன்றி விட்டார் – இயேசு
ஆண்டவர் தோன்றி விட்டார்
காலை ஜெபத்தினில் கடவுள் வடிவினில்
கர்த்தர் தோன்றி விட்டார் – நம்
கர்த்தர் தோன்றி விட்டார்!!![

Vanavare Varuga

Vanavare Varuga vanmalaiye varuga
Devanein Aaviye varuga Thetaravalane varuga (2) – 2

1. Kuraigalai pokave varuga Kuraigalai agatrave varuga – 2
Karaigalai neekave varuga Kartharin aaviye varuga – 2
– Vanavare Varuga
2. Varangalinal neraye varuga Vallamaiyakidave varuga – 2
Magimaiyin Aaviye varuga Marurobamakave varuga – 2
– Vanavare Varuga
3. Thuthi bali seluthave varuga Thuthiganam ullavare varuga – 2
Puthu yennaiyal abishegam Puthithaakave varuga -2
– Vanavare Varuga (2)

Sthothiram Thuthi Pathira Ummai – ஸ்தோத்திரம் துதி பாத்திரா

Sthothiram Thuthi Pathira Ummai
ஸ்தோத்திரம் துதி பாத்திரா உம்மை
இன்றும் என்றும் துதித்திடுவேன்

காத்தீரே என்னைக் கருத்தாக
வழுவாமல் என்னை உமக்காக
எடுத்தீர் எனையும் உமக்காக
கொடுத்தீர் உமையும் எனக்காக

1. வல்ல வான ஞான வினோதா
துதியே துதியே துதித்திடுவேன்
எல்லாக் குறையும் தீர்த்தீரே
தொல்லை யாவும் தொலைத்தீரே
அல்லல் யாவும் அறுத்தீரே
அலையும் எனையும் மீட்டீரே

2. நம்பினோரைக் காக்கும் தேவா
துதியே துதியே துதித்திடுவேன்
அம்புவியாவும் படைத்தீரே
அம்பரா உந்தன் வாக்காலே
எம்பரா எல்லாம் ஈந்தீரே
நம்பினோர்க் குந்தன் தயவாலே

3. கண்ணின் மணிபோல் காத்தீரே எம்மைத்
துதியே துதியே துதித்திடுவேன்
அண்ணலே உந்தன் அருளாலே
அடியாரைக் கண் பார்த்தீரே
மன்னா எமக்கும் நீர் தாமே
எந்நாளும் எங்கள் துணை நீரே

4. தீயோன் அம்புகள் தாக்காதே எம்மைத்
துதியே துதியே துதித்திடுவேன்
தேவா நீர் உந்தன் சிறகாலே
தினமும் மூடிக் காத்தீரே
தீதணு காதும் மறைவினிலே
தேடியுமதடி தங்கிடுவேன்

5. அல்லேலூயா தோத்திரமே
துதியே துதியே துதித்திடுவேன்
அகில சிருஷ்டிகளும் துதிக்க
அடிமை துதியா திருப்பேனோ
அல்லும் பகலும் நித்தியமாய்
அன்பே உமையும் துதித்திடுவேன்

In English

Sthothiram Thuthi Pathira Ummai
Indrum endrum thuththiduven
Kaathire ennai karuthaga
Valuvamal ennai umakkaga
Edutheer ennayum umakkaga
Kodutheer ummaiyum enakkaga

1. Valla vana niyaana vinodha
Thuthiye thuthiye thuththiduven
Ella kuraiyum theertheere
Thollai yavum tholaitheere
Allal yavum arutheere
Alaiyum ennaiyum meetteere

2. Nambinorai kakkum dheva
Thuthiye thuthiye thuththiduven
Ambuviyaavum padaitheere
Ambara unthan vaakale
Embara ellam eenthire
Nambinor kunthan thayavale

3. Kannin manipol kaatheere emmai
Thuthiye thuthiye thuththiduven
Annale unthan arulale
Adiyaarai kan paartheere
Manna emakkum neer thaame
Ennaalum engal thunai neere

4. Theeyon ambugal thaakathe emmai
Thuthiye thuthiye thuththiduven
Dheva neer unthan siragale
Thinamum moodi kaathire
Theethanu kaathum maivinele
Thediyumathadi thagiduven

5. Alleluya sthothiram
Thuthiye thuthiye thuththiduven
Agila criustikalum thuikka
Adimai thuthiyaa thiruppeno
Allum pagalum nithiyaamaai
Anbe umaiyum thuththiduven.

Kaarirul Velayil – காரிருள் வேளையில் கடுங்குளிர்

Kaarirul Velayil
காரிருள் வேளையில் கடுங்குளிர் நேரத்தில்
ஏழைக் கோலமதாய்
பாரினில் வந்த மன்னவனே உம்
மாதயவே தயவு

1. விண்ணுலகில் சிம்மாசனத்தில்
தூதர்கள் பாடிடவே
வீற்றிருக்காமல் மானிடனானது
மாதயவே தயவு – காரிருள்

2. விண்ணில் தேவனுக்கே மகிமை
மண்ணில் சமாதானம்
மானுடரில் பிரியம் மலர்ந்தது உந்தன்
மாதயவே தயவு – காரிருள்

3. விந்தை விதந்தனில் வந்தவனே,
வானவனே, நாங்கள்
தந்தையின் அன்பைக் கண்டதும் உந்தன்
மாதயவே தயவு – காரிருள்

Kaarirul velayil kadung kulir nearathil
Yealai koalamathaai
Paarinil vantha mannavanee um
Maathayavee thayavu

1. Vinnulakil simmaasanathil
Thootharkal paadidave
veetirukkaamal maanidanaanathu
Maathayavea thayavu – Kaarirul

2. Vinnil theavanukkee magimai
Mannil samaathaanam
Maanudaril piriyam malarnthathu unthan
Maathayavea thayavu – Kaarirul

3. Vinthai vithanthanil vanthavanee
Vaanavanee, naangkal
Thanthaiyin anpai kandathum unthan
Maathayavea thayavu – Kaarirul

Intheeyar Yaar – இந்தியர் யார்

Intheeyar Yaar
இந்தியர் யார்? இந்தியர் யார்?
இந்தியர் யார்? இந்தியர் யார்? – (2)

1. ஜாதி மதங்களுக்கு அப்பாற்பட்டவர்
போராட்டம், வன்முறைக்கு உட்படாதவர்
தேசத்தின் வளர்ச்சிகளை கெடுக்காதவர்
அரசாங்க சட்டங்களை மீறாதவர்
அவரே உண்மை இந்தியர்கள்
உள்ளத்தில் தேச பக்தி கொண்டவர்கள்! – (2) – இந்தியர் யார்?

2. பலவந்தம் செய்து மதம் மாற்றமாட்டார்
ஏமாற்றி கொள்கைகளை விற்கமாட்டார்
பிறரின் உரிமைகளை தடுக்கமாட்டார்
தேசத்தின் நல் எண்ணம் ஓங்கச் செய்வார்
அவரே உண்மை இந்தியர்கள்
உள்ளத்தில் தேச பக்தி கொண்டவர்கள்! – (2) – இந்தியர் யார்?

3. தேசத்தின் உடைமைகளை களவுசெய்யார்
கருப்பு பணங்களை ஏற்கமாட்டார்
கொள்ளை அடித்து குவிக்கமாட்டார்
வரிகளில் வஞ்சம் செய்யமாட்டார்
அவரே உண்மை இந்தியர்கள்
உள்ளத்தில் தேச பக்தி கொண்டவர்கள்! – (2) – இந்தியர் யார்?

4. குறித்த நேரத்தில் வேலைக்குச் செல்வார்
குறிப்பிட்ட கடமையில் தவறமாட்டார்
லஞ்சம் எதுவும் வாங்கமாட்டார்
சிபாரிசு, செல்வாக்கு நோக்கமாட்டார்
அவரே உண்மை இந்தியர்கள்
உள்ளத்தில் தேச பக்தி கொண்டவர்கள்! – (2) – இந்தியர் யார்?

5. சுத்தம் சுகாதாரம் பாதுகாப்பார்
சாலை விதிகளை கடைப்பிடிப்பார்
ஒளித்தும் மறைத்தும் ஒன்றும் செய்யமாட்டார்
உண்மை பிரஜையாக செயல்படுவார்
அவரே உண்மை இந்தியர்கள்
உள்ளத்தில் தேச பக்தி கொண்டவர்கள்! – (2) – இந்தியர் யார்?

6. ஏழைகள், அகதிகள் நலம் தேடுவார்
தான தர்மங்களில் பங்கெடுப்பார்
விலங்குகள், பறவைகள் பாதுகாப்பார்
தன்னைப்போல் பிறருக்கும் அன்பே செய்வார்
அவரே உண்மை இந்தியர்கள்!
உள்ளத்தில் தேச பக்தி கொண்டவர்கள்! – (2) இந்தியர் யார்?

Vaazhga Vaazhga Bharatha Desam – வாழ்க வாழ்க பாரத

Vaazhga Vaazhga Bharatha Desam
வாழ்க வாழ்க பாரத தேசம்
வாழ்க வாழ்க பாரத தேசம் – (2)

1. கட்சி கொடிகள் பல பல வகையாம்
தேசக் கொடியை காக்கவே அவையாம் – (2)
பாரத தேசம் சுதந்தர தேசம்
எத்தனை சலுகை! எத்தனை உரிமை!

வாழ்க வாழ்க பாரத தேசம் – 2

2. நாவின் மொழிகள் பல பல உண்டு
உள்ளத்தில் அனைவரும் இந்தியரல்லோ – (2)
அன்பெனும் மொழியில் அனைவரும் ஒன்றே
ஒற்றுமை, ஐக்கியம் உயர்விற்கு நன்றே

வாழ்க வாழ்க பாரத தேசம் – 2

3. நீரோ, பயிரோ நமதென வேண்டாம்
அனைத்து இந்தியர் சமமென வேண்டும் – (2)
ஒருவருக்கொருவர் உதவியாய் இருப்போம்
விட்டு நாம் கொடுப்போம், விரைந்து வளருவோம்

வாழ்க வாழ்க பாரத தேசம் – 2

4. உழவர், தொழிலாளர், வீரர், ஆசிரியர்
நாட்டின் நான்கு தூண்கள் என்றறிவோம் – (2)
அவர்களின் வாழ்வு அனைவரின் வாழ்வு
சிறப்பும் செழிப்பும் கண்களால் காண்போம்

வாழ்க வாழ்க பாரத தேசம் – 2

5. லஞ்சம், வரி ஏய்ப்பு, வேலை நிறுத்தம்
வன்முறை அனைத்தும் அகற்றியே வாழ்வோம் – (2)
கடத்தல் தொழிலில்லை, போதை பொருளில்லை
என்றொரு நாள்வர தீர்மானம் எடுப்போம்

வாழ்க வாழ்க பாரத தேசம் – 2

6. ஜாதி, மதம் என்ற சுவர்களை தகர்ப்போம்
மதமல்ல, மனிதனே முக்கியம் அறிவோம் – (2)
சிறுவர், இளைஞர் எதிர்காலம் காப்போம்
அன்பெனும் கயிற்றில் தாய்க்கொடி காண்போம்

வாழ்க வாழ்க பாரத தேசம் – 2

7. அனைவர்க்கும் சம அன்பு அருளும் பிதாவே
அனைத்திலும் தாய் பூமி செழித்திடச் செய்யும் – (2)
அதற்கு எங்கள் பங்கை செய்திடச் செய்யும்
இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் பிதாவே

வாழ்க வாழ்க பாரத தேசம் – 2

Naam Aaradhikka Vaeroru – நாம் ஆராதிக்க வேறொரு தெய்வம்

Naam Aaradhikka Vaeroru Deivam illai நாம் ஆராதிக்க வேறொரு தெய்வம்
Naan Ummaiyae Aaradhippaen Yesuvae (2)
Naan Aaradhikkum Deivam Ennai Nesikkum Deivam
Naan Aaradhikkum Deivam Ennai Visaarikkum Deivam
Naan Aaradhikkum Deivam EnnaiVanaindhidum Deivam
Naan Aaradhikkum Deivam Ennai Uyarthidum Deivam
Naam Aaradhikka Vaeroru Deivam illai
Naan Ummaiyae Aaradhippaen Yesuvae (2)

Iyarkkayin Mel Adhikaaram Ullavar
Iraiyaadhae Endru Kattalai Koduththavar (2)
Kaattraiyum Kadalaiyum Adakka Vallavar (2)
Kadinamaanadhendru Ondrumilladhavar
Naam Thuthithida Vaeroru Deivam illai
Naan Ummaiyae Thuthikindraen Yesuvae (2)

Manidhargale mel mana vurukkam kondavar
Marithorai Yezhuppi Arputham Seithavar (2)
Maaradha Anbinai Thandha Mannavar (2)
Maandhargal Paninthida Endrum Thagundhavar
Naan Paninthida Vaeroru Deivam illai
Naan Ummaiyae Panigindraen Yesuvae (2)

Voozhiyathil Abishegam Thandhavar
Kirubaigal Thandhu Uyarthivaithavar (2)
Parisutha Vallamai Peruga seidhavar (2)
Aaviyin Varangalaal indrum niraippavar
Naan Uyarthida Vaeroru Deivam illai
Naan Ummaiyae Uyarthuvaen Yesuvae (2)

Naan Paninthida Vaeroru Deivam illai
Naan Ummaiyae Panigindraen Yesuvae

Naam Thuthithida Vaeroru Deivam illai
Naan Ummaiyae Thuthikindraen Yesuvae

Naam Aaradhikka Vaeroru Deivam illai
Naan Ummaiyae Aaradhippaen Yesuvae (4)