All Songs by david

Thaai Kooda Pillaigalai – தாய் கூட பிள்ளைகளை

Thaai Kooda Pillaigalai

தாய் கூட பிள்ளைகளை மறந்து போகலாம்
சிங்கங் கூட குட்டிகளை பட்டினி போடலாம் (2)
தாயினும் மேலாக அன்பு வைத்தவர்
இரத்ததையே சிலுவையிலே உனக்குத் தந்தவர் (2)
மறந்திடுவாரோ உன்னை வெறுத்திடுவாரோ -2
உன் நம்பிக்கையை விட்டு விடாதே
நீ நம்பினவர் கைவிட மாட்டார் (2)

நீ அவரைத் தெரிந்துக் கொள்ளவில்லை
அவரல்லவோ உன்னைத் தெரிந்துக் கொண்டார் (2)
நேற்று அல்ல இன்று அல்ல
தாயின் கருவில் தோன்று முன்னே (2)
தாய் கூட பிள்ளைகளை மறந்து போகலாம்
சிங்கங் கூட குட்டிகளை பட்டினி போடலாம்

தேவன் உனக்கு சொன்ன வார்த்தையெல்லாம்
ஒன்று கூட மாறிப் போவதில்லை (2)
நேற்றும் இன்றும் என்றும் மாறா
தேவன் இயேசு மாறிடாரே (2)
தாய் கூட பிள்ளைகளை மறந்து போகலாம்
சிங்கங் கூட குட்டிகளை பட்டினி போடலாம்

நீ அவரின் முகத்தை நோக்கிப் பார்த்தால்
உந்தன் வாழ்வு வெளிச்சமாக மாறும் (2)
கர்த்தருக்குக் காத்திருப்போர்
வெட்கப்பட்டுப் போவதில்லை (2)
தாய் கூட பிள்ளைகளை மறந்து போகலாம்
சிங்கங் கூட குட்டிகளை பட்டினி போடலாம் (2)
தாயினும் மேலாக அன்பு வைத்தவர்
இரத்ததையே சிலுவையிலே உனக்குத் தந்தவர் (2)
மறந்திடுவாரோ உன்னை வெறுத்திடுவாரோ -2
உன் நம்பிக்கையை விட்டு விடாதே
நீ நம்பினவர் கைவிட மாட்டார் (2)

Onnumillaymayil Ninene

Onnumillaymayil Ninene
ஒந்நுமில்லாய்மயில் நிந்நென்னே
நின்னுடே சாயலில் சிருஷ்டிச்சு
நித்யமாய் சினேகிச்சென்னெ நின்றெ
புத்றனெ தந்நு ரட்ஷிச்சு நீ

நின்மகா கிறுபய்க்காய் – நின்னெ
ஞான் ஸ்துதிச்சிடுமெந்நும்

1.ஈலோகத்தில் வந்நேசு என்றெ
மாலொழிப்பான் சகிச்ச பெகு
பீடகள் சங்கடங்ஙள் பங்க
பாடுகள் நீஜ மரணவும்

2.மோஜனம் வீண்டும் ஜனனவும்
நீஜ பாவி என்னில் வசிப்பான்
நின் ஆத்மாவின்றெ தானவும் நீ
தந்நு சொர்க்கானுங்கரகங்ஙளும்

3.அன்ன வஸ்த்றாதி நன்மகளெ
எண்ணமில்லாதென்னில் சொரிஞ்ஞு
தின்மகள் சர்வத்தில் நிந்நென்னெ
கண்மணி போலெ காக்குந்து நீ

4.நாசமில்லாத்தவகாசவும்
யேசுவின் பாக்ய சன்னிதியும்
நீதியின் வாடா முடிகளும்
தன் மக்கள்கு ஸொர்கே லெபிக்கும்

Mangalam Mangalam – മംഗളം മംഗളം മംഗളമേ

Mangalam Mangalam
മംഗളം മംഗളം മംഗളമേ (3)

ഇന്നു വിവാഹിതരാം (വരന്‍) നും (വധു) നും
മംഗളം നേരുന്നു ഞങ്ങളീ നല്‍നേരം
ഭംഗമില്ലാതെ മോദാല്‍
ആശിഷം നല്കയെന്നും യേശു നാഥാ…

സേവിക്ക യഹോവയെ നിങ്ങള്‍ കുടുംബമായി
ജീവിതസാഗര വന്‍തിരമാലയില്‍
കൈവിടാ കര്‍ത്തനവന്‍
ആശിഷം നല്കയെന്നും യേശു നാഥാ…

ജീവിത പൂവാടിയില്‍ മുല്ലകളാകും നിങ്ങള്‍
സൌരഭ്യം വീശട്ടെ കാന്തിപരത്തട്ടെ
സൌഭാഗ്യ സംപൂര്‍ണരായ്
ആശിഷം നല്കയെന്നും യേശു നാഥാ…

Indha Mangalam Selikavea – இந்த மங்களம் செழிக்கவே

Indha Mangalam Selikavea

இந்த மங்களம் செழிக்கவே – கிருபை செய்யும்
எங்கள் திரித்துவ தேவனே
சுந்தரக் கானாவின் மணப்பந்தலில் சென்றம் மணத்தை
கந்தரசமாகச் செய்த விந்தை போல், இங்கேயும் வந்து

1. ஆதித்தொடுத் தன்பை எடுத்தாய் மனுடர்தம்மை
ஆணும் பெண்ணுமாகப் படைத்தாய்
நீதி வரம் நாலுங்கொடுத்தாய் – பெற்றுப் பெறுகி
நிற்க உலகத்தில் விடுத்தாய்
மாதவா் பணியும் வேத போதனே அந்தப்படி உன்
ஆதரவைக் கொண்டு அதன் நீதியை நம்பிப்புரிந்த

2. தக்க ஆபிரகாமும் விண்டனன் – அதனை மன
துக்குள் எலியேசா் கொண்டனன்
முக்ய ஆரான் நிலத்தண்டினன் – நினைத்தபடி
சக்கியமதாகக் கண்டனன்
பக்குவம் உரைத்திடா ரெபேக்காளும் ஈசாக்குவுக்கு
தக்க மணவாளியாகத் தந்து தயை செய்தாற்போல

3. சத்திய வேதத்தின் வாசனே – அருளுபரி
சுத்த சுவிசேட நேசனே
பக்தர்கள் பவ விமோசனே – பழுதணுவும்
அற்ற கிறிஸ்தேசுராஜனே
வெற்றியால் யாக்கோபுவுக்கு முற்றிலும் அளித்த பேறாய்
புத்திர சம்பந்துண்டாக்கி நித்திய சுப சோபனமாய்

Bayanthu Kartharin – பயந்து கர்த்தரின் பக்தி

Bayanthu Kartharin
பயந்து கர்த்தரின் பக்தி வழியில்
பணிந்து நடப்போன் பாக்கியவான்
முயன்று உழைத்தே பலனை உண்பான் (2)
முடிவில் பாக்கியம் மேன்மை காண்பான்

1. உண்ணுதற்கினிய கனிகளைத் தரும்
தண்ணிழல் திராட்சைக்கொடிபோல் வளரும்
கண்ணிய மனைவி மகிழ்ந்து இருப்பாள் (2)
எண்ணரும் நலங்கள் இல்லத்தில் புரிவாள்

2. ஓலிவ மரத்தைச் சூழ்ந்து மேலே
உயரும் பச்சிளங் கன்றுகள் போல
மெலிவிலா நல்ல பாலகருன்பாலே (2)
மிகவும் களித்து வாழ்வர் அன்பாலே

3. கர்த்தருன் வீட்டைக் கட்டாவிடில் அதை
கட்டுவோர் முயற்சி வீணாம் அறி இதை
கர்த்தரால் வரும் சுதந்திரம் பிள்ளைகள் (2)
கர்ப்பத்தின் கனியும் கர்த்தரின் கிருபை

Yesu Balanai Piranthar – இயேசு பாலனாய் பிறந்தார்

Yesu Balanai Piranthar

இயேசு பாலனாய் பிறந்தார்
இயேசு தேவனே பெத்லகேமிலே
ஏழைக் கோலமாய் முன்னணை
புல்லணை மீதிலே பிறந்தார்

1. உன்னதத்தில் தேவ மகிமை
பூமியிலே சமாதானமும்
மானிடரில் பிரியம் உண்டாவதாக
என்று தேவ தூதர் பாடிட – இயேசு

2. விண்ணை வெறுத்த இம்மானுவேல்
விந்தை மானிடவதாரமாய்த்
தன்னைப் பலியாகத் தந்த ஒளி இவர்
தம்மை பணிந்திடுவோம் வாரும் – இயேசு

3. ஓடி அலைந்திடும் பாவியைத்
தேடி அழைக்கும் இப்பாலகன்
பாவங்களின் நாசர் பாவிகளின் நேசர்
பாதம் பணிந்திடுவோம் வாரும் – இயேசு

4. கைகள் கட்டின தேவாலயம்
கர்த்தர் தங்கும் இடமாகுமோ
நம் இதயமதில் இயேசு பிறந்திட
நம்மை அளித்திடுவோம் வாரும் – இயேசு

5. அன்பின் சொரூபி இப்பாலனே
அண்டி வருவோரின் தஞ்சமே
ஆறுதல் அளித்து அல்லல் அகற்றிடும்
ஆண்டவரை பணிவோம் வாரும் – இயேசு

Dhivya Anbin Sathathai – திவ்ய அன்பின் சத்தத்தை

Dhivya Anbin Sathathai
திவ்ய அன்பின் சத்தத்தை இரட்சகா
கேட்டு உம்மை அண்டினேன்
இன்னும் கிட்டிச் சேர என் ஆண்டவா
ஆவல் கொண்டிதோ வந்தேன்

இன்னும் கிட்ட கிட்ட சேர்த்துக் கொள்ளுமேன்
பாடுபட்ட நாயகா
இன்னும் கிட்ட கிட்ட சேர்த்துக் கொள்ளுமேன்
ஜீவன் தந்த இரட்சகா

1. என்னை முற்றுமே இந்த நேரத்தில்
சொந்தமாக்கிக் கொள்ளுமேன்
உம்மை வாஞ்சையோடெந்தன் உள்ளத்தில்
நாடித் தேடச் செய்யுமேன் – இன்னும்

2. திருப்பாதத்தில் தங்கும் போதெல்லாம்
பேரானந்தம் காண்கிறேன்
உம்மை நோக்கி வேண்டுதல் செய்கையில்
மெய் சந்தோஷமாகிறேன் – இன்னும்

3. இன்னும் கண்டிராத பேரின்பத்தை
விண்ணில் பெற்று வாழுவேன்
திவ்ய அன்பின் ஆழமும் நீளமும்
அங்கே கண்டானந்திப்பேன் – இன்னும்

Devanai Uyarthi Thuthiyungal – தேவனை உயர்த்தித் துதியுங்கள்

Devanai Uyarthi Thuthiyungal
தேவனை உயர்த்தித் துதியுங்கள்
அவர் நாமத்தைப் போற்றியே
தேவனை உயர்த்தி துதியுங்கள்
தேவனின் செயல் அதிசயமென்று
அதிசயமென்று சொல்லி – நம்

1. கொடியவரின் சீறல் கடுமையாய் வரினும்
திட பெலனும் ஏழைக்கடைக்கலமுமானார்
படும் பலவந்தர் ஆரவாரம் என்றும்
ஆரவாரம் என்றுமே

2. இவரே நம் தேவன் இவர் நம்மை இரட்சித்தார்
இவரின் இரட்சிப்பினால் களிகூர்ந்திடுவோம்
இவர் பகைவரை வென்று கீழ்ப்படுத்தி
வென்று கீழ்படுத்தினார்

3. கர்த்தரையே நம்பி சத்தியம் கைக்கொண்ட
உத்தம ஜாதியே உட்பிரவேசியுங்கள்
பக்தருக்கென்று பலத்த நகரம்
பலத்த நகரம் உண்டு

4. அன்னியர் ஆள்வதில்லை இந்நிலம்
தன்னில் நம்மை மன்னாதி
மன்னனே நம் மகிபனாயிருப்பார்
மன்னரும் தேவ சமாதானம் தங்கும்
சமாதானம் தங்கிடுமே

5. புனிதராய் மரித்தோர் பூரித்தெழும்பிடுவார்
பனிபோல் கிருபையை
பக்தரின் மேல் பொழிவார்
இனி உலகத்தில் இன்னல் பெருகிடும்
இன்னல் பெருகிடும்

6. சிறந்த விருந்தொன்று சீயோன் மலையின் மீது
அருந்த யாவர்க்கும் ஆயத்தமாக்குவார்
நிந்தையை நீக்கிக் கண்ணீரைத் துடைத்துக்
கண்ணீரைத் துடைத்திடுவார்

Abishegam Illatha Aarathanai Vendamaiya – அபிஷேகம் இல்லாத ஆராதனை

Abishegam Illatha Aarathanai Vendamaiya
அபிஷேகம் இல்லாத ஆராதனை வேண்டாமையா
உந்தன் அபிஷேகத்தால் என்னை நிறப்பும்மையா – 2

சுட்டெரிக்கும் ஆவியை ஊற்றுமையா
என் சுயங்கள் மாறிட வேண்டுமையா – 2
சுத்த ஆவியால் என்னை நிரப்பும் ஐயா – 2
சுகமாய் நான் வாழவேண்டுமய்யா – 2

அபிஷேகம் இல்லாத ஆராதனை வேண்டாமையா
உந்தன் அபிஷேகத்தால் என்னை நிறப்பும்மையா – 2

அபிஷேக வாழ்க்கை மாறிடவே
என் அபிஷேக நாதரே வாருமை ஐயா – 2
உன்னதத்தின் ஆவியை ஊற்றுமையா – 2
உமக்காய் நான் வாழ்வேனையா – 2

அபிஷேகம் இல்லாத ஆராதனை வேண்டாமையா
உந்தன் அபிஷேகத்தால் என்னை நிறப்பும்மையா – 2

அனலுமின்றி குளிருமின்றி வேண்டாமையா
அனலோடு ஆராதனை செய்யணுமையா – 2
ஆர்ப்பரித்து உம்மை நான் ஆராதிக்க – 2
ஆந்த தைலத்தால் ஊற்றுமையா – 2

அபிஷேகம் இல்லாத ஆராதனை வேண்டாமையா
உந்தன் அபிஷேகத்தால் என்னை நிறப்பும்மையா – 2

அனலுமின்றி குளிருமின்றி வேண்டாமையா
அனலோடு ஆராதனை செய்யணுமையா – 2
ஆர்ப்பரித்து உம்மை நான் ஆராதிக்க – 2
ஆந்த தைலத்தால் ஊற்றுமையா – 2

அபிஷேகம் இல்லாத ஆராதனை வேண்டாமையா
உந்தன் அபிஷேகத்தால் என்னை நிறப்பும்மையா – 2

Aarathanai Nayagan Neere – ஆராதனை நாயகர் நீரே

Aarathanai Nayagan Neere
ஆராதனை நாயகர் நீரே
ஆராதனை வேந்தனும் நீரே
ஆயுள் முடியும் வரை
உம்மை தொழுதிடுவேன்

1. ஆயிரம் பேர்களில் சிறந்தோர்
ஆண்டவர் இயேசு நீரே
விடிவெள்ளியே எந்தன் பிரியம் நீரே
என்றென்றும் தொழுதிடுவேன் – ஆராதனை

2. மாந்தர்கள் போற்றிடும் தெய்வம்
மகிமையின் தேவன் நீரே
முழங்கால் யாவும் முடங்கிடவே
மகிழ்வுடன் துதித்திடுவேன் – ஆராதனை

3. முடிவில்லா ராஜ்ஜியம் அருள
திரும்பவும் வருவேன் என்றீர்
ஆயத்தமாய் நான் சேர்ந்திடவே
அனுதினம் வணங்கிடுவேன் – ஆராதனை

Aaraadhanai naayagan neerae
Aaraadhanai vaendhanum neerae (2)
Aayul mudiyum varai
Ummai thozhudhiduvaen (2)

1. Aayiram paergalil sirandhoar
Aandavar Yaesu neerae (2)
Vidivellliyae engal piriyam neerae
Endrendrum thozhudhiduvaen (2)

2. Maandhargal poatridum dheivam
Magimaiyin dhaevan neerae (2)
Muzhangaal yaavumae mudangidumae
Magizhvudan thudhithidavae (2)

3. Mudivillaa raajiyam arula
Thirumbavum varuvaen endreer (2)
Aayathamaai naangal saerndhiduvae
Anudhinam vanangiduvaen (2)