All Songs by david

Vaanam Vaalthatum – வானம் வாழ்த்தட்டும்

Vaanam Vaalthatum
வானம் வாழ்த்தட்டும் வையம் போற்றட்டும்
பூமி மகிழட்டும் பூதலம் பணியட்டும்
பாடுங்கள் (2) பாலன் இயேசு இன்று பிறந்தார் (2)
Merry (4) Christmas (4)

1. காலம் சிந்தும் கானம் தாலாட்டு பாடிடுதே
மேகம் சிந்தது வானம் தேனாக மாறிடுதே
குளிரும் பணியும் வாட்டிட
குளிரில் கோமகன் தூங்கிட
விண்மீன்கள் கூட்டமே ஒளிருங்கள்
விண் பாலனோடு விளையாடவே
வா வா வா வானத்து வெண்ணிலவே – வானம்

2. ஏதேன் தந்த பாவம் சாபங்கள் நீங்கிடவே
ஏழை கோலம் கொண்டார் இயேசு பாலனின்றே
அன்னை மரியின் மடியிலே
அன்பின் ரூபம் ஆனாரே
இனி மீட்க வந்த தேவ மைந்தனே
இனி பாடவைத்த இயேசு பாலனே
வா வா வா வாழ்த்து பாடுகிறேன்

Vaan Velli Pragaasikkudhae – வான் வெள்ளி பிரகாசிக்குதே

Vaan Velli Pragaasikkudhae
வான் வெள்ளி பிரகாசிக்குதே
உலகில் ஒளி வீசிடுமே
யேசு பரன் வரும் வேளை
மனமே மகிழ்வாகிடுமே

1. பசும் புல்லணை மஞ்சத்திலே
திருப்பாலகன் துயில்கின்றான்
அவர் கண் அயரார் நம்மை கண்டிடுவார்
நல் ஆசிகள் கூறிடுவார் – வான்

2. இகமீதினில் அன்புடனே
இந்த செய்தியை கூறிடுவோம்
மகிழ்வோடு தினம் புகழ் பாடிடுவோம்
அவர் பாதம் பணிந்திடுவோம் – வான்

Vaan Velli Pragaasikkudhae
Ulagil Oli Veesidumae
Yesupran Varum Velai
Manamae Magilvagidumae(2)

1. Pasum Pillanai Manjathilae
Siru Paalagan Thuyilgindraar
Avar Kannayarvaar Nammai Kandiduvaar
Nal Aasigal Kooriduvaar – Vaan

2. Igameedhinil Anbudanae
Inba Seidhiyai Kooriduvom
Magilvodu Dhinam
Pugazh Paadiduvom
Avar Paadham Panindhiduvom – Vaan

Aabiragamai Aasirvathitha – ஆபிரகாமை ஆசீர்வதித்த

Aabiragamai Aasirvathitha
ஆபிரகாமை ஆசீர்வதித்த ஆண்டவா அருளுமே

1. செல்வி மணமகள் – XXXXXம்
செல்வன் மணமகன் – YYYYYம் -ஆ…
என்றும் ஆசி பெற்று இனிது வாழவே
வாழவே! வாழவே!! வாழவே!!!
என்றும் ஆசிபெற்று இணைந்து வாழவே
இல்லறமாம் இன்ப நல்லறச் சோலையில்
இன்னிசை யெழுப்பி இங்கிதமாய் இனி
இணைந்து வாழவே!

2. கல்லின் மனைபோல கணவனும்
இல்லின் விளக்கென காகையும் – ஆ…
என்றும் ஆசி பெற்று இனிது வாழவே
வாழவே! வாழவே!! வாழவே!!!
என்றும் ஆசிபெற்று இணைந்து வாழவே
நன்கலமாம் பல நன்மக்களைப் பெற்று
நானிலந்தனிலே நல்லோர் நலம் நாடி
நல்வாழ்வு வாழவே!

Aabiragamai Aasirvathitha
Aabiragaamai Aaseervathiththa Aanndavaa Arulumae

1. Selvi Manamakal – XXXXX im
Selvan Manamakan – YYYYY im – Aaa…
Entum Aasi Pettu Inithu Vaalavae
Vaalavae! Vaalavae!! Vaalavae!!!
Entum Aasipettu Innainthu Vaalavae
Illaramaam Inpa Nallarach Solaiyil
Innisai Yeluppi Ingithamaay Ini
Innainthu Vaalavae!

2. Kallin Manaipola Kanavanum
Illin Vilakkena Kaakaiyum – Aa…
Entum Aasi Pettu Inithu Vaalavae
Vaalavae! Vaalavae!! Vaalavae!!!
Entum Aasipettu Innainthu Vaalavae
Nankalamaam Pala Nanmakkalaip Pettu
Naanilanthanilae Nallor Nalam Naati
Nalvaalvu Vaalavae!

Manavaazhvu Puvi – மணவாழ்வு புவி வாழ்வினில்

Manavaazhvu Puvi
பல்லவி

மணவாழ்வு புவி வாழ்வினில் வாழ்வு – மங்கள வாழ்வு
வாழ்வினில் வாழ்வு
மணவாழ்வு புவி வாழ்வினில் வாழ்வு
மருவிய சோபன சுப வாழ்வு

சரணங்கள்

1. துணை பிரியாது, தோகையிம்மாது
சுப மண மகளிவர் இதுபோது
மனமுறை யோது வசனம் விடாது
வந்தன ருமதருள் பெறவேது – நல்ல

2. ஜீவ தயாகரா, சிருஷ்டியதிகாரா
தெய்வீக மாமண வலங்காரா
தேவகுமாரா, திருவெல்லையூரா
சேர்ந்தவர்க்கருள் தரா திருப்பீரா? – நல்ல

3. குடித்தன வீரம் குணமுள்ள தாரம்
கொடுத்துக் கொண்டாலது சமுசாரம்
அடக்கமாசாரம் அன்பு, உதாரம்
அம்புவிதனில் மனைக்கலங்காரம் – நல்ல

Manavaazhvu Puvi Vaazhvinil Vaazhvu – Mangala Vaazhvu

Vaazhvinil Vaazhvu
Manavaazhvu Puvi Vaazhvinil Vaazhvu
Maruviya Sopana Suba Vaazhvu

Saranangal

1. Thunai Piriyadhu, Thogaiyim Maadhu
Suba Mana Magalivar Ithu Pothu
Manamuraiyodu Vasanam Vidaadhu
Vandhanar Umatharul Perave Idhu – Nalla

2. Jeeva Dhayagaraa, Srushtiyadhikaaraa
Dheiveega Maamana Valangaraa
Devakumaaraa, Thiruvellaiyooraa
Saerndhavarkkarul Tharaa Thiruppeeraa? – Nalla

3. Kudiththana Veeram, Gunamulla Thaaram
Koduththu Kondaal Adhu Samushaaram
Adakkamaachaaram, Anbu, Udhaaram
Ambuvidhanil Manai Kalangaaram – Nalla

Mangalam Sezhikka – மங்களம் செழிக்க கிருபை

Mangalam Sezhikka
பல்லவி

மங்களம் செழிக்க கிருபை
அருளும் மங்கள நாதனே

சரணங்கள்

1. மங்கள நித்திய மங்கள நீ
மங்கள முத்தியும் நாதனும் நீ
எங்கள் புங்கவ நீ எங்கள் துங்கவ நீ
உத்தம சத்திய நித்திய தத்துவ மெத்த மகத்துவ
அத்தனுத் கத்தனாம் ஆபிராம் தேவ நீ

2. மங்கள மணமகன் xxxxxx-க்கும்
மங்கள மணமகள் xxxxx-க்கும்
மானுவேலர்க்கும் மகானுபவர்க்கும்
பக்தியுடன் புத்தி முத்தியளித்திடும் நித்தியனே – உனைத்
துத்தியம் செய்திடும் சத்திய வேதர்க்கும்

3. சங்கை நித்திய நாதனும் நீ
பங்கமில் சத்திய போதனும் நீ
மங்கா மாட்சிமை நீ தங்கக் காசியும் நீ
இத்தரை இத் திருமணத்தின் இருவர்
ஒத்து நல் இன்பம் உற்றவர் வாழ நடத்தியருளுமே

Mangalam Sezhikka Kirubai Aruzhum
Mangala Naadhane — 2

1. Mangalam Nithiya Mangalame
Mangalam Muthiyum Naadanum nee — (2)
Engal Pungavane, Engal Thungavane
Uthama Sathiya, Nithiya Thathuva, Metha Magathuva
Athanukathanama, Aaviram Thevane — (2) — Mangalam

2. Mangala Manamagan XXXX -ukkum
Mangala Manamagal XXXX – ukkum — (2)
Mannuvelarkum, Maganubavarkum
Bakthiyudan Buthi, Mukthiyalithidum
Nithiyane Ummai, Thuthiyam
Seithidum Sathiya Vetharkum — (2) — Mangalam

Rojapoo Vasamalargal – ரோஜாப்பூ வாசமலர்கள்

Rojapoo vasamalargal
ரோஜாப்பூ வாசமலர்கள் நாம் இப்போ
நேச மணாளர் மேல் தூவிடுவோம் (2)

1. மல்லிகை முல்லை சிவந்தி பிச்சி
மெல்லியர் சேர்ந்து அள்ளியே வீசி
நல்மணமக்கள் மீது நாம்…
எல்லா மலரும் தூவிடுவோம் – ரோஜாப்பூ

2. மன்னனாம் மாப்பிள்ளை பண்புள்ள பெண்ணுடன்
அன்றிலும் தேனும் போல் ஒன்றித்து வாழ
ஆண்டவர் ஆசீர்வதிக்க…
நம் வேண்டுதலோடு தூவிடுவோம் – ரோஜாப்பூ

3. புத்திர பாக்கியம் புகழும் நல் வாழ்வும்
சத்தியம் சாந்தம் சுத்த நல் இதயம்
நித்திய ஜீவனும் பெற்றிவரென்றும்…
பக்தியை வாழ்ந்திட தூவிடுவோம் – ரோஜாப்பூ

4. கறை திரை அற்ற மணவாட்டி சபையை
இறைவனாம் இயேசு கண்ணுடன் சேர்க்கும்
மங்கள நாளை எண்ணி இப்போ…
நேச மணாளர் மேல் தூவிடுவோம் – ரோஜாப்பூ

Yesu Manidanaai Piranthar – இயேசு மானிடனாய்ப் பிறந்தார்

Yesu Manidanaai Piranthar
இயேசு மானிடனாய்ப் பிறந்தார்
இந்த லோகத்தை மீட்டிடவே
இறைவன் ஒளியாய் இருளில் உதித்தார்
இந்த நற்செய்தி சாற்றிடுவோம்

1. மேய்ப்பர்கள் இராவினிலே – தங்கள்
மந்தையாய் காத்திருக்க
தூதர்கள் வானத்திலே தோன்றி
தேவனை துதித்தனரே – இயேசு

2. ஆலொசனைக் கர்த்தரே இவர்
அற்புத மானவரே
விண் சமாதான பிரபு சர்வ
வல்லவர் பிறந்தனரே – இயேசு

3. மாட்டுத்தொழுவத்திலே – பரன்
முன்னிலையில் பிறந்தார்
தாழ்மையை பின் பற்றுவோம் – அவர்
ஏழையின் பாதையிலே – இயேசு

4. பொன் பொருள் தூபவர்க்கம் – வெள்ளை
போளமும் காணிக்கையே
சாட்சியாய் கொண்டு சென்றே – வான
சாஸ்திரிகள் பணிந்தனரே – இயேசு

5. அன்னாளும் ஆலயத்தில் அன்று
ஆண்டவரை அறிந்தே
தீர்க்கதரிசனமே – கூறி
தூயனை புகழ்ந்தனளே – இயேசு

6. யாக்கோபிள் ஓர் நட்சத்திரம் – இவர்
வாக்கு மாறாதவரே
கண்ணிமை நேரத்திலே நம்மை
விண்ணதில் சேர்த்திடுவார் – இயேசு

Yesu Manidanaai Piranthar
Indha lohathai meettidavae
Iravaian Oliyai Irulil Uthithaar
Indha Narcheithi Satriduvoam

1. Meipparhal Iravinilae – Thangal
Madhaiyai Kathirukka
Vanathilae thoendri
Thevani Thuthithanarae – Yesu

2. Alosanai Kartharae Ivar
Arputha Manavarae
Vin Samathana Pirabhu Sarva
Vallavar Pirandhanarae – Yesu

3. Mattu Thozhyvathilae – Paran
Munnilaiyil Pirandhar
Thazhmaiyai Pin Patruvoam – Avar
Aezhaiyin Pathaiyilae – Yesu

Krishthore Ellorum Kalikoornthu Paadi – கிறிஸ்தோரே எல்லாரும்

Krishthore Ellorum Kalikoornthu Paadi
1. கிறிஸ்தோரே எல்லாரும்
களிகூர்ந்து பாடி
ஓ பெத்லெகேம் ஊருக்கு வாருங்கள்
தூதரின் ராஜா
மீட்பராய்ப் பிறந்தார்
நமஸ்கரிப்போமாக (3)
கர்த்தாவை

2. மகத்துவ ராஜா,
சேனையின் கர்த்தாவே,
அநாதி பிறந்த மா ஆண்டவா;
முன்னணை தானோ
உமக்கேற்கும் தொட்டில்
நமஸ்கரிப்போமாக (3)
கர்த்தாவை

3. விண் மண்ணிலும் கர்த்தர்
கனம் பெற்றோர் என்று
தூதாக்களே பாக்கியவான்களே
ஏகமாய்ப் பாடி
போற்றி துதியுங்கள்
நமஸ்கரிப்போமாக (3)
கர்த்தாவை

4. அநாதி பிதாவின்
வார்த்தையான கிறிஸ்தே!
நீர் மாமிசமாகி இந்நாளிலே
ஜென்மித்தீர் என்று
உம்மை ஸ்தோத்திரிப்போம்
நமஸ்கரிப்போமாக (3)
கர்த்தாவை

Magizhndhirungal Magizhndhirungal – மகிழ்ந்திருங்கள்

Magizhndhirungal Magizhndhirungal

மகிழ்ந்திருங்கள் மகிழ்ந்திருங்கள்
கர்த்தரில் மகிழ்ந்திருங்கள் (2)
இதயத்தின் வேண்டுதல் நிறைவேற்றுவார்
நம் இதயத்தின் வேண்டுதல் நிறைவேற்றுவார்
அல்லேலூயா அல்லேலூயா அலேலூயா-2

எல்லைகளை விரிவாக்குவார்
தொல்லைகள் போக்கிடுவார் (2)
எல்லாமே நமக்கு தந்திடுவார்
இனி தோல்வியில்லை தோல்வியில்லை
வெற்றி வெற்றியே (2) – மகிழ்ந்திருங்கள்

துயரங்களை நீக்கிடுவார்
காயங்கள் ஆற்றிடுவார் (2)
பயங்களை போக்கி நடத்திடுவார்
இனி தோல்வியில்லை தோல்வியில்லை
வெற்றி வெற்றியே (2) – மகிழ்ந்திருங்கள்

ஆசிகளை பொழிந்திடுவார்
சந்தோஷம் தந்திடுவார் (2)
கரங்களைப் பிடித்து நடத்திடுவார்
இனி தோல்வியில்லை தோல்வியில்லை
வெற்றி வெற்றியே (2) – மகிழ்ந்திருங்கள்

Pani Kaalam Oru Naal Iravil – பனி காலம் ஓர் நள்ளிரவில்

Pani Kaalam Oru Naal Iravil
பனி காலம் ஓர் நள்ளிரவில்
பெத்லகேமில் ஓர் சத்திரத்தில்
மாட்டுக் கொட்டிலின் முன்னனையில்
பிறந்தார் ஓர் பாலகன்
கன்னி மரியின் மடியிலே
கந்தை துணிகள் நடுவிலே
பிறந்த பாலனை சந்திப்போமா
அவர் பொற் பாதம் பணிவோமா

பெத்லகேம் அருகில் வயல்வெளி
மேய்ப்பர் காத்தனர் மந்தைகளை
அதன் கூறினான் நற்செய்தியை
பிறந்தார் ஓர் பாலகன்
கன்னி மரியின் மடியிலே
கந்தை துணிகள் நடுவிலே
பிறந்த பாலனை சந்திப்போமா
அவர் பொற் பாதம் பணிவோமா

வானத்தில் ஓர் நட்சத்திரம்
கண்டனர் மூன்று சாஸ்திரிகள்
அறிந்தார் பேரோர் உண்மைதனை
பிறந்தார் ஓர் பாலகன்
கன்னி மரியின் மடியிலே
கந்தை துணிகள் நடுவிலே
பிறந்த பாலனை சந்திப்போமா
அவர் பொற் பாதம் பணிவோமா

பாலகனின் பிறந்த நாள்
கேட்போம் அந்நற்செய்திதனை
திறப்போம் இதய கதவினை
பிறப்பார் ஓர் பாலகன்
கன்னி மரியின் மடியிலே
கந்தை துணிகள் நடுவிலே
பிறந்த பாலனை சந்திப்போமா
அவர் பொற் பாதம் பணிவோமா