Song Category: Tamil

Sthotharipaen Sthotharipaen – ஸ்தோத்தரிப்பேன் ஸ்தோத்தரிப்பேன்

Sthotharipaen Sthotharipaen
1. ஸ்தோத்தரிப்பேன், ஸ்தோத்தரிப்பேன் இயேசு தேவனை
என் ஜீவனுள்ள நாட்களெல்லாம் ஸ்தோத்தரிப்பேனே

2. உதடுகளின் கனியாகிய ஸ்தோத்திரப் பலியை
இயேசுவின் நாமத்தினாலே செலுத்துகிறேன் யான் – ஸ்தோத்தரிப்பேன்

3. பாவக்கறை நீங்க என்னை முற்றிலுமாக
உம் சுத்தமுள்ள இரத்தத்திற்குள் தோய்த்ததினாலே – ஸ்தோத்தரிப்பேன்

4. என்னுடைய நோய்களை உம் காயங்களாலே
என்றைக்குமாய்த் தீர்த்ததினால் ஸ்தோத்தரிப்பேன் யான் – ஸ்தோத்தரிப்பேன்

5. ஆகாயத்துப் பட்சிகளைப் போஷிக்கும் – தேவன்
தினமும் என்னைப் போஷிப்பதால் ஸ்தோத்தரிப்பேன் யான் – ஸ்தோத்தரிப்பேன்

6. நாளைத்தினம் ஊன் உடைக்காய் என் சிந்தைகளை
கவலையற்றதாக்கினதால் ஸ்தோத்தரிப்பேன் யான் – ஸ்தோத்தரிப்பேன்

7. சீக்கிரமாய் வந்திடுவேன் என்றுரைத்தோனைச்
சீக்கிரமாய்க் காண்பதினால் ஸ்தோத்தரிப்பேன் யான் – ஸ்தோத்தரிப்பேன்

Kuyavanae Um Kaiyil – குயவனே உம் கையில்

Kuyavanae Um Kaiyil
குயவனே உம் கையில் களிமண் நான்
உடைத்து உருவாக்கும் -2
என் சித்தம் அல்ல உம் சித்தம் நாதா
தருகிறேன் உம் கையிலே -2

1. என்னைத் தருகிறேன் தருகிறேன்
உம் கரத்தில் என்னைப் படைக்கிறேன்
படைக்கிறேன் உம் பாதத்தில் -2

2. உம் சேவைக்காக எனை தருகிறேன்
வனைந்திடும் உம் சித்தம்போல்
எனக்காக வாழாமல் உமக்காக வாழ்ந்திட
உருவாக்குமே உருவாக்குமே -2

3. உமக்காகவே நான் வாழ்ந்திட
வனைந்திடும் உம் சித்தம்போல் – உம்
சித்தம் செய்திடவே உம் சத்தம் கேட்டிடவே
உருவாக்குமே உருவாக்குமே -2

4. உம் வருகையில் உம்மோடு நான்
வந்திட எனை மாற்றுமே – ஓய்வின்றி
உமைப் பாட ஓயாமல் உமைத் துதிக்க
உருவாக்குமே உருவாக்குமே -2

Thirukarathal Thangi Ennai – திருக்கரத்தால் தாங்கி

Thirukarathal Thangi Ennai
1. திருக்கரத்தால் தாங்கி என்னை
திருச்சித்தம் போல் நடத்திடுமே
குயவன் கையில் களிமண் நான்
அனுதினமும் நீர் வனைந்திடுமே

2. உம் வசனம் தியானிக்கையில்
இதயமதில் ஆறுதலே
காரிருளில் நடக்கையிலே
தீபமாக வழி நடத்தும்

3. ஆழ்கடலில் அலைகளினால்
அசையும்போது என் படகில்
ஆத்ம நண்பர் இயேசு உண்டே
சேர்ந்திடுவேன் அவர் சமூகம்

4. அவர் நமக்காய் ஜீவன் தந்து
அளித்தனரே இந்த மீட்பு
கண்களினால் காண்கிறேனே
இன்ப கானான் தேசமதை

1. Thirukkarathaal thaangi ennai
Thirusitham poal nadathidumae
Kuyavan kaiyil kaliman naan
Anudhinamum neer vanaindhidumae

2. Um vasanam dhiyaanikkaiyil
Idhayamathil aarudhalae
Kaarirulil nadakkaiyilae
Theebamaaga vazhi nadathum

3. Aazhkadalil alaigalinaal
Asaiyumpoadhu en padagil
Aathma nanbar yaesu undae
Saerndhiduvaen avar samoogam

4. Avar namakkaai jeevan thandhu
Alithanarae indha meetpu
Kangalinaal kaangiraenae
Inba kaanaan dhaesamadhai

Mannan Yesu Varugirar – மன்னன் இயேசு வருகின்றார்

Mannan Yesu Varugirar
மன்னன் இயேசு வருகின்றார் நீ மகிழ்ந்து பாடிடு
மணவாளன் வருகின்றார் நீ ஆயத்தபடு
அல்லேலூயா! ஆனந்தமே!
ஆடிப்பாடி நடனமாடி ஆனந்தித்திடு ( 2)

1. மகிமையானவர் மறுரூபமானவர்
கிச்சிலிப்பழம் அவர் கின்னரத்தோட்டம்
லீலிபுஷ்பமே சாரோனின் ரோஜாவே
மென்மையானவர் மகா மேன்மையுள்ளவர் – அல்லேலூயா

2. பொற்தளவீதி அது பொற்பரன் வீதி
பளிங்கு கற்களும் அங்கு பளிச்சிடுதே
இரத்தினங்களும் இளநீலமும்
படிகப்பச்சை மரகதமும் பாடிப்போற்றுதே – அல்லேலூயா

3. வெண்குதிரை மேல் உலாவ வருகிறார்
வெண் கிரீடமும் அவர் தலையில் ஜொலிக்குதே
வெண் சிங்காசனம் புன் சிரிக்குதே
நட்சத்திரங்கள் கைகொட்டிப் பாடுதே – அல்லேலூயா

Aaviyanavare Anbin Aaviyanavare – ஆவியானவரே அன்பின்

Aaviyanavare Anbin Aaviyanavare

ஆவியானவரே அன்பின் ஆவியானவரே
இப்போ வாரும் இறங்கி வாரும் எங்கள் மத்தியிலே

1. உளையான சேற்றினின்று தூக்கி எடுத்தவரே
பாவம் கழுவி தூய்மையாக்கும் இந்த வேளையிலே

2. பத்மு தீவினிலே பக்தனைத் தேற்றினீரே
என்னையும் தேற்றி ஆற்ற வாரும் இந்த வேளையிலே

3. சீனாய் மலையினிலே இறங்கி வந்தவரே
ஆத்ம தாகம் தீர்க்க வாரும் இந்த வேளையிலே

4. நேசரின் மார்பினிலே இனிதாய் சாய்ந்திடவே
ஏக்கமுற்றேன் விரும்பி வந்தேன் உந்தன் பாதத்திலே

5. ஆவியின் வரங்களினால் என்னையும் நிரப்பிடுமே
எழுந்து ஜொலிக்க எண்ணெய் ஊற்றும் இந்த வேளையிலே

6. யோர்தான் நதிக்கரையில் புறாவைப்போல் வந்தவரே
இறைமகன் இயேசுவின் திருச்சபை நிரப்பிடும் தூய ஆவியாலே

7. தாவீதின் மனதினிலே நொறுங்குண்ட ஆவி நீரே
பாவி என் வாழ்வை மறுரூபமாக்கிடும் இந்த வேளையிலே

8. எருசலேம் மேல் அறையில் இறங்கி வந்தவரே
அக்கினி நாவால் அருள்மொழி தாரும் இந்த வேளையிலே

Aaviyaanavare Anbin Aaviyaanavare
Ippo Vaarum Irangi Vaarum Engal Maththiyile

1. Ulaiyaana Settrinintru Thookki Eduththavare
Paavam Kaluvi Thooymaiyaakkum Intha Velaiyile

2. Pathmu Theevinile Bhakthanaith Thettrineere
Ennaiyum Thettri Aattra Vaarum Intha Velaiyile

3. Seenaay Malaiyinile Irangi Vanthavare
Aathma Thaagam Theerkka Vaarum Intha Velaiyile

4. Nesarin Maarbinile Inithaay Saaynthidave
Yekkamuttren Virumbi Vanthen Unthan Paathaththile

5. Aaviyin Varangalinaal Ennaiyum Nirappidume
Ezhunthu Jolikka Yennai Oottrum Intha Velaiyile

6. Yorthaan Nadhikkaraiyil Puraavaippol Vanthavare
Iraimagan Yesuvin Thirucchabai Nirappidum Thooya Aayiyaale

7. Thaaveethin Manathinile Norungunda Aavi Neere
Paavi En Vaazhvai Maruroobamaakkidum Indha Velaiyile

8. Yerusalem Mel Araiyil Irangi Vanthavare
Akkini Naavaal Arulmozhi Thaarum Indha Velaiyile

 

Asaivadum Aaviye – அசைவாடும் ஆவியே

Asaivadum Aaviye
அசைவாடும் ஆவியே
தூய்மையின் ஆவியே
இடம் அசைய உள்ளம் நிரம்ப
இறங்கி வாருமே

1. பெலனடைய நிரப்பிடுமே பெலத்தின் ஆவியே
கனமடைய ஊற்றிடுமே ஞானத்தின் ஆவியே

2. தேற்றிடுமே உள்ளங்களை இயேசுவின் நாமத்தினால்
ஆற்றிடுமே காயங்களை அபிஷேக தைலத்தினால்

3. துடைத்திடுமே கண்ணீரெல்லாம் கிருபையின் பொற்கரத்தால்
நிறைத்திடுமே ஆனந்தத்தால் மகிழ்வுடன் துதித்திடவே

4. அலங்கரியும் வரங்களினால் எழும்பி ஜொலித்திடவே
தந்திடுமே கனிகளையும் நிறைவாக இப்பொழுதே

Asaivaadum aaviyae
Thooymaiyin aaviyae
Idam asaiya ullam niramba
Irangi vaarumae

1. Belanadaiya nirappidumae belathin aaviyae
Ganamadaiya ootridumae gnaanathin aaviyae

2. Thaetridumae ullangalai yaesuvin naamathinaal
Aatridumea kaayangalai abishaega thailathinaal

3. Thudaithidumae kanneerellaam kirubaiyin porkarathaal
Niraithidumae aanandhathaal magizhvudan thudhithidavae

4. Alangariyum varangalinaal ezhumbi jolithidavae
Thanthidumae kanigalaiyum niraivaaga ippozhudhae

Naan Ummai Patri – நான் உம்மைப்பற்றி

Naan Ummai Patri
1. நான் உம்மைப்பற்றி இரட்சகா!
வீண் வெட்கம் அடையேன்
பேரன்பைக் குறித்தான்டவா
நான் சாட்சி கூறுவேன்

சிலுவையண்டையில் நம்பிவந்து நிற்கையில்
பாவப்பாரம் நீங்கி வாழ்வடைந்தேன்
எந்த நேரமும் எனதுள்ளத்திலும்
பேரானந்தம் பொங்கிப்பாடுவேன்

2. ஆ! உந்தன் நல்ல நாமத்தை
நான் நம்பிச் சார்வதால்
நீர் கைவிடீர் இவ்வேழையைக்
காப்பீர் தேவாவியால்

3. மாவல்ல வாக்கின் உண்மையை
கண்டுணரச் செய்தீர்
நான் ஒப்புவித்த பொருளை
விடாமல் காக்கிறீர்

4. நீர் மாட்சியோடு வருவீர்
அப்போது களிப்பேன்
ஓர் வாசஸ்தலம் கொடுப்பீர்
மெய்ப் பாக்கியம் அடைவேன்

 

 

 

Tham Kirubai Perithallo – தம் கிருபை பெரிதல்லோ

Tham Kirubai Perithallo
தம் கிருபை பெரிதல்லோ
எம் ஜீவனிலும் அதே
இம்மட்டும் காத்ததுவே
இன்னும் தேவை, கிருபை தாருமே

1. தாழ்மை உள்ளவரிடம் தங்கிடுதே கிருபை
வாழ்நாள் எல்லாம் அது போதுமே
சுகமுடன் தம் பெலமுடன்
சேவை செய்யக் கிருபை தாருமே – தம் கிருபை

2. நிர்மூலமாகாததும் நிற்பதுமோ கிருபை
நீசன் என் பாவம் நீங்கினதே
நித்திய ஜீவன் பெற்று கொண்டேன்
காத்துக் கொள்ள கிருபை தாருமே – தம் கிருபை

3. தினம் அதிகாலையில் தேடும் புதுக்கிருபை
மனம் தளர்ந்த நேரத்திலும்
பெலவீன சரீரத்திலும்
போதுமே உம் கிருபை தாருமே – தம் கிருபை

4. மா பரிசுத்த ஸ்தலம் கண்டடைவேன் கிருபை
மூடும் திரை கிழிந்திடவே
தைரியமாய்ச் சகாயம் பெற
தேடி வந்தேன் கிருபை தாருமே – தம் கிருபை

5. ஒன்றை ஒன்று சந்திக்கும் சத்தியம் உம் கிருபை
என்றும் மறவேன் வாக்குத்தத்தம்
நீதியுமே சமாதானமுமே
நிலை நிற்கும் கிருபை தாருமே – தம் கிருபை

6. ஸ்தோத்திர ஜெபத்தினால் பெருகுதே கிருபை
ஆத்தும பாரம் கண்ணீரோடே
சோர்வின்றி நானும் வேண்டிடவே
ஜெப வரம் கிருபை தாருமே – தம் கிருபை

7. கர்த்தர் வெளிப்படும் நாள் அளித்திடும் கிருபை
காத்திருந்தே அடைந்திடவே
இயேசுவே உம்மைச் சந்திக்கவே
இரக்கமாய்க் கிருபை தாருமே – தம் கிருபை

Tham kirubai peridhalloa
Em jeevanilum adhae
Immattum kaaththadhuvae
Innum thaevai, kirubai thaarumae

1. Thaazhmai ullavaridam thangidudhae kirubai
Vaazhnaal ellaam adhu poadhumae
Sugamudan tham belamudan
Saevai seiyya kirubai thaarumae – Tham kirubai

2. Nirmoolamaagaadhadhum nirpadhumoa kirubai
Neesan en paavam neenginadhae
Niththiya jeevan petru kondaen
kaaththu kolla kirubai thaarumae – Tham kirubai

3. Dhinam adhikaalaiyil thaedum pudhukirubai
Manam thalarndha naeraththilum
Belaveena sareeraththilum
Poadhumae um kirubai thaarumae – Tham kirubai

4. Maa parisuththa sthalam kandadaivaen kirubai
Moodum thirai kizhindhidavae
Dhairiyamaai sagaayam pera
Thaedi vandhaen kirubai thaarumae – Tham kirubai

5. Ondrai ondru sandhikkum saththiyam um kirubai
Endrum maravaen vaakkuththaththam
Needhiyumae samaadhaanamumae
Nilai nirkum kirubai thaarumae – Tham kirubai

6. Sthoaththira jebaththinaal perugudhae kirubai
Aathuma baaram kanneeroadae
Soarvindri naanum vaendidavae
Jeba varam kirubai thaarumae – Tham kirubai

7. Karththar velippadum naal aliththidum kirubai
Kaathirundhae adaindhidavae
Yaesuvae ummai sandhikkavae
Irakkamaai kirubai thaarumae – Tham kirubai

 

Ennai Jeeva Baliyaai – என்னை ஜீவ பலியாய்

Ennai Jeeva Baliyaai
என்னை ஜீவ பலியாய் ஒப்புவித்தேன்
ஏற்று கொள்ளும் இயேசுவே

அன்னை தந்தை உந்தன் சன்னதி முன்னின்று
சொன்ன வாக்குத்தத்தமல்லாது இப்போது – என்னை

1. அந்தகாரத்தினின்றும் பாவப் பேய்
அடிமைத்தனத்தினின்றும்
சொந்த ரத்தக்கிரயத்தால் என்னை மீட்ட
எந்தையே உந்தனுக்கிதோ படைக்கிறேன் – என்னை

2. ஆத்ம சரீரமதை உமக்கு
ஆதீனமாக்கி வைத்தேன்
பாத்ரமதாயதைப் பாவித்துக் கொள்ளக்
காத்திருக்கிறேன் கருணை செய்தேவா – என்னை

3. நீதியினாயுதமாய் அவயவம்
நேர்ந்து விட்டேனுமக்கு
ஜோதி பரிசுத்தராலயமாகவே
சொந்தமாய்த் தந்தேன் எந்தன் சரீரத்தை – என்னை

Yesu Endra Thiru – இயேசு என்ற திருநாமத்திற்கு

Yesu Endra Thiru
இயேசு என்ற திருநாமத்திற்கு
எப்போதுமே மிகத் தோத்திரம்

1. வானிலும் பூவிலும் மேலான நாமம்
வல்லமையுள்ள நாமமது
தூயர் சொல்லித் துதித்திடும் நாமமது – இயேசு

2. வேதாளம் பாதாளம் யாவையும் ஜெயித்த
வீரமுள்ள திரு நாமமது
நாமும் வென்றிடுவோம் இந்த நாமத்திலே – இயேசு

3. பாவத்திலே மாளும் பாவியை மீட்கப்
பாரினில் வந்த மெய் நாமமது
பரலோகத்தில் சேர்க்கும் நாமமது – இயேசு

4. உத்தம பக்தர்கள் போற்றித்துதித்திடும்
உன்னத தேவனின் நாமமது
உலகெங்கும் ஜொலித்திடும் நாமமது – இயேசு

5. சஞ்சலம் வருத்தம் சோதனை நேரத்தில்
தாங்கி நடத்திடும் நாமமது
தடைமுற்று மகற்றிடும் நாமமது – இயேசு

Yesu Endra Thiru Naamathirku
Eppothumae Miga Sthothiram

Vaanilum Poovilum Maelaana Naamam
Vallamaiyulla Naamam Athu
Thooyar Sollith Thuthithidum Naamamathu

1. Vaethaalam Paathaalam
Yaavaiyum Jeyitha
Veeramulla Thirunaamamathu
Naamum Ventiduvom Intha Naamathilae

2. Paavaththilae Maalum Paaviyai Meetka
Paarinil Vantha Mey Naamamathu
Paralokaththil Serkkum Naamamathu

3. Uthama Paktharkal Pottith Thuthiththidum
Unnatha Thaevanin Naamamathu
Ulakengum Joliththidum Naamathu

4. Sanjalam Varuththam Sothanai Naeraththil
Thaangi Nadaththidum Naamamathu
Thatai Muttum Akattidum Naamamathu