Song Category: Tamil

Andavare Um Patham – ஆண்டவரே உம் பாதம்

Andavare Um Patham
ஆண்டவரே உம் பாதம் சரணடைந்தேன்
அடிமை நான் ஐயா
ஆயிரம் ஆயிரம் துன்பங்கள் வந்தாலும்
அகன்று போமாட்டேன் – உம்மைவிட்டு
அகன்று போகமாட்டேன்

1. ஒவ்வொரு நாளும் உம்குரல் கேட்டு
அதன்படி நடக்கின்றேன்
உலகினை மறந்து உம்மையே நோக்கி
ஓடி வருகின்றேன்
2. வேதத்திலுள்ள அதிசயம் அனைத்தும்
நன்கு புரியும்படி
தேவனே எனது கண்களையே
தினமும் திறந்தருளும்
3. வாலிபன் தனது வழிதனையே
எதனால் சுத்தம் பண்ணுவான்
தேவனே உமது வார்த்தையின்படியே
காத்துக் கொள்வதனால்
4. நான் நடப்பதற்கு பாதையைக் காட்டும்
தீபமே உம் வசனம்
செல்லும் வழிக்கு வெளிச்சமும் அதுவே
தேவனே உம் வாக்கு
5. தேவனே உமக்கு எதிராய் நான்
பாவம் செய்யாதபடி
உமதுவாக்கை என் இருதயத்தில்
பதித்து வைத்துள்ளேன்

Adimai Naan Andavare – அடிமை நான் ஆண்டவரே

Adimai Naan Andavare
அடிமை நான் ஆண்டவரே – என்னை
ஆட்கொள்ளும் என் தெய்வமே
தெய்வமே தெய்வமே
அடிமை நான் ஆட்கொள்ளும்

1. என் உடல் உமக்குச் சொந்தம் -இதில்
எந்நாளும் வாசம் செய்யும்
2. உலக இன்பமெல்லாம் – நான்
உதறித் தள்ளி விட்டேன்
3. பெருமை செல்வமெல்லாம் – இனி
வெறுமை என்றுணர்ந்தேன்
4. வாழ்வது நானல்ல – என்னில்
இயேசு வாழ்கின்றீர்
5. என் பாவம் மன்னித்தருளும் – உம்
இரத்தத்தால் கழுவிவிடும்
6. முள்முடி எனக்காக – ஐயா
கசையடி எனக்காக
7. என் பாவம் சுமந்து கொண்டீர் – என்
நோய்கள் ஏற்றுக் கொண்டீர்

Thedi Vantha Deivam Yesu – தேடி வந்த தெய்வம் இயேசு

Thedi Vantha Deivam Yesu
தேடிவந்த தெய்வம் இயேசு – என்னை
தேடி வந்த தெய்வம் இயேசு
வாடி நின்ற என்னையே வாழவைத்திட
தேடி வந்த தெய்வம் இயேசு

1. பாவியாக இருந்த என் பாவம் போக்கிட்டார்
ஆவி பொழிந்து என்னையே
தாவி அணைத்திட்டார்
அன்பே அவரின் பெயராம்
அருளே அவரின் மொழியாம்
இருளே போக்கும் ஒளியாம்
2. இயேசு என்னில் இருக்கிறார்
என்ன ஆனந்தம்
இருளும் புயலும் வரட்டுமே
இதயம் கலங்குமோ
இறைவா இயேசு தேவா
இதயம் மகிழ்ந்து பாடும்
என்றும் உம்மை நாடும்

Ummodu Irukanume – உம்மோடு இருக்கணுமே

Ummodu Irukanume
உம்மோடு இருக்கணுமே ஐயா
உம்மைப் போல் மாறணுமே
உலகின் ஒளியாய் மலைமேல் அமர்ந்து
வெளிச்சம் கொடுக்கணுமே

1. ஓடும் நதியின் ஓரம் வளரும்
மரமாய் மாறணுமே
எல்லா நாளும் இலைகளோடு
கனிகள் கொடுக்கணுமே
2. உலகப் பெருமை இன்பமெல்லாம்
குப்பையாய் மாறணுமே
உம்மையே என் கண்முன் வைத்து
ஓடி ஜெயிக்கணுமே
3. ஆத்ம பார உருக்கத்தோடு
அழுது புலம்பணுமே
இரவும் பகலும் விழித்து ஜெபிக்கும்
மேய்ப்பன் ஆகணுமே – நான்
4. பேய்கள் ஓட்டும் வல்லமையோடு
பிரசங்கள் பண்ணணுமே
கடினமான பாறை இதயம்
உடைத்து நொறுக்கணுமே – நான்
5. வார்த்தை என்னும் வாளையேந்தி
யுத்தம் செய்யணுமே
விசுவாசம் என்னும் கேடயத்தால்
பிசாசை வெல்லணுமே – நான்

En Pavangal En Yesu – என் பாவங்கள் என் இயேசு

En Pavangal En Yesu
என் பாவங்கள் என் இயேசு மன்னித்து விட்டார்
தன் மகனாய் என் இயேசு ஏற்றுக் கொண்டார்

1. இனி நான் பாவியல்ல
பரிசுத்தமாகிவிட்டேன்
நேசரின் பின் செல்வேன் – நான்
திரும்பி பார்க்க மாட்டேன்
2. ஆழ்கடலில் எறிந்துவிட்டார்
காலாலே மிதித்து விட்டார்
நினைவுகூர மாட்டார் – என்
நேசரைத் துதிக்கின்றேன் – இனி
3. கிறிஸ்துவுக்குள் வாழ்கின்றேன்
மறுபடி பிறந்துவிட்டேன்
பழையன கழிந்தனவே – நான்
புதியன படைப்பானேன்

Isravele Bhayapadathe – இஸ்ரவேலே பயப்படாதே

Isravele Bhayapadathe
இஸ்ரவேலே பயப்படாதே
நானே உன் தேவன்
வழியும் சத்தியமும் ஜீவனும் நானே

1. உன்னை நானே தெரிந்துகொண்டேனே
உன் பெயர் சொல்லி நான் அழைத்தேனே
ஒரு போதும் நான் கைவிடமாட்டேன்
கைவிடமாட்டேன் – வழியும்
2. தாய் மறந்தாலும் நான் மறவேனே
உள்ளங்கையில் தாங்கி உள்ளேன்
ஒருபோதும் நான் மறப்பதில்லை
மறந்து போவதில்லை
3. துன்பநேரம் சோர்ந்துவிடாதே
ஜீவகிரீடம் உனக்குத் தருவேன்
சீக்கிரம் வருவேன் அழைத்துச் செல்வேன்
எழுந்து ஒளி வீசு
4. தீயின் நடுவே நீ நடந்தாலும்
எரிந்து நீயும் போகமாட்டாய்
ஆறுகளை நீ கடக்கும் போது
மூழ்கி போக மாட்டாய்

Yaar Ennai Kaivittalum – யார் என்னைக் கைவிட்டாலும்

Yaar Ennai Kaivittalum
யார் என்னைக் கைவிட்டாலும்
இயேசு கைவிடமாட்டார்
1. தாயும் அவரே தந்தையும் அவரே
தாலாட்டுவார் சீராட்டுவார்
2. வேதனை துன்பம் நெருக்கும்போதெல்லாம்
வேண்டிடுவேனே காத்திடுவாரே
3. எனக்காகவே மனிதனானார்
எனக்காகவே பாடுபட்டார்
4. இரத்தத்தாலே கழுவிவிட்டாரே
இரட்சிப்பின் சந்தோஷம் எனக்குத் தந்தாரே
5. ஆவியினாலே அபிஷேகம் செய்து
அன்பு வசனத்தால் நடத்துகின்றாரே
6. எனக்காகவே காயப்பட்டார்
என் நோய்கள் சுமந்து கொண்டார்

Singa Kuttigal Pattini Kidakkum – சிங்கக்குட்டிகள் பட்டினி கிடக்கும்

Singa Kuttigal Pattini Kidakkum
சிங்கக்குட்டிகள் பட்டினி கிடக்கும்
ஆண்டவரைத் தேடுவோர்க்கு குறையில்லையே
குறையில்லையே குறையில்லையே
ஆண்டவரைத் தேடுவோர்க்கு குறையில்லையே

1. புல்லுள்ள இடங்களிலே
என்னை மேய்க்கின்றார்
தண்ணீரண்டை கூட்டிச் சென்று
தாகம் தீர்க்கின்றார்

2. எதிரிகள் முன் விருந்தொன்றை
ஆயத்தப்படுத்துகிறார்
என் தலையை எண்ணெயினால்
அபிஷேகம் செய்கின்றார்

3. ஆத்துமாவை தேற்றுகின்றார்
ஆவி பொழிகின்றார்
ஜீவனுள்ள நாட்களெல்லாம்
கிருபை என்னைத் தொடரும்

4. என் தேவன் தம்முடைய
மகிமை செல்வத்தினால்
குறைகளையே கிறிஸ்துவுக்குள்
நிறைவாக்கி நடத்திடுவார்

Singa kuttigal pattini kidakkum
Aandavarai thaeduvorkku Kuraiyillaiyae
Kuraiyillaiyae kuraiyillaiyae
Aandavarai thaeduvorkku Kuraiyillaiyae

1. Pullulla idangalilae yennai meikindraar
Thaneerandai kooti sendru thaagam theerhindraar

2. Yedhirigal munn virunthondrai aayathapaduthugiraar
Yen thalaiyai ennaiyinaal abishaegam seigindraar

3. Aathumaavai thaetrugindrar aavi pozhigindraar
Jeevanulla naatkalellaam kirubai ennai thodarum

4. Yen dhaevan thammudaiya magimai selvathinaal
Kuraigalaiyae kristhuvukkul niraivaakki nadathiduvaar

Yesu Raja Ezhai En Ullam – இயேசு ராஜா ஏழை என்

Yesu Raja Ezhai En Ullam
இயேசு ராஜா ஏழை என் உள்ளம்
தேடி வந்தீரே
1. என் நேசர் நீர்தானையா
என்னை தேற்றிடும் என் தேசையா
சாரோனின் ரோஜா லீலி புஷ்பமே
சீக்கிரம் வாருமையா – ஐயா
2. உளையான சேற்றினின்று என்னை
உயிர்ப்பித்து ஜீவன் தந்தீர்
அலைபோல துன்பம் என்னை சூழ்ந்தபோது
அன்பாலே அணைத்துக் கொண்டீர் – ஐயா
3. ஆபத்து காலத்திலே நல்ல
அநுக்கிரகம் துணையும் நீரே
அன்பே என்றீர் மகளே என்றீர்
மணவாட்டி நீதான் என்றீர்
4. பரிசுத்த ஆவியினால் என்னை
அபிஷேகம் செய்தீர்
பயங்களை நீக்கி பலத்தையே தந்து
பரிசுத்த மகளாக்கினீர்

Nandri Nandri Nandri Endru- நன்றி நன்றி நன்றி என்று

Nandri Nandri Nandri Endru
நன்றி நன்றி நன்றி என்று
நாள்தோறும் பாடிடுவோம்

1. வல்லவரே நல்லவரே

2. காண்பவரே காப்பவரே

3. பாவங்களைப் போக்கிவிட்டீர்

4. நோய்களெல்லாம் சுமந்து கொண்டீர்

5. ஆவியினால் அபிஷேகம் செய்தீர்

6. புதுவாழ்வு எனக்குத் தந்தீர்
அல்லேலூயா (2) ஆமென்