Song Category: Tamil

Umathu Mugam Nooki – உமது முகம் நோக்கிப் பார்த்தவர்கள்

Umathu Mugam Nooki

உமது முகம் நோக்கிப் பார்த்தவர்கள்
வெட்கப்பட்டு போவதில்லை
உமது திரு நாமம் அறிந்தவர்கள்
கைவிடப்படுவதில்லை
நம்பினோரை நீர் மறப்பதில்லை
உம்மை தேடி வந்தோரை வெறுப்பதில்லை

உடைந்த பாத்திரம் என்று
நீர் எவரையும் தள்ளுவதில்லை
ஒன்றுக்கும் உதவாதோர் என்று
நீர் எவரையும் சொல்லுவதில்லை

இயேசு மகா ராஜா எங்கள் நேசா
இரக்கத்தின் சிகரம் நீரே

ஏழைகளின் பெலன் நீரே
எளியோரின் நம்பிக்கை நீரே
திக்கற்றோர் வேதனை அறிந்து
உதவுடும் தகப்பன் நீரே

Umathu Mugam Nooki Paarthavarkal
Vetkappattu Povathillai
Umathu Thiru Naamam Arinthavarkal
Kaividappaduvathillai
Nampinorai Neer Marappathillai
Ummai Thaeti Vanthorai Veruppathillai

Utaintha Paaththiram Entu
Neer Evaraiyum Thalluvathillai
Ontukkum Uthavaathor Entu
Neer Evaraiyum Solluvathillai

Yesu Makaa Raajaa Engal Naesaa
Irakkaththin Sikaram Neerae

Aelaikalin Pelan Neerae
Eliyorin Nambikkai Neerae
Thikkator Vaethanai Arinthu
Uthavudum Thakappan Neerae

Iratha Satchi Kootam – இரத்த சாட்சிக் கூட்டம்

Iratha Satchi Kootam
இரத்த சாட்சிக் கூட்டம் சத்திய பாதையில்
நித்தம் தம்மைத் தத்தம் செய்து வீர சேவையில்
ஜீவன் சுகம் பெலன் யாவையும் ஈந்ததால்
சுத்த சுவிசேஷம் ஓங்குதே

1. ஜாதி மதபேதம் முற்றும் நீங்கிட
ஜோதியாய்ப் பிறந்து லோகப் பாவம் போக்கிட
கல்வாரியில் மரித்தே உயித்தெழுந்த
கர்த்தரின் நற்செய்தி சாற்றுவோம் போர்வீரரே

3. நாடு, நகரமோ, காடு மலையோ நாடித் தேடி ஓடியே நல் ஊழியம் செய்வோம்
மாண்டழியும் மக்கள் மேல் மனதுருகி
கண்டறிந்த சாட்சி கூறுவோம் – போர்வீரரே

4. தாகமோ, பசியோ நோக்கிடாமலே லோக இன்ப துன்பமோ நெருங்கிடாமலே
முன் வைத்த காலையும் பின் வைத்திடாமலே
இன்னமும் முன்னேறி சேவிப்போம் போர்வீரரே

5. உன்னத அழைப்பை என்றும் காத்திட ஊக்கமாய் உறுதியாய் தகுதி
பெற்றிட ஆவியிலே அனலாய் நிலை நின்றிட ஆண்டவர் அருள் பொழிகுவார் போர்வீரரே

6. சுத்த ஜீவியம் நற்சாட்சி பெறுவோம்
சத்திய வழி நடக்கும் பக்தி நாடுவோம்
வாக்கு வரம் வல்லமை அடைந்திடுவோம்
வல்ல விசுவாச சேவையில் – போர்வீரரே

7. இயேசுவின் பின்னே ஓடிடுவோமே
இயேசுவுக்காய் ஜீவன் வைத்திடுவோமே –
நாம்
ஆதிப்பிதாக்களுடன் ரத்த சாட்சிகள்
ஆர்ப்பரித்துக் கூடி வாழுவோம் போர்வீரரே

Entha Neramum Eppothume – எந்த நேரமும் எப்போதுமே

Entha Neramum Eppothume
எந்த நேரமும் எப்போதுமே
இயேசு எனக்கு ஒத்தாசை

இயேசு ராஜனை ஸ்தோத்தரிப்பேன்
இந்த ஏழையின் ஜெபம் கேட்டார்

1. இக்கட்டில் மனிதர் உதவி
இல்லாமலே அற்றுப் போனாலும்
எனக்கொத்தாசையே தினம் தப்பாமலே
இயேசு நாமத்தில் கிடைத்திடுமே — எந்த

2. சொல்லொண்ணா பாடுகள் சகிக்க
சென்ற காலம் பெலன் தந்தாரே
எந்தன் வாழ்நாளெல்லாம் தேவ சித்தமெல்லாம்
என்னில் முற்றிலும் நிறைவேறுமே — எந்த

3. சிறுமைப்பட்டோரின் நம்பிக்கை
ஒரு போதும் கெட்டுப் போகாதே
தம்மை தேடுவோரை காத்தர் கைவிடாரே
தேவன் நமக்கு அடைக்கலமே — எந்த

4. ஒவ்வொரு ஆண்டிலும் கர்த்தர்
எவ்வளவோ அற்புதம் செய்தார்
வருங்காலத்திலும் வருகை வரையும்
வாக்குத் தத்தம் தந்து நடத்துவார் — எந்த

5. குமரன் கோபம் கொள்ளாமலும்
வழியில் நாம் அழியாமலும்
அவர் பாதங்களை முத்தம் செய்திடுவோம்
அன்பர் இயேசுவை அண்டிக் கொள்ளுவோம் — எந்த

Ontrai Sernthu – ஒன்றாய் சேர்ந்து பாடுவோம்

Ontrai Sernthu
ஒன்றாய் சேர்ந்து பாடுவோம்
மன்னவரை வாழ்த்துவோம்
விண்ணும் மண்ணும் போற்றும் நல்ல தேவனவர்
வாழ்வின் பாதை மாற்றவே
ஒளியாய் உலகில் வந்தாரே
வானாதி வானம் போற்றும் கர்த்தரவர்
ஏழ்மை கோலமாய் அவதரித்தார்
தாழ்மை என்னவென்று கற்று தந்தார்
தம் வாழ்வை மாதிரியாய் காட்டி தந்த தெய்வம்
ஒருவர் ஒருவரே
உன் வாழ்வை நேராக மாற்ற வல்லவர்
இரட்சகர் அவரே

லலலாலலாலலா

அன்பின் மாதிரி ஆனவர்
அழகில் என்றென்றும் சிறந்தவர்
உலகின் பாவம் போக்கும் இரட்சகர்
இன்று பிறந்தார் – ஏழ்மை

தூதர்கள் சூழ்ந்து பாடிட
மேய்ப்பர்கள் வந்து பணிந்திட
வானோர் போற்றும் உன்னதர்
இன்று பிறந்தார் – ஏழ்மை

Koda Kodi Sthothiram – கோடா கோடி ஸ்தோத்திரம் பாடி

Koda Kodi Sthothiram
பல்லவி
கோடா கோடி ஸ்தோத்திரம் பாடி
கிறிஸ்துவின் அன்பை ருசிப்போமே

அனுபல்லவி
சேற்றிலிருந்து தூக்கி எடுத்துத் தேற்றி அணைத்துக் காத்துக்கொண்டாரே தேவசுதன்

1. பாவியை மீட்க பரன் சித்தங்கொண்டார்
பரலோகம் துறந்து பாரினில் பிறந்தார்
பரமனிவ் வேழையைத் தேடிவந்தாரே
பாதம் பணிந்தேன் பதில் ஏது முண்டோ? – பூவுலகில்

2. தேவனின் சித்தம் செய்யும்படியாய்
தாசனின் கோலம் தாமெடுத் தணிந்து
தற்பரன் நொறுக்கச் சித்தங்கொண்டாலும்
தம்மைப் பலியாய் தத்தம் செய்தாரே – எந்தனுக்காய்

3. ஆடுகளுக்காய் உயிர்தனைக் கொடுத்து
கேடு வராது காக்கும் நம் மீட்பர்
இன்று மென்மேலே வைத்த நேசத்தால்
என்றென்றும் நன்றி கூறித் துதிப்பேன் – இறையவனை

4. தாவீது கோத்திர சிங்கமாய்வந்தும்
சாந்தத்தால் என்னைக் கவர்ந்துக்கொண்டாரே
தாழ்மையான ஆட்டுக் குட்டியுடனே
தங்கியிருப்பேன் சீயோன் மலையில் – நித்தியமாய்

5. குயவனின் கையில் களிமண்ணைப்போல
குருவே நீர் என்னை உருவாக்குமையா
மாசற்ற மணவாட்டியாய் என்னைக்
காத்துக்கொள்ளும்படி கருணைகூர் ஐயா – ஏழையென்னை

Thalai Saikkum Kal – தலை சாய்க்கும் கல்

Thalai Saikkum Kal
தலை சாய்க்கும் கல் நீரய்யா
மூலைக்கல் நீரய்யா

ஏல் பெத்தேல் இது வானத்தின் வாசல்
என் இயேசையா ஆசீர்வாதத்தின் வாசல்

மேற்கு கிழக்கு வடக்கு தெற்கு பரம்புவாய் என்றீரே ஆதி
பூமியின் தூளைப்போல் உன் சந்ததி
பெருகும் என்று வாக்குரைத்தீரே
சொன்னதை செய்யுமளவும்
என்னை கைவிடவே மாட்டீர் – எனக்கு

பூமியின் வம்சங்கள் உனக்குள்
உன் சந்ததிக்குள் ஆசீர்வதிக்கப்படும்
என்று ஆசீர்வாத வாய்க்காலாக
என்னை மாற்றினீரே
சொன்னதை செய்யுமளவும்
என்னை கைவிடவே மாட்டீர் – எனக்கு

செல்லும் இடமெல்லாம் என்னோடு இருந்து
என்னை கனப்படுத்துவீர்
தகப்பன் தேசத்துக்கு திரும்பும் வரையில்
என்னை காப்பாற்றுவீர்
சொன்னதை செய்யுமளவும்
என்னை கைவிடவே மாட்டீர் -எனக்கு

thalai saaykkum kal neerayyaa
moolaikkal neerayyaa

ael peththael ithu vaanaththin vaasal
en iyaesaiyaa aaseervaathaththin vaasal

maerku kilakku vadakku therku parampuvaay enteerae aathi
poomiyin thoolaippol un santhathi
perukum entu vaakkuraiththeerae
sonnathai seyyumalavum
ennai kaividavae maattir – enakku

poomiyin vamsangal unakkul
un santhathikkul aaseervathikkappadum
entu aaseervaatha vaaykkaalaaka
ennai maattineerae
sonnathai seyyumalavum
ennai kaividavae maattir – enakku

sellum idamellaam ennodu irunthu
ennai kanappaduththuveer
thakappan thaesaththukku thirumpum varaiyil
ennai kaappaattuveer
sonnathai seyyumalavum
ennai kaividavae maattir -enakku

Ennai Padaithita – என்னை படைத்திட்ட

Ennai Padaithita
என்னை படைத்திட்ட பரமனின் பாதத்தில்
படைத்தேன் முழு நம்பிக்கையோடு
தாயின் கருவில் தெரிந்தவர் நீர்
என் தேவை எல்லாம் அறிந்தவரே

அர்ப்பணித்தேன் முழுதுமாய்
படைத்திட்டேன் என் ஆசை எல்லாம்
ஆவி ஆத்மா சரீரம் எல்லாம்
தந்துவிட்டேன் இன்றே

1. என்னை வரைந்திட்ட வல்லவரின் கரங்களில்
படைத்தேன் முழு நம்பிக்கையோடு
உம்மால் முடியாது என்று ஒன்று இல்லை
நம்பி வந்தேன் இன்றே

Ennai Padaithita Paramanin Paadhathil
Padaithen muzhu nambikaiyodu
Thayin karuvil therinthavar neer
En thevai ellam arinthavarae

Arpanithaen muzhuthumai
Padaithiten en aasai ellam
Aavi athma sariram ellam
Thanthuviten indrae

1. Ennai varanthita vallavarin karangalil padathen muzhu nambikaiyodu
Ummal mudiyathu endru ondru illai nambi vanthen indrae

Anbu Kooruvom Nam Devanagiya – அன்பு கூருவோம் நம் தேவனாகிய

Anbu Kooruvom Nam Devanagiya

அன்பு கூறுவோம் நம் தேவனாகிய கர்த்தரில்
அவரே நம் தேவன் என்றென்றும் அவரில் வாழ்ந்திட

நம் இயேசு மகாராஜன் சீக்கிரம் வருகிறார்
அவர் வருகையை சந்திக்க ஆயத்தமாவோம் நாம்

1. திருடனை போல் அவர் வருகை தீவிரமாய் மிக நெருங்கிடுதே
ஆயத்தமில்லா அவணியனுள்ளோர் அழுது புலம்பி கதறுவாரே

2. அந்த நாளில் ஆயத்தமானோர் இயேசுவிடம் பறந்திடுவோம்
இவ்வுலக வாழ்வை முடித்து பரலோக வாசல் சேர்ந்திடுவோம்

Anbu Kooruvom Nam Devanaagiya Kartharil
Avarae Nam Devan Endrendrum Avaril Vazhdhida

Chorus
Nam Yesu Magarajan Seekiram Varugirar
Avar Varugaiyai Sandhikka Ayathamaavom Naam

1. Thirudanai Pol Avar Varugai Theeviramai Miga Nerungiduthae
Aayathamilla Avaniyanullor Azhudhu Pulambi Katharuvarae

2. Andha Naalil Aayathamanor Yesuvidam Paranthiduvom
Ivvuzhaga Vazhvai Mudithu Paraloga Vaasal Saerndhiduvom

Abishega Olivamaram – அபிஷேக ஒலிவ மரம்

Abishega Olivamaram
அபிஷேக ஒலிவ மரம்
உம் ஆலயத்தில் நடப்பட்டவன்
உம் சமூகத்தில் வாழ்கின்றவன்
உம் அன்பையே நம்புவேன்

உம் வசனம் தான் பசியாற்றும் உணவு
உம் பிரசன்னம் தான் தாகம் தீர்க்கும் தண்ணீர்
நீரே என் வெளிச்சமும் மீட்புமானீர்
நீரே என் ஜீவனின் பெலனானீர்

என்னைக் காப்பாற்றும் காவலர் நீரே
அயராது நீர் பாய்ச்சுவீரே
என் தேவைகள் யாவையும் சந்திப்பவரே
எந்த சேதமும் இன்றி காப்பவர்

பெலன் தரும் புகலிடம் நீரே
உம்மில் வேரூன்ற கிருபை செய்தீரே
மலர்ந்திடுவேன் நான் கனி கொடுப்பேன்
இந்த உலகமெங்கும் நான்
பலன் கொடுப்பேன்

Puvil Naam Yen Ootham – பூவில் நான் என் ஓட்டம் முடித்து

Puvil Naam Yen Ootham
பூவில் நான் என் ஓட்டம் முடித்து
விண்ணில் என் வெகு மதிக்காய்
பறந்திடுவேன் மறுரூபமாய்
பரன் இயேசு ராஜன் சமூகம்

தூதர் சேனை யாவுமே
அணி அணியாய் என்னை
வரவேற்க நிற்கின்றசூத
வெள்ளையங்கி தரித்து
எந்தன் நேசர் முன்பாக
அல்லேலூயா பாடுவேன்

1. வெகுநாளாய் காண ஆவலாய்
காத்திருந்த எந்தன் நேசரை
மகிமையிலே காணும்
வேளையிலே
திருமார்பில் சாய்ந்திடுவேன்
– தூதர்

2. நித்திய கை வேலையில்லாத
புது சாலேம் நகரமதில்
மணவாட்டியாய் சதாகாலமாய்
பரமனோடு என்றும்
வாழுவேன்
– தூதர்