Song Category: Tamil

Avar Tholgalin Melae – அவர் தோல்களின் மேலே

Avar Tholgalin Melae
அவர் தோல்களின் மேலே நான் சாய்ந்திருப்பதால்
கவலை ஒன்றும் எனக்கில்லையே
என் தேவைகளெல்லாம் அவர் பார்த்து கொள்வதால்
நான் அவருக்குள்ளே மகிழ்ந்திருப்பேனே

அவர் வார்த்தையின் மேலே நான் சார்ந்திருப்பதால்
கவலை ஒன்றும் எனக்கில்லையே
என் தேவைகளெல்லாம் அவர் பார்த்து கொள்வதால்
நான் கர்த்தருக்குள் மகிழ்ந்திருப்பேனே

யெகோவாயீரே எந்தன் தேவன்
தேவைகள் யாவும் சந்திப்பீரே
யெகோவா ராஃபா எந்தன் தேவன்
எந்நாளும் சுகம் தருவீரே – 2

1. மரண இருளின் பள்ளத்தாக்கில் நடக்க நேர்ந்தாலும்
என் அப்பா என்னோடிருப்பதாலே பயப்படமாட்டேன் – 2
எனக்கு விரோதமாய் ஆயிரங்களும் பதினாயிரங்கள்
எழுந்தாலும் அஞ்சிடமாட்டேன் – 2 (…யெகோவாயீரே)

2. நெருக்கத்திலே கர்த்தரை நோக்கி கூப்பிட்டேன்
என்னை விசாலத்தில் கொண்டுவந்து மீட்டுக்கொண்டாரே – 2
என் பட்சத்தில் கர்த்தர் இருப்பதினாலே ஒருபோதும் நான்
அசைக்கப் படுவதில்லையே – 2 (…யெகோவாயீரே)

Avar Tholgalin Mele Nan Sainthirupathal
Kavalai Ondrum Enakillaiyae
En Thevaigalellam Avar Parthukolvathal
Nan Avarukulle Magizhnthirupenae

Avar Varthaiyin Mele Nan Sarnthirupathal
Kavalai Ondrum Enakillaiyae
En Thevaigalellam Avar Parthukolvathal
Nan Kartharukul Magilthirupanae

Yegova Yire Enthan Devan
Thevaigal Yavum Santhipeerae
Yegova Rapha Enthan Devan
Ennalum Sugam Tharuveerae – 2

1. Marana Irulin Pallathakil Nadaka Nernthalum
En Appa Enodirupathale Bayapadamaten – 2
Enaku Virothamai Ayirangalum Pathinaayirangal
Ezhunthaalum Anjidamaten – 2 (… Yegova Yire)

2. Nerukkathilae Kartharai Nokki Koopiten
Ennai Visalathil Konduvanthu Meetukondarae – 2
En Patchathil Karthar Irupathinalae Orupothum Nan
Asaika Paduvathillayae – 2 (… Yegova Yire)

En Thalaiyai Uyarthubavar – என் தலையை உயர்த்துபவர்

En Thalaiyai Uyarthubavar
என் தலையை உயர்த்துபவர் என்னோடு இருக்கிறார்
என் பாத்திரம் நிரம்பி வழிய அபிஷேகத்தில் நிரப்புகின்றார்

1. ஒன்றுக்கும் உதவாத என்னை அவர்கள் தள்ளியே புதைத்தனர் -2
புதைக்க பட்டு மறந்த என்னை நீர் மீண்டும் துளிர்க்க செய்தீர் -2
புதைத்து சென்றோர்க்கெலாம் என்னை கனி தர உயர்த்தி வைத்தீர் -2

என் தலையை உயர்த்துபவர் என்னோடு இருக்கிறார்
என் பாத்திரம் நிரம்பி வழிய அபிஷேகத்தில் நிரப்புகின்றார்

2. அபாத்திரமான என்னை நீர் பாத்திரம் ஆக்கியவர் -2
மகா பரிசுத்த ஸ்தலத்திற்குள் நுழைய எந்தன் தகுதி அவர் -2
எனக்குள்ளே வாசமாய் இருக்கும் எந்தன் நீதி அவர் -2
எனக்குள்ளே வாசமாய் இருக்கும் எந்தன் ஜீவன் அவர் -2

என் தலையை உயர்த்துபவர் என்னோடு இருக்கிறார்
என் பாத்திரம் நிரம்பி வழிய அபிஷேகத்தில் நிரப்புகின்றார்

3. ஞானிகள் வெட்கம் அடைய பைத்தியம் என்னை நீர் தெரிந்துகொண்டீர் -2
ஒன்றுக்கும் ஆகாத என்னை உம் கிருபை உயர்த்தியதே -2
என்னால் ஆனது அல்ல இது உந்தன் ஈவுகளே -2

என் தலையை உயர்த்துபவர் என்னோடு இருக்கிறார்
என் பாத்திரம் நிரம்பி வழிய அபிஷேகத்தில் நிரப்புகின்றார் }-2

En Thalaiyai Uyarthubavar
Ennodu Irukindraar

En Paathiram Nirambi Valiya
Abishegathal Nirapugirar

1. Ondrukum Uthavadha Ennai
Avargal Thalliye Pudhaithanar
Pudhaika Pattu Marandha Ennai
Neer Meendum Thulirka Seithir
Pudhaithu Sendrorkkelam
Ennai Kani Thara Uyarthi Veithir

2. Abathiram Maana Ennai
Neer Paathiram Aakiyavar
Maha Parisutha Sthalathukul
Nulaya Endhan Thaguthi Avar
Enakulley Vaasamai Irukum
Enthan Jeevan Avar

3. Niyanigal Vetkam Adaiya – Paithiyam
Ennai Neer Therindhukondeer
Ondrukum Aagadha Ennai
Um Kirubai Uyarthiyadhey
Ennal Aanadhu Alla
Idhu Undhan Ivugaley

Artist: Baba George | Kanmalay George

Umathu Mugam Nooki – உமது முகம் நோக்கிப் பார்த்தவர்கள்

Umathu Mugam Nooki

உமது முகம் நோக்கிப் பார்த்தவர்கள்
வெட்கப்பட்டு போவதில்லை
உமது திரு நாமம் அறிந்தவர்கள்
கைவிடப்படுவதில்லை
நம்பினோரை நீர் மறப்பதில்லை
உம்மை தேடி வந்தோரை வெறுப்பதில்லை

உடைந்த பாத்திரம் என்று
நீர் எவரையும் தள்ளுவதில்லை
ஒன்றுக்கும் உதவாதோர் என்று
நீர் எவரையும் சொல்லுவதில்லை

இயேசு மகா ராஜா எங்கள் நேசா
இரக்கத்தின் சிகரம் நீரே

ஏழைகளின் பெலன் நீரே
எளியோரின் நம்பிக்கை நீரே
திக்கற்றோர் வேதனை அறிந்து
உதவுடும் தகப்பன் நீரே

Umathu Mugam Nooki Paarthavarkal
Vetkappattu Povathillai
Umathu Thiru Naamam Arinthavarkal
Kaividappaduvathillai
Nampinorai Neer Marappathillai
Ummai Thaeti Vanthorai Veruppathillai

Utaintha Paaththiram Entu
Neer Evaraiyum Thalluvathillai
Ontukkum Uthavaathor Entu
Neer Evaraiyum Solluvathillai

Yesu Makaa Raajaa Engal Naesaa
Irakkaththin Sikaram Neerae

Aelaikalin Pelan Neerae
Eliyorin Nambikkai Neerae
Thikkator Vaethanai Arinthu
Uthavudum Thakappan Neerae

Iratha Satchi Kootam – இரத்த சாட்சிக் கூட்டம்

Iratha Satchi Kootam
இரத்த சாட்சிக் கூட்டம் சத்திய பாதையில்
நித்தம் தம்மைத் தத்தம் செய்து வீர சேவையில்
ஜீவன் சுகம் பெலன் யாவையும் ஈந்ததால்
சுத்த சுவிசேஷம் ஓங்குதே

1. ஜாதி மதபேதம் முற்றும் நீங்கிட
ஜோதியாய்ப் பிறந்து லோகப் பாவம் போக்கிட
கல்வாரியில் மரித்தே உயித்தெழுந்த
கர்த்தரின் நற்செய்தி சாற்றுவோம் போர்வீரரே

3. நாடு, நகரமோ, காடு மலையோ நாடித் தேடி ஓடியே நல் ஊழியம் செய்வோம்
மாண்டழியும் மக்கள் மேல் மனதுருகி
கண்டறிந்த சாட்சி கூறுவோம் – போர்வீரரே

4. தாகமோ, பசியோ நோக்கிடாமலே லோக இன்ப துன்பமோ நெருங்கிடாமலே
முன் வைத்த காலையும் பின் வைத்திடாமலே
இன்னமும் முன்னேறி சேவிப்போம் போர்வீரரே

5. உன்னத அழைப்பை என்றும் காத்திட ஊக்கமாய் உறுதியாய் தகுதி
பெற்றிட ஆவியிலே அனலாய் நிலை நின்றிட ஆண்டவர் அருள் பொழிகுவார் போர்வீரரே

6. சுத்த ஜீவியம் நற்சாட்சி பெறுவோம்
சத்திய வழி நடக்கும் பக்தி நாடுவோம்
வாக்கு வரம் வல்லமை அடைந்திடுவோம்
வல்ல விசுவாச சேவையில் – போர்வீரரே

7. இயேசுவின் பின்னே ஓடிடுவோமே
இயேசுவுக்காய் ஜீவன் வைத்திடுவோமே –
நாம்
ஆதிப்பிதாக்களுடன் ரத்த சாட்சிகள்
ஆர்ப்பரித்துக் கூடி வாழுவோம் போர்வீரரே

Entha Neramum Eppothume – எந்த நேரமும் எப்போதுமே

Entha Neramum Eppothume
எந்த நேரமும் எப்போதுமே
இயேசு எனக்கு ஒத்தாசை

இயேசு ராஜனை ஸ்தோத்தரிப்பேன்
இந்த ஏழையின் ஜெபம் கேட்டார்

1. இக்கட்டில் மனிதர் உதவி
இல்லாமலே அற்றுப் போனாலும்
எனக்கொத்தாசையே தினம் தப்பாமலே
இயேசு நாமத்தில் கிடைத்திடுமே — எந்த

2. சொல்லொண்ணா பாடுகள் சகிக்க
சென்ற காலம் பெலன் தந்தாரே
எந்தன் வாழ்நாளெல்லாம் தேவ சித்தமெல்லாம்
என்னில் முற்றிலும் நிறைவேறுமே — எந்த

3. சிறுமைப்பட்டோரின் நம்பிக்கை
ஒரு போதும் கெட்டுப் போகாதே
தம்மை தேடுவோரை காத்தர் கைவிடாரே
தேவன் நமக்கு அடைக்கலமே — எந்த

4. ஒவ்வொரு ஆண்டிலும் கர்த்தர்
எவ்வளவோ அற்புதம் செய்தார்
வருங்காலத்திலும் வருகை வரையும்
வாக்குத் தத்தம் தந்து நடத்துவார் — எந்த

5. குமரன் கோபம் கொள்ளாமலும்
வழியில் நாம் அழியாமலும்
அவர் பாதங்களை முத்தம் செய்திடுவோம்
அன்பர் இயேசுவை அண்டிக் கொள்ளுவோம் — எந்த

Ontrai Sernthu – ஒன்றாய் சேர்ந்து பாடுவோம்

Ontrai Sernthu
ஒன்றாய் சேர்ந்து பாடுவோம்
மன்னவரை வாழ்த்துவோம்
விண்ணும் மண்ணும் போற்றும் நல்ல தேவனவர்
வாழ்வின் பாதை மாற்றவே
ஒளியாய் உலகில் வந்தாரே
வானாதி வானம் போற்றும் கர்த்தரவர்
ஏழ்மை கோலமாய் அவதரித்தார்
தாழ்மை என்னவென்று கற்று தந்தார்
தம் வாழ்வை மாதிரியாய் காட்டி தந்த தெய்வம்
ஒருவர் ஒருவரே
உன் வாழ்வை நேராக மாற்ற வல்லவர்
இரட்சகர் அவரே

லலலாலலாலலா

அன்பின் மாதிரி ஆனவர்
அழகில் என்றென்றும் சிறந்தவர்
உலகின் பாவம் போக்கும் இரட்சகர்
இன்று பிறந்தார் – ஏழ்மை

தூதர்கள் சூழ்ந்து பாடிட
மேய்ப்பர்கள் வந்து பணிந்திட
வானோர் போற்றும் உன்னதர்
இன்று பிறந்தார் – ஏழ்மை

Koda Kodi Sthothiram – கோடா கோடி ஸ்தோத்திரம் பாடி

Koda Kodi Sthothiram
பல்லவி
கோடா கோடி ஸ்தோத்திரம் பாடி
கிறிஸ்துவின் அன்பை ருசிப்போமே

அனுபல்லவி
சேற்றிலிருந்து தூக்கி எடுத்துத் தேற்றி அணைத்துக் காத்துக்கொண்டாரே தேவசுதன்

1. பாவியை மீட்க பரன் சித்தங்கொண்டார்
பரலோகம் துறந்து பாரினில் பிறந்தார்
பரமனிவ் வேழையைத் தேடிவந்தாரே
பாதம் பணிந்தேன் பதில் ஏது முண்டோ? – பூவுலகில்

2. தேவனின் சித்தம் செய்யும்படியாய்
தாசனின் கோலம் தாமெடுத் தணிந்து
தற்பரன் நொறுக்கச் சித்தங்கொண்டாலும்
தம்மைப் பலியாய் தத்தம் செய்தாரே – எந்தனுக்காய்

3. ஆடுகளுக்காய் உயிர்தனைக் கொடுத்து
கேடு வராது காக்கும் நம் மீட்பர்
இன்று மென்மேலே வைத்த நேசத்தால்
என்றென்றும் நன்றி கூறித் துதிப்பேன் – இறையவனை

4. தாவீது கோத்திர சிங்கமாய்வந்தும்
சாந்தத்தால் என்னைக் கவர்ந்துக்கொண்டாரே
தாழ்மையான ஆட்டுக் குட்டியுடனே
தங்கியிருப்பேன் சீயோன் மலையில் – நித்தியமாய்

5. குயவனின் கையில் களிமண்ணைப்போல
குருவே நீர் என்னை உருவாக்குமையா
மாசற்ற மணவாட்டியாய் என்னைக்
காத்துக்கொள்ளும்படி கருணைகூர் ஐயா – ஏழையென்னை

Thalai Saikkum Kal – தலை சாய்க்கும் கல்

Thalai Saikkum Kal
தலை சாய்க்கும் கல் நீரய்யா
மூலைக்கல் நீரய்யா

ஏல் பெத்தேல் இது வானத்தின் வாசல்
என் இயேசையா ஆசீர்வாதத்தின் வாசல்

மேற்கு கிழக்கு வடக்கு தெற்கு பரம்புவாய் என்றீரே ஆதி
பூமியின் தூளைப்போல் உன் சந்ததி
பெருகும் என்று வாக்குரைத்தீரே
சொன்னதை செய்யுமளவும்
என்னை கைவிடவே மாட்டீர் – எனக்கு

பூமியின் வம்சங்கள் உனக்குள்
உன் சந்ததிக்குள் ஆசீர்வதிக்கப்படும்
என்று ஆசீர்வாத வாய்க்காலாக
என்னை மாற்றினீரே
சொன்னதை செய்யுமளவும்
என்னை கைவிடவே மாட்டீர் – எனக்கு

செல்லும் இடமெல்லாம் என்னோடு இருந்து
என்னை கனப்படுத்துவீர்
தகப்பன் தேசத்துக்கு திரும்பும் வரையில்
என்னை காப்பாற்றுவீர்
சொன்னதை செய்யுமளவும்
என்னை கைவிடவே மாட்டீர் -எனக்கு

thalai saaykkum kal neerayyaa
moolaikkal neerayyaa

ael peththael ithu vaanaththin vaasal
en iyaesaiyaa aaseervaathaththin vaasal

maerku kilakku vadakku therku parampuvaay enteerae aathi
poomiyin thoolaippol un santhathi
perukum entu vaakkuraiththeerae
sonnathai seyyumalavum
ennai kaividavae maattir – enakku

poomiyin vamsangal unakkul
un santhathikkul aaseervathikkappadum
entu aaseervaatha vaaykkaalaaka
ennai maattineerae
sonnathai seyyumalavum
ennai kaividavae maattir – enakku

sellum idamellaam ennodu irunthu
ennai kanappaduththuveer
thakappan thaesaththukku thirumpum varaiyil
ennai kaappaattuveer
sonnathai seyyumalavum
ennai kaividavae maattir -enakku

Ennai Padaithita – என்னை படைத்திட்ட

Ennai Padaithita
என்னை படைத்திட்ட பரமனின் பாதத்தில்
படைத்தேன் முழு நம்பிக்கையோடு
தாயின் கருவில் தெரிந்தவர் நீர்
என் தேவை எல்லாம் அறிந்தவரே

அர்ப்பணித்தேன் முழுதுமாய்
படைத்திட்டேன் என் ஆசை எல்லாம்
ஆவி ஆத்மா சரீரம் எல்லாம்
தந்துவிட்டேன் இன்றே

1. என்னை வரைந்திட்ட வல்லவரின் கரங்களில்
படைத்தேன் முழு நம்பிக்கையோடு
உம்மால் முடியாது என்று ஒன்று இல்லை
நம்பி வந்தேன் இன்றே

Ennai Padaithita Paramanin Paadhathil
Padaithen muzhu nambikaiyodu
Thayin karuvil therinthavar neer
En thevai ellam arinthavarae

Arpanithaen muzhuthumai
Padaithiten en aasai ellam
Aavi athma sariram ellam
Thanthuviten indrae

1. Ennai varanthita vallavarin karangalil padathen muzhu nambikaiyodu
Ummal mudiyathu endru ondru illai nambi vanthen indrae

Anbu Kooruvom Nam Devanagiya – அன்பு கூருவோம் நம் தேவனாகிய

Anbu Kooruvom Nam Devanagiya

அன்பு கூறுவோம் நம் தேவனாகிய கர்த்தரில்
அவரே நம் தேவன் என்றென்றும் அவரில் வாழ்ந்திட

நம் இயேசு மகாராஜன் சீக்கிரம் வருகிறார்
அவர் வருகையை சந்திக்க ஆயத்தமாவோம் நாம்

1. திருடனை போல் அவர் வருகை தீவிரமாய் மிக நெருங்கிடுதே
ஆயத்தமில்லா அவணியனுள்ளோர் அழுது புலம்பி கதறுவாரே

2. அந்த நாளில் ஆயத்தமானோர் இயேசுவிடம் பறந்திடுவோம்
இவ்வுலக வாழ்வை முடித்து பரலோக வாசல் சேர்ந்திடுவோம்

Anbu Kooruvom Nam Devanaagiya Kartharil
Avarae Nam Devan Endrendrum Avaril Vazhdhida

Chorus
Nam Yesu Magarajan Seekiram Varugirar
Avar Varugaiyai Sandhikka Ayathamaavom Naam

1. Thirudanai Pol Avar Varugai Theeviramai Miga Nerungiduthae
Aayathamilla Avaniyanullor Azhudhu Pulambi Katharuvarae

2. Andha Naalil Aayathamanor Yesuvidam Paranthiduvom
Ivvuzhaga Vazhvai Mudithu Paraloga Vaasal Saerndhiduvom