Song Category: Tamil

Nadu Kulir Kalam – நடுக் குளிர் காலம்

Nadu Kulir Kalam
1. நடுக் குளிர் காலம் கடும் வாடையாம்
பனிக்கட்டிபோலும் குளிரும் எல்லாம்,
மூடுபனி ராவில் பெய்து மூடவே;
நடுக் குளிர் காலம் முன்னாளே

2. வான் புவியும் கொள்ளா ஸ்வாமி ஆளவே,
அவர்முன் நில்லாது அவை நீங்குமே;
நடுக் குளிர் காலம் தெய்வ பாலர்க்கே
மாடு தங்கும் கொட்டில் போதுமே

3. தூதர் பகல் ராவும் தாழும் அவர்க்கு,
மாதா பால் புல் தாவும் போதுமானது;
கேருபின் சேராபின் தாழும் அவர்க்கே
தொழும் ஆடுமாடும் போதுமே

4. தூதர் தலைத்தூதர் விண்ணோர் திரளும்
தூய கேரூப்ப சேராப் சூழத் தங்கினும்,
பாக்கிய கன்னித் தாயே நேச சிசு தான்
முக்தி பக்தியோடு தொழுதாள்

5. ஏழை அடியேனும் யாது படைப்பேன்?
மந்தை மேய்ப்பனாயின் மறி படைப்பேன்
ஞானி ஆயின் ஞானம் கொண்டு சேவிப்பேன்;
யானோ எந்தன் நெஞ்சம் படைப்பேன்

Piranthar Or Palagan – பிறந்தார் ஓர் பாலகன்

Piranthar Or Palagan
1. பிறந்தார் ஓர் பாலகன்
படைப்பின் கர்த்தாவே;
வந்தார் பாழாம் பூமிக்கு
எத்தேசம் ஆளும் கோவே.

2. ஆடும் மாடும் அருகில்
அவரைக் கண்ணோக்கும்;
ஆண்டவர் என்றறியும்
ஆவோடிருந்த பாலன்

3. பயந்தான் ஏரோதுவும்
பாலன் ராஜன் என்றே;
பசும் பெத்லேம் பாலரை
பதைபதைக்கக் கொன்றே

4. கன்னி பாலா வாழ்க நீர்!
நன்னலமாம் அன்பே!
பண்புடன் தந்தருள்வீர்
விண் வாழ்வில் நித்திய இன்பே

5. ஆதி அந்தம் அவரே
ஆர்ப்பரிப்போம் நாமே
வான் கிழியப் பாடுவோம்
விண் வேந்தர் ஸ்தோத்ரம் இன்றே

Intha Mattum Katha – இந்த மட்டும் காத்த எபெனேசரே

Intha Mattum Katha
1. இந்த மட்டும் காத்த எபெனேசரே
இனிமேலும் காக்கும் யெகோவாயீரே
எந்தன் வாழ்க்கையின் இம்மானுவேலரே
இந்த வருடத்தின் நாட்களிலே புது (2)
ஸ்தோத்தரிப்போம் நாமே
துதிகளுடனே ஆர்ப்பரிப்போம்
அன்பர் இயேசுவை – அல்லேலூயா!

2. யோர்தானும் செங்கடலும் நம் எதிரில்
எழும்பி வந்த போதிலும் காத்தவர்
சாபப் பிசாசின் சோதனை போதிலும்
இயேசு நாமத்தில் அகற்றியவர் – (2)

3. சேயைக் காக்கும் ஒரு தாயைப் போலவே
இந்த மாயலோகில் என்னைக்
காக்கும் தேவனே – மகத்தான கிருபை
என்மேலே மகிபா நீர் ஊற்றிடுமே – (2)

4. பழமையெல்லாம் ஒழிந்து போனதே
எல்லாம் புதிதாக தேவனே ஆனதே
உந்தன் மகிமையில் இறங்கியே வாருமே
நாங்கள் மறுரூபம் அடைந்திடவே – (2)

Vaakuraithavarae – வாக்குறைத்தவரே

Vaakuraithavarae

வாக்குறைத்தவரே
நீர் உண்மையுள்ளவரே
நீர் வாக்கு மாறாதவர்

காலங்கள் மாறலாம்
சூழ்நிலை மாறலாம்
மனிதர்கள் மாறலாம்
நீரோ என்றும் மாறாதவர்

பொய் சொல்லவோ
மனம் மாறவோ
நீர் மனிதன் அல்லவே

நீர் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவர்
நீர் சொன்னதை செய்து முடிக்க வல்லவர்

Vaakkuraiththavarae
Neer Unmaiullavarae
Neer Vaakkumaaradhavar (2) x(2)

Kaalangal Maaralaam,
Soolnilai Maaralaam
Manidhargal Maaralaam,
Neero Endrum Maaradhavar O…

Poi Sollavo
Manam Maaravo
Neer Manidhan Allavae (2) x(2)
Neer Naettrum Indrum Endrum Maradhavar
Neer Sonnadhai Seidhu Mudikka Vallavar x(2)

High : Kaalangal Maaralaam,
Soolnilai Maaralaam
Manidhargal Maaralaam,
Neero Endrum Maaradhavar Kaalangal Maaralaam,
Soolnilai Maaralaam Manidhargal Maaralaam,
Neero Nettrum Indrum Endrum Maaradhavar
Vaakkuraiththavarae Neer UnmaiullavaraeNeer Vaakkumaaradhavar

Jeevikirar Yesu Jeevikirar – ஜீவிக்கிறார் இயேசு ஜீவிக்கிறார்

Jeevikirar Yesu Jeevikirar
ஜீவிக்கிறார் இயேசு ஜீவிக்கிறார்
என்னுள்ளத்தில் அவர் ஜீவிக்கிறார்
துன்பத்தில் என் நல் துணை அவரே
என்றென்றும் ஜீவிக்கிறார்(2)

1. செங்கடல் அவர் சொல்ல இரண்டாய் நின்றது
பெருங்கோட்டை ஒன்று தரைமட்டமானது
அவர் சொல்ல குருடரின் கண் திறந்தது
அவர் தொடக் குஷ்டரோகி சுத்தமாயினான் – ஜீவிக்கிறார்

2. உம்மை என்றும் விடாமல் நான் தொடரவே
என்னை என்றும் விடாமல் நீர் பிடிக்கவே
நான் மரிக்கும் நேரத்தில் பரலோகத்தில்
உம் வீட்டைக் காட்டும் நல்ல மேய்ப்பரே – ஜீவிக்கிறார்

Yesu Rajanin Thiruvadikku – இயேசு ராஜனின் திருவடிக்கு

Yesu Rajanin Thiruvadikku

இயேசு ராஜனின் திருவடிக்கு
சரணம் சரணம் சரணம்
ஆத்ம நாதரின் மலரடிக்கு
சரணம் சரணம் சரணம்

1. பார் போற்றும் தூய தூய தேவனே
மெய் ராஜாவே எங்கள் நாதனே
பயம் நீக்கும் துணையாவுமானிரே

2. இளைபாறுதல் தரும் தேவனே
இன்னல் துன்பம் நீக்கும் அருள் நாதனே
ஏழை என்னை ஆற்றித் தேற்றி காப்பீரே

3. பலவீனம் யாவும் போக்கும் வல்லோரே
பெலனீந்து வலக்கரம் பிடிப்பீரே
ஆவி ஆத்மா சரீரத்தை படைக்கிறேன்

4. உந்தன் சித்தம் செய்ய அருள் தருமே
எந்தன் சித்தம் யாவும் என்றும் ஒழிப்பீரே
சொந்தமாக ஏற்று என்னை ஆட்கொள்ளும்

5. அல்லேலுயா பாடி வந்து துதிப்பேன்
மனதார உம்மை என்றும் போற்றுவேன்
அல்லேலுயா அல்லேலுயா ஆமென்

Santhosha Vinnoliye – சந்தோஷ விண்ணொளியே

Santhosha Vinnoliye

சந்தோஷ விண்ணொளியே
இயேசு சாந்த சொரூபியவர்
பள்ளத்தாக்கின் லீலி சாரோனின் ரோஜா
பாரில் மலர்ந்துதித்தார்

இன்ப பரலோகம் துறந்தவர்
துன்பம் சகித்திட வந்தவர்
பாவ மனிதரை மீட்டவர்
பலியாகவே பிறந்தார்

பூலோக மேன்மைகள் தேடாதவர்
பேரும் புகழும் நாடாதவர்
ஒன்றான மெய் தேவன் இயேசுவே
என் ஆத்ம இரட்சகரே

ஜீவன் வழி சத்தியம் எல்லாமிவர்
தேவாதி தேவன் சுதன் இவர்
இயேசுவல்லால் வேறு யாருமில்லை
இரட்சண்யம் ஈந்திடவே

ஆடம்பர வாழ்வை வெறுத்தவர்
அண்ணல் எளிமையாய் வாழ்ந்தவர்
எம்மையும் தம்மைப் போல் மாற்றிடும்
இயேசுவைப் பின்பற்றுவோம்

எங்கள் சமாதானப் பிரபு இவர்
இயேசு அதிசயமானவர்
வேதம் நிறைவேறும் காலமே
வேகம் வருகின்றாரேே

Santhosha Vinnnnoliyae
Yesu Saantha Soroopiyavar
Pallathaakkin Leeli Saaronin Rojaa
Paaril Malarnthuthiththaar

Inba Paralogam Thuranthavar
Thunbam Sakiththida Vanthavar
Paava Manitharai Meettavar
Paliyaakavae Piranthaar

Pooloka Maenmaikal Thaedaathavar
Paerum Pukalum Naadaathavar
Ontana Mey Thaevan Yesuvae
En Aathma Iratchakarae

Jeevan Vali Saththiyam Ellaamivar
Thaevaathi Thaevan Suthan Ivar
Yesuvallaal Vaetru Yaarumillai
Iratchannyam Eenthidavae

Aadampara Vaalvai Veruthavar
Annal Elimaiyaai Vaalnthavar
Emmaiyum Thammai Pol Maattidum
Yesuvai Pinpattuvom

Engal Samaathaana Pirapu Ivar
Yesu Athisayamaanavar
Vaetham Niraivaerum Kaalamae
Vaekam Varukintarae

Anantha Geethangal Ennalum – ஆனந்த கீதங்கள் எந்நாளும்

Anantha Geethangal Ennalum

பல்லவி

ஆனந்த கீதங்கள் எந்நாளும் பாடி
ஆண்டவர் இயேசுவை வாழ்த்திடுவோம்
அல்லேலூயா ஜெயம் அல்லேலூயா
அல்லேலூயா ஜெயம் அல்லேலூயா

சரணங்கள்

1. புதுமை பாலன் திரு மனுவேலன்
வறுமை கோலம் எடுத்தவதரித்தார்
முன்னுரைப்படியே முன்னணை மீதே
மன்னுயிர் மீட்கவே பிறந்தாரே – ஆனந்த

2. மகிமை தேவன் மகத்துவராஜன்
அடிமை ரூபம் தரித்திகலோகம்
தூதரும் பாட மேய்ப்பரும் போற்ற
துதிக்குப் பாத்திரன் பிறந்தாரே – ஆனந்த

3. மனதின் பாரம் யாவையும் நீக்கி
மரண பயமும் புறம்பே தள்ளி
மா சமாதானம் மா தேவ அன்பும்
மாறா விஸ்வாசமும் அளித்தாரே – ஆனந்த

4. அருமை இயேசுவின் திருநாமம்
இனிமை தங்கும் இன்னல்கள் நீக்கும்
கொடுமை பேயின் பெலன் ஒடுக்கும்
வலிமை வாய்ந்திடும் நாமமிதே – ஆனந்த

5. கருணை பொங்க திருவருள் தங்க
கிருபை பொழிய ஆர்ப்பரிப்போமே
எம்முள்ளம் இயேசு பிறந்த பாக்கியம்
எண்ணியே பாடிக் கொண்டாடுவோம் – ஆனந்த

Anbaana Engal Deva Aaviye – அன்பான எங்கள் தேவ

Anbaana Engal Deva Aaviye

அன்பான எங்கள் தேவ ஆவியே
அன்போடு வரவேற்கிறோம் -(2)
அடியார்கள் நாங்கள்
ஒரு மனத்தோடே உம்மை
அன்போடு வரவேற்கிறோம் -(2)

ஆவியோடும் உண்மையோடும் ஆராதிக்க
அப்பா பிதாவே என்று அழைக்க (2)
அபிஷேக நாதரே வரவேற்கிறோம்
அன்போடு வரவேற்கிறோம் (2)

பக்தி விருத்தியடைந்து
நாங்கள் பாடித் துதித்திட
பரிசுத்தமாகி தேவனை ஆடிப்பாடிட (2)
பரிசுத்த ஆவியே உம் பெலன் வேண்டுமே
அன்போடு வரவேற்கிறோம் (2)

பாவசாப ரோகங்கள் ஓடிப்போய்விட
தேவ சாயலாக நாங்கள் தினம் மாறிட (2)
ஆவியாலே கனி தந்து தினம் வாழ்ந்திட
அன்போடு வரவேற்கிறோம் (2)

Anbaana engal dhaeva aaviyae
Anboadu varavaerkiraom (2)
Adiyaargal naangal
Oru manaththoadae ummai
Anboadu varavaerkiraom (2)

Aaviyoadum unmaiyoadum aaraadhikka
Appaa pidhaavae endru azhaikka (2)
Abishaega naadharae varavaerkiraom
Anboadu varavaerkiraom (2)

Bakthi viruthiyadaindhu
naangal paadi thudhithida
Parisuthamaagi dhaevanai aadipaadida (2)
Parisutha aaviyae um belan vaendumae
Anboadu varavaerkiraom (2)

Paavasaaba roagangal oadippoaivida
Dhaeva saayalaaga naangal dhinam maarida (2)
Aaviyaalae kani thandhu dhinam vaazhndhida
Anboadu varavaerkiraom (2)

Enakkaga Yavaiyum Seithu – எனக்காகவே யாவையும் செய்து

Enakkaga Yavaiyum Seithu
எனக்காகவே யாவையும்
செய்து முடித்தீர்
நன்றி நன்றி ஐயா
என் பாவங்கள் யாவையும்

சுமந்து கொண்டீரே
நன்றி நன்றி ஐயா

நினைப்பதற்கும் ஜெபிப்பதற்கும்
அதிகமாக தருபவரே (2)

நான் எனது பிள்ளைக்கு
நல்ல ஈவைக் கொடுக்கின்றேன்
பரம பிதா அதைப்பார்க்கிலும்
கொடுத்திடுவாரே (2)
நினைப்பதற்கும் ஜெபிப்பதற்கும்
அதிகமாக தருபவரே (2)

அன்றாடம் வேண்டிய
ஆகாரம் தாருமே
தீமை என்னை அணுகாமல் காக்கும் தேவனே (2)
நினைப்பதற்கும் ஜெபிப்பதற்கும்
அதிகமாக தருபவரே (2)

ஆபிரகாமை அழைத்தீரே
ஆசீர்வாதம் கொடுத்தீரே
அது போல என்னையும் ஆசிர்வதியும் (2)
நினைப்பதற்கும் ஜெபிப்பதற்கும்
அதிகமாக தருபவரே (2)

Enakkaagavae yaavaiyum
Seidhu mudittheer
Nandri nandri aiyaa
En paavangal yaavaiyum

Sumandhu kondeerae
Nandri nandri aiyaa

Ninaippadharkum jebipadharkum
Adhigamaaga tharubavarae (2)

Naan enadhu pillaikku
Nalla eevai kodukkindraen
Parama pidhaa adhaippaarkkilum
Kodutthiduvaarae (2)
Ninaippadharkum jebipadharkum
Adhigamaaga tharubavarae (2)

Andraadam vaendiya
Aagaaram thaarumae
Theemai ennai anugaamal
Kaakkum dhaevanae (2)
Ninaippadharkum jebipadharkum
Adhigamaaga tharubavarae (2)

Aabirakaamai azhaittheerae
Aaseervaadham koduttheerae
Adhu poala ennaiyum
Aasirvadhiyum (2)
Ninaippadharkum jebipadharkum
Adhigamaaga tharubavarae (2)