Song Category: Tamil

Anbu Yesuvin Anbu – அன்பு இயேசுவின் அன்பு

Anbu Yesuvin Anbu
அன்பு இயேசுவின் அன்பு – அது
அளவிடமுடியாதது
நம்பு நீ அதை நம்பு – இந்த
இகமதில் கிடைக்காதது

1. தந்தை தாய் அன்பொருநாள் – அது
தணிந்தே போய்விடும் – தன்
பிள்ளையின் அன்பொருநாள் – அது
பிரிந்தே போய்விடும்

2. என்றென்றும் மாறாதது – என்
இயேசுவின் தூய அன்பு
என் வாழ்வில் தீராதது – என்
தேவனின் ஜீவ அன்பு

3. கணவனின் அன்பொருநாள் – அது
கரைந்தே போய்விடும் – நல்ல
மனைவியின் அன்பொருநாள் – அது
மறைந்தே போய்விடும்

4. உறவினர் அன்பொருநாள் – அது
ஒழிந்தே போய்விடும் – உடன்
பிறந்தவர் அன்பொருநாள் – அது
அழிந்தே போய்விடும்

5. நண்பனின் அன்பொருநாள் – அது
நழுவியே போய்விடும் – நீ
நம்பினோர் அன்பொருநாள் – அது
வழுவியே போய்விடும்

Varusha Thovakathil

Varusha Thovakathil
வருஷத் துவக்கத்தில்
வந்தேன் இயேசு நாமத்தில்

பல்லவி
அஞ்சிடேன் என் வல்ல மீட்பர்
தஞ்சம் தந்து என்னைக் காப்பார்
நெஞ்சத்தில் விசார மேன் ?
நேசரைப் பின் பற்றுவேன்

1. வருங்காலம் அறியேன்
ஆயினும் நான் கலங்கேன்

2. சாத்தான் வந்தெதீத்தாலும்
சத்ரு மூர்க்கங் கொண்டாலும்

3. கஷ்டமோ ? கலக்கமோ ?
துஸ்டரின் இடுக்கமோ ?

4. சுகமோ ? வியாதியோ ?
துக்கமோ ? மகிழ்ச்சியோ ?

5. நித்திய யெகோவா ! உம்
சித்தமே, என் பாக்கியம்

En Mudivukku Vidivu Neere – என் முடிவுக்கு விடிவு நீரே

En Mudivukku Vidivu Neere
என் முடிவுக்கு விடிவு நீரே
என் வாழ்வுக்கு உதயம் நீரே
என்னையா தெரிந்துக்கொண்டீர்?
என்னையா அழைத்து விட்டீர்? – அப்பா
தகுதி இல்லாத என்னை தகுதியாய் மாற்றி
கன்மலையில் நிறுத்தினீரே

1. பூமியிலே நான் பரதேசி
ஆனால் உமக்கோ இப்பொழுது விசுவாசி
என்னையா தெரிந்துக்கொண்டீர்?
என்னையா அழைத்து விட்டீர்? – அப்பா
தகுதி இல்லாத என்னை தகுதியாய் மாற்றி
கன்மலையில் நிறுத்தினீரே
என் முடிவுக்கு விடிவு நீரே
என் வாழ்வுக்கு உதயம் நீரே

2. புல்லைப்போல் உலர்ந்திடும் என் வாழ்க்கை
ஆனால் உம்மிடத்தில் எனக்கோர் இடம்தந்தீர்
என்னையா தெரிந்துக்கொண்டீர்?
என்னையா அழைத்து விட்டீர்? – அப்பா
தகுதி இல்லாத என்னை தகுதியாய் மாற்றி
கன்மலையில் நிறுத்தினீரே
என் முடிவுக்கு விடிவு நீரே
என் வாழ்வுக்கு உதயம் நீரே

3. சோதித்தப்பின் சுத்த பொன்னாக
இந்த மண்ணிலே என்னை வீளங்கச்செய்தீர்
என்னையா தெரிந்துக்கொண்டீர்?
என்னையா அழைத்து விட்டீர்? – அப்பா
தகுதி இல்லாத என்னை தகுதியாய் மாற்றி
கன்மலையில் நிறுத்தினீரே
என் முடிவுக்கு விடிவு நீரே
என் வாழ்வுக்கு உதயம் நீரே

Valakamal Ennai Thalaiyakuveer – வாலாக்காமல் என்னை தலையாக்கினீர்

Valakamal Ennai Thalaiyakuveer
வாலாக்காமல் என்னை தலையாக்கினீர்
கீழாக்காமல் என்னை மேலாக்கினீர்
கீழ கெடந்த என்ன மேல தூக்கி வச்சு
கிருப மேல கிருப தந்து உயர்த்தி வைத்தீர்

உம்மை துதிப்பேன் நான்
உம்மை துதிப்பேன்
கிருப மேல கிருப தந்த உம்மை துதிப்பேன்

பல வண்ண அங்கி ஜொலித்ததினாலே
பலபேர் கண்ணுப்பட்டு உறிஞ்சு புட்டாங்க
தந்தீங்க ராஜ வஸ்திரம்
அத ஒருத்தனும் நெருங்க முடியல
அடிம என்ன அதிபதியாமாத்திப்புட்டீங்க

மோசேயே போல கொலைகாரன் என்று
தூரதேசத்திற்க்கு அனுப்பிபுட்டாங்க
வந்தீங்க முட்செடியினில்
என்னை மீண்டும் உயர்த்தி வைக்கவே
வேண்டானு சொன்னவங்கள நடத்த வச்சிங்க

Aayirangal Parthalum – ஆயிரங்கள் பார்த்தாலும்

Aayirangal Parthalum

ஆயிரங்கள் பார்த்தாலும்
கோடிஜனம் இருந்தாலும்
உம்மைவிட (இயேசுவைப்போல்)
அழகு இன்னும் கண்டுபிடிக்கலயே

நான் உங்களை மறந்தபோதும்
நீங்க என்னை மறக்கவில்லை
நான் கீழே விழுந்தும் நீங்க
என்னைவிட்டு க்கொடுக்கலயே……
அட மனுஷன் மறந்தும் நீங்க
என்னை தூக்க மறக்கலையே

உம்மை ஆராதிப்பேன் அழகே
என்னை மன்னிக்க வந்த அழகே
உம்மை பாட உம்மை புகழ
ஒரு நாவு பத்தலையே

காசு பணம் இல்லாம
முகவரி இல்லாம
தனிமையில் நான் அழுதத
நீர் மறக்கலையே

நான் உடஞ்சு போயி கிடந்து
நான் நொருக்கபட்டு கிடந்து
என்னை ஒட்டி சேர்க்க
நீங்க வந்ததது நான் மறக்கலையே
என் கண்ணீரை துடைத்துவிட்டத
நான் மறக்கலையே

Aayiranggal Paarthalam Kodisanam Irunthalam
Ummai Pole Azhagae Innum Kandepikkellaye
Aayiranggal Paarthalam Kodisanam Irunthalam
Yesuvae Pole Azhagae Innum Kandepikkellaye

Naan Unggale Marantha Pothum
Neengge Enna Marakeve Ille
Naan Keele Vizhunthe
Neenge Enna Vitte Kodekellaye
Ade Manushan Maranthe
Neenge Enna Thooke Maarekellaye

Ummai Aarathippen En Azhagae
Enna Manikka Vanthe Azhagae
Ummai Paade Ummai Puzhalae
Oer Naave Patthalaye-2x

Kaase Panam Illame Mughavaari Illame
Thanimayil Naan Aluzthathe Neer Maarakkeleye
Kaase Panam Illame Mughavaari Illame
Thanimayil Naan Aluzthathe Neer Maarakkeleye
Neenge Enna Vitte Kodekellaye

Naan Udangge Poi Kidenthen
Naan Norukkapatte Kidenthen
Yenna Otti Serke Neenge Vanthathe Naan Maarakellaye
Yen Kannerai Neengge Thudacha Vittethe Naan Maarakellaye

En Sirumaiyai Kannokki – Beer lahai rohi – என் சிறுமையை கண்ணோக்கி

En Sirumaiyai Kannokki
Beer lahai rohi
என் சிறுமையை கண்ணோக்கி பார்த்தவர் நீர்
என் எளிமையில் கைதூக்க வந்தவர் நீர்

துரத்தப்பட்ட என்னை மீண்டும் சேர்த்துக்கொண்டீர்
ஒதுக்கப்பட்ட என்னை பெரிய ஜாதியாய் மாற்றினீர்

பீர்லாகாய் ரோயீ
என்னை காண்கின்ற தேவன் நீர்
பீர்லாகாய் ரோயீ
எங்கள் ஜீவ நீரூற்று நீர்

வனாந்திரம் என் வாழ்வானதே
பாதைகள் எங்கும் இருளானதே
எந்தன் அழுகுரல் கேட்டு
நீரூற்றாய் வந்தவரே

புறஜாதி என்னை தேடி வந்தீர்
சுதந்தரவாளியாய் மாற்றிவிட்டீர்
வாக்குதத்தம் செய்தீர்
நீர் சொன்னதை நிறைவேற்றினீர்

Belavanai Ennai – El Yeshuran – பெலவானாய் என்னை

belavanai ennai – El Yeshuran
பெலவானாய் என்னை மாற்றினவர்
நீதிமான் என்று அழைக்கின்றவர்
எனக்காக யுத்தத்தை செய்கின்றவர்
முன்னின்று சத்துருவை துரத்துபவர்
இஸ்ரவேலின் மகிமையவர்

ஏல் யெஷுரன்
எனக்காக யாவையும் செய்து முடிப்பவரே
ஏல் யெஷுரன்
எங்கள் துதிகளில் வாசம் செய்பவரே

1. நீ என் தாசன் என்றவரே
நான் உன்னை சிருஷ்டித்தேன் என்றவரே
பாவங்கள் யாவையும் மன்னித்தீரே
சாபங்கள் யாவையும் நீக்கினீரே
மீட்டுக் கொண்டேன் என்றீரே-என்னை

2. பயப்படாதே என்றவரே
நான் உன்னை மறவேன் என்றவரே
சந்ததி மேல் உம் ஆவியையும்
சந்தானத்தின் மேல் ஆசியையும்
ஊற்றி ஊற்றி நிறைத்தவரே

Piranthar Piranthar – பிறந்தார் பிறந்தார் வானவர்

பிறந்தார் பிறந்தார்
வானவர் புவி மானிடர் புகழ்
பாடிட பிறந்தார்

1. மாட்டுத் தொழுவம் தெரிந்தெடுத்தார்
மா தேவ தேவனே
மேன்மை வெறுத்தார் தாழ்மை தரித்தார்
மா தியாகியாய் வளர்ந்தார்

2. பாவ உலக மானிடர் மேல்
பாசம் அடைந்தவரே
மனக்காரிருளை எம்மில் நீக்கிடும் மெய்
மா ஜோதியாய்த் திகழ்ந்தார்

3. பொறுமை தாழ்மை அன்புருக்கம்
பெருந்தன்மை உள்ளவரே
மரணம் வரையும் தன்னைத் தாழ்த்தினால்
மேலான நாமம் பெற்றோர்

4. கந்தைத் துணியோ கர்த்தருக்கு
கடும் ஏழ்மைக் கோலமதோ
விலையேறப் பெற்ற உடை அலங்கரிப்பும்
வீண் ஆசையும் நமக்கேன்

5. குருவைத் தொடரும் சீஷர்களும்
குருபோல மாறிடுவார்
அவர் நாமம் தரித்தவர் யாவருமே
அவர் பாதையில் நடப்போம்

6. இயேசு பிறந்தார் உள்ளமதில்
இதை எங்கும் சாற்றிடுவோம்
புசிப்பும் குடிப்பும் தேவ ராஜ்யமல்ல
பரன் ஆவியில் மகிழ்வோம்

Vaanam Vaalthatum – வானம் வாழ்த்தட்டும்

Vaanam Vaalthatum
வானம் வாழ்த்தட்டும் வையம் போற்றட்டும்
பூமி மகிழட்டும் பூதலம் பணியட்டும்
பாடுங்கள் (2) பாலன் இயேசு இன்று பிறந்தார் (2)
Merry (4) Christmas (4)

1. காலம் சிந்தும் கானம் தாலாட்டு பாடிடுதே
மேகம் சிந்தது வானம் தேனாக மாறிடுதே
குளிரும் பணியும் வாட்டிட
குளிரில் கோமகன் தூங்கிட
விண்மீன்கள் கூட்டமே ஒளிருங்கள்
விண் பாலனோடு விளையாடவே
வா வா வா வானத்து வெண்ணிலவே – வானம்

2. ஏதேன் தந்த பாவம் சாபங்கள் நீங்கிடவே
ஏழை கோலம் கொண்டார் இயேசு பாலனின்றே
அன்னை மரியின் மடியிலே
அன்பின் ரூபம் ஆனாரே
இனி மீட்க வந்த தேவ மைந்தனே
இனி பாடவைத்த இயேசு பாலனே
வா வா வா வாழ்த்து பாடுகிறேன்

Vaan Velli Pragaasikkudhae – வான் வெள்ளி பிரகாசிக்குதே

Vaan Velli Pragaasikkudhae
வான் வெள்ளி பிரகாசிக்குதே
உலகில் ஒளி வீசிடுமே
யேசு பரன் வரும் வேளை
மனமே மகிழ்வாகிடுமே

1. பசும் புல்லணை மஞ்சத்திலே
திருப்பாலகன் துயில்கின்றான்
அவர் கண் அயரார் நம்மை கண்டிடுவார்
நல் ஆசிகள் கூறிடுவார் – வான்

2. இகமீதினில் அன்புடனே
இந்த செய்தியை கூறிடுவோம்
மகிழ்வோடு தினம் புகழ் பாடிடுவோம்
அவர் பாதம் பணிந்திடுவோம் – வான்

Vaan Velli Pragaasikkudhae
Ulagil Oli Veesidumae
Yesupran Varum Velai
Manamae Magilvagidumae(2)

1. Pasum Pillanai Manjathilae
Siru Paalagan Thuyilgindraar
Avar Kannayarvaar Nammai Kandiduvaar
Nal Aasigal Kooriduvaar – Vaan

2. Igameedhinil Anbudanae
Inba Seidhiyai Kooriduvom
Magilvodu Dhinam
Pugazh Paadiduvom
Avar Paadham Panindhiduvom – Vaan