Um Kirubai Thaan – உம் கிருபை தான்

Um Kirubai Thaan
உம் கிருபை தான் ஐயா ………..
மரித்துப் போன எனக்கு உயிர் தந்த கிருபை
பாவியாய் இருந்தவனை உயர்த்தி வைத்த கிருபை
உம் கிருபை தான் ஐயா ……….

1. சாம்பலை சிங்காரமாய் மாற்றின அந்த கிருபை
தீமையை நன்மையாய் மாற்றி வைத்த கிருபை
உம் கிருபை தான் ஐயா ………..

2. பெலவீன நேரத்தில் பெலன் தந்த கிருபை
சோர்ந்து போன நேரத்தில் சூழ்ந்து கொண்ட கிருபை
உம் கிருபை தான் ஐயா………..

Sollal Aguma – சொல்லால் ஆகுமா

Sollal Aguma
சொல்லால் ஆகுமா இதை சொன்னால் புரியுமா
என் இயேசு ராஜன் புகளைச் சொன்னால் உலகம் தாங்குமா
முக்கோடி எழுத்தாலும் தக்கி முக்கி எழுதினாலும்
மன்னவன் புகழ் தனையே எழுதிட முடியுமா

1. மரித்தவன் வீட்டை மிதித்த தேவன் நீத்த உயிரை உயிர்த்து தந்தார்
கதறின குருடனின் கண்களைத் திறந்து வாழ்வை ஒளி மயமாக்கின தேவன்

2. கவலை கண்ணீரோடு கடந்து வந்திடும் யாரையும் வெறுத்து தள்ளாத தேவன்
வாடி நின்றிடும் மக்களின் குரலுக்கு வார்த்தையை அனுப்பி சுகம் தர வல்லவர்

Ezhai Enthan – ஏழை எந்தன் மீது

Ezhai Enthan Meethu
ஏழை எந்தன் மீது அன்பு தேவா
ஏன் இத்தனை அன்பு சொல்லும் நாதா
பாவியான எந்தன் மீது நாதா
ஏன் இத்தனை பாசம் சொல்லும் தேவா!!!

1. வயிராம் தாய் வயிற்றில் கருவாய் உருவாகு முன்னே
பேர் சொல்லி எனை அழைத்து தெரிந்து கொண்ட விதம் நினைத்து
அலைந்து அலைந்து உலகில் திரிந்த என்னை தெரிந்து கொண்டதை நினைத்து
பாடிட நாவு போதாது தேவா உம் பாசத்துக்கு இணை ஏது நாதா!!

2. உளையான பாவ சேற்றில் உழன்று அமிழ்ந்து கிடந்த என்னை
தூக்கியே மனிதனாக நிறுத்திய உம் அன்பை நினைத்து
பணிந்து குனிந்து உணர்ந்து உள்ள நன்றியோடு உம்மை நினைத்து
நன்றிகள் கோடி சொல்வேன் தேவா
உம் பாதம் என்றும் சரணம் அன்பு நாதா!!

3. எத்தனையோ நன்மைகளை உம்மால் நான் பெற்றிருந்தும்
அத்தனையும் மறந்து நான் எத்தனமாய் வாழ்ந்ததேனோ
அற்பனும் சொற்பனும் குப்பையும் என்னை தற்பரன் தெரிந்து கொண்டதை நினைத்து
துதித்திட நாவு போதா தேவா உம் மகிமைக்கு அளவு இல்லை நாதா

Ummai Pola Intha Ulagile – உம்மைப் போல இந்த

Ummai Pola Intha Ulagile
உம்மைப் போல இந்த உலகிலே
வேறஒருவரும் இல்லையே

அம்மாவும் நீரே என் அப்பாவும் நீரே
என் ஆத்ம நேசர் நீரால்லோ
அம்மாவும் நீரே என் அப்பாவும் நீரே
என் இதய துடிப்பும் நீரால்லோ

1. அன்பை தேடி நான் அலைந்து திரிந்தேன்
மனித உறவுகளால் நொறுக்க பட்டேன்
வேதனையில் நான் வாடுகையில்
உம் அன்பினால் என்னை உயிர்ப்பித்தீர்

2. குழப்பமான சில நேரங்களில்
கேள்விகள் அநேகம் எழுகையில்
உம் ஞானத்தினால் என்னை வழி நடத்தும்
உம் சமூகத்தில் என்னை பெலபடுத்தும்

Sugam Undu Belan Undu – சுகம் உண்டு பெலன்

Sugam Undu Belan Undu
சுகம் உண்டு பெலன் உண்டு ஜீவன் உண்டு உம் பாதத்தில்
நேசிக்கிறேன் உம்மை தானே என் தெய்வமே என் இயேசுவே

1. நேசம் உண்டு பாசம் உண்டு இரக்கம் உண்டு உம் பாதத்தில்
நேசிக்கிறேன் உம்மை தானே என் தெய்வமே என் இயேசுவே

2. அடைக்கலமே அதிசயமே அண்டி வந்தேன் உம் பாதமே
நேசிக்கிறேன் உம்மை தானே என் தெய்வமே என் இயேசுவே

3. துக்கம் நீங்கும் துயரம் நீங்கும் துன்பம் நீங்கும் உம் பாதத்தில்
நேசிக்கிறேன் உம்மை தானே என் தெய்வமே என் இயேசுவே

4. வியாதி நீங்கும் வறுமை நீங்கும் பாரம் நீங்கும் உம் பாதத்தில்
உயர்த்துகிறேன் உம்மைதானே என் தெய்வமே என் இயேசுவே

5. சுகப்படுத்தும் பெலப்படுத்தும் திட படுத்தும் இன் நேரத்தில்
உயர்த்துகிறேன் உம்மைதானே என் தெய்வமே என் இயேசுவே

சுகம் பெற்றோம் பெலன் பெற்றோம் ஜீவன் பெற்றோம் உம் பாதத்தில்
நன்றி ஐயா…………..
நேசிக்கிறேன் உம்மை தானே என் தெய்வமே என் இயேசுவே

Sathanuku Saval Vidum – சாத்தானுக்கு சவால் விடும்

Sathanuku Saval Vidum
சாத்தானுக்கு சவால் விடும் சந்ததி நாங்க
சேனைகளின் தேவனைப்போல் வீரர்கள் நாங்க
சவாலே சமாளி சாத்தனே நீ ஏமாளி

சவால் …………..சவாலே
நாங்க பவுல போல சவால் விடுவோம் சவாலே

1. சாவுக்கேதுவான ஏதும் ஒன்றும் செய்வதில்லையே
ஆவியானவர் எங்களோடு பயமும் இல்லையே
சவால் ……………சவாலே
நாங்க தாவிதைப் போல் சவால் விடுவோம் சவாலே

2. சாத்திராக் மேஷாக் ஆபேத்நேகோ ஆவி எனக்குள்ளே
ஏழு மடங்கு எரியும் சூளை எனக்கு பயம் இல்லை
சவால் …………….சவாலே
நாங்க தானியல் போல் சவால் விடுவோம் சவாலே

3. பாலியத்தின் இச்சைகளுக்கு விலகி ஓடியே
எங்கள் வாலிபத்தை இயேசுவுக்கு சொந்தமாக்குவோம்
சவால் ……………….சவாலே
நாங்க ஜோசேப்பைப் போல் சவால் விடுவோம் சவாலே

4. என் இயேசுவாலே நான் பெரும் சேனைக்குள் பாய்வேன்
என் இயேசுவாலே நான் பெரும் மதிலை தாண்டுவேன்
சவால் ……சவாலே
நாங்க இயேசுவைப் போல் சவால் விடுவோம் சவாலே.

En Idhayathin Kayathai – என் இதயத்தின் காயத்தை

En Idhayathin Kayathai
என் இதயத்தின் காயத்தை ஆற்றிடும் எந்தன் இயேசு ஐயா
கரை காணா படகைப்போல தடுமாறும் வாழ்க்கை ஐயா

யோவானைப் போல உம் மார்பிலே
இளைப்பார வேண்டுமையா
கரை காணா படகைப்போல தடுமாறும் வாழ்க்கை ஐயா

பெலவீனனான என்னையும் உம் பெலத்தால் இடை கட்டுவீர்
கரை காணா படகைப்போல தடுமாறும் வாழ்க்கை ஐயா …

காணாமல் போன ஆடு நான் அன்போடு தேடினீரே
கரை காணா படகைப்போல தடுமாறும் வாழ்க்கை ஐயா

Enakkagave Yavaiyum Seithu Mudither- எனக்காகவே யாவையும் செய்து

Enakkagave Yavaiyum Seithu Mudither
எனக்காகவே யாவையும்
செய்து முடித்தீர்
நன்றி நன்றி ஐயா
என் பாவங்கள் யாவையும்
சுமந்து கொண்டீரே
நன்றி நன்றி ஐயா

நினைப்பதற்கும் ஜெபிப்பதற்கும்
அதிகமாக தருபவரே

1. நான் எனது பிள்ளைக்கு
நல்ல ஈவைக் கொடுக்கிறேன்
பரம பிதா அதைப்பார்க்கிலும்
கொடுத்துடுவாரே (நினைப்பதற்கும்..)

2. அன்றாடம் வேண்டிய
ஆகாரம் தாருமே
தீமை என்னை அணுகாமல்
காக்கும் தேவனே (நினைப்பதற்கும்..)

3. ஆபிரகாமை அழைத்திரே
ஆசீர்வாதம் கொடுத்தீரே
அது போல என்னையும்
ஆசிர்வதியும் (நினைப்பதற்கும்..)

Enakaagave Yaavaiyum
Seithu Mudiththeer
Nandri Nandri Aiyaa
En Paavangal Yaavaiyum
Sumanthu Kondeere
Nandri Nandri Aiyaa

Ninaippatharkum Jebippatharkum
Athigamaaga Tharupavare

1. Naan Enathu Pillaikku
Nalla Eevaik Kodukkindren
Parama Pidhaa Adhaippaarkkilum
Koduththuduvaare (Ninaippatharkum)

2. Andraadam Vendiya
Aakaaram Thaarume
Theemai Ennai Anukaamal
Kaakkum Devane (Ninaippatharkum)

3. Aabirakaamai Azhaiththire
Aasirvaatham Koduththeere
Athu Pola Ennaiyum
Aasirvathiyum (Ninaippatharkum)

En Janagal Oru Pothum – என் ஜனங்கள் ஒரு போதும்

En Janagal Oru Pothum
என் ஜனங்கள் ஒரு போதும் வெட்கப்பட்டு போவதில்லை ……
எப்பக்கம் உன்னை நெருக்கினாலும்
எதிரிகள் உன்னை துரத்தினாலும்
உன்னோடு கூட நான் இருப்பதனால்
நீ வெட்கப்பட்டு போவதில்லை

1. வியாதிகள் வேதனை தொடர்ந்தாலும்
பெலவீனத்தால் நீ சோர்ந்தாலும்
பரிகாரியாய் நான் இருப்பதினால்
நீ வெட்கப்பட்டு போவதில்லை

2. ஏமாற்றம் தோல்விகள் வந்தாலும்
குறைவுகளால் மனம் கலங்கினாலும்
உனக்காக யாவையும் செய்திடுவேன்
நீ வெட்கப்பட்டு போவதில்லை

Marum Iv Ulaginilae – மாறும் இவ் உலகினிலே

Marum Iv Ulaginilae
மாறும் இவ் உலகினிலே மாறாத உம் கிருபை
மாறிடும் மனிதன் மாறிடுவான்
மாறாத தேவன் இயேசுவன்றோ

1. பட்டது போதும் சுட்டதும் போதும்
கண்ணீரும் போதும் கவலையும் போதும்
உம் கிருபை எனக்கு போதும் போதும்
மன்னவா எனக்கு நீர் தான் வேணும்

2. காலங்கள் மாறும் கோலங்கள் மாறும் நியாயம்
ஒரு நாள் கை விட்டு ஓடும்
ஆழம் அகலம் நீளம் எல்லை காணா அன்பு
ஆண்டவரின் பாதம் அதுவே எனக்கு போதும்

Marum Iv Ulaginilae Maradhu Um Kirubai
Maaridum Manidhan Maariduvaan
Maaradha Devan Yesuvandro

1. Pattadhu Podhum Suttadhum Podum
Kanneerum Podum Kavalayum Podhum
Um Kirubai Eakku Podhum Podhum
Mannava Enakku Neerthan Venum

2. Kaalangal Maarum Kolangal Maarum
Gnalam Orunal Kaivittu Odum
Aazham Agalam Neelam Ellai Kaana Anbu
Aandavarin Paadham Adhuvae Enakku Podhum -2