Parisutharai Parkanum – பரிசுத்தரை பார்க்கணும்

Parisutharai Parkanum
பரிசுத்தரை பார்க்கணும்
நான் உம்மை பார்க்கணும்
உம்மோடு பேசணும்
உம் பாதம் அமர்ந்து
உம்மை போல் மாறணும்

1. பலப்பல பாவங்கள் எனை சூழும் போது
எனை பாதுகாத்து நடத்துமையா
உம்மை விட்டு விலகி போக கொஞ்சம் கூட மனசு இல்ல
மார்பில் என்னை மூடும்மையா

2. குற்றமற்ற வாழ்கையாய் இவ்வுலகில் சாட்சியாய்
என்னை மாற்றும் எந்தன் சுத்த தெய்வமே
என் வாழ்வின் மூலமாய்
உங்க நாமம் கனமடைய
என்னை பயன்படுத்தும் திவ்ய நாதனே -2

Sunabu Adicha Kalarai – சுண்ணாம்பு அடிச்ச கல்லறை

Sunabu Adicha Kalarai
சுண்ணாம்பு அடிச்ச கல்லறை
ஏன் கேட்குற சில்லறை
பணத்துக்காக ஏங்குற
அதுக்குத்தான் பல்ல காட்டுற
Money is your teaching
Money is your preaching
Stop this Preaching
Where is the Reaching

பணம் பேர சொன்னாலே பொணம் கூட எந்திச்சிகுஈயா
உலகில் எல்லா பாவத்துக்கு பணம் தானே ரூட்டு ஐயா
இந்த பாழா பணத்தினாலே நல்ல குணம் போச்சிய்யா-2

பொருள நம்பி போன அந்த லோத்து கதி பாருமைய்யா
சுத்தத்தை நம்பி வந்த யோசேப்போல மாறும்மைய்யா
பரிசுத்தம் தானே உன்ன பரலோகம் சேர்க்குமைய்யா

Ulagile Uravile Engum – உலகிலே உறவிலே எங்குமே

Ulagile Uravile Engum
உலகிலே உறவிலே எங்குமே நான் பாக்கல
உம்மை போல அன்பு எங்குமே கிடைக்கல
தாயை போல அல்ல அதை காட்டிலும் மேல
தந்தை போல அதை காட்டிலும் மேல

1. காலம் காலமாய் மனிதன் மாறுறான்
எந்த காலமானாலும் நீங்க மாறல-2
முகத்தை பாத்துதான் மனிதன் எடை போடுறான் என்னை
முகத்தை பாத்துதான் உலகம் எடை போடுது
உள்ளத்தை பாத்து என்னை நேசித்தீரய்யா -2

2. செல்வ ஞானமோ என்னில் இல்லையே
பதவி பட்டமோ எதுவும் இல்லையே -2
ஏழைகளை ஒதுக்கினதோ இந்த உலகம் -2
ஏழைகளை அழைத்ததோ இயேசு தெய்வம்-2

Maname Maname Nee – மனமே மனமே நீ

Maname Maname Nee
மனமே மனமே நீ ஏன் கலங்குகிறாய்
உன்னை அழைத்தவர் உண்மையுள்ளவர்
நீ ஏன் பதறுகிறாய்

மரணத்தை ஜெயித்தவர் உயிரோடு எழுந்தவர்
நீர் வல்லமையுள்ளவரே
உனக்குள்ளே இருப்பவர் என்றும் பெரியவர்
நீர் நல்லவர் நல்லவரே

1. யகோவா எல்ஷடாய் சர்வ வல்லவரே
யகோவா எல்ரோயி என்னை காண்பவரே -2
யகோவா நிசியே வெற்றி தரும் தெய்வமே
நீர் என்றும் உயர்ந்தவரே
யகோவா ஷம்மா சமாதான தெய்வமே
நீர் என்றும் பெரியவரே-2

2. என்னுயிர் நேசமே லீலி புஷ்பமே
உந்தன் பாசமே எனக்கு போதுமே-2
அழகில் சிறந்தவர் மென்மையானவர்
என்னை ஆளுகை செய்பவரே
என் ஆத்தும நேசரே எந்தன் இரட்சகரே
நீர் பரிசுத்தர் பரிசுத்தரே -2

Anbu Illa Ulaginilae – அன்பு இல்லா உலகினிலே

Anbu Illa Ulaginilae
அன்பு இல்லா உலகினிலே
அன்பை காட்ட வந்தீரே
உண்மை இல்லா உலகினிலே
உண்மை சொல்ல வந்தீரே
என் மேல் அன்பு கூர்ந்ததால்
உம் உயிரை தந்தீரே -2
ஆராதனை உமக்கு ஆராதனை -2

மழையை பார்த்தேன்
மேகத்தை பார்த்தேன்
உம் மகிமையை பார்க்க வேண்டுமே
வல்லமை பார்த்தேன்
உம் கரத்தை பார்த்தேன்
உம் சத்தத்தை கேட்க வேண்டுமே -2
ஆராதனை உமக்கு ஆராதனை -2

வெறுமையாய் வந்தேன்
வெறுமையாய் போவேன்
என்னோடு எதுவும் வருவதில்லையே
உம்மோடு இருக்கணும்
உமக்காய் வாழணும்
என் உள்ளமெல்லாம் துடிக்குதைய்யா-2
ஆராதனை உமக்கு ஆராதனை -2

O Mister Kollaikaraa – ஓ மிஸ்டர் கொள்ளைக்காரா

O Mister Kollaikaran
ஓ மிஸ்டர் கொள்ளைக்காரா
ஓ மிஸ்டர் கொள்ளைக்காரா
ஓ மிஸ்டர் சண்டைக்காரா
ஓ மிஸ்டர் பொண்ணு பைத்தியம்
ஓ மிஸ்டர் பண பைத்தியம்
இயேசப்பா வர போறாரு
நியாயந்தீர்க்க வர போறாரு
இன்றைக்கே மனம் திரும்பு
இயேசுவை நீ விரும்பு

ஒளி ஒரு பக்கம் இழுக்கிறது
இருள் ஒரு பக்கம் தடுக்கிறது
நாளை நாளை என்று சொல்லாதே
நாளை என்ன ஆகும் தெரியாதே

வீட்டில் ஒரு வேஷம் தான்
வெளிய ஒரு வேஷம் தான்
இனி வேஷம் போட முடியாதே
மாட்டிகிட்டு நீ முழிக்காதே

Devakumara Ketkiratha – தேவகுமாரா கேட்கிறதா

Devakumara Ketkiratha
தேவகுமாரா கேட்கிறதா என் தியான கீதம் கேட்கிறதா
இமைகள் திறந்து உந்தன் கண்கள் என்னை மட்டும் பார்க்கிறதா

1. உம்மைக் காண விழி கொடுத்தாய்
உம்மைப் பாட மொழி கொடுத்தாய்
பயணம் போக வழி கொடுத்தாய்
பாதை எங்கும் ஒளி கொடுத்தாய்
உம்மை நினைத்தே உருகி விட்டேன்
என்னை உமக்கே கொடுத்து விட்டேன்
உமக்கே என்னை கொடுத்து விட்டேன்

2. கண்ணீர் வெள்ளாம் பெருகினது கர்த்தர் பாதம் தொடுகிறது
என்னைப்போல ஆலயத்தில் மெழுகுவர்த்தி அழுகிறது உம்மை நினைத்தே உருகி விட்டேன்
என்னை உமக்கே கொடுத்து விட்டேன்
உமக்கே என்னை கொடுத்து விட்டேன்

Urugatho Nenjam – உருகாதோ நெஞ்சம்

Urugatho Nenjam
உருகாதோ நெஞ்சம் அவர் தானே தஞ்சம்
உனக்காகாக பலியாக வந்தார்
அதட்காக கண்கள் வடியாதோ கண்ணீர்
கல்வாரி காட்சியை கண்டு

1. கனவெல்லாம் துஷ்டம் தீராத கஷ்டம்
கதறிடும் மனிதனைக் கண்டு
கனிவோடு நோக்கி கரம் தொட்டு தூக்கி
கனிவுடன் சுகம் தந்ததாலே
உந்தன் கரங்களில் ஆணியோ அரசே
அதுதான் சிலுவையின் பரிசே

2. நடமாட முடியா தடுமாறி கிடந்த
முடவனின் குரல் கேட்டு நின்றே
இடம் தேடி வந்து இதயத்தில் நொந்து
நடமாட செய்ததாலே
உந்தன் கால்களில் ஆணியோ அரசே
அதுதான் சிலுவையின் பரிசே

3. இதயத்தில் பாவம் குடி கொண்டதாலே
இகமதில் அழிக்கின்ற ஆன்மா
பாவத்தில் நின்று ஜீவனை மீட்க
ரட்சித்து வழி தந்ததாலே
உந்தன் இதயத்தில் ஈட்டியோ அரசே
அதுதான் சிலுவையின் பரிசே

Yesappa Ummai Thedi – இயேசப்பா உம்மை தேடி

Yesappa Ummai Thedi
இயேசப்பா உம்மை தேடி வந்தேன்
எல்லாமே விட்டு விட்டு வந்தேன்
எனக்கெல்லாமே நீர் தானே
என் வாழ்வெல்லாம் நீர் தானே
என் சொந்தம் பந்தம் யாவும் நீர் தானே

1. சொந்தம் என்று சொன்ன உடனே
உம்மை தானே நினைக்கின்றேன்
உம்மை அறிந்த நாளில் இருந்து
உம்மையே அண்டி கிடக்கின்றேன்
அன்பு என்றாலே உமதன்பு ஒன்று தானே
என்றும் மாறாத அன்பு ஐயா உயிரே உயிரே
இன்று நீர் இன்றி நான் இல்லையே
உம்மை அன்றி யாரை நம்பி நானும் தேடி போவேன்

2. என் மனதின் வேதனை எல்லாம்
புரிந்து கொள்வார் யாரும் இல்லை
இதயம் நொருங்கி கலங்கும் நேரம்
அன்பு காட்டவும் யாரும் இல்லை
அன்பே நீர் மட்டும் என் வாழ்வில் இல்லை என்றால்
என்றோ மண்ணாகி போயிருப்பேன்
இயேசுவே இயேசுவே என் மேல் கரிசனை உள்ளவரே
என்னை அறிந்து என் மனம் புரிந்த
ஒரு ஜீவன் நீரே ஐயா

Siluvaiyil Araiyunda – சிலுவையில் அறையுண்ட

Siluvaiyil Araiyunda
சிலுவையில் அறையுண்ட இயேசையா
உம் முகம் பார்க்கின்றேன்
கண்ணீர் சிந்தி உம் பாதமே என் முகம் பதிக்கின்றேன்
பரிசுத்தரே இறை மகனே
ஸ்தோத்திரம் ஸ்தோத்திரமே..

1. உம்மையே வெறுமை ஆக்கினீரே அடிமையின் கோலம் எடுத்தீரே
உமது உயிரை தந்தீரே அடிமை என்னை மீட்டீரே
பரிசுத்தரே இறை மகனே ஸ்தோத்திரம் ஸ்தோத்திரமே..

2. செந்நீர் வியர்வை வியர்ததவரே கண்ணீர் சிந்தி அழுதீரே
கொடிய வேதனை அடைந்தீரே பாவி என்னை நினைத்தீரே
பரிசுத்தரே இறை மகனே ஸ்தோத்திரம் ஸ்தோத்திரமே.