O Mister Kollaikaran
ஓ மிஸ்டர் கொள்ளைக்காரா
ஓ மிஸ்டர் கொள்ளைக்காரா
ஓ மிஸ்டர் சண்டைக்காரா
ஓ மிஸ்டர் பொண்ணு பைத்தியம்
ஓ மிஸ்டர் பண பைத்தியம்
இயேசப்பா வர போறாரு
நியாயந்தீர்க்க வர போறாரு
இன்றைக்கே மனம் திரும்பு
இயேசுவை நீ விரும்பு
ஒளி ஒரு பக்கம் இழுக்கிறது
இருள் ஒரு பக்கம் தடுக்கிறது
நாளை நாளை என்று சொல்லாதே
நாளை என்ன ஆகும் தெரியாதே
வீட்டில் ஒரு வேஷம் தான்
வெளிய ஒரு வேஷம் தான்
இனி வேஷம் போட முடியாதே
மாட்டிகிட்டு நீ முழிக்காதே
Devakumara Ketkiratha
தேவகுமாரா கேட்கிறதா என் தியான கீதம் கேட்கிறதா
இமைகள் திறந்து உந்தன் கண்கள் என்னை மட்டும் பார்க்கிறதா
1. உம்மைக் காண விழி கொடுத்தாய்
உம்மைப் பாட மொழி கொடுத்தாய்
பயணம் போக வழி கொடுத்தாய்
பாதை எங்கும் ஒளி கொடுத்தாய்
உம்மை நினைத்தே உருகி விட்டேன்
என்னை உமக்கே கொடுத்து விட்டேன்
உமக்கே என்னை கொடுத்து விட்டேன்
2. கண்ணீர் வெள்ளாம் பெருகினது கர்த்தர் பாதம் தொடுகிறது
என்னைப்போல ஆலயத்தில் மெழுகுவர்த்தி அழுகிறது உம்மை நினைத்தே உருகி விட்டேன்
என்னை உமக்கே கொடுத்து விட்டேன்
உமக்கே என்னை கொடுத்து விட்டேன்
Urugatho Nenjam
உருகாதோ நெஞ்சம் அவர் தானே தஞ்சம்
உனக்காகாக பலியாக வந்தார்
அதட்காக கண்கள் வடியாதோ கண்ணீர்
கல்வாரி காட்சியை கண்டு
1. கனவெல்லாம் துஷ்டம் தீராத கஷ்டம்
கதறிடும் மனிதனைக் கண்டு
கனிவோடு நோக்கி கரம் தொட்டு தூக்கி
கனிவுடன் சுகம் தந்ததாலே
உந்தன் கரங்களில் ஆணியோ அரசே
அதுதான் சிலுவையின் பரிசே
2. நடமாட முடியா தடுமாறி கிடந்த
முடவனின் குரல் கேட்டு நின்றே
இடம் தேடி வந்து இதயத்தில் நொந்து
நடமாட செய்ததாலே
உந்தன் கால்களில் ஆணியோ அரசே
அதுதான் சிலுவையின் பரிசே
3. இதயத்தில் பாவம் குடி கொண்டதாலே
இகமதில் அழிக்கின்ற ஆன்மா
பாவத்தில் நின்று ஜீவனை மீட்க
ரட்சித்து வழி தந்ததாலே
உந்தன் இதயத்தில் ஈட்டியோ அரசே
அதுதான் சிலுவையின் பரிசே
Yesappa Ummai Thedi
இயேசப்பா உம்மை தேடி வந்தேன்
எல்லாமே விட்டு விட்டு வந்தேன்
எனக்கெல்லாமே நீர் தானே
என் வாழ்வெல்லாம் நீர் தானே
என் சொந்தம் பந்தம் யாவும் நீர் தானே
1. சொந்தம் என்று சொன்ன உடனே
உம்மை தானே நினைக்கின்றேன்
உம்மை அறிந்த நாளில் இருந்து
உம்மையே அண்டி கிடக்கின்றேன்
அன்பு என்றாலே உமதன்பு ஒன்று தானே
என்றும் மாறாத அன்பு ஐயா உயிரே உயிரே
இன்று நீர் இன்றி நான் இல்லையே
உம்மை அன்றி யாரை நம்பி நானும் தேடி போவேன்
2. என் மனதின் வேதனை எல்லாம்
புரிந்து கொள்வார் யாரும் இல்லை
இதயம் நொருங்கி கலங்கும் நேரம்
அன்பு காட்டவும் யாரும் இல்லை
அன்பே நீர் மட்டும் என் வாழ்வில் இல்லை என்றால்
என்றோ மண்ணாகி போயிருப்பேன்
இயேசுவே இயேசுவே என் மேல் கரிசனை உள்ளவரே
என்னை அறிந்து என் மனம் புரிந்த
ஒரு ஜீவன் நீரே ஐயா
Siluvaiyil Araiyunda
சிலுவையில் அறையுண்ட இயேசையா
உம் முகம் பார்க்கின்றேன்
கண்ணீர் சிந்தி உம் பாதமே என் முகம் பதிக்கின்றேன்
பரிசுத்தரே இறை மகனே
ஸ்தோத்திரம் ஸ்தோத்திரமே..
1. உம்மையே வெறுமை ஆக்கினீரே அடிமையின் கோலம் எடுத்தீரே
உமது உயிரை தந்தீரே அடிமை என்னை மீட்டீரே
பரிசுத்தரே இறை மகனே ஸ்தோத்திரம் ஸ்தோத்திரமே..
2. செந்நீர் வியர்வை வியர்ததவரே கண்ணீர் சிந்தி அழுதீரே
கொடிய வேதனை அடைந்தீரே பாவி என்னை நினைத்தீரே
பரிசுத்தரே இறை மகனே ஸ்தோத்திரம் ஸ்தோத்திரமே.
Enna Vanthalum
என்ன வந்தாலும் நம்பிடுவேனே எது நடந்தாலும் பற்றிக்கொள்வேனே
யார் கை விட்டாலும் பின் செல்லுவேன் உம்மை பின் செல்லுவேன்
நீரே நீரே நீரே போதுமே
இயேசுவே நீரே நீரே போதுமே
1. துன்பத்தின் நடுவில் நடந்தாலும்
கண்ணீரின் மத்தியில் கடந்தாலும்
மரண இருளின் பள்ளத்தாக்கில் என்னோடு இருப்பவரே
நீரே நீரே நீரே போதுமே
இயேசுவே நீரே நீரே போதுமே இயேசுவே
2. வியாதியின் மத்தியில் மரித்தாலும்
பாடுகள் என்னை நெருக்கினாலும்
திகையாதே கலங்காதே என்று சொன்னீரே
என்னையும் நடத்திடுமே
நீரே நீரே நீரே போதுமே
இயேசுவே நீரே நீரே போதுமே இயேசுவே
3. சோதனை என்னை சூழ்ந்தாலும் வேதனை என்னை நெருக்கினாலும்
சோர்ந்திடாதே என்று தைரியப்படுத்தி
தூக்கி சுமப்பவரே
நீரே நீரே நீரே போதுமே
இயேசுவே நீரே நீரே போதுமே இயேசுவே
4. நேசித்தோர் என்னை விட்டு விலகினாலும்
நம்பினோர் என்னை கை விட்டாலும்
முடிவு பரியந்தம் என்னோடு இருப்பேன் என்று சொன்னவரே
நீரே நீரே நீரே போதுமே
இயேசுவே நீரே நீரே போதுமே இயேசுவே
Naan Nirpathum Nirmulam
நான் நிற்பதும் நிர்முலமாகாததும் தேவ கிருபையே
நான் உயிருடன் வாழ்வதும் சுகமுடன் இருப்பதும்
கிருபையே தேவகிருபையே தேவகிருபையே தேவகிருபையே -2
உம்மைப் போல தெய்வம் இல்லை
நீர் இல்லை என்றால் நானும் இல்லை – 2
கண்ணில் கண்ணால் வாழும் முல்லை (2)
உம் அன்பிற்கு அளவே இல்லை (2)
1. முள்ளில் பாதையில் நடந்தேன் நான்
எந்தன் வாழ்க்கையை இழந்தேன் நான் – 2
நீர் இல்லா மீனைப்போல் துடித்தேன் நான்
தாய் இல்லா பிள்ளைபோல் அழுதேன் நான் – 2
மார்போடு அணைத்தீரே
ஒரு தாயைப் போல் காத்தீரே – 2 (…உம்மை)
2. உந்தன் வார்த்தையை வெறுத்தேன் நான்
உந்தன் பாதையை மறந்தேன் நான் – 2
நீரே வாழ்வு என்று உணர்ந்தேன் நான்
உம்மில் ஜீவனை தந்தேன் நான் – 2
வழிகாட்டும் தெய்வமே
என்னைக் காக்கும் கர்த்தரே – 2 (…உம்மை)
Unga Prasannam Illamal
உங்க பிரசன்னம் இல்லாமல்
என்னால் ஒன்றும் செய்ய முடியாதையா
உங்க பிரசன்னம் இல்லாமல்
என்னால் பாட முடியாததையா
மோசை கண்ட பிரசன்னம்
நானும் காண வேண்டும்
கன்மலையின் வெடிப்பிலே
என்னை நிற்க்கச் செய்யும்
உம் பிரசன்னம் என்னை பாட செய்யும்
உம் பிரசன்னம் என்னை துதிக்க செய்யும்
உங்க பிரசன்னம் பிரசன்னம் பிரசன்னம்
எந்தன் சமூகமே உன் முன்னே செல்லும் என்றீர்
நான் போகும் இடமெல்லாம் என்னோட இருக்கின்றீர்
உம் கரத்தால் என்னை மறைத்துக்கொள்வீர்
உம் மகிமையால் என்னை மூடிக் கொண்டீர்
உம் பிரசன்னம் பிரசன்னம் பிரசன்னம்
உங்க பிரசன்னம் பிரசன்னம் பிரசன்னம்
உந்தன் பிரசன்னத்தால் காற்றும் கடலும் அடங்கும்
உந்தன் பிரசன்னத்தால் பேய்கள் நடு நடுங்கும்
உம் பிரசன்னத்திலே சுகம் உண்டு
உம் பிரசன்னத்திலே பெலன் உண்டு
உம் பிரசன்னம் பிரசன்னம் பிரசன்னம்
உங்க பிரசன்னம் பிரசன்னம் பிரசன்னம்