Aarivar Aaraaro – ஆர் இவர் ஆராரோ

Aarivar Aaraaro
ஆர் இவர் ஆராரோ – இந்த அவனியோர் மாதிடமே
ஆனடை குடிலிடை மோனமாய் உதித்த இவ்வற்புத பாலகனார் ?

1. பாருருவாகுமுன்னே – இருந்த
பரப்பொருள் தானிவரோ?
சீருடன் புவி வான் அவை பொருள் யாவையுஞ்
சிருஷ்டித்த மாவலரோ? – ஆர்

2. மேசியா இவர்தானோ? – நம்மை
மேய்த்திடும் நரர்கோனோ?
ஆசையாய் மனிதருக்காய் மரித்திடும் அதி
அன்புள்ள மனசானோ? – ஆர்

3. தித்திக்குந் தீங்கனியோ? – நமது
தேவனின் கண்மணியோ?
மெத்தவே உலகிருள் நீக்கிடும் அதிசய
மேவிய விண் ஒளியோ? – ஆர்

4. பட்டத்துத் துரைமகனோ? – நம்மை
பண்புடன் ஆள்பவனோ?
கட்டளை மீறிடும் யாவர்க்கும் மன்னிப்புக்
காட்டிடுந் தாயகனோ? – ஆர்

5. ஜீவனின் அப்பமோதான்? – தாகம்
தீர்த்திடும் பானமோதான்?
ஆவலாய் ஏழைகள் அடைந்திடும் அடைக்கல
மானவர் இவர்தானோ? – ஆர்

Ah Ambara Umbara – ஆ அம்பர உம்பர

Ah Ambara Umbara
ஆ! அம்பர உம்பர மும் புகழுந்திரு
ஆதிபன் பிறந்தார்
ஆதிபன் பிறந்தார் – அமலாதிபன் பிறந்தார் – ஆ!

1. அன்பான பரனே! அருள் மேவுங் காரணனே! – நவ
அச்சய சச்சிதா – ரட்சகனாகிய
உச்சிதவரனே! – ஆ!

2. ஆதம் பவமற, நீதம் நிறைவேற – அன்று
அல்லிராவினில் வெல்லையடியினில்
புல்லணையிற் பிறந்தார் – ஆ!

3. ஞானியர் தேட வானவர் பாட – மிக
நன்னய உன்னத – பன்னரு மேசையா
இந்நிலம் பிறந்தார் – ஆ!

4. கோனவர் நாட, தானவர் கொண்டாட – என்று
கோத்திரர் தோத்திரஞ் – சாற்றிடவே யூத
கோத்திரன் பிறந்தார் – ஆ!

5. விண்ணுடு தோண, மன்னவர் பேண – ஏரோது
மைந்தனின் சிந்தையழுந்திக் கலங்கிட
விந்தையாய்ப் பிறந்தார் – ஆ!

Aathuma Kartharai Thuthikkirathe – ஆத்துமா கர்த்தரைத் துதிக்கின்றதே

Aathuma Kartharai Thuthikkirathe
ஆத்துமா கர்த்தரைத் துதிக்கின்றதே – என்றன்
ஆவியும் அவரில் களிக்கின்றதே – இதோ!

நேர்த்தியாய்ப் பாடுவேன் நிதங்கனிந்தே
எந்தன் பார்த்திபனுட பதந் தினம்பணிந்தே – இதோ!

1.அடிமையின் தாழ்மையைப் பார்த்தாரே – என்னை
அனைவரும் பாக்கிய மென்பாரே
முடிவில்லா மகிமை செய்தாரே – பல
முடையவர் பரிசுத்தர் என்பாரே – இதோ! – ஆத்துமா

2.பயப்படும் பக்தருக் கிரங்குகிறார் – நரர்
பார்த்திட பெருஞ்செயல் புரிகின்றார்
உயர்த்திடு நரர்களைச் சிதறடிப்பார் – தன்னை
உகந்தவர் தாழ்த்திடில் உயர்த்துகின்றார் – இதோ! – ஆத்துமா

3.முற்பிதாக்களுக்கவர் சொன்னதுபோல் – அந்த
முனியாபி ராமுட ஜனமதன்பால்
நட்புடன் நினை வொடு நல்லிஸரேல் – அவன்
நலம்பெற ஆதரித் தார்மறவேல் – இதோ! – ஆத்துமா

Manthai Aayar – மந்தை ஆயர் மனம்

Manthai Aayar
1. மந்தை ஆயர் மனம் மகிழவே
மழலை உருவாய் வந்தவரே
மண்ணின் மாந்தரை மீட்பதற்காக
மாசற்ற ஜோதியாய் வந்தவரே
மரணத்தை ஜெயித்த மன்னவே
மனுவின் ஜோதியாய் வந்தீரே

வா வா என் நேசர்
வா இந்நேரம் வந்தாசீர் தந்தருள் அன்பாய்
நீ அன்பாய் — (2)

2. வாக்குகட்கு பங்காளிகளாக்கி
நோக்கமாய் நம்மை ரட்சித்தாரே
ஏக்கங்கள் எல்லாம் அவர் நீக்கி
நாடும் நம்மை தம் சரீரமாக்கி
சஞ்சலம் தவிப்பையும் நீக்கிடவே
சமாதான பிரபுவாய் உதித்தவரே

Deva Kumaran Yesu – தேவக் குமாரன் இயேசு

Deva Kumaran Yesu
தேவக் குமாரன் இயேசு
புவியில் வந்தார் மானிடனாய்

1. அதிசயமாம் அவர் நாமம்
ஆலோசனைக் கர்த்தாராமே
புல்லனையாம் முன்னணையில்
பிறந்திருக்கும் இப்பாலகனை – தேவ

2. ஆதரவற்றோரின் தஞ்சம்
ஆயல்களின் நேயராமே
வல்லமையுள்ள கர்த்தராமே
சமாதானப் பிரபுவும் இவரே – தேவ

3. இராஜாதி ராஜன் இவரே
கர்த்தாதி கர்த்தனும் இவரே
சாரோனின் ரோஜா புஷ்பம் இவர்
வாரேன் என்றவரும் இவரே – தேவ

Anburuvai Vantha Engal – அன்புருவாய் வந்த எங்கள்

Anburuvai Vantha Engal
அன்புருவாய் வந்த எங்கள் ஏசுபாலனே
எங்கள் அன்பின் பாலனே
எங்கள் தெய்வ பாலனே

1. வானதூதர் மகிழ்ந்துபாட உதித்த பாலனே
வான சாஸ்திரிகளும் கண்டு துதித்த பாலனே
ஆவலாய் ஆட்டிடையர்களும் பாடி
பணிந்த பாலனே

2. ஈசாயின் அடிமரத்தில் துளிர்த்த பாலனே
ஈனப் பேயை வெல்ல வந்த ஜெயபாலனே
ஈன சிலுவையில் மரித்துயிர்த்த
மகிமைப் பாலனே

3. தாழ்மை காட்ட முன்னணையில் பிறந்த பாலனே
தாழ்ந்தோரின் அடைக்கலமாய் வந்த பாலனே
தாகம் தீர்க்கும் ஜீவ நதியாய் வந்த
இயேசு பாலனே

Kanneeral Nandri Solgiren – கண்ணீரால் நன்றி சொல்கிறேன்

Kanneeral Nandri Solgiren
Deva Kanakkillaa Nanmai Seidheerae

Nandri Nandri Ayya
Yesaiyya Pala Kodi Nanmai Seidheerae
Nandri Nandri Ayya
Yesaiyya Pala Kodi Nanmai Seidheerae

1. Thazhvil Ennai Ninaitheerae
Dhayavaai Ennai Uarthineerae
Undhan Anbai Enna Solluvaen
Thaayin Karuvil Therindhu Kondeer
Ullangkaiyil Varaindhu Vaitheer
Undhan Anbai Ennip Paaduvaen
Undhan Anbai Ennip Paaduvaen – Nandri

2. Pokkilum Varathilum Kaathukkondeer
Undhan Siragaal Moodi Maraiththeer
Undhan Anbai Enna Solluvaen
Kaalgal idaraamal Paadhugaatheer
Kanmalayin mel ennai Niruthineer
Undhan Anbai Ennip Paaduvaen
Undhan Anbai Ennip Paaduvaen – Nandri

3. Undhan Raththam Enakkai Sindhe
Siluvayil Enakku Jeevan Thandeer
Undhan Anbai Enna Solluvaen
Paavamellaam Pokkineerae Sabamellaam Neekkineerae
Undhan Anbai Ennip Paaduvaen
Undhan Anbai Ennip Paaduvaen – Nandri

கண்ணீரால் நன்றி சொல்கிறேன்

Ulagin Pava Barathal – உலகில் பாவப் பாரத்தால்

Ulagin Pava Barathal
உலகில் பாவப் பாரத்தால் சோரும் – இளைப்
பார்ந்த நரரே வந்து சேரும்

அலைசடி பட்டவரே வாரும் – எந்தன்
ஆறுதலால் அவற்றை தீரும் – பொல்லா

1. பாவி என்றெண்ணி திகைப்போரும் – எந்தன்
பாவம் தீராதென்றிப்போரும்
ஆவலாய் ஓடிவந்து சேரும் – நான்
ஆகாமியர்க்காக வந்ததோரும் – பொல்லா – உலகில்

2. இளமை என்றே எண்ணி நில்லாதே – சாவும்
இளமை என்று சொல்லிச் செல்லாதே;
வளமாய் வருவதைத் தள்ளாதே – கெட்ட
வழக்கமதையே கைகொள்ளாதே – பொல்லா – உலகில்

3. வாலிபப் பிராயமிதில் நாளும் – இன்ப
வாழ்வு சுகிக்கவென்று மாளும்;
சீலரே, இன்றென்னுரை கேளும், அவை
சேர்க்கும் நரகத்தில் எந்நாளும் – பொல்லா – உலகில்

4. காலம் கடந்த கிழவோரே – வீணாய்க்
காலம் கழித்தே உழல்வோரே,
காலமே தேட மறந்தோரே – உங்கள்
கவலையைத் தீர்ப்பேன் அறிவீரே – பொல்லா – உலகில்

Ulagor Unnai Pagaithalum – உலகோர் உன்னை

Ulagor Unnai Pagaithalum
1. உலகோர் உன்னைப் பகைத்தாலும்
உண்மையாய் அன்பு கூறுவாயா? (2)
உற்றார் உன்னை வெறுத்தாலும்
உந்தன் சிலுவை சுமப்பாயா? (2)

உனக்காக நான் மரித்தேனே
எனக்காக நீ என்ன செய்தாய் (2)

2. உலக மேன்மை அற்பம் என்றும்
உலக ஆஸ்தி குப்பை என்றும்
உள்ளத்தினின்று கூறுவாயா?
ஊழியம் செய்ய வருவாயா? (2) – உனக்காக

3. மேய்ப்பன் இல்லாத ஆடுகள் போல்
மேய்கிறார் பாவப்புல் வெளியில் (2)
மேய்ப்பன் இயேசுவை அறிந்த நீயும்
மேன்மையை நாடி ஓடுகின்றாயோ? (2) – உனக்காக

4. இயேசு என்றால் என்ன விலை
என்றே கேட்டிடும் எத்தனை பேர் (2)
பிள்ளைகள் அப்பம் கேட்கின்றனர்
ஜீவ அப்பம் கொடுப்பாயோ? (2) – உனக்காக

5. ஐந்து சகோதரர் அழிகின்றாரே
யாரையாவது அனுப்பிடுமே (2)
யாரை நான் அனுப்பிடுவேன்
யார் தான் போவார் எனக்காக (2) – உனக்காக

Ponnana Neram – பொன்னான நேரம்

Ponnana Neram
பொன்னான நேரம் வெண் பனி தூவும் நேரம்
தொழுவத்தில் வந்துதித்தார் இயேசு பாலன்

1. பாவத்தின் சஞ்சலம் பறந்தோடி போக
பேரின்ப இரட்சிப்பை புவி எங்கும் சேர்க்க
பிறந்து வந்தார்
உலகை ஜெயிக்க வந்தார்
அல்லேலுயா பாடுவோம்
மீட்பரை வாழ்த்துவோம்

2. உண்மையின் ஊழியம் செய்திடவே
வானவர் இயேசு பூவில் வந்தார்
வல்லவர் வருகிறார்
நம் மீட்பர் வருகிறார்

3. வானமும் பூமியும் அண்டமும் படைத்து
வேதத்தின் ஓளியை பரப்பினாரே
இருளை அகற்றுவார்
நம்மை இரட்சித்து நடத்துவார்