Thanneerai Kadakumpoothu – தண்ணீரை கடக்கும்போதும்

Thanneerai Kadakumpoothu
தண்ணீரை கடக்கும்போதும்
என்னோடு இருப்பவரே
வெள்ளங்கள் புரளாமல்
என்னை என்றும் காப்பவரே – 2

அக்கினியில் நடந்தாலும்
சோதனைகள் சூழ்ந்தாலும்
தப்புவித்து காப்பவரே – என்னை
அன்பால் அணைப்பவரே – அக்கினியில்.. தண்ணீரை

எரிகோவின் மதில்களெல்லாம்
உடைத்தவரே – எங்கள்
வாழ்விலும் எதிர்த்து நிற்கும்
தடைகளை உடைப்பீரே – 2
கானானை சொந்தமாய்
தேவ ஜனம் பெற்றனரே
பரலோக கானானை
எங்களுக்கும் தருவீரே –(கானானை) தண்ணீரை

பார்வோனின் சேனையெல்லாம்
தொடர்ந்த போதும் – பெரும்
செங்கடலை பிளந்து
உம் ஜனத்தை நடத்தினீரே – 2
பகலிலே மேகஸ்தம்பம்
இரவிலே அக்கினிஸ்தம்பம்
அற்புதமாய் நடத்தினதே
எங்களையும் நடத்துவீரே – (பகலிலே) தண்ணீரை

Thai Maranthallum – தாய் மறந்தாலும் அவர் உன்னை

Thai Maranthallum
தாய் மறந்தாலும் அவர் உன்னை
ஒரு போதும் மறப்பதில்லை
உள்ளங்கையில் உன்னை வரைந்தவர்
ஒரு போதும் விடுவதில்லை.- 2 — ஆஹ் ஆஹ் அல்லேலூயா

பெற்றோர் உன்னை மறந்தாலும்
உற்றார் உன்னை கைவிட்டாலும் – 2
உள்ளங் கையில் உன்னை வரைந்தவர்
உன்னை ஒரு போதும் மறப்பதில்லை – 2 – தாய்

நம்பினோர் கைவிட்டாலும்
நண்பர்கள் விலகிட்டாலும் – 2
நல்ல நண்பர் நம் ஏசுவே
உன்னை ஒரு போதும் கை விடாரே – 2
உண்மை நண்பர் நம் ஏசுவே
உன்னை ஒரு போதும் கை விடாரே –(தாய்)
அன்பானவர் மறைந்தரோ
ஆதரவை இழந்தாயோ – 2

ஆறுதலின் தேவன் யேசுவே
உன்னை தேற்றி ஆற்றி நடத்திடுவார் – 2 – தாய்

Ullagam Unnai Verutha Nilayillum – உலகம் உன்னை வெறுத்த நிலையிலும்

Ullagam Unnai Verutha Nilayillum
உலகம் உன்னை வெறுத்த நிலையிலும்
உற்றாரும் உன்னை கைவிட்ட வேளையிலும்
நண்பர்கல் உன்னை பிரிந்த நிலையிலும்
நம்பின உன் பிள்ளையும் மறந்தாலும் – 2
உண்மையாய் நேசிக்கும் அன்பொன்றுண்டு!
அழியாத, நிலையான அன்பொன்றுண்டு – ஆமென் – உண்மையாய்
அந்த அன்பு – இயேசு அன்பு!
உண்மை அன்பு – அது உயர்ந்த அன்பு! – 2

பாவத்தை போக்கிட்ட அன்பு
நம் சாபத்தை முறித்திட்ட அன்பு
நம்மையே மீட்டிட்ட அன்பு
மரணத்தை ஜெயித்திட்ட அன்பு (பாவத்தை)
Chorus – அந்த அன்பு . . .
(உலகம்) அழியாத — அந்த அன்பு

உம்மையே நேசிப்பேன் ஏசுவே
முழு மனதோடு ஏசுவே
என் முழு பெலத்தோடு ஏசுவே

என் முழு ஆத்மாவோடு(ஆன்மாவோடு) ஏசுவே – உம்மையே – நேசிப்பேன் – – – –
உந்தன் அன்பு அது மாறாதது
அழியாதது .. அது நிலையானது ஆமென் ..

Enthan Aathumave – எந்தன் ஆத்துமாவே

Enthan Aathumave
எந்தன் ஆத்துமாவே
ஏன் இன்னும் கலங்குகின்றாய்
உந்தன் நேசர் இயேசு
உன்னோடு இருக்கின்றாரே – (2)

கண்ணீர் கவலை நேரம்
நீ கலங்கி தவிக்கின்றாயோ – 2
கண்ணீரை துடைக்கும் இயேசு
உன்னோடு இருக்கின்றாரே – 2 – எந்தன்

முடிந்து போனதென்று
நீ முடிவு செய்திட்டாயோ – 2
விரைவில் நல்ல முடிவு
நிச்சயமாய் இயேசு தருவார் – 2 – எந்தன்

பாவ பாரம் சுமந்து நீ
தள்ளாடி தவிக்கின்றாயோ – 2
உனக்காக சிலுவை சுமந்த (நமக்காக)
இயேசு உன்னை(நம்மை) சுமப்பார் – 2 – எந்தன்

நம்மோடு இறக்கின்றாரே

Kirubai Kirubai – கிருபை கிருபை

Kirubai Kirubai

கிருபை கிருபை
என்றுமுள்ள தேவ கிருபை – 2

கஷ்டத்தின் நேரத்திலும் கிருபை
நஷ்டத்தின் நேரத்திலும் கிருபை
கண்ணீரை துடைக்கும் உம் கிருபை
கரம் பிடித்து நடத்தும் கிருபை – கண்ணீரை – கிருபை (2)

பெலவீன நேரத்திலும் உம கிருபை
(என்னை) பெலப்படுத்தி நடத்தும் உம் கிருபை
சோர்ந்து போன நேரத்திலும் கிருபை
என்னை(நம்மை) சூழ்ந்து கொள்ளும் தேவ கிருபை சோர்ந்து — கிருபை

தாழ்மை உள்ளவருக்கு கிருபை
தாராளமாய் கிடைக்குமே கிருபை – தாழ்மை
தெய்வ பயம் உள்ளவர்க்கு கிருபை
அவர் தலைமுறைக்கெல்லாம் கிருபை – தெய்வ –– கிருபை

Aarathanai Thuthi Arathanai – ஆராதனை துதி ஆராதனை

Aarathanai Thuthi Arathanai
ஆராதனை துதி ஆராதனை
என்றென்றும் யேசுவுக்கே -2
எல்லா துதிக்கும் கனத்திற்கும்
நீர் பாத்திரரே
எல்லா மகிமைக்கும் மாட்சிமைக்கும்
பாத்திரரே – 2 – ஆராதனை

1. நீரே கர்த்தர் – நீரே தேவன்
ராஜாதி ராஜா நீரே – 2 – எல்லா துதிக்கும்

2. வல்லவரே – நீர் நல்லவரே
மகத்துவமானவரே – 2 – எல்லா துதிக்கும்

3. நீரே வழி .. நீரே சத்தியம்
நீரே என் ஜீவனுமே – 2 – எல்லா
என்றென்றும் யேசுவுக்கே (3)

Uyirulla Nallellam Ummai Paduvaen – உயிருள்ள நாளெல்லாம் உம்மைப் பாடுவேன்

Uyirulla Nallellam Ummai Paduvaen
உயிருள்ள நாளெல்லாம் உம்மைப் பாடுவேன்
என் ஆசை நாயகா உம்மை நேசிப்பேன்
என்ன வந்தாலும் உம்மை துதிப்பேன்
எவ்வேளையும் நான் உம்மில் மகிழ்வேன்

1. பூமியிலே உயிர் வாழும் வரை
ஆசையுடன் உம்மை ஆராதிப்பேன்
விண்ணிலும் மண்ணிலும் என் செல்வம் நீரே
இழப்பேனோ உம்மை மறப்பேனோ

2. நினைவெல்லாம் உமதாகணும்
என் பேச்செல்லாம் உம் புகழாகணும்
உம்மை அல்லாமல் நிம்மதி ஏது
உம்மையன்றி வேரு மகிழ்வேது

Uyirulla Naalellaam Ummai Paaduvaen
En Aasai Naayakaa Ummai Naesippaen
Enna Vanthaalum Ummai Thuthippaen
Evvaelaiyum Naan Ummil Makilvaen

1. Poomiyilae Uyir Vaalum Varai
Aasaiyudan Ummai Aaraathippaen
Vinnnnilum Mannnnilum En Selvam Neerae
Ilappaeno Ummai Marappaeno

2. Ninaivellaam Umathaakanum
En Paechchellaam Um Pukalaakanum
Ummai Allaamal Nimmathi Aethu
Ummaiyanti Vaeru Makilvaethu

Kartharai Thuthipathum – கர்த்தரை துதிப்பதும் கீர்த்தனம்

Kartharai Thuthipathum
கர்த்தரை துதிப்பதும் கீர்த்தனம்
பண்ணுவதும் பலியிலும் மேலானது
அவரின் நாமத்தை பாடிக் கொண்டாடுங்கள்
அதுவே நலமானது

1. நம்முடைய ஆண்டவர் பெரியவராவார்
மகா பெலமுள்ளவர்
அவரின் அறிவு அளவில்லாதது
அவரையே புகழ்ந்திடுவோம்

2. தண்ணீரைக் கடந்தும் தீயினில் நடந்தும்
சேதமின்றிக் காத்தவர்
சேனையின் தேவன் நம்முடனிருந்து
ஜெயமுடன் நடத்திடுவார்

3. துதித்தலே இன்னமும் ஏற்றதுமாகும்
துதித்தே மகிழ்ந்திருப்போம்
எருசலேமே உன் கர்த்தரை ஸ்தோத்திரி
சீயோனே உன் தேவனைத் துதி

Irangume En Yesuve – இரங்குமே என் இயேசுவே

Irangume En Yesuve
இரங்குமே என் இயேசுவே
இரக்கத்தின் ஐஸ்வரியமே
கூவி கதறியே ராவும் பகலுமே
கெஞ்சும் ஜெபம் கேளுமே

நித்தம் எமக்காய் பரிந்து பேசும்
நள்ளிரவின் நண்பனே – அன்பின்
பிதா முன்னில் இன்று ஜெபித்திடும்
அன்பர் ஜெபங்கேளுமே

அன்று நினிவே அழிவைக் கண்டே
அன்பே இரங்கினீரே – யோனா
உரைத்த தம் ஆலோசனை தந்து
ஏழை ஜெபங்கேளுமே

எத்தனை துன்பம் சகித்து மீட்டீர்
எல்லாமே வீணாகுமோ
அத்தி மரத்திற்கு அன்று இரங்கினீர்
அந்த ஜெபங்கேளுமே

சோதனையினின்று இரட்சித்தீரே
சோதோமின் பக்தனையே
ஆபிரகாம் அன்று வேண்டி ஜெபித்ததோர்
ஆதி ஜெபங்கேளுமே

தாரும் உயிர் மீட்சி சபைதனில்
சோரும் உள்ளம் மீளவே
கர்த்தாவே உம் ஜனம் செத்த நிலை மாற
பக்தர் ஜெபங்கேளுமே

Aarathanai Thuthi Aarathanai – ஆராதனை துதி ஆராதனை

Aarathanai Thuthi Aarathanai
ஆராதனை துதி ஆராதனை
என்றென்றும் யேசுவுக்கே -2
எல்லா துதிக்கும் கனத்திற்கும் நீர் பாத்திரரே
எல்லா மகிமைக்கும் மாட்சிமைக்கும்
பாத்திரரே – (2) – ஆராதனை

1. நீரே கர்த்தர் – நீரே தேவன்
ராஜாதி ராஜா நீரே -2 – எல்லா துதிக்கும்

2. வல்லவரே – நீர் நல்லவரே –
மகத்துவமானவரே -2 – எல்லா

3. நீரே வழி .. நீரே சத்தியம்
நீரே என் ஜீவனுமே -2 – எல்லா
என்றென்றும் யேசுவுக்கே (3)