Nanmaigal Seithu
நன்மைகள் செய்து
நலிந்துபோன
நண்பனே!… (மகனே!.. || மகளே!..)
நன்மையின் நாயகர் இயேசு உன்னை மிக நேசிக்கிறார் – (2)
நீ சோர்ந்துவிடாதே – மனம்
தளர்ந்து போகாதே -2
1. நேசித்தவர் உனக்கெதிராய் பேசினரோ….
நன்மைபெற்றவர் உந்தன் முதுகில் குத்தினரோ..(2)
பெற்ற பிள்ளைகள் உன்னை வெறுத்துத் தள்ளினரோ (2)-நீ
வளர்த்துவிட்டவர் உந்தன் மார்பில் பாய்ந்தனரோ- நீ
உனைக்காட்டிலும் மிக அதிகப்பாடுகள் -2
அனுபவித்தவர் இயேசு என்பதை மறவாதே.. – நிந்தைகளை
அனுபவித்தவர் இயேசு என்பதை மறவாதே… – அவமானம்
அனுபவித்தவர் இயேசு என்பதை மறவாதே… – துரோகங்கள்
அனுபவித்தவர் இயேசு என்பதை மறவாதே…
2. ஊழியத்தின் பாதையிலே வேதனையோ…
சுமந்திட முடியாத பாரங்களோ… (2)
கண்ணீரும் இரத்தமாகிப் போனதுவோ…. – உன்
ஏன் மறந்தீர் என்றுக் கதறும் சூழ்நிலையோ – தேவா
உனைக்காட்டிலும் மிக அதிகப்பாடுகள் – 2
அனுபவித்தவர் இயேசு என்பதை மறவாதே… – வேதனை
அனுபவித்தவர் இயேசு என்பதை மறவாதே… – சோதனை
அனுபவித்தவர் இயேசு என்பதை மறவாதே… – கண்ணீரை
அனுபவித்தவர் இயேசு என்பதை மறவாதே…
Nanmaikal Seidhu Nalindhu Pona Nanbanae…(Maganae…/Magalae…)
Nanmaiyin Naayagar Yesu Unnai Miga Naesikiraar – (2)
Nee Soernthuvidaadhae – Manam
Thalarndhu Pokaadhae…
Christuvin Yutha Veerar Naangal
கிறிஸ்துவின் யுத்த வீரர் நாங்கள்
உயர்த்துவோம் இயேசுவின் நாமத்தை
ஒன்றிணைந்து நாம் செயல்படுவோம்
கட்டுவோம் தேவ இராஜ்யத்தை (2)
யுத்தம் செய்வோம் நாங்கள் யுத்தம் செய்வோம்
கிறிஸ்துவுக்காய் என்றென்றும் யுத்தம் செய்வோம்(2)
Ennai Belapaduthum Christhu
என்னை பெலப்படுத்தும் கிறிஸ்து இயேசுவால்
எல்லாவற்றையும் செய்வேன் (2)
எல்லாவற்றையும் செய்வேன் – நான்
எல்லாவற்றையும் செய்வேன் – (2) – என்னை
1. உன்னதரின் சமூகத்தில் காத்திருப்பேன்
உன்னதத்தின் பெலனால் நிரம்பிடுவேன் (2)
கழுகுப் போல் பெலன் கொண்டு எழும்பிடுவேன்
ஓடினாலும் நடந்தாலும் இளைப்படையேன்(2) – என்னை
2. கர்த்தருக்குள் அனுதினம் மகிழ்ந்திருப்பேன்
மகிழ்ச்சியாய் இருப்பதால் பெலனடைவேன்(2)
எக்காள தொனியுடன் ஆர்ப்பரிப்பேன்
எரிகோவின் கோட்டைகளை தகர்த்திடுவேன்(2) – என்னை
3. கர்த்தரின் சத்துவத்தில் பெலப்படுவேன்
சத்துருவின் சேனைக்குள்ளே பாய்ந்திடுவேன்(2)
பலவானை முந்தி என்றும் கட்டிடுவேன்
இயேசுவின் நாமத்தால் சுதந்தரிப்பேன்(2) – என்னை