Song Tags: Bro. Mohan C Lazarus Songs

Theengai Kaanaathirupaai – தீங்கை காணாதிருப்பாய்

Theengai Kaanaathirupaai
தீங்கை காணாதிருப்பாய் – 4
என் மகனே என் மகளே – இனி – 2
தீங்கை காணாதிருப்பாய் – 4

அல்லேலுயா அல்லேலுயா என்றே பாடிடு
இயேசு என்ற நாமத்தை துதித்துப் பாடிடு – உன்
தீமைகள் நன்மையாய் மாறிடும் – 2 – தீங்கை

1. தீமைகள் தேசத்தில் பெருகிடும்
வறுமைகள் வியாதிகள் தாக்கிடும்
வல்லவர் இயேசுவின் கரங்களே
தீமையை விலக்கியே காத்திடுமே – உன் – தீங்கை

2. பொல்லாத மனிதர்கள் எழும்பிடுவார்
உனக்கு தீமைகள் செய்ய பதிவிருப்பார்
உலகத்தை ஜெயித்த நம் இயேசு
பொல்லாத மனிதரைக் கலங்கடிப்பார் – தீங்கை

3. எதிராக சாத்தான் எழும்பிடுவான்
உனக்கு தீங்குசெய்ய எத்தனிப்பான்
சாத்தானின் தலையை மிதித்தவர்
சத்துரு சேனையை சிதறடிப்பார் – தீங்கை

Kangal Ummai Thaeduthae – கண்கள் உம்மை தேடுதே

Kangal Ummai Thaeduthae
கண்கள் உம்மை தேடுதே
காத்திருந்து ஏங்குதே
உம சத்தம் கேட்டிட
என் இதயம் துடிக்குதே

எத்தனை எத்தனை இன்பம் – 4

1. என் இன்ப நேசரே என் இயேசுராஜனே
உம்மை தான் என் கண்கள் தேடுதே – 2

2. தேனிலும் இனிமையே நேசரின் நேசமே
உம் நேசத்தாலே என் நெஞ்சம் நெகிழுதே – 2

3. சாரோனின் ரோஜாவே என் மகாராஜனே
உம்மை காணவே என் மனது துடிக்குதே – 2

Kangal Ummai Thaeduthae
Kaaththirundhu Yaengudhae
Um Saththam Kaettida
En Idhayam Thudikkudhae

Eththanai Eththanai Inbam – 4

1. En inba Nesarae En Yesurajanae
Ummai thaan En Kangal Thedudhae – 2

2. Thenilum Inimaiyae Nesarin Nesamae
Um Nesaththaalae En Nenjam Negiludhae – 2

3. Saronin Rojavae En Magarajanae
Ummai Kaanavae En Manadhu Thudikkudhae – 2

Maenmai Paaratuven – மேன்மை பாராட்டுவேன்

Maenmai Paaratuven
மேன்மை பாராட்டுவேன் நான்
மேன்மை பாராட்டவேனே – 2
இயேசுவின் அன்பினையே
மேன்மை பாராட்டுவேன் – என்
இயேசுவின் அன்பினையே
மேன்மை பாராட்டுவேன்

சிலுவை எந்தன் மேன்மை
சிலுவை எந்தன் அடைக்கலம் – 2
ஸ்தோத்திரம் இயேசுவே ஸ்தோத்திரம்
சிலுவைநாதரே ஸ்தோத்திரம் – 2

1. சிலுவையில் அரையுண்டேன் நான்
சிலுவையில் அரையுண்டேன் – இனி
நானல்ல இயேசுவே என்னில்
என்றும் அவரைக் காட்டிடுவேன்
– சிலுவை எந்தன்

2. சிலுவையை சுமந்திடுவேன் நான்
சிலுவையை சுமந்திடுவேன் – இனி
இயேசுவின் மகிமைக்காய் நானே
என்றும் பாடுகள் சகித்திடுவேன் – சிலுவை எந்தன்

Kattupuravin Satham – காட்டு புறாவின் சத்தம்

Kattupuravin Satham
காட்டு புறாவின் சத்தம் கேட்கிறதே
என் நேசர் (இயேசு) என்னைத் தேடி வருவாரென்று
கானக்குயிலின் கானம் இசைக்கின்றதே
மன்னவர் சிங்காரமாய் வருவாரென்று

உம் வருகைவரை நான் காத்திருப்பேன்
என் விழி இரண்டால் என்றும் விழித்திருப்பேன் -2

1. தாயினும் மேலாய் உந்தன் அன்பு உள்ளதே
தந்தையாக நீர் என்னில் வாழ்கின்றிரே
நீர் எந்தன் நேசர் தானே
நீர் எந்தன் நண்பர்தானே
என்றென்றும் உந்தன் அன்பை என்னவென்று சொல்லிடுவேன்
–உம் வருகைவரை

2. கனவெல்லாம்என்றும் உம்மையே காண்கிறேன்
நினைவெல்லாம் என்றும் உம்மையே சுற்றுதே
நீரின்றி நானும் இல்லை
நீர்தானே எந்தன் எல்லை
என்றென்றும் எந்தன் நாவால் உம்மையே பாடுவேன்
–உம் வருகைவரை

3. பூரண அழகு உள்ளவரும் நீர்தானே
உமக்கு நிகராய் யாரும்இங்கு இல்லையே
நீர் எந்தன் ஜீவன்தானே
நான் உந்தன் சாயல்தானே
என்றென்றும் எந்தன் மூச்சு உந்தன் பெயர் சொல்லிடுதே
–உம் வருகைவரை

Kaatupuraavin Saththam Kaetkirathae
En Nesar Ennai Thedi Varuvarendru
Kaana Kuyilin Kaanam Isaikindrathae
Mannavar Singaramaai Varuvar Endru
Um Varugaivarai Naan Kathirupaen
En Vili Erandal Endrum Viliththirupaen – 2

1. Thayinum Melaai Unthan Anbu Ullathae
Thanthaiyaga Neer Ennil Valginrerae
Neer Enthan Naesarthanae
Neer Enthan Nanbarthanae
Endrendrum Unthan Anbai Enavendru Nan Soluvaen
– Um Varugai

2. Kanavellaam Endrum Ummaiyae Kanginraen
Ninaivellam Endrum Ummaiyae Sutruthae
Neerinri Naanu Millaiyae
Neerthanae Enthan Ellai
Endrendrum Enthan Naval Ummaiyae Paadiduvaen
– Um Varugai

3. Poorana Aazhagu Ullavarum Neerthanae
Ummaku Negarai Yaarum Inguillaiyae
Neer Enthan Jeevan Thanae
Naan Unthan Saayal Thanae
Endrendrum Enthan Muuchu Unthan Paeyar Solliduthae
– Um Varugai