Akini Sulaiyai Kadaka Panninavar – அக்கினி சூளையை கடக்கப் பண்ணினவர்

Akini Sulaiyai Kadaka Panninavar
அக்கினி சூளையை கடக்கப் பண்ணினவர்
ஆழியின் தண்ணீரை கடந்திடச் செய்தவர்
இயேசு உயிரோடிருப்பதினால்
என்றும் எதற்கும் பயமில்லையே
பயமில்லை(2) பயமில்லையே – 2
இயேசு உயிரோடிருப்பதினால்
என்றும் எதற்கும் பயமில்லையே -2

1. உன்னோடு நான் இருந்து செய்யும் காரியம்
மிகவும் பயங்கரமாயிருக்கும்
நீ விசுவாசித்தால்(3)
தேவ மகிமை காண்பாய்
நீ விசுவாசித்தால்(3)
உன்னால் எல்லாம் கூடும்
இயேசு உயிரோடிருப்பதினால்
என்றும் எதற்கும் பயமில்லையே -2
(பயமில்லை…..)

2. உன்னை பெயர் சொல்லி அழைத்தவர் உண்மையுள்ளவர்
ஒருபோதும் உன்னை கைவிடமாட்டார்
நீ காத்திருந்தால் (3)
காரியம் வாய்க்கச்செய்வார்
நீ காத்திருந்தால் (3)
உன் விருப்பம் நிறைவேற்றுவார்
இயேசு உயிரோடிருப்பதினால்
என்றும் எதற்கும் பயமில்லையே -2
(பயமில்லை…..)

3. உவர்ப்பை செழிப்பாய் மாற்றிடுவார்
மாராவை மதுரமாய் ருசிக்கச்செய்வார்
உன்னை நடத்திடுவார்
உன்னை காத்திடுவார்
உன்னை உயர்த்திடுவார்
சாத்தானை மிதித்திடுவார்
இயேசு உயிரோடிப்பதினால்
என்றும் எதற்கும் பயமில்லையே -2
(பயமில்லை…..)

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *