Athikalayil Ummai – அதிகாலையிலுமைத் தேடுவேன்

Athikalayil Ummai
அதிகாலையிலுமைத் தேடுவேன் முழுமனதாலே
தேவாசீர்வாதம் பெற நாடுவேன்
ஜெப தபத்தாலே
இதுகாறும் காத்த தந்தை நீரே
இனிமேலும் காத்தருள் செய்வீரே
பதிவாக உம்மிலே நான் நிலைக்கவே
பத்திரமாயெனை உத்தமனாக்கிடும் – தேவே

1. போன ராமுழுவதும் பாதுகாத்தருளின போதா!
எப்போதும் எங்களிடனிருப்பதா யுரைத்த நல் நாதா!
ஈனப் பாவிக்கேது துணை லோகிலுண்டு பொற்பாதா!
எனக்கான நீசனே! வான ராசனே!
இந்த நாளிலுமொரு பந்தமில்லாமல் காரும் நீதா! – அதிகாலையிலுமை

2. பல சோதனைகளால் சூழ்ந்து நான் கலங்கிடும் போது
தப்பாது நின் கிருபை தாங்கிட வேணுமப்போது
விலகாது என் சமூகம் என்ற வாக்கில் தவறேது?
விசுவாசங்கொண்டு மெய்ப்பாசமூண்டிட
விக்கினம் யாவிலும் வெற்றி காணுவேன் மலைவேது – அதிகாலையிலுமை

3. நரர் யாவர்க்குமுற்ற நண்பனாய் நடத்திடவையே – தீ
நாவின் பாவமற்ற நன்மைகள் மொழிந்திட செய்யே
பரலோக ஆவியை நல் மாரி போலெனில் பெய்யே
புகழான நாதனே! வேத போதனே! பூரணமாயுனைப்
போற்றுவேன் தினம் தினம் மெய்யே – அதிகாலையிலுமை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *