En Uyarntha Kamalaiye – என் உயர்ந்த கன்மலையே

En Uyarntha Kamalaiye

என் உயர்ந்த கன்மலையே
என் கோட்டையும் அரணும் நீரே
என் மறைவிடமே என் உறைவிடமே
நான் நம்பும் துணையாளரே – (2)

ஆராதனை உமக்கே (4) – உயர்ந்த


1. ஞானக் கன்மலையே தாகம் தீர்ப்பவரே
கன்மலை வெடிப்பினிலே பாதுகாப்பவரே
ஜீவ தண்ணீர் எனக்குத் தந்தீர் – 2
தேற்றரவாளன் நீரே ஆவியானவரே – 2 – ஆராதனை

2. வார்த்தையானவரே வாழ்வு தருபவரே
வானிலும் பூமியிலும் வல்லமையுள்ளவரே
தேனிலும் மதுரம் உந்தன் வசனம் – 2
என்னைத் தேற்றிடுமே அனலாய் மாற்றிடுமே -2 – ஆராதனை

3. சருவ வல்லவரே சாவை வென்றவரே
சருவ சிருஷ்டிகரே சர்வத்தை ஆள்பவரே
முழங்கால் யாவும் அவர் முன் முடங்கும் -2
மீண்டும் வருபவரே எங்கள் எஜமானரே – 2 – ஆராதனை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *