Jeeviyamae Orae Jeeviyamae – ஜீவியமே ஒரே ஜீவியமே

Jeeviyamae Orae Jeeviyamae
ஒரே ஒரு வாழ்க்கை
ஜீவியமே ஒரே ஜீவியமே அண்ட சராசரம்
அனைத்திலுமே மேவி வசிக்கும் மனிதர் அனைத்தும்
பூமியில் வாழ்வது ஒரே தரமே – ஜீவியமே

1. பிறப்பதும் இறப்பதும்
தெய்வச் செயல்
இடையில் இருப்பது வாழ்க்கையாகும்
இயேசுவில் சார்வதால்
பரிசுத்தம் காணும்
பரிசுத்தர் ஆட்சியில் சாட்சி கூறும்
இதை விடில் முடிவது வீழ்ச்சியாகும் – ஜீவியமே

2. நித்தம் நமைவிட்டுச் செல்வார் பாரீர் அவர் யாரும் செல்லும் அவ்விடமும் பாரீர் அலறலும், புலம்பலும்
உடல்தனைக் கீறலும் நரகத்தின் தினசரிக் காட்சி கேளீர்
இரக்கத்தின் வழி காணார் கதியும் காண்பீர் – ஜீவியமே

3. திறப்பின் முகம் நிற்க ஆட்கள் தேவை
தியாகத்தின் பாதைக்குச் செல்வோர் தேவை
‘என்ஜனம் அழியுதே’ என ஏங்கும் ஆண்டவர் துக்கத்தைத் தணிக்கும் சீஷர் தேவை
முன் வருவோர் யார்க்கும் இதுவே வேளை – ஜீவியமே

4. எண்ணிப்பார் கழிந்திட்டக் காலமதை
கதையைப் போல் மனிதரின் நாட்கள் செல்லும்
உலகத்துச் சேவை சாகையில் ஓயும்
உன்னுடன் மரித்த பின் வருவதேது?
கிறிஸ்துவின் சேவை நிலைத்து நிற்கும் – ஜீவியமே

5. அர்ப்பணம் தந்தையே கை அளித்தேன்
கல்வி, செல்வம், சுகம் பொருள் அனைத்தும்
செல்லுவேன், சொல்லுவேன் இயேசுவை வழி என
வாழ்க்கையில் தம்மையே
கொண்டு வாழ்வேன் என்றுமே அங்கே நான் உம்மில் வாழ்வேன் – ஜீவியமே

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *