Paadhukaappar Nerukadiyil – பாதுகாப்பார் நெருக்கடியில்

Paadhukaappar Nerukadiyil

பாதுகாப்பார் நெருக்கடியில்
பதில் தருவார் ஆபத்திலே-2
துணையாய் வருவார்
உதவி செய்வார்-2

கைவிடார் கைவிடார்-2 -பாதுகாப்பார்

நம் துதிபலி அனைத்தையுமே
பிரியமாய் ஏற்றுக்கொண்டார்-2
நாம் செய்த நற்கிரியைகளை
மறவாமல் நினைக்கின்றார்-2

கைவிடார் கைவிடார்-2 -பாதுகாப்பார்

இதயம் விரும்புவதை
நமக்கு தந்திடுவார்-2
(நம்) ஏக்கங்கள் அனைத்தையும்
செய்து முடித்திடுவார்-2

கைவிடார் கைவிடார்-2 -பாதுகாப்பார்

மகிழ்ச்சியில் ஆர்ப்பரிப்போம்
வரும் எழுப்புதல் நாம் காண்போம்-2
நம் தேவன் நாமத்தினால்
கொடியேற்றி கொண்டாடுவோம்-2

கைவிடார் கைவிடார்-2 -பாதுகாப்பார்

பாதுகாத்தீர் நெருக்கடியில்
பதில் தந்தீர் ஆபத்திலே-2
துணையாய் வந்தீர்
உதவி செய்தீர்-2

நன்றி ஐயா நன்றி ஐயா-2

துதிபலி அனைத்தையுமே
பிரியமாய் ஏற்றுக் கொண்டீர்-2
நான் செய்த நற்கிரியைகளை
மறவாமல் நினைக்கின்றீர்-2

நன்றி ஐயா நன்றி ஐயா-4

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *