Rajavagiya Yen Devane – இராஜாவாகிய என் தேவனே

Rajavagiya Yen Devane

இராஜாவாகிய என் தேவனே சங்.145:1
உம்மை நான் உயர்த்துகிறேன்
உம் திருநாமம் எப்பொழுதும்
என்றென்றைக்கும் ஸ்தோத்தரிப்பேன்
நாள்தோறும் நான் போற்றுவேன்
என்றென்றும் ஸ்தோத்தரிப்பேன்

  1. மிகவும் பெரியவர் துதிக்குப் பாத்திரர் சங்.145:3
    துதிகளின் மத்தியில் வாசம் செய்பவர்
    துதி உமக்கே கனம் உமக்கே
    மகிமை உமக்கே என்றென்றைக்கும்
    உமக்கே (3) ஸ்தோத்திரம்
    உயிருள்ள நாளெல்லாம்
  2. எல்லார் மேலும் தயவுள்ளவர் சங்.145:3
    எல்லாருக்கும் நன்மை செய்பவர்
    உம் கிரியைகள் எல்லாம் உம்மைத் துதிக்கும்
    பரிசுத்தவான்கள் ஸ்தோத்தரிப்பார்கள்
  3. நோக்கிப் பார்க்கின்ற அனைவருக்கும் சங்.145:15ää16
    ஏற்ற வேளையில் உணவளிக்கின்றீர் – நீர்
    கையை விரித்து சகல உயிர்களின்
    விருப்பங்களை நிறைவேற்றுகிறீர் – உம்
  4. வழிகளிலெ;லாம் நீதியுள்ளவர் சங்.145:17ää18
    கிரியைகளின் மெல் கிருபையுள்ளவர்
    நம்பி கூப்பிடும் அனைவருக்கும்
    அருகில்; இருக்கின்றீர் அரவணைக்கின்றீர்
  5. அன்புகூர்கின்ற அனைவரின் மேல் சங்.145:19ää20
    கண்காணிப்பாய் இருக்கின்றீர்
    பயந்து நடக்கின்ற உம் பிள்ளைகளின்
    வாஞ்சைகளை நிறைவேற்றுகின்றீர்
  6. தடுக்கி விழுகிற யாவரையும் சங்.145:14
    தாங்கி தாங்கி நடத்துகிறீர்
    தாழ்த்தப்பட்ட அனைவரையும்
    தூக்கி உயரத்;தில் நிறுத்துகிறீர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *