Sorvana Aaviyai Neekum – சோர்வான ஆவியை நீக்கும்

Sorvana Aaviyai Neekum
1. சோர்வான ஆவியை நீக்கும்
துயர ஆவியை அகற்றும்
கண்ணீரின் மத்தியில் வாரும்
அப்பா வேண்டுகிறேன் – 2

இயேசுவே – 3
எல்லாம் எனக்கு நீரே

2. ஊழியப் பாதையில் துன்பம்
விசுவாசிகளாலே நெருக்கம்
ஏன் இந்த ஊழியம் எனக்கு
உமக்காகத்தானே ஐயா – 2

இயேசுவே – 3
எல்லாம் எனக்கு நீரே

3. வீடும் வாசலும் இல்லை
உற்றார் உறவினர் தொல்லை
எங்கே ஓடுவேன் நான்
உமது சமூகத்திற்கே – 2

இயேசுவே – 3
எல்லாம் எனக்கு நீரே

4. இரவெல்லாம் உறக்கமே இல்லை
வியாதியால் மனக்கவலை
தாங்குவோர் யாருமே இல்லை
நீரே பார்த்துக்கொள்வீர் – 2

இயேசுவே – 3
எல்லாம் எனக்கு நீரே

5. காத்திருந்து பெலன் பெறுவேன்
கழுகு போல பறப்பேன்
காகத்தின் வம்சம் நான் அல்ல
சிங்கத்தின் குட்டி நானே – 2

இயேசுவே – 3
எல்லாம் எனக்கு நீரே

One thought on “Sorvana Aaviyai Neekum – சோர்வான ஆவியை நீக்கும்

  1. கர்த்தருடைய நாமத்திற்கு ஸ்தோத்திரம்.உங்கள் பாடல்கள் எல்லாம் எங்களுக்கு மிகவும் ஆசீர்வாதமாக உள்ளது. இந்த ஊழியம் இன்னுமாய் வளர்ச்சி அடைந்து மகிழ கர்த்தரை வேண்டுகிறேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *