Thanthalum Yesuve Um – தந்தாளும் இயேசுவே உம்

Thantharulum Yesuve Um

தந்தாளும் இயேசுவே உம் சமுகம் தேவ மைந்தர்கள் கூடிடும் இந்நேரமிதில்

1. பத்மு தீவில் பரிசுத்தக் காட்சி ஈந்த வண்ணமே புத்திரர்கள் மத்தியிலும் உந்தன் திவ்விய தரிசனம் இத்தினத்தில் இங்கு ஈந்திடும் — தேவா! – தந்தாளும்

2. நல்வழியை நாடிடாமல் ஓடும் நரர் யாவர்க்கும் கல்வாரியின் அன்பை இன்று கர்த்தனே நீர் காட்டியே நற்குணம் அவர்க்கு நல்கிடும் — தேவா! – தந்தாளும்

3. சத்தி இல்லை எங்களுக்கு, சாம்பலும் தூசியும் கர்த்தனே கருணை கூர்ந்து தந்திடும் சர்வாயுதம் புத்தியாக யுத்தம் செய்த — தேவா! – தந்தாளும்

4. என்னை நோக்கிக் கூப்பிடில் அளித்திடுவேன் உத்தரம்,
பின்னும் நீ அறிந்திடாத வல்லமைகள் காட்டுவேன் என்றவா! இந்நேரம் காட்டுமே — தேவா! – தந்தாளும்

5. சதா காலங்களிலும் இருப்பேன் உங்கள் கூடவே சத்துருவின் வல்லமைகள் ஒன்றும் அணுகாதென்றீர் ஆதலால் அனந்தம் ஸ்தோத்திரம் — தேவா!
– தந்தாளும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *