Theeya Manathai Matra Varum – தீய மனதை மாற்ற வாரும்

Theeya Manathai Matra Varum
தீய மனதை மாற்ற வாரும், தூய ஆவியே – கன
நேய ஆவியே

1. மாயபாசத் தழுந்தி வாடி மாளுஞ் சாவிதால் – மிக மாயும்
பாவி நான் – தீய

2. தீமை செய்ய நாடுதென்றன் திருக்கு நெஞ்சமே – மருள்
தீர்க்கும், தஞ்சமே – தீய

3. பரத்தை நோக்க மனம் அற்றேனே, பதடிதான், ஐயா – ஒரு
பாவி நான் ஐயா – தீய

4. ஏக்கத்தோடென் மீட்பைத் தேடி இரந்து கெஞ்சவே – தினம்
இதயம் அஞ்சவே – தீய

5. புதிய சிந்தை, புதிய ஆசை புதுப்பித்தாக்கவே – அதைப்
புகழ்ந்து காக்கவே – தீய

6. கிறிஸ்து மீது நாட்டங் கொண்டு கீதம் பாடவே – அவர்
கிருபை தேடவே – தீய

7. தேவ வசனப் பாலின்மீது தேட்டம் தோன்றவே – மிகு
தெளிவு வேண்டவே – தீய

8. ஜெபத்தின் தாகம் அகத்தில் ஊறி ஜெபித்துப் போற்றவே – மிக
சிறப்பாய் ஏற்றவே – தீய

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *