Ummaku Nikaravar Yaar – உனக்கு நிகரானவர் யார் இந்த

Ummaku Nikaravar Yaar
உனக்கு நிகரானவர் யார் இந்த
உலக முழுவதிலுமே

தனக்கு தானே நிகராம் தாதை திருச்சுதனே
மனுக்குலம் தன்னை மீட்க மானிடனாக வந்த -உனக்கு

1. தாய் மகளுக்காக சாவாளோ கூடப் பிறந்த
தமையன் தம்பிக்காய் மாய்வானோ
நேயன் நேயர்க்காய் சாவானோ தனதுயிரை
நேர் விரோதிக்காய் ஈவானோ
நீ இம் மண்ணுலகில் நீசர்கட்காக வந்து
காயும் மனமடவர்க்காக மரித்தாய் சுவாமி – உனக்கு

2. கந்தை உரிந்தெறிந்தனை நீதியின் ஆடை
கனக்க உடுத்துவித்தனை
மந்தையில் சேர்த்துவைத்தனை கடும் வினைகள்
மாற்றி எந்தனைக் காத்தனை
கந்த மலர்ப் பாதனே கனகரத்ன மேருவே
சிந்தை உவந்து வந்த தியாக ராசனே சுவாமி – உனக்கு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *