புது வாழ்வு மனவாழ்வு
புவி ஆளும் உயிர் வாழ்வு
நீர் எந்தன் உயிர் சொந்தமே (2)
நீர் எந்தன் உயிர் சொந்தமே -2
1. உமை போற்றி புகழ் பாடி
உம் சித்தம் நிறைவேற்றி
உம் நாமம் உயர்த்திடுவேன் – நான் -3 (…புது வாழ்வு)
2. தாயின் கருவில் தோன்றும் முன்னே
நீர் என்னை தெரிந்தெடுத்தீர் (2)
உறங்காமல் தூங்காமல் உம் கண்கள் எனை காத்து
உம் சிறகில் எனை மூடினீர் -3 (…புது வாழ்வு)
3. நான் கடந்து வந்த பாதை இருளான
போதிலும் வெளிச்சமாய் நீர் மாற்றினீர் (2)
நான் மனமுடைந்து நொறுக்கப்பட்ட போதும்
உம் உள்ளங்கையில் தாங்கினீர் -3 (…புது வாழ்வு)
4. என் சுவாச காற்றாய் நீர் என்றும் இருந்து
என் ஜீவன் காத்துக்கொண்டீர் (2)
என் வாழ்நாள் எல்லாம் நான் களிகூர்ந்து மகிழ்ந்திட
புகழ் பாடி மகிழ செய்தீர் – உம் -3 (…புது வாழ்வு)
Yaar Iruntha Yenakenna
யார் இருந்தால் எனக்கென்ன
நீர் மாத்திரம் போதுமப்பா -2
எல்லோரும் இருப்பார்கள்
இல்லாமல் போவார்கள்
உலகத்தின் முடிவு வரை
என்னோடு இருப்பவரே -2
(ஓ..ஓ..) விலகாத தேவ கிருபை
மாறாத தேவ கிருபை -2
என் தகப்பனே தகப்பனே இயேசுவே -2
யார் இருந்தால் எனக்கென்ன
நீர் மாத்திரம் போதுமப்பா -2
1. தாயின் வயிற்றினிலே
என் கருவை கண்டவரே
அவயங்கள் உருவாகும் முன்
என்னை குறித்து அறிந்தவரே -2
உலக தோற்றம் முதல்
முன் குறித்து வைத்தவரே
உள்ளங்கையிலே-என்னை
வரைந்த தெய்வம் நீரே -2 – விலகாத
2. உடைந்த மண்பாண்டம்
வீதியிலே கிடந்தேனே
அழகும் இல்லாமல்
உறுவற்று போனேனே -2
என்னை மீட்டெடுக்க
இறங்கி வந்த தெய்வம் நீரே
அழகும் சவுந்தர்யமும்
எனக்காக இழந்தவரே -2 – விலகாத
3. துவக்கமும் முடிவும்
எல்லாமே நீர் தானே
ஆதியும் அந்தமும்
எல்லாமே நீர் தானே -2
உமக்கு மறைவான
சிருஷ்டி ஏதும் இல்லையப்பா
உம்மை விட்டால் உலகத்திலே
வாழ எனக்கு வழி இல்லப்பா -2 – விலகாத
அலை மோதும் படகு ஆழ் கடலில் இருக்க
கரை சேர முடியாமல் தவிக்க
அப்பா என் இயேசு தப்பாமல் வருவார்
நான் போகும் கரையில் சேர்ப்பார்
தடுமாறும் போது
தாங்கும் உந்தன் கிருபை
தன்னிமையின் போது
அன்ணைக்கும் உந்தன் கரங்கள்
போதுமே உந்தன் அன்பு ஒன்றே
என் வாழ்வில் எப்போதும்
நீர் போதுமே
ஏற்ற காலத்தில் உயர்த்தும் உந்தன் கிருபை
ஏங்கிடும் எனக்கு உதவி செய்யும் கிருபை
வாக்குகள் தந்து நடத்தும் உந்தன் கிருபை
வாக்கு மாறாமல் நிறைவேற்றும் கிருபை
அலை மோதும் படகு ஆழ் கடலில் இருக்க
கரை சேர முடியாமல் தவிக்க
அப்பா என் இயேசு உன் படகில் வருவார்
நீ போகும் கரையில் சேர்ப்பார்