Nee Yaaraga Inthalum Paravaillai
நீ யாராக இருந்தாலும் பரவாயில்ல
உன் சூழ்நிலை எதுவானாலும் பரவாயில்ல
காப்பார் காப்பார் உன்னைக் காப்பார்
பாதுகாப்பார் எப்போதுமே } – 2
1. நீ ஆபத்தில் இருந்தாலும் பரவாயில்ல
நீ தோல்வியில் இருந்தாலும் பரவாயில்ல
பார்ப்பார் பார்ப்பார் உன்னைப் பார்ப்பார்
உள்ளங்கையில் வரைந்து பார்ப்பார்
2. நீ நினைத்தது நடக்கலையா பரவாயில்ல
நீ எதிர்பார்த்தது கிடைக்கலையா பரவாயில்ல
நன்மை நன்மை எல்லாம் நன்மை
நடந்தது எல்லாம் என்றும் நன்மை
Kalvari Mamalai Mel
கல்வாரி மா மலைமேல் கை கால்கள் ஆணிகளால்
கடாவப்பட்டவராய் கர்த்தர் தொங்கக் கண்டேன்
குருசின் வேதனையும் சிரசின் முள்முடியும்
குருதி சிந்துவதும் உருகிற் றென் மனதை
அஞ்சாதே என் மகனே மிஞ்சும் உன் பாவமதால்
நெஞ்சம் கலங்காதே தஞ்சம் நானே உனக்கு
எனக்கேன் இப்பாடு உனக்காகத்தானே
ஈனக்கோல மடைந்தேன் உன்னை ரட்சித்தேன் என்றார்
கர்த்தரின் சத்தமத்தை சத்தியம் என்று நம்பி
பக்தியுடன் விழுந்து முத்தம் செய்தேன் அவரை
என் பாவம் நீங்கியதே எக்கேடும் ஓடியதே
சந்தேகம் மாறியதே சந்தோசம் பொங்கியதே
Song Lyrics & Tune Composed by Rev. S. Devadason, Former Editor, Varukayin Thoothan & CSI Pastor at Karungal, Kannanore at the period of Bishop Gnanadason, KK Diocese.
வீறு கொண்டு வெளியே வா
சிறகை விரித்து பறந்து வா
சோதனை ஜெயித்து எழும்பி வா
நீ சாதனை செய்ய விரைந்து வா (2)
உலகின் வாழ்க்கை ஒன்று தானே
மறந்து நீ போகாதே
இன்று மறித்தால் எங்கு செல்வாய்
காலமும் நில்லாதே
மயக்கும் எல்லாம் மாயை தானே
மதி கெட்டு போகாதே
சிதைக்கும் உன்னை சில்லரை ஆக்கும்
சீர் கெட்டுப் போகாதே
கானல் போன்ற வாழ்க்கையெல்லாம்
மறைந்து போதும் முன்பே
உன்னைப் படைத்த சிருஷ்டிகரை நீ
மறந்து போகாதே
சத்திய தேவன் அவர் நித்தியம் தருபவர்
வாழ்வை இழந்தவற்கு வழியை திறப்பவர்
சத்திய தேவனை நீ நித்தமும் தேடிடு
ஜீவனைக் கொடுத்தவற்கு வாழ்வை கொடுத்திடு
வீறு கொண்டு வெளியே வா
சிறகை விரித்து பறந்து வா
சோதனை ஜெயித்து எழும்பி வா
நீ சாதனை செய்ய விரைந்து வா (2)
ஏன் இந்த கோலம் என் ஐயனே
ஏன் இந்த கோரம் சொல் மெய்யனே (2)
சிலுவையை சுமந்தது எதற்காக
சிந்திய இரத்தமே யாருக்காக
சிலுவையிலே மறித்தீர் எதற்காக – ஏன்
அழகுமில்லை செளந்தர்யமில்லை
ஆண்டவர் என்னும் அந்தஸ்துமில்லை (2)
கள்ளருக்கு நடுவே கள்வராய் தோன்றி
கள்ளருக்கு நடுவே கள்வராய் தோன்றி
குற்றவாளி என்று நீர் காட்சியளித்தீர்
குற்றவாளி என்று நீர் காட்சியளித்தீர் – ஏன்
வானத்து வெளிகளின் சூரிய சந்திரன்
உளாவிடும் விண்மீன்கள் படைத்திட்ட இறைவா (2)
மனிதன் உம்மை வதைத்திட்ட போதும்
ஈன மனிதன் இகழ்ந்திட்ட போதும்
இறைவனின் மகனே மெளனம் ஏனோ
இறைவனின் மகனே மெளனம் ஏனோ – ஏன்
அரசருக்கெல்லாம் அரசரும் நீரே
ஆண்டவர்க்கெல்லாம் ஆண்டவர் நீரே (2)
உமக்கு கிடைத்ததோ முள்முடி கிரீடம்
உமக்கு கிடைத்ததோ முள்முடி கிரீடம்
உலகம் தந்ததோ சிறுவையின் பாரம்
உலகம் தந்ததோ சிறுவையின் பாரம் – ஏன்