All Songs by david

Kalvari Mamalai Mel – கல்வாரி மா மலைமேல் கை

Kalvari Mamalai Mel
கல்வாரி மா மலைமேல் கை கால்கள் ஆணிகளால்
கடாவப்பட்டவராய் கர்த்தர் தொங்கக் கண்டேன்
குருசின் வேதனையும் சிரசின் முள்முடியும்
குருதி சிந்துவதும் உருகிற் றென் மனதை

அஞ்சாதே என் மகனே மிஞ்சும் உன் பாவமதால்
நெஞ்சம் கலங்காதே தஞ்சம் நானே உனக்கு
எனக்கேன் இப்பாடு உனக்காகத்தானே
ஈனக்கோல மடைந்தேன் உன்னை ரட்சித்தேன் என்றார்

கர்த்தரின் சத்தமத்தை சத்தியம் என்று நம்பி
பக்தியுடன் விழுந்து முத்தம் செய்தேன் அவரை
என் பாவம் நீங்கியதே எக்கேடும் ஓடியதே
சந்தேகம் மாறியதே சந்தோசம் பொங்கியதே

Song Lyrics & Tune Composed by Rev. S. Devadason, Former Editor, Varukayin Thoothan & CSI Pastor at Karungal, Kannanore at the period of Bishop Gnanadason, KK Diocese.

Vaalibam Unnai Izhukudho – வாலிபம் உன்னை இழுக்குதோ

Vaalibam Unnai Izhukudho
வாலிபம் உன்னை இழுக்குதோ
வானத்தைத் தொடத் துடிக்குதோ
பாவங்கள் கண்ணை மறைக்குதோ
கைகள் செய்ய துடிக்கின்றதோ
உந்தன் சிந்தை மறைக்கின்றதோ (2)

வீறு கொண்டு வெளியே வா
சிறகை விரித்து பறந்து வா
சோதனை ஜெயித்து எழும்பி வா
நீ சாதனை செய்ய விரைந்து வா (2)

உலகின் வாழ்க்கை ஒன்று தானே
மறந்து நீ போகாதே
இன்று மறித்தால் எங்கு செல்வாய்
காலமும் நில்லாதே
மயக்கும் எல்லாம் மாயை தானே
மதி கெட்டு போகாதே
சிதைக்கும் உன்னை சில்லரை ஆக்கும்
சீர் கெட்டுப் போகாதே
கானல் போன்ற வாழ்க்கையெல்லாம்
மறைந்து போதும் முன்பே
உன்னைப் படைத்த சிருஷ்டிகரை நீ
மறந்து போகாதே
சத்திய தேவன் அவர் நித்தியம் தருபவர்
வாழ்வை இழந்தவற்கு வழியை திறப்பவர்
சத்திய தேவனை நீ நித்தமும் தேடிடு
ஜீவனைக் கொடுத்தவற்கு வாழ்வை கொடுத்திடு

வீறு கொண்டு வெளியே வா
சிறகை விரித்து பறந்து வா
சோதனை ஜெயித்து எழும்பி வா
நீ சாதனை செய்ய விரைந்து வா (2)

Yen Indha Kolam – ஏன் இந்த கோலம்

ஏன் இந்த கோலம் என் ஐயனே
ஏன் இந்த கோரம் சொல் மெய்யனே (2)
சிலுவையை சுமந்தது எதற்காக
சிந்திய இரத்தமே யாருக்காக
சிலுவையிலே மறித்தீர் எதற்காக – ஏன்

அழகுமில்லை செளந்தர்யமில்லை
ஆண்டவர் என்னும் அந்தஸ்துமில்லை (2)
கள்ளருக்கு நடுவே கள்வராய் தோன்றி
கள்ளருக்கு நடுவே கள்வராய் தோன்றி
குற்றவாளி என்று நீர் காட்சியளித்தீர்
குற்றவாளி என்று நீர் காட்சியளித்தீர் – ஏன்

வானத்து வெளிகளின் சூரிய சந்திரன்
உளாவிடும் விண்மீன்கள் படைத்திட்ட இறைவா (2)
மனிதன் உம்மை வதைத்திட்ட போதும்
ஈன மனிதன் இகழ்ந்திட்ட போதும்
இறைவனின் மகனே மெளனம் ஏனோ
இறைவனின் மகனே மெளனம் ஏனோ – ஏன்

அரசருக்கெல்லாம் அரசரும் நீரே
ஆண்டவர்க்கெல்லாம் ஆண்டவர் நீரே (2)
உமக்கு கிடைத்ததோ முள்முடி கிரீடம்
உமக்கு கிடைத்ததோ முள்முடி கிரீடம்
உலகம் தந்ததோ சிறுவையின் பாரம்
உலகம் தந்ததோ சிறுவையின் பாரம் – ஏன்

Ulagin Oliye Yesuve – உலகின் ஒளியே இயேசுவே

Ulagin Oliye Yesuve

உலகின் ஒளியே இயேசுவே
அகிலம் போற்றும் தெய்வமாம்
அன்பின் தெய்வம் வேறுஇல்லை
அவரை அண்டியே சேர்ந்திடுவாய்

இயேசு நல்லவரே
இயேசு வல்லவரே
மனதின் இருளை நீக்கிடுவார்
உள்ளம் திறந்தே ஏற்பாய்

1. பாவம் போக்க வந்தவர்
சாபம் யாவும் நீக்குவார்
இவரை அல்லால் வழியும் இல்லை
அகத்தில் இவரை ஏற்றிடுவாய் – இயேசு

2. பாவங்கள் யாவும் அகற்றிடவே
பரிவாய் வந்தார் உலகினிலே
சாவை ஜெயித்தார் ரோகம் தொலைத்தார்
உந்தன் நாயகனாம் இவரை – இயேசு

3. தேவ மைந்தனாய் வந்தவர்
மாலும் மாந்தரை மீட்கவே
கருணை தேவன் அன்பின் தெய்வம்
எந்தன் நாயகனாம் இவரே – இயேசு

Anbu Yesuvin Anbu – அன்பு இயேசுவின் அன்பு

Anbu Yesuvin Anbu
அன்பு இயேசுவின் அன்பு – அது
அளவிடமுடியாதது
நம்பு நீ அதை நம்பு – இந்த
இகமதில் கிடைக்காதது

1. தந்தை தாய் அன்பொருநாள் – அது
தணிந்தே போய்விடும் – தன்
பிள்ளையின் அன்பொருநாள் – அது
பிரிந்தே போய்விடும்

2. என்றென்றும் மாறாதது – என்
இயேசுவின் தூய அன்பு
என் வாழ்வில் தீராதது – என்
தேவனின் ஜீவ அன்பு

3. கணவனின் அன்பொருநாள் – அது
கரைந்தே போய்விடும் – நல்ல
மனைவியின் அன்பொருநாள் – அது
மறைந்தே போய்விடும்

4. உறவினர் அன்பொருநாள் – அது
ஒழிந்தே போய்விடும் – உடன்
பிறந்தவர் அன்பொருநாள் – அது
அழிந்தே போய்விடும்

5. நண்பனின் அன்பொருநாள் – அது
நழுவியே போய்விடும் – நீ
நம்பினோர் அன்பொருநாள் – அது
வழுவியே போய்விடும்

Varusha Thovakathil

Varusha Thovakathil
வருஷத் துவக்கத்தில்
வந்தேன் இயேசு நாமத்தில்

பல்லவி
அஞ்சிடேன் என் வல்ல மீட்பர்
தஞ்சம் தந்து என்னைக் காப்பார்
நெஞ்சத்தில் விசார மேன் ?
நேசரைப் பின் பற்றுவேன்

1. வருங்காலம் அறியேன்
ஆயினும் நான் கலங்கேன்

2. சாத்தான் வந்தெதீத்தாலும்
சத்ரு மூர்க்கங் கொண்டாலும்

3. கஷ்டமோ ? கலக்கமோ ?
துஸ்டரின் இடுக்கமோ ?

4. சுகமோ ? வியாதியோ ?
துக்கமோ ? மகிழ்ச்சியோ ?

5. நித்திய யெகோவா ! உம்
சித்தமே, என் பாக்கியம்

En Mudivukku Vidivu Neere – என் முடிவுக்கு விடிவு நீரே

En Mudivukku Vidivu Neere
என் முடிவுக்கு விடிவு நீரே
என் வாழ்வுக்கு உதயம் நீரே
என்னையா தெரிந்துக்கொண்டீர்?
என்னையா அழைத்து விட்டீர்? – அப்பா
தகுதி இல்லாத என்னை தகுதியாய் மாற்றி
கன்மலையில் நிறுத்தினீரே

1. பூமியிலே நான் பரதேசி
ஆனால் உமக்கோ இப்பொழுது விசுவாசி
என்னையா தெரிந்துக்கொண்டீர்?
என்னையா அழைத்து விட்டீர்? – அப்பா
தகுதி இல்லாத என்னை தகுதியாய் மாற்றி
கன்மலையில் நிறுத்தினீரே
என் முடிவுக்கு விடிவு நீரே
என் வாழ்வுக்கு உதயம் நீரே

2. புல்லைப்போல் உலர்ந்திடும் என் வாழ்க்கை
ஆனால் உம்மிடத்தில் எனக்கோர் இடம்தந்தீர்
என்னையா தெரிந்துக்கொண்டீர்?
என்னையா அழைத்து விட்டீர்? – அப்பா
தகுதி இல்லாத என்னை தகுதியாய் மாற்றி
கன்மலையில் நிறுத்தினீரே
என் முடிவுக்கு விடிவு நீரே
என் வாழ்வுக்கு உதயம் நீரே

3. சோதித்தப்பின் சுத்த பொன்னாக
இந்த மண்ணிலே என்னை வீளங்கச்செய்தீர்
என்னையா தெரிந்துக்கொண்டீர்?
என்னையா அழைத்து விட்டீர்? – அப்பா
தகுதி இல்லாத என்னை தகுதியாய் மாற்றி
கன்மலையில் நிறுத்தினீரே
என் முடிவுக்கு விடிவு நீரே
என் வாழ்வுக்கு உதயம் நீரே

Piranthar Piranthar – பிறந்தார் பிறந்தார் வானவர்

பிறந்தார் பிறந்தார்
வானவர் புவி மானிடர் புகழ்
பாடிட பிறந்தார்

1. மாட்டுத் தொழுவம் தெரிந்தெடுத்தார்
மா தேவ தேவனே
மேன்மை வெறுத்தார் தாழ்மை தரித்தார்
மா தியாகியாய் வளர்ந்தார்

2. பாவ உலக மானிடர் மேல்
பாசம் அடைந்தவரே
மனக்காரிருளை எம்மில் நீக்கிடும் மெய்
மா ஜோதியாய்த் திகழ்ந்தார்

3. பொறுமை தாழ்மை அன்புருக்கம்
பெருந்தன்மை உள்ளவரே
மரணம் வரையும் தன்னைத் தாழ்த்தினால்
மேலான நாமம் பெற்றோர்

4. கந்தைத் துணியோ கர்த்தருக்கு
கடும் ஏழ்மைக் கோலமதோ
விலையேறப் பெற்ற உடை அலங்கரிப்பும்
வீண் ஆசையும் நமக்கேன்

5. குருவைத் தொடரும் சீஷர்களும்
குருபோல மாறிடுவார்
அவர் நாமம் தரித்தவர் யாவருமே
அவர் பாதையில் நடப்போம்

6. இயேசு பிறந்தார் உள்ளமதில்
இதை எங்கும் சாற்றிடுவோம்
புசிப்பும் குடிப்பும் தேவ ராஜ்யமல்ல
பரன் ஆவியில் மகிழ்வோம்

Jingle Bells

Dashing through the snow
On a one horse open sleigh
O’er the fields we go,
Laughing all the way
Bells on bob tail ring,
making spirits bright
What fun it is to laugh and sing
A sleighing song tonight

Oh, jingle bells, jingle bells
Jingle all the way
Oh, what fun it is to ride
In a one horse open sleigh
Jingle bells, jingle bells
Jingle all the way
Oh, what fun it is to ride
In a one horse open sleigh

A day or two ago,
I thought I’d take a ride,
And soon Miss Fanny Bright
Was seated by my side;
The horse was lean and lank
Misfortune seemed his lot
We got into a drifted bank,
And then we got upsot.

Oh, jingle bells, jingle bells
Jingle all the way
Oh, what fun it is to ride
In a one horse open sleigh
Jingle bells, jingle bells
Jingle all the way
Oh, what fun it is to ride
In a one horse open sleigh

Jingle Bells, Jingle Bells,
Jingle all the way!
Oh, What fun it is to ride
In a one horse open sleigh.
Jingle Bells, Jingle Bells,
Jingle all the way!
Oh, What fun it is to ride
In a one horse open sleigh.

Now the ground is white
Go it while you’re young
Take the girls tonight
And sing this sleighing song
Just get a bob tailed bay
two-forty as his speed
Hitch him to an open sleigh
And crack! you’ll take the lead

Jingle Bells, Jingle Bells,
Jingle all the way!
Oh, What fun it is to ride
In a one horse open sleigh.
Jingle Bells, Jingle Bells,
Jingle all the way!
Oh, What fun it is to ride
In a one horse open sleigh.

Silent Night

Silent night, holy night!
All is calm, all is bright.
Round yon Virgin, Mother and Child.
Holy infant so tender and mild,
Sleep in heavenly peace,
Sleep in heavenly peace

Silent night, holy night!
Shepherds quake at the sight.
Glories stream from heaven afar
Heavenly hosts sing Alleluia,
Christ the Savior is born!
Christ the Savior is born

Silent night, holy night!
Son of God love’s pure light.
Radiant beams from Thy holy face
With dawn of redeeming grace,
Jesus Lord, at Thy birth
Jesus Lord, at Thy birth