All Songs by david

Nee Yaaraga Inthalum Paravaillai – நீ யாராக இருந்தாலும் பரவாயில்ல

Nee Yaaraga Inthalum Paravaillai
நீ யாராக இருந்தாலும் பரவாயில்ல
உன் சூழ்நிலை எதுவானாலும் பரவாயில்ல
காப்பார் காப்பார் உன்னைக் காப்பார்
பாதுகாப்பார் எப்போதுமே } – 2

1. நீ ஆபத்தில் இருந்தாலும் பரவாயில்ல
நீ தோல்வியில் இருந்தாலும் பரவாயில்ல
பார்ப்பார் பார்ப்பார் உன்னைப் பார்ப்பார்
உள்ளங்கையில் வரைந்து பார்ப்பார்

2. நீ நினைத்தது நடக்கலையா பரவாயில்ல
நீ எதிர்பார்த்தது கிடைக்கலையா பரவாயில்ல
நன்மை நன்மை எல்லாம் நன்மை
நடந்தது எல்லாம் என்றும் நன்மை

Summer Vanthale Kalakal Thane – சாம்மார் வந்தாலே கலக்கல் தானே

Summer Vanthale Kalakal Thane

Summer வந்தாலே கலக்கல் தானே
CGC -க்கு போனாலே Colourful தானே

பாடல் பாடி மகிழ
வசனம் கதை கேட்க } – 2
கற்றுகொள்ள போகலாம்
சீக்கிரம் வாங்க } – 2

இயேசுவுக்காய் வாழ
இயேசுவைப் போல மாற
இயேசப்பாவின் நோக்கத்தை
நிறைவேற்ற வாங்க

ரம்… பம்… பம்… பம்… பம்
-ப-ப-ப-ப….பம்…பம்…
CGC ஆரம்பம்
டம்…டம்…டம்…டம்…
ஊரெல்லாம் கொண்டாட்டம்

Yesuvin Pinne Pogathuninthen – இயேசுவின் பின்னே போக

1. இயேசுவின் பின்னே
போகத் துணிந்தேன் (3)

பின்னோக்கேன் நான்
பின்னோக்கேன் நான்

2. உலகம் என் பின்னே
சிலுவை என் முன்னே (3)

3. கஷ்டம் என் இன்பம்
நஷ்டம் என் லாபம் (3)

4. என் மீட்பர் பாதை
என்றும் பின்செல்வேன் (3)

5. இயேசு என் ஆசை
சீயோன் என் வாஞ்சை (3)

6. நேசரின் சித்தம்
செய்வதென் வாஞ்சை (3)

7. செல்வேன் நான் வேகம்
வெல்வேன் நான் கிரீடம் (3)

8. கேட்கும் ஓர் ஓசை
வா எந்தன் காந்தை (3)

9. கர்த்தர் என் மித்ரு
சாத்தான் என் சத்ரு (3)

10. இயேசு என் நேசர்
மாம்சம் என் தோஷம் (3)

Uthamamai Mun Sella – உத்தமமாய் முன் செல்ல

Uthamamai Mun Sella

உத்தமமாய் முன் செல்ல
உதவி செய்யும் யேகோவா

ஊக்கமதை கைவிடாமல்
காத்துக்கொள்ள உதவும் – 2

1. பலவிதமாம் சோதனைகள்
உலகத்தில் எம்மை வருத்தும்

சாத்தானின் அக்னி அஸ்திரங்கள்
எண்ணா நேரத்தில் தாக்கும் – 2

2. தீர்மானங்கள் தோற்கா வண்ணம்
காத்துக்கொள்ள உதவும்

நேர்மையாக வாக்கைக் காக்க
வழி வகுத்தருள வேண்டும் – 2

3. இவ்வுலக மாயாபுரி
அழியப் போவது நிச்சயம்

இரட்சகனே நீர் ராஜாவாக
வருவது அதி நிச்சயம் – 2

4. தூதரோடு பாடலோடு
பரலோகில் நான் உலாவ

கிருபை செய்யும் இயேசு தேவா
உண்மை வழிகாட்டியே – 2

Uththamamaai Mun Sella
Uthavi Seiyyum Yegovaa

Ookkamathai Kaividaamal
Kaaththukkolla Udhavum – 2

1. Palavithamaam Sothanaigal
Ulagaththil Emmai Varuththum

Saaththaanin Akkini Asthirangal
Ennaa Neraththil Thaakkum – 2

2. Theermaanangal Thorkaa Vannam
Kaaththukkolla Udhavum

Nermaiyaaga Vaakkai Kaakka
Vazhi Vaguththarula Vendum – 2

3. Ivvulaga Maayaapuri
Azhiya Povathu Nichchayam

Ratchagane Neer Raajaavaaga
Varuvathu Athi Nichchayam – 2

4. Thootharodu Paadalodu
Paralogil Naan Ulaava

Kirubai Seiyyum Yesu Devaa
Unmai Vazhikaattiye – 2

Kalvari Mamalai Mel – கல்வாரி மா மலைமேல் கை

Kalvari Mamalai Mel
கல்வாரி மா மலைமேல் கை கால்கள் ஆணிகளால்
கடாவப்பட்டவராய் கர்த்தர் தொங்கக் கண்டேன்
குருசின் வேதனையும் சிரசின் முள்முடியும்
குருதி சிந்துவதும் உருகிற் றென் மனதை

அஞ்சாதே என் மகனே மிஞ்சும் உன் பாவமதால்
நெஞ்சம் கலங்காதே தஞ்சம் நானே உனக்கு
எனக்கேன் இப்பாடு உனக்காகத்தானே
ஈனக்கோல மடைந்தேன் உன்னை ரட்சித்தேன் என்றார்

கர்த்தரின் சத்தமத்தை சத்தியம் என்று நம்பி
பக்தியுடன் விழுந்து முத்தம் செய்தேன் அவரை
என் பாவம் நீங்கியதே எக்கேடும் ஓடியதே
சந்தேகம் மாறியதே சந்தோசம் பொங்கியதே

Song Lyrics & Tune Composed by Rev. S. Devadason, Former Editor, Varukayin Thoothan & CSI Pastor at Karungal, Kannanore at the period of Bishop Gnanadason, KK Diocese.

Vaalibam Unnai Izhukudho – வாலிபம் உன்னை இழுக்குதோ

Vaalibam Unnai Izhukudho
வாலிபம் உன்னை இழுக்குதோ
வானத்தைத் தொடத் துடிக்குதோ
பாவங்கள் கண்ணை மறைக்குதோ
கைகள் செய்ய துடிக்கின்றதோ
உந்தன் சிந்தை மறைக்கின்றதோ (2)

வீறு கொண்டு வெளியே வா
சிறகை விரித்து பறந்து வா
சோதனை ஜெயித்து எழும்பி வா
நீ சாதனை செய்ய விரைந்து வா (2)

உலகின் வாழ்க்கை ஒன்று தானே
மறந்து நீ போகாதே
இன்று மறித்தால் எங்கு செல்வாய்
காலமும் நில்லாதே
மயக்கும் எல்லாம் மாயை தானே
மதி கெட்டு போகாதே
சிதைக்கும் உன்னை சில்லரை ஆக்கும்
சீர் கெட்டுப் போகாதே
கானல் போன்ற வாழ்க்கையெல்லாம்
மறைந்து போதும் முன்பே
உன்னைப் படைத்த சிருஷ்டிகரை நீ
மறந்து போகாதே
சத்திய தேவன் அவர் நித்தியம் தருபவர்
வாழ்வை இழந்தவற்கு வழியை திறப்பவர்
சத்திய தேவனை நீ நித்தமும் தேடிடு
ஜீவனைக் கொடுத்தவற்கு வாழ்வை கொடுத்திடு

வீறு கொண்டு வெளியே வா
சிறகை விரித்து பறந்து வா
சோதனை ஜெயித்து எழும்பி வா
நீ சாதனை செய்ய விரைந்து வா (2)

Yen Indha Kolam – ஏன் இந்த கோலம்

ஏன் இந்த கோலம் என் ஐயனே
ஏன் இந்த கோரம் சொல் மெய்யனே (2)
சிலுவையை சுமந்தது எதற்காக
சிந்திய இரத்தமே யாருக்காக
சிலுவையிலே மறித்தீர் எதற்காக – ஏன்

அழகுமில்லை செளந்தர்யமில்லை
ஆண்டவர் என்னும் அந்தஸ்துமில்லை (2)
கள்ளருக்கு நடுவே கள்வராய் தோன்றி
கள்ளருக்கு நடுவே கள்வராய் தோன்றி
குற்றவாளி என்று நீர் காட்சியளித்தீர்
குற்றவாளி என்று நீர் காட்சியளித்தீர் – ஏன்

வானத்து வெளிகளின் சூரிய சந்திரன்
உளாவிடும் விண்மீன்கள் படைத்திட்ட இறைவா (2)
மனிதன் உம்மை வதைத்திட்ட போதும்
ஈன மனிதன் இகழ்ந்திட்ட போதும்
இறைவனின் மகனே மெளனம் ஏனோ
இறைவனின் மகனே மெளனம் ஏனோ – ஏன்

அரசருக்கெல்லாம் அரசரும் நீரே
ஆண்டவர்க்கெல்லாம் ஆண்டவர் நீரே (2)
உமக்கு கிடைத்ததோ முள்முடி கிரீடம்
உமக்கு கிடைத்ததோ முள்முடி கிரீடம்
உலகம் தந்ததோ சிறுவையின் பாரம்
உலகம் தந்ததோ சிறுவையின் பாரம் – ஏன்

Ulagin Oliye Yesuve – உலகின் ஒளியே இயேசுவே

Ulagin Oliye Yesuve

உலகின் ஒளியே இயேசுவே
அகிலம் போற்றும் தெய்வமாம்
அன்பின் தெய்வம் வேறுஇல்லை
அவரை அண்டியே சேர்ந்திடுவாய்

இயேசு நல்லவரே
இயேசு வல்லவரே
மனதின் இருளை நீக்கிடுவார்
உள்ளம் திறந்தே ஏற்பாய்

1. பாவம் போக்க வந்தவர்
சாபம் யாவும் நீக்குவார்
இவரை அல்லால் வழியும் இல்லை
அகத்தில் இவரை ஏற்றிடுவாய் – இயேசு

2. பாவங்கள் யாவும் அகற்றிடவே
பரிவாய் வந்தார் உலகினிலே
சாவை ஜெயித்தார் ரோகம் தொலைத்தார்
உந்தன் நாயகனாம் இவரை – இயேசு

3. தேவ மைந்தனாய் வந்தவர்
மாலும் மாந்தரை மீட்கவே
கருணை தேவன் அன்பின் தெய்வம்
எந்தன் நாயகனாம் இவரே – இயேசு

Anbu Yesuvin Anbu – அன்பு இயேசுவின் அன்பு

Anbu Yesuvin Anbu
அன்பு இயேசுவின் அன்பு – அது
அளவிடமுடியாதது
நம்பு நீ அதை நம்பு – இந்த
இகமதில் கிடைக்காதது

1. தந்தை தாய் அன்பொருநாள் – அது
தணிந்தே போய்விடும் – தன்
பிள்ளையின் அன்பொருநாள் – அது
பிரிந்தே போய்விடும்

2. என்றென்றும் மாறாதது – என்
இயேசுவின் தூய அன்பு
என் வாழ்வில் தீராதது – என்
தேவனின் ஜீவ அன்பு

3. கணவனின் அன்பொருநாள் – அது
கரைந்தே போய்விடும் – நல்ல
மனைவியின் அன்பொருநாள் – அது
மறைந்தே போய்விடும்

4. உறவினர் அன்பொருநாள் – அது
ஒழிந்தே போய்விடும் – உடன்
பிறந்தவர் அன்பொருநாள் – அது
அழிந்தே போய்விடும்

5. நண்பனின் அன்பொருநாள் – அது
நழுவியே போய்விடும் – நீ
நம்பினோர் அன்பொருநாள் – அது
வழுவியே போய்விடும்

Varusha Thovakathil

Varusha Thovakathil
வருஷத் துவக்கத்தில்
வந்தேன் இயேசு நாமத்தில்

பல்லவி
அஞ்சிடேன் என் வல்ல மீட்பர்
தஞ்சம் தந்து என்னைக் காப்பார்
நெஞ்சத்தில் விசார மேன் ?
நேசரைப் பின் பற்றுவேன்

1. வருங்காலம் அறியேன்
ஆயினும் நான் கலங்கேன்

2. சாத்தான் வந்தெதீத்தாலும்
சத்ரு மூர்க்கங் கொண்டாலும்

3. கஷ்டமோ ? கலக்கமோ ?
துஸ்டரின் இடுக்கமோ ?

4. சுகமோ ? வியாதியோ ?
துக்கமோ ? மகிழ்ச்சியோ ?

5. நித்திய யெகோவா ! உம்
சித்தமே, என் பாக்கியம்