All Songs by david

Oadivaaroyo Nanbaa – ஓடி வாராயோ நண்பா உன்

Oadivaaroyo Nanbaa
ஓடி வாராயோ நண்பா உன்
நேசர் அழைக்கிறார் இன்றே
இன்றே திரும்புவாய் கண்டு

1. ஆழ்ந்த கடலில் அமிழும் போது
அணைத்துக் காப்பதும் அவர் கரம் – அன்பின்
குரலின் பெயரை அழைத்தே
தாவி அணைப்பதும் அவர் கரம் – ஓடி

2. கள்ளமற்ற அன்பை வார்த்தே
காத்துக் கொள்வதும் அவர் கரம்
ஒன்றுமில்லா தூசி நம்மை
உயர்த்துவதும் அவர் கரம் – ஓடி

3. சீறும் புயலின் தீமை நின்றே
மறைத்து காப்பதும் அவர் கரம்
பாதை மாறிய கால்களுக்கு தீபம்
காட்டும் அவர் கரம் – ஓடி

4. உற்ற உறவும் கைவிட்டாலும்
உரிமை கொள்ளும் அவர் கரம்
உண்மை அறிவும் சிறந்த ஞானமும்
ஏந்தி தருவதும் அவர் கரம் – ஓடி

5. மாமுடி மன்னர் வருகைக்காக
காத்திருக்கும் தாசர்கள்
அன்பின் பிணைப்பில் ஆறுதல் பெற்றே
அழைத்துக் காப்பதும் அவர் கரம் – ஓடி

6. எங்கு பார்த்தாலும் காயம் காயம் தோய்ந்த
ஒளியின் கரங்கள் காணுதே
வந்து பலத்த மார்பில்
சாய்ந்து கொள்ள மாட்டாயோ – ஓடி

Oru Kodi Paadalgal – ஒரு கோடிப்பாடல்கள்

Oru Kodi Paadalgal
ஒரு கோடிப்பாடல்கள் நான் பாடுவேன் – அதைப்
பாமாலையாக நான் சூடுவேன்
உலகெல்லாம் நற்செய்தி நானாகுவேன் – உந்தன்
புகழ்ப்பாடி புகழ்ப்பாடி நான் வாழுவேன்

1. இளங்காலைப் பொழுதுந்தன் துதிபாடுதே – அங்கு
விரிகின்ற மலர் உந்தன் புகழ்பாடுதே (2)
அலை ஓயாக் கடல் உந்தன் கருணை மனம் – வந்து
கரை சேரும் நுரை யாவும் கவிதைச் சரம் (2) – ஆதியும்…

ஆதியும் நீயே அந்தமும் நீயே
பாடுகிறேன் உனை இயேசுவே
அன்னையும் நீயே தந்தையும் நீயே
போற்றுகிறேன் உனை இயேசுவே

2. மனவீணை தனை இன்று நீ மீட்டினாய் – அதில்
மலர்பாக்கள் பலகோடி உருவாக்கினாய் (2)
என் வாழ்வும் ஒரு பாடல் இசை வேந்தனே – அதில்
எழும் ராகம் எல்லாம் உன் புகழ் பாடுதே (2)

Ummai Pola Maaranume – உம்மை போல மாறணுமே

Ummai Pola Maaranume
உம்மை போல மாறணுமே இயேசையா

நான் உம்மை போல மாறணுமே -2

உம்மை போல மாற்றிடுமே இயேசையா
எனை
உம்மை போல மாற்றிடுமே -2

1. பரிசுத்தம் பரிசுத்தம் பரிசுத்தம் தாருமே

உம்மை போல பரிசுத்தம் தாருமே

பரிசுத்த ஆவியால் நிரப்பியே

பரிசுத்த பாதையில் நடத்துமே

அன்புள்ள மனதுருக்கம் தாருமே

உம்மை போல அன்பாக மாற்றுமே

அன்புள்ள ஆவியால் நிப்பியே

அழகான பாதையில் நடத்துமே

2. சாந்தமும் தாழ்மையும் தாருமே

உம்மை போல மன்னிக்க உதவுமே

ஞானத்தின் ஆவியால் நிரப்பியே

பரலோக பாதையில் நடத்துமே

ஜெபத்தின் ஆவியை தாருமே

உம்மை போல ஆத்ம பாரம் தாருமே

மன்றாட்டின் ஆவியால் நிரப்பியே

உந்தனின் பாதையில் நடத்துமே

Ummai poala maaranumae yaesaiyyaa
Ummai poala maaranumae – 2
Ummai poala maatridumae yaesaiyyaa
Ummai poala maatridumae – 2

Parisuththam parisuththam parisuththam thaarumae
Ummai poala parisuththam thaarumae
Parisuththa aaviyaal nirappiyae
Parisuththa paadhaiyil nadathumae
Anbulla manadhurukkam thaarumae
Ummai poala anbaaga maatrumae
Anbulla aaviyaal nirappiyae
Azhagaana paadhaiyil nadathumae

Saanthamum thaazhmaiyum thaatumae
Ummai poal mannikka udhavumae
Gnaanathin aaviyaal nirappiyae
Paraloaga paadhaiyil nadaththumae
Jebathin aaviyai thaarumae
Ummai poala aathma baaram thaarumae
Mandraattin aaviyaal nirappiyae
Undhanin paadhaiyil nadaththumae

Kalanguvathen Kanneer – கலங்குவதேன் கண்ணீர்

Kalanguvathen Kanneer
கலங்குவதேன் கண்ணீர் விடுவதுமேன்

நேசரின் கரங்களே தேற்றுமே

இயேசுவின் காயங்கள் ஆற்றுமே..

சோர்ந்து போன உன் உள்ளம் பார்க்கிறார்

உடைந்து போன உன் நெஞ்சம் காண்கிறார்

அழைத்த தேவன் உன்னை நடத்தி செல்வார்

கண்ணீரை துடைப்பார் கவலைகள் மாற்றுவார்..

புது ஜீவன் ஊற்றுவார் புது சிருஷ்டி ஆக்குவார்!

அவருக்கான உன் இழப்புகள் பார்க்கிறார்

அவருக்கான உன் அலைச்சல்கள் காண்கிறார்

நீதி தேவன் உனக்கு நியாயம் செய்வார்

நிச்சயம் பலன் தருவார் உறுதியாய் உயர்த்திடுவார்

தோல்வியில் ஜெயம் தருவார்

வியாதியில் சுகம் தருவார்

Kalanguvadhaen kanneer viduvadhumaen
Naesarin Karangalae thaetrumae
Yaesuvin kaayangal aatrume

Saorndhu paona un ullam paarkkiraar
Udaindhupaona un nenjam kaangiraar
Azhaiththa dhaevan unnai nadaththi selvaar
Kaneergal thudaippaar kavalaigal maatruvaar
Pudhu jeevan ootruvaar pudhu sirushtiyaakkuvaar

Avarukkaana un izhappugal paarkkiraar
Avarukkaana un alaichchalgal kaangiraar
Needhi dhaevan unakku niyaayam seivaar
Nichchayam palan tharuvaar urudhiyaai uyarththiduvaar
Thoalviyil jeyam tharuvaar
Viyaadhiyil sugam tharuvaar

Ella Namathirkum Miga – எல்லா நாமத்திற்கும் மிக

Ella Namathirkum Miga Melana Namam

எல்லா நாமத்திற்கும் மிக மேலான நாமம்
இயேசுவின் நாமமே
எல்லா தலைமுறையும் என்றும் போற்றிடும்
நாமம் இயேசுவின் நாமமே (2)

இயேசு நாமமே.. ஜெயம் ஜெயமே..
சாத்தானின் சக்தி ஒன்றுமில்லையே (2)

அல்லேலூயா ஓசன்னா அல்லேலூயா
அல்லேலூயா ஆமென் (2)

1. பாவத்திலிருந்து இரட்சித்ததே
இயேசுவின் நாமமே
நித்ய நரகத்திலிருந்து விடுவித்ததே
கிறிஸ்தேசுவின் நாமமே (…இயேசு நாமமே)

2. சாத்தானின் மேல் அதிகாரம் தந்ததே
இயேசுவின் நாமமே
சத்ரு கோட்டைகளை தகர்த்தெறிந்திட்டதே
கிறிஸ்தேசுவின் நாமமே (…இயேசு நாமமே)

3. சரீர வியாதிகளைக் குணமாக்குதே
இயேசுவின் நாமமே
தொல்லைக் கஷ்டங்கள் அனைத்தையும் நீக்கிடுதே
கிறிஸ்தேசுவின் நாமமே (… இயேசு நாமமே)

Ellaa Naamatthirkum Miga Melaana Naamam
Yesuvin Naamame
Ellaa Thalaimuraiyum Endrum Pottridum Naamam
Yesuvin Naamame (2)

Yesu Naamame.. Jeyam Jeyame..
Saathanin Sakthi Ondrumillaiye (2)

Alleluyaa Osanna Alleluyaa
Alleluyaa Aamen (2)

1. Paavathilirunthu Ratchitthathe
Yesuvin Naamame
Nithya Naragathilirunthu Viduviththathe
Kristhesuvin Naamame (…Yesu Naamame)

2. Saathaanin Mel Adhigaaram Thanthathe
Yesuvin Naamame
Sathru Kottaigalai Thagarth Therinthittadhe
Kristhesuvin Naamame (…Yesu Naamame)

3. Sareera Vyathigalai Gunamaakkuthe
Yesuvin Naamame
Thollaik Kashtangal Anaithaiyum Neekkiduthe
Kristhesuvin Naamame (…Yesu Naamame)

Azhagu En Yesu Azhagu – அழகு என் இயேசு

Azhagu En Yesu Azhagu
அழகு என் இயேசு அழகு
அவர் பார்த்தாலே நானும் நீயும் அழகு (2)

1. நடந்தாலும் நடையும் ஒரு அழகு – 2
அவர் நின்றாலும் நிழலும் ஒரு அழகு
நடந்தாலும் நடையும் ஒரு அழகு
இயேசு நின்றாலும் நிழலும் ஒரு அழகு
அவர் பார்த்தாலே பார்வை ஒரு அழகு -2
அவர் சிரித்தாலும் சிரிப்பும் ஒரு அழகு அழகு – அழகு

2. சொன்னாலும் சொல்லும் ஒரு அழகு – 2
அவர் செய்தாலும் செயலும் ஒரு அழகு
சொன்னாலும் சொல்லும் ஒரு அழகு
அவர் செய்தாலும் செயலும் ஒரு அழகு
அவர் அன்பும் அளவில்லாத அழகு – 2
அவர் அறிவும் உலகத்தில் ஒரு அழகு அழகு – அழகு

3. அழைத்தாலும் அழைப்பும் ஒரு அழகு -2
அவர் அணைத்தாலும் அணைப்பும் ஒரு அழகு
அழைத்தாலும் அழைப்பும் ஒரு அழகு
அவர் அணைத்தாலும் அணைப்பும் ஒரு அழகு
அவர் வருகையில் நீயும் நானும் அழகு – 2
அந்த நித்தியத்துக்கு போகும் வழி அழகு அழகு – அழகு

Ummai Pola Appa Illai – உம்மை போல அப்பா இல்ல

Ummai Pola Appa Illai
உம்மை போல அப்பா இல்ல
உம்மை போல அம்மா இல்ல
உம்மை போல நண்பன் இல்ல
உம்மை போல யாரும் இல்ல – 2

இயேசுவே இயேசுவே இயேசுவே
உம்மை போல யாரும் இல்லப்பா – 2

1. பயப்படாதே மகனே நான் உன்னோடிருக்கிறேனே – 2
திகையதே மகனே நான் உன் தேவன் என்று – 2

2. நீ ஆறுகளை கடக்கையிலே மூழ்கி போக மாட்டாய் – 2
அக்கினியில் நடக்கையிலே வேகாமல் இருப்பாய் – என்று – 2

3. உன் தாய் உன்னை மறந்தாலும் நான் உன்னை மறப்பதில்லை – 2
உன்னை எந்தன் உள்ளங்கையிலே வரைந்து உள்ளேன் – என்று – 2

Ummai Pola Appa Illai
Ummai poala ammaa illa
Ummai poala nanban illa
Ummai poala yaarum illa – 2

Yaesuvae Yaesuvae Yaesuvae
Ummai poala yaarum illappaa – 2

1. Bayapadaadhae maganae naan
Unnoadirukkiraenae – 2
Thigaiyaadhae maganae naan un dhaevan endru – 2

2. Nee aarugalai kadakaiyilae moozhgi poaga maataai – 2
Akkininiyil nadakaiyilae vaegamaal iruppaai – endru – 2

3. Un thaai unnai marandhaalum naan unnai marappadhillai – 2
Unnai endhan ullangaiyilae varaindhu ullaen – endru – 2

Devane Naan Umathandaiyil – தேவனே நான் உமதண்டையில்

Devane Naan Umathandaiyil
தேவனே, நான் உமதண்டையில் – இன்னும் நெருங்கிச்
சேர்வதே என் ஆவல் பூமியில்
மாவலிய கோரமாக வன் சிலுவை மீதினில் நான்
கோவே, தொங்க நேரிடினும்
ஆவலாய் உம்மண்டை சேர்வேன்

1. யாக்கோபைப்போல், போகும் பாதையில் – பொழுது பட்டு
இராவில் இருள் வந்து மூடிட
தூக்கத்தால் நான் கல்லில் சாய்ந்து தூங்கினாலும் என் கனாவில்
நோக்கியும்மை கிட்டிச் சேர்வேன், வாக்கடங்கா நல்ல நாதா! – தேவனே

2. பரத்துக்கேறும் படிகள் போலவே – என் பாதை தோன்றப்
பண்ணும் ஐயா, என்றன் தேவனே,
கிருபையாக நீர் எனக்குத் தருவதெல்லாம் உமதண்டை
அருமையாய் என்னையழைத்து அன்பின் தூதனாகச் செய்யும் – தேவனே

3. நித்திரையினின்று விழித்துக் – காலை எழுந்து
கர்த்தாவே, நான் உம்மைப் போற்றுவேன்;
இத்தரையில் உந்தன் வீடாய் என்துயர்க் கல் நாட்டுவேனே,
என்றன் துன்பத்தின் வழியாய் இன்னும் உம்மைக் கிட்டிச் சேர்வேன் – தேவனே

4. ஆனந்தமாம் செட்டை விரித்துப் – பரவசமாய்
ஆகாயத்தில் ஏறிப் போயினும்
வான மண்டலங் கடந்து பறந்து மேலே சென்றிடினும்
மகிழ்வுறு காலத்திலும் நான் மருவியும்மைக் கிட்டிச் சேர்வேன் – தேவனே

Devane Naan Umathandaiyil – Innum Nerungich
Servathae En Aaval Poomiyil
Maavaliya Koramaaka Van Siluvai Meethinil Naan
Kovae, Thonga Naeritinum
Aavalaay Ummanntai Servaen

1. Yaakkopaippol, Pokum Paathaiyil – Poluthu Pattu
Iraavil Irul Vanthu Mootida
Thookkaththaal Naan Kallil Saaynthu Thoonginaalum En Kanaavil
Nnokkiyummai Kittich Servaen, Vaakkadangaa Nalla Naathaa! – Devane

2. Paraththukkaerum Patikal Polavae – En Paathai Thontap
Pannnum Aiyaa, Entan Thaevanae,
Kirupaiyaaka Neer Enakkuth Tharuvathellaam Umathanntai
Arumaiyaay Ennaiyalaiththu Anpin Thoothanaakach Seyyum – Devane

3. Niththiraiyinintu Viliththuk – Kaalai Elunthu
Karththaavae, Naan Ummaip Pottuvaen
Iththaraiyil Unthan Veedaay Enthuyark Kal Naattuvaenae
Entan Thunpaththin Valiyaay Innum Ummaik Kittich Servaen – Devane

4. Aananthamaam Settai Viriththup – Paravasamaay
Aakaayaththil Aerip Poyinum
Vaana Manndalang Kadanthu Paranthu Maelae Sentitinum
Makilvutru Kaalaththilum Naan Maruviyummaik Kittich Servaen – Devane

Joraa Kaiyathatti – ஜோரா கையத் தட்டி

Joraa Kaiyathatti
ஜோரா கையத் தட்டி பாடுங்க
இஸ்ரவேலின் பரிசுத்தர பாடுங்க (2)
துதிக்கு பாத்திரர் கனத்துக்கு பாத்திரர்
மகிமைக்கு பாத்திரர் நீதானய்யா (2)

நீதிமான்கள் துதிக்கும்போது
வெற்றிக் கொண்டாட்டம் பெருகுதுங்க (2)
நீதிமான்கள் பெருகும் போது
பட்டணமெல்லாம் களிகூறுதே (2)
உன்னதமான கர்த்தரையே உயர்த்தி பாடிடுவோம் – 2
மகிழ்ந்து பாடி கொண்டாடுவோம் – 2 ஜோரா…

நமது தேவன் பெரியவரும்
ஸ்தோத்தரிக்கத் தக்கவரும் (2)
தமது மகிமையின் பிரசனத்தால்
பர்வதம் மெழுகு போல் உருகிடுதே (2)
உன்னதமான கர்த்தரையே உயர்த்தி பாடிடுவோம் -2
மகிழ்ந்து பாடி கொண்டாடுவோம் -2 ஜோரா
அல்லேலூயா ஆமென் அல்லேலூயா

நமது தேவன் எழுந்தருளி
சத்துருக்கள சிதறப் பண்ணி (2)
சீயோனுக்கு தயைசெய்து
சிறையிருப்பை திருப்பிடுவார் (2)
உன்னதமான கர்த்தரையே உயர்த்தி பாடிடுவோம் – 2
மகிழ்ந்து பாடி கொண்டாடுவோம் – 2 ஜோரா

Deva Devane Yesu Rajane

தேவ தேவனே இயேசு ராஜனே
உம்மைக் காணும் இருதயம் மகிழும்
எனது எஜமானரே என்
மனதின் மணவாளரே

என் இதய சிங்காசனத்தினிலே
வீற்றிருக்கும் என் ராஜாவே
வானாதி வானங்கள் உமக்கிருக்க
இந்த இதயம் தான் உம் வீடானதோ
என்னில் நீர் வாழ்ந்திட
என்ன நான் செய்தேனோ

நான் உம்மை மறந்து பிரிந்திட்ட போதும்
நினைத்து நினைத்து ஏங்கினீரே
நான் உம்மை வெறுத்து ஓடின போதும்
நீர் என்னை உயிராய் நேசித்தீரே
இது தான் இயேசுவே அநாதி சிநேகமோ

நான் என்னை உயிராய் நேசிப்பதைவிட
நீர் என்னை அதிகமாய் நேசிக்கின்றீரே
பாவியில் நான் பெரும்பாவியாய் வாழ்ந்தும்
பாசமாய் உயிரையே கொடுத்தீரே
இது தான் இயேசுவே அன்பின் எல்லையோ