Song Category: Tamil

Intha Kaalam Pollathathu – இந்த காலம் பொல்லாதது

Intha Kaalam Pollathathu
இந்த காலம் பொல்லாதது
உன்னைக் கர்த்தர் அழைக்கிறார்
நீ வாழும் உலகம் தான்
அது வாடகை வீடு தான்

1. உன்னை ரட்சிக்க உன் கூடவே இருக்கிறேன்
என்று வாக்கு அளித்தவர்
இன்னும் காத்து வருகிறார்

2. வாலிப நாட்களில் உன் தேவனைத் தேடிவா
சாத்தான் களத்தினில் போராட
ஜெய வீரனாய் திகழ வா

3. பாவத்தின் சம்பளம் எரிநரகம் தான் திண்ணமே
சத்திய தேவனின் கிருபையோ
நித்திய ஜீவனை அருளுமே

4. காலமோ முடியுதே தேவ ராஜ்ஜியம் நெருங்குதே
மனம் திரும்பி நீ வாழவே
மன்னன் இயேசுன்னை அழைக்கிறார்

Neere Vali Neere Sathyam – நீரே வழி நீரே சத்தியம்

Neere Vali Neere Sathyam
நீரே வழி நீரே சத்தியம் நீரே ஜீவன்
வேறே ஒரு தெய்வம் இல்லை நீரே தேவன்
விண்ணிலும் மண்ணிலும் மெய்நாமம் உந்தன் நாமம் ஐயா
உமக்கு நிகர் என்றும் நீர் தான் ஐயா

1. கல்லுமல்ல மண்ணுமல்ல கல்லான ஓர் சிற்பமல்ல
ஜீவனுள்ள தேவன் என்றால் நீர் தானையா
ரூபங்கள் உமக்கில்லை சொரூபமும் உமக்கி;ல்லை
ஆவியாய் இருக்கின்றீர் ஆண்டவரே

2. உண்டானது எல்லாமே உம்மாலே உண்டானது
உம்நாமம் மகிமைக்கே உண்டாக்கினீர்
படைப்பு தெய்வமல்ல பார்பதெல்லாம் தெய்வமல்ல
கர்த்தர் நீர் ஒருவரே தெய்வம் ஐயா

3. எல்லாம் வல்ல தெய்வம் நீரே எல்லை இல்லாதவரே
உம்மாலே ஆகாதது ஒன்றுமில்லையே
வானம் உம் சிங்காசனம் பூமி உந்தன் பாதப்படி
நடப்பதெல்லாம் உம் விருப்பப்படி

Neere Vali Neere Sathyam Neere Deivam
Veru Oru Devam Illai Neerae Devan

Vinnilum Malilum Mei
Naamam Undhan Naamam Ayya (2)
Umakku Nigar Endrum Neer Than Ayya

1. Kallum Alla Mannum Alla Kallaal Oar
Sirppam Alla Jeevanulla Devan Endral Neer Than Ayya
Roobangal Umakillai Sorubangal Umakillai
Aaviyaai Irukkireer Aandavare – 2 – Neerae

2. Undaanadhu Ellame Ummale Undanadhu
Um Naama Magimaikku Undaakkineer
Padaippu Deivamalla Paarppadhellam Deivamalla
Karththar Neer Oruvare Kadavulaiyya -2 – Neerae

3. Ellam Valla Deivam Neere Ellai Illaadhavare
Ummalae Aagadhadhu Ondru Millaye
Vaanaam Um Singaasanam Boomi
Undhan Paadhap Padi
Nadappadhellam Um Viruppappadi – 2 – Neerae

Lyrics By : Ravi Bharath

Anbe Anbe Anbe Aaruyir Urave – அன்பே அன்பே அன்பே

Anbe Anbe Anbe Aaruyir Urave

அன்பே.. அன்பே..
அன்பே ஆருயிர் உறவே
ஆனந்தம் ஆனந்தமே (2)

1 . ஒரு நாள் உம் தயை கண்டேனையா
அந்நாளென்னை வெறுத்தேனையா
உம் தயை பெரிதையா – என்மேல் (2)

2. அலைந்தேன் பலநாள் உமையும் அறியா
மறந்தே திரிந்த துரோகியை
அணைத்தீர் அன்பாலே – எனையும் (2)

3. பூலோகத்தின் பொருளின் மகிமை
அழியும் புல்லின் பூவைப்போல்
வாடாதே ஐயா – அன்பு (2)

4. பரலோகத்தின் அருமைப் பொருளே
நரலோ கரிலன்பேனையா?
ஆழம் அறிவேனோ – அன்பின் (2)

5. இப்பாரினில் உம் அன்பின் இனிமை
இயம்பற் கியலாதாகில் யான்
இசைக்கவும் எளிதாமோ – பரத்தில் (2)

Anbe Anbe
Anbe Aaruyir Urave
Aanandham Aanandhame (2)

1. Oru Naal Um Dhayai Kandenaiyaa
Annaal Ennai Veruththen Aiyaa
Um Dhayai Peridhaiyaa – En Mel (2)

2. Alaindhen Palanaal Umaiyum Ariyaa
Marandhe Thirindha Throgiyai
Anaiththeer Anbaale – Enaiyum (2)

3. Poologaththin Porulin Magimai
Azhiyum Pullin Poovai Pol
Vaadaadhe Aiyaa – Anbu (2)

4. Paralogaththin Arumai Porule
Naralo Garilanbenaiyaa
Aazham Ariveno – Anbin (2)

5. Ippaarinil Um Anbin Inimai
Iyambar Kiyalaathaagil Yaan
Isaikkavum Elidhaamo – Paraththil (2)

Kathiravan Thondrum – கதிரவன் தோன்றும் காலையிதே

Kathiravan Thondrum
கதிரவன் தோன்றும் காலையிதே
புதிய கிருபை பொழிந்திடுதே – நல்
துதி செலுத்திடுவோம் இயேசுவுக்கே

1. வான சுடர்கள் கானக ஜீவன்
வாழ்த்திடவே பரன் மாட்சிமையே
காற்று பறவை ஊற்று நீரோடை
கர்த்தருக்கே கவி பாடிடுதே – கதிரவன்

2. காட்டில் கதறி கானக ஓடை
கண்டடையும் வெளி மான்களைப் போல்
தாகம் தீர்க்கும் ஜீவத் தண்ணீராம்
தற்பரன் இயேசுவைத் தேடிடுவோம் – கதிரவன்

3. கர்த்தர் கிருபை என்றென்றும் ஓங்க
கர்த்தரே நல்லவர் என்றுரைப்போம்
கேருபீன்கள் மத்தியில் வாழும்
கர்த்தர் இக்காலையில் எழுந்தருள்வார் – கதிரவன்

4. எந்தன் உதடும் உந்தனைப் போற்றும்
என் கரங்கள் குவிந்தே வணங்கும்
பாக்கியம் நான் கண்டைந்தேனே
யாக்கோபின் தேவனே என் துணையே – கதிரவன்

5. காலை விழிப்பே கர்த்தரின் சாயல்
கண்களும் செவியும் காத்திருக்கும்
பாதம் அமர்ந்து வேதமே ருசித்து
கீதங்கள் பாடியே மகிழ்ந்திடுவேன் – கதிரவன்

6. வானம் பூமி யாவையும் படைத்தீர்
வானம் திறந்தே தோன்றிடுவீர்
ஆவல் அடங்க என்னையும் அழைக்க
ஆத்தும நேசரே வந்திடுவீர் – கதிரவன்

Kalvariye Kalvariye – கல்வாரியே கல்வாரியே

Kalvariye Kalvariye
கல்வாரியே கல்வாரியே
கல் மனம் உருக்கிடும் கல்வாரியே – என்

1. பாவி துரோகி சண்டாளன் நானாயினும்
பாதகம் போக்கிப் பரிவுடன் இரட்சித்த – கல்வாரியே

2. பாவியை மீட்கவே நாயகன் இயேசு தம்
ஜீவனின் இரத்தத்தைச் சிந்தின உன்னத – கல்வாரியே

3. நாதன் எனக்காக ஆதரவற்றோராய்ப்
பாதகர் மத்தியில் பாதகன் போல் தொங்கும் – கல்வாரியே

4. முள்முடி சூடியே கூர் ஆணி மீதிலே
கள்ளனை போல என் நாயகன் தொங்கிடும் – கல்வாரியே

5. சர்வம் படைத்தாளும் சொர்லோக நாயகன்
கர்மத்தின் கோலமாய் நிற்பதைக் காண்பேனோ – கல்வாரியே

6. எண்ணும் நன்மை ஏதும் என்னிலே இல்லையே
பின்னை ஏன் நேசித்தீர் என்னை என் பொன் நாதா – கல்வாரியே

7. இவ்வித அன்பை நான் எங்குமே காணேனே
எவ்விதம் இதற்கீடு ஏழை நான் செய்குவேன் – கல்வாரியே

Kalvariye Kalvariye
Kalvaariyae Kalvaariyae
Kal Manam Urukkidum Kalvaariyae – En

1. Paavi Thuroki Sanndaalan Naanaayinum
Paathakam Pokkip Parivudan Iratchiththa – Kalvaariyae

2. Paaviyai Meetkavae Naayakan Yesu Tham
Jeevanin Iraththaththaich Sinthina Unnatha – Kalvaariyae

3. Naathan Enakkaaka Aatharavatroraai
Paathakar Maththiyil Paathakan Pol Thongum – Kalvaariyae

4. Mulmuti Sootiyae Koor Aanni Meethilae
Kallanai Pola En Naayakan Thongidum – Kalvaariyae

5. Sarvam Pataiththaalum Sorloka Naayakan
Karmaththin Kolamaay Nirpathaik Kaannpaeno – Kalvaariyae

6. Ennnum Nanmai Aethum Ennilae Illaiyae
Pinnai Aen Naesiththeer Ennai En Pon Naathaa – Kalvaariyae

7. Ivvitha Anpai Naan Engumae Kaanneenae
Evvitham Ithargeedu Aelai Naan Seykuvaen – Kalvaariyae

Aaviyanavare Aaviyanavare – ஆவியானவரே ஆவியானவரே

Aaviyanavare Aaviyanavare
ஆவியானவரே ஆவியானவரே
பரிசுத்த ஆவியானவரே
அன்பின் ஆவியே
அபிஷேகம் இன்று தாருமே

1. பாத்திரம் நிரம்பி வழிய வேண்டுமே
கன்மலை தடாகமாக வேண்டுமே
கற்பாறை நீரூற்றாக வேண்டுமே
வரப்புகள் யாவும் தணிய வேண்டுமே – ஆவியானவரே

2. ஜனத்தின்மேல் அசைவாட வேண்டுமே
ஜனத்தின் பாவம் உணர்த்த வேண்டுமே
ஒழுங்கின்மை மாற வேண்டுமே
வெறுமை நிறைவாக வேண்டுமே – ஆவியானவரே

3. நாவிலே அக்கினி வேண்டுமே
உள்ளத்திலே ஜீவ நதி ஓடவே
பெருங்காற்று முழக்கம் வேண்டுமே
இருக்குமிடம் அசைய வேண்டுமே – ஆவியானவரே

4. அந்நிய பாஷைகளைப் பேசியே
மண்ணிலே சாட்சியாக வாழுவேன்
விண்ணிலே உம்மை நான் சந்திக்க
புண்ணியரே என்னையும் நிரப்புமே – ஆவியானவரே

5. வல்லமை வரங்கள் வேண்டுமே
சொல்லவும் வாக்கு வேண்டுமே
கள்ளங்கபடு மாற வேண்டுமே
உள்ளத்திலே தேவ அன்பு ஊற்றுமே – ஆவியானவரே

6. உள்ளத்திலே ஆறுதல் வேண்டுமே
வாழ்விலே மாறுதல் வேண்டுமே
ஊழியத்தில் எழுப்புதல் வேண்டுமே
பாழிடங்கள் அரண்மனையாகவே – ஆவியானவரே

Varavenum Enatharasae – வரவேணும் எனதரசே

varavenum enatharasae
வரவேணும் எனதரசே
மனுவேல், இஸ்ரேல் சிரசே
அருணோதயம் ஒளிர் பிரகாசா
அசரீரி ஒரே சரு வேசா

1. வேதா கருணாகரா மெய்யான பராபரா
ஆதார நிராதரா அன்பான சகோதரா
தாதாவும் தாய் சகலமும் நீயே
நாதா, உன் தாபரம் நல்குவாயே – வரவேணும்

2. படியோர் பவ மோசனா, பரலோக சிம்மாசனா
முடியாதருள் போசனா, முதன் மாமறை வாசனா
இடையர் குடிலிடை மேவி எழுந்தாய்
இமையவர் அடி தொழு மேன்மையின் எந்தாய் – வரவேணும்

3. வானோர் தொழும் நாதனே, மறையாகம போதனே
கானாவின் அதீதனே, கலிலேய வினோதனே
ஞானாகரமே, நடு நிலை யோவா
நண்பா, உனத நன்மையின் மகா தேவா! – வரவேணும்

Yesu Kristuvin Anbu – இயேசு கிறிஸ்துவின் அன்பு

Yesu Kristuvin Anbu
இயேசு கிறிஸ்துவின் அன்பு என்றும் மாறாதது
இயேசு கிறிஸ்துவின் மாறா கிருபை என்றும் குறையாதது

1. உன் மீறுதல்கட்காய் இயேசு காயங்கள் பட்டார்
உன் அக்கிரமங்கட்காய் இயேசு நொறுக்கப்பட்டார்
உனக்காகவே அடிகள் பட்டார்
உன்னை உயர்த்த தன்னைத் தாழ்த்தினார் – இயேசு கிறிஸ்துவின்

2. பாவி என்றுன்னை அவர் தள்ளவே மாட்டார்
ஆவலாய் உன்னை இயேசு அழைக்கிறாரே
தயங்கிடாதே தாவி ஓடி வா
தந்தை இயேசுவின் சொந்தம் கொள்ள வா – இயேசு கிறிஸ்துவின்

Yesu Kristuvin Anbu
Entum Maaraathathu
Yesu Kiristhuvin Maaraa Kirupai
Entum Kuraiyaathathu

1. Un Meeruthalkalkaay Yesu Kaayangal Pattar
Un Akkiramangalkaay Yesu Norukkappattar
Unakkaakavae Avar Adikkappattar
Unnai Uyarththa Thannai Thaalththinaar – (2) – Yesu

2. Paavi Entennai Avar Thallavae Maattar
Aavalaai Unnai Alaikkiraarae
Thayangidaathae Thaavi Otivaa
Thanthai Yesuvin Sontham Kollavaa – (2) – Yesu

Kalvari Anbai Ennidum Velai – கல்வாரி அன்பை எண்ணிடும்

Kalvari Anbai Ennidum Velai
கல்வாரி அன்பை எண்ணிடும் வேளை
கண்கள் கலங்கிடுதே
கர்த்தா உம் பாடுகள் இப்போதும் நினைத்தால்
நெஞ்சம் நெகிழ்ந்திடுதே

கெத்சமனே பூங்காவிலே
கதறி அழும் ஓசை
எத்திசையும் தொனிக்கிறதே
எங்கள் மனம் திகைக்கின்றதே
கண்கள் கலங்கிடுதே – கல்வாரி

சிலுவையில் மாட்டி வதைத்தனரோ
உம்மை செந்நிறம் ஆக்கினரோ
அப்போதும் அவர்காய் வேண்டினீரே
அன்போடு அவர்களை கண்டீரன்றோ
அப்பா உம் மனம் பெரிதே – கல்வாரி

எம்மையும் உம்மைபோல் மாற்றிடவே
உம் ஜீவன் தந்தீரன்றோ
என் தலை தரைமட்டும் தாழ்த்துகின்றேன்
தந்து விட்டேன் அன்பின் கரங்களிலே
ஏற்று என்றும் நடத்தும் – கல்வாரி

Kalvaari anbai ennidum vaelai
Kangal kalangidudhae
Karththaa um paadugal ippoadhum ninaithaal
Nenjam negizhndhidudhae

Gethsamanae poongaavilae
Kadhari azhum oasai
Eththisaiyum dhonikkindradhae
Engal manam thigaikkindradhae
Kangal kalangidudhae – Kalvaari

Siluvaiyil maatti vadhaithanaroa
Ummai senniram aakkinaroa
Appoadhum avarkaai vaendineerae
Anboadu avargalai kandeerandroa
Appaa um manam peridhae – Kalvaari

Emmaiyum ummaipoal maatridavae
Um jeevan thandheerandroa
En thalai tharaimattum thaazhthukindraen
Thandhu vittaen anbin karangalilae
Aetru endrum nadathum – Kalvaari

Unthan Namathil Ellam Koodum – உந்தன் நாமத்தில் எல்லாம்

Unthan Namathil Ellam Koodum
உந்தன் நாமத்தில் எல்லாம் கூடும் எல்லாம் கூடுமே
உந்தன் சமுகத்தில் எல்லாம் கூடும் எல்லாம் கூடுமே

1. உந்தன் வார்த்தையால் புயல் காற்று ஓய்ந்தது
உந்தன் பார்வையால், திருந்தினார் பேதுரு

கூடாதது ஒன்றுமில்லையே – உம்மால்
உம்மால் கூடும் எல்லாம் கூடும்
கூடாதது ஒன்றுமில்லையே – உம்மால்

2. தாபித்தாள் மரித்தாள் ஜெபத்தால் உயிர்த்தாள்
திமிர்வாத ஐநேயா சுகமாகி நடந்தான் – கூடாதது

3. மீனின் வாயிலே காசு வந்ததே
கழுதையின் வாயிலே பேச்சு வந்ததே – கூடாதது

4. வாலிபன் ஜதீகு தூக்கத்தால் விழுந்தான்
இறந்தும் எழுந்தான் பவுல் அன்று ஜெபித்ததால் – கூடாதது

5. காலூன்றி நில்லென்று கத்தினார் பவுல் அன்று
முடவன் நடந்தான் லிஸ்திரா நகரிலே – கூடாதது