Song Category: Tamil

Maarave Aasaipadugiren – மாறவே ஆசைப்படுகிறேன்

Maarave Aasaipadugiren
மாறவே ஆசைப்படுகிறேன்
என்னை மாற்றிவிடும்
கருணை நேசரே – 2

1. என் சிந்தை மாறணும்
என் செயல்கள் மாறணும்
என் பேச்சு மாறணும்
என் பெருமை மாறணும்
– மாறவே ஆசை

2. என் நடை மாறணும்
என் உடை மாறணும்
என் உள்ளம் மாறணும்
ஐயா உம்மை போலவே
– மாறவே ஆசை

3. என் ஜெபம் மாறணும்
என் துதி மாறணும்
என் சுயம் சாகணும்
ஐயா உம்மை போலவே
– மாறவே ஆசை

Maaravae Aasaipadugiraen
Ennai Maatrividum
Karunai Naesarae – 2

1. En Sindhai Maaranum
En Seyalgal Maaranum
En Paechu Maaranum
En Perumai Maaranum
– Maaravae Aasaipadugiraen

2. En Nadai Maaranul
En Udai Maaranum
En Ullam Maaranum
Aiyaa Ummai Poalavae
– Maaravae Aasaipadugiraen

3. En Jebam Maaranum
En Thudhi Maaranum
En Suyam Maaranum
Aiyaa Ummai Poalavae
– Maaravae Aasaipadugiraen

Pali Beedatthil Vaithaen – பலிபீடத்தில் வைத்தேன் என்னை

Pali Beedatthil Vaithaen Ennai

பலிபீடத்தில் வைத்தேன் என்னை
பாவி என்னை ஏற்றுக் கொள்ளும் – 2

நிலையில்லா இந்த பூவுலகில்
நித்தம் உன் பாதையிலே – 2
நின் சித்தம் போல் உம் கரத்தால் – 2
நித்தம் வழிநடத்தும் – 2

வாலிப நாட்களில் வாஞ்சையுடன்
வந்தேன் உன் திருப்பாதம் – 2
வாருமய்யா வந்து என்னை – 2
வல்லமையால் நிரப்பும் – 2

பரிசுத்தம் இல்லா இவ்வுலகில்
பரிசுத்தமாய் ஜீவிக்க – 2
பரிசுத்தமான உம் இரத்தத்தால் – 2
பரிசுத்தமாக்கி விடும் – 2

Padaippu Ellam Umakkae – படைப்பு எல்லாம் உமக்கே

Padaippu Ellam Umakkae
படைப்பு எல்லாம் உமக்கே சொந்தம்
நானும் உந்தன் கைவண்ணம்
குயில்கள் பாடும் கிளிகள் பேசும்
என் வாழ்வு இசைக்கும் உன் ராகமே – 2

1. இயற்கை உனது ஓவியம் இணையில்லாத காவியம் – 2
அகிலம் என்னும் ஆலயம் நானும் அதில் ஓர் ஆகமம் – 2
உள்ளம் எந்தன் உள்ளம் அது எந்நாளும் உன் இல்லமே – 2

2. இதயம் என்னும் வீணையில் அன்பை மீட்டும் வேளையில் – 2
வசந்த ராகம் கேட்கவே ஏழை என்னில் வாருமே – 2
தந்தேன் என்னைத் தந்தேன் என்றும் என் வாழ்வு உன்னோடு தான் – 2

Munnorgal Um Meethu – முன்னோர்கள் உம் மீது

Munnorgal Um Meethu
முன்னோர்கள் உம் மீது நம்பிக்கை வைத்தார்கள்
நம்பியதால் விடுவித்தீர் – 2

வேண்டினார்கள் கூப்பிட்டார்கள் விடுவிக்கப் பட்டார்கள் (முகம்)
வெட்கப்பட்டுப் போகவில்லை
ஏமாற்றம் அடையவில்லை – 2 (முன்னோர்கள்)

கர்த்தர் கொடுத்த வாக்குறுதியை
நிறைவேற்ற வல்லவர் என்று – 2
தயங்காமல் நம்பினதால்
ஆபிரகாம் தகப்பனானான் – 2

அறிக்கை செய்வோம்
ஜெயம் எடுப்போம்
வாக்குறுதி பிடித்துக்கொண்டு – 2 (முன்னோர்கள்)

சிறையிருப்பை திருப்புவேன் என்று
கர்த்தர் சொன்ன வாக்குறுதியை – 2
பிடித்துக்கொண்டு தானியேல் அன்று
ஜெபித்து ஜெயம் எடுத்தான் – 2 (அறிக்கை)

தேசத்திற்கு திரும்பி போ நீ
நன்மை செய்வேன் என்று சொன்னாரே – 2
அந்த திருவார்த்தையை பிடித்துக்கொண்டு
ஜேக்கப் ஜெயம் எடுத்தான் – 2 (அறிக்கை)

Munnorgal Um Meethu Nambikkai Vaithargal
Nambiyathaal Viduvitheer – 2

Vendinaargal Koopitaargal
Viduvikappataargal(Mugam) Vetkappattu Pogavillai
Yematram Adayavillai – 2 – Munnorgal

Karthar Kodutha Vaakuruthiyai
Niraivetra Vallavar Endru – 2
Thayangaamal Nambinathaal
Aabiraham Thagappan Aanaan – 2

Arikkai Seivom Jeyam Yeduppom
Vakuruthiyai Pidithukondu – 2 – Munnorgal

Sirayiruppai Thirupuven Endru
Karuththai Sonna Vaakkuruthiyai – 2
Piditthukkondu Thaaniyel Andru
Jebiththu Jeyam Eduththaan – 2

Arikkai Seivom Jeyam Edupom
Vakkuruthiyai Pidiththukkondu – 2 – Munnorgal

Desathirku Thirumbi Poo Nee
Nanmai Seiven Endru Sonnare – 2
Antha Thiru Vaarthayai Pidithukondu
Jacob Jeyam Eduthaan – 2 – Munnorgal

Arikkai Seivom Jeyam Eduppom
Vakkuruthiyai Pidiththukkondu – 2 – Munnorgal

Yelunbi Pragasi Un – எழும்பிப் பிரகாசி உன்

Yelunbi Pragasi Un
எழும்பிப் பிரகாசி உன் ஒளி வந்தது
கர்த்தர் மகிமை உன்மேல் உதித்தது

பூமியையும் ஜனங்களையும்
காரிருள் மூடும் – ஆனாலும்
உன்மேல் கர்த்தர் உதிப்பர்

1. உன் குமாரரும் குமாரத்திளும்
உன் அருகினில் வளர்க்கப்படுவர் – உன்
கண்ணால் கண்டு நீ ஓடி வருவாய்
உன் இருதயம் மகிழ்ந்து பூரிக்கும்

2. உன்னை சேவிக்க ஜாதிகள் அழியும்
ராஜ்ஜியங்களும் பாழாகப் போய்விடும்
கர்த்தர் நகரம் பரிசுத்தரின் சீயோன்
என்று கூறி நீ அழைக்கப்படுவாய்

3.உன் தேசத்திலே கொடுமை கேட்காதே
உன் எல்லைகளில் நாசமும் வராதே
உன் மதில்களை இரட்சிப்பென்று சொல்வாய்
உன் வாசல்களை துதியென்றும் சொல்வாய்

4.சூரியன் இனி அஸ்தமிப்பதில்லை
சந்திரன் இனி மறைவதுமில்லை
கர்த்தரே நித்ய வெளிச்சமாவாரே
உன் துக்க நாட்கள் முடிந்து போயிற்றே

Kaanikai Tharuvaye – காணிக்கை தருவாயே

Kaanikai Tharuvaye
காணிக்கை தருவாயே கர்த்தற்குனது
காணிக்கை தருவாயே

அனுபல்லவி

காணிக்கை தா உனக்காய் ஆணிக் குரிசி லேசு
வேணும் ரட்சிப்பினை நீ காணும்படி செய்ததால் – காணிக்கை

சரணங்கள்

1. பத்தில் ஒரு பங்குதானோ பந்தினில் கட்டுப்
பட்ட யூதருக் கல்லவோ
அத்தன் உனக்களித்த அளவை உட்கார்ந்து பார்த்தால்
பத்தில் ஒரு பங்கல்ல பல மடங்காகிடாதோ – காணிக்கை

2. உன்றன் உடல் உன் சொந்தமோ அதைவிடினும்
உன்மனம் ஆவி பந்தமோ
அன்னவன் உடைய தென்றறிந்து உணர்வாயானால்
உன்னையும் உன்னுடைய உடைமையுல்லோ ஈவாய் – காணிக்கை

3. தேவ வசனம் பரப்ப அதனுக்கென்று
செல்லும் செலவை நிரப்ப
ஆவலாய் யேசுவுக்கே ஆராதனை நடத்தும்
தேவ ஊழியத்துக்கும் திறந்த மனதுடனே – காணிக்கை

4. பயிர் பலன் மூலமாகவும் இன்னும் பலர்க்குப்
பணம் முதலானதாகவும்
உயிர்ப் பிராணியாகவும் உதவும் கடவுளுக்கே
உயிரைப் படைப்பாயோ உடைமையைக் கொடாவிடில் – காணிக்கை

Ennavare Ennavare – என்னவரே என்னவரே

Ennavare Ennavare
என்னவரே என்னவரே
என்னவரே என் உடையவரே (2)

1. உங்க வாயின் முத்தங்களால்
என்னை முத்தமிடுபவரே (2)
திராட்சை ரசத்திலும் இன்பமான நேசம்
என் மேல் உடையவரே (2)

என்னவரே என் ஆத்ம நேசரே
என்னவரே நீர் என் மணவாளரே (2)
என்னை பிரியமே என் ரூபவதியே
என்று அழைப்பவரே – என்னவரே

2. எந்தன் தாயின் கருவிலே
என்னை தெரிந்து கொண்டவரே (2)
வீணன் என்று பலர் தள்ளின போததென்னை
வனைந்து எடுத்தவரே (2)

என்னவரே என் ஆத்ம நேசரே
என்னவரே நீர் என் மணவாளரே (2)
என்னை பிரியமே என் ரூபவதிய
என்று அழைப்பவரே – என்னவரே

Singa Kebiyil Naan – சிங்க கெபியில் நான்

Singa Kebiyil Naan

சிங்க கெபியில் நான் விழுந்தேன்
அவர் என்னோடு அமர்ந்திருந்தார்
சுட்டெரிக்கும் அக்கினியில் நடந்தேன்
பனித்துளியாய் என்னை நனைத்தார்

சிங்க கெபியோ சூளை நெருப்போ
அவர் என்னை காத்திடுவார்-2

அவரே என்னை காப்பவர்
அவரே என்னை காண்பவர்-2

சிங்க கெபியோ சூளை நெருப்போ
அவர் என்னை காத்திடுவார்-2

1. எதிரிகள் எனை சுற்றி வந்தாலும்
தூதர் சேனைகள் கொண்டென்னை காப்பாரே-2
ஆவியினால் யுத்தம் வெல்வேனே
சாத்தானை சமுத்திரம் விழுங்குமே-2 (…அவரே என்னை)

2. இராஜ்ஜியம் எனக்குள்ளே வந்ததால்
சூழ்ச்சிகள் எனை ஒன்றும் செய்யாதே-2
அற்புதம் எனக்காக செய்பவர்
என்னை அதிசயமாய் வழி நடத்துவார்-2 (…அவரே என்னை)

Singa Kebiyil Naan Vizhunthen
Avar Ennodu Amarnthirunthaar
Sutterikkum Akkiniyil Nadanthen
Paniththuliyaai Ennai Nanaiththaar

Singa Kebiyo Soolai Neruppo
Avar Ennai Kaaththiduvaar-2

Avare Ennai Kaappavar
Avare Ennai Kaanbavar-2

Singa Kebiyo Soolai Neruppo
Avar Ennai Kaaththiduvaar-2

1. Ethirigal Enai Suttri Vanthaalum
Thoothar Senaigal Kondennai Kaappaare-2
Aaviyinaal Yuththam Velvene
Saaththaanai Samuththiram Vizhungume-2 (…Avare Ennai)

2. Raajjiyam Enakkule Vanthathaal
Soolchchigal Enai Ondrum Seiyaathe-2
Arputham Enakkaaga Seibavar
Ennai Adhisayamaai Vazhi Nadaththuvaar-2 (…Avare Ennai)

 

Nandriyodu Naan Thuthi – நன்றியோடு நான் துதி

Nandriyodu Naan Thuthi Paaduvaen

நன்றியோடு நான் துதி பாடுவேன்
எந்தன் இயேசு ராஜனே
எனக்காய் நீர் செய்திட்ட நன்மைக்காய்
என்றும் நன்றி கூறுவேன் நான் – 2

1. எண்ணடங்கா நன்மைகள் யாவையும்
எனகளித்திடும் நாதனே – 2
நினைக்காத நன்மைகள் அளிப்பவரே
உமக்கென்றுமே துதியே – 2 (…நன்றியோடு நான்)

2. சத்ய தெய்வத்தின் ஏக மைந்தனே
விசுவாசிப்பேன் உம்மையே – 2
வரும் காலம் முழுவதும் உம் கிருபை
வரங்கள் பொழிந்திடுமே – 2 (…நன்றியோடு)

3. முழங்கால்கள் யாவும் முடங்குமே
உந்தன் திவ்ய பிரசன்னத்தினால் – 2
முற்று முடியா என்னையும் காப்பவரே
உமக்கென்றுமே துதியே – 2 (…நன்றியோடு)

4. கலங்காதே திகையாதே என்றவரே
என்னை காத்து நடத்திடுவீர் – 2
கண்மணி போல் என்னையும் காப்பவரே
கரை சேர்த்திட வந்திடுவீர் – 2 (…நன்றியோடு)

Nandriyodu Naan Thuthi Paaduven
Endhan Yesu Rajane
Enakkaai Neer Seidhitta Nanmaikkaai
Endrum Nandri Kooruven Naan – 2

1. Ennadangaa Nanmaigal Yaavaiyum
Enakkaliththidum Nadhane – 2
Ninaikkaadha Nanmaigal Azhippavare
Umakkendrume Thuthiye – 2 (…Nandriyodu Naan)

2. Sathya Deivaththin Yegamaindhane
Visuvaasippen Ummaiye – 2
Varum Kaalam Muzhuvadhum Um Kirubai
Varangal Pozhindhidume – 2 (…Nandriyodu Naan)

3. Muzhang kaalgal Yaavum Mudangume
Undhan Divya Prasannaththinaal – 2
Muttrum Mudiyaa Ennaiyum Kaappavare
Umakkendrume Thuthiye – 2 (…Nandriyodu Naan)

4. Kalangaadhe Thigaiyaadhe Endravare
Ennai Kaaththu Nadaththiduveer – 2
Kanmani Pol Ennaiyum Kaapavare
Karai Serththida Vandhiduveer – 2 (…Nandriyodu Naan)

https://www.youtube.com/watch?v=aPWwVliu_OQ

Appa Unga Madiyila – அப்பா உங்க மடியில

Appa Unga Madiyila
அப்பா உங்க மடியில நான்
தலைசாய்க்கணும்
அப்பா உங்க நெனப்புலதான்
உயிர்வாழணும் – 2

என் மனசை புரிஞ்ச தெய்வம் நீங்கப்பா
என் மனசு நெறஞ்ச செல்வம் இயேசப்பா – 2
– அப்பா உங்க

1. என் உசுருக்குள்ள கலந்து
உயிர்வாழ்வது ஏனோ
உங்க உசுர கொடுத்து பாவி எனக்கு
உயிர் தந்ததும் ஏனோ – 2
கண்ணுக்குள்ள பொத்தி வச்சி
காத்துவந்தது ஏனோ
கால்கள் இரண்டும் இடரிடாமல்
சுமந்துவந்தது ஏனோ – என் – 2
– அப்பா உங்க

2. உங்க உள்ளங்கையில் என்னை வரஞ்சி
பார்த்துகிட்டதும் ஏனோ
உங்க கைகள் இரண்டிலும் ஆணீ அடிக்க
பொருத்துகிட்டதும் ஏனோ – 2
தூங்காம உறங்காம காத்துகொண்டது ஏனோ
வழி எல்லாம் நிழல் போல
தொடர்ந்துவந்ததும் ஏனோ – என்ன – 2
– அப்பா உங்க

3. பாவி என் மேல நீங்க வச்ச பாசம் புரியல
நேசர் உம்மை நேசிக்க இந்த பாவிக்கு தெரியல – 2
உதிரம் சிந்தி உசிர தந்த உண்மையான அன்பு
ஒடஞ்சி நொருங்கி மண்டியிட்டேன்
இயேசுவுக்கு முன்பு – நான் – 2
– அப்பா உங்க