Song Category: Tamil

Magizhndhirungal Magizhndhirungal – மகிழ்ந்திருங்கள்

Magizhndhirungal Magizhndhirungal

மகிழ்ந்திருங்கள் மகிழ்ந்திருங்கள்
கர்த்தரில் மகிழ்ந்திருங்கள் (2)
இதயத்தின் வேண்டுதல் நிறைவேற்றுவார்
நம் இதயத்தின் வேண்டுதல் நிறைவேற்றுவார்
அல்லேலூயா அல்லேலூயா அலேலூயா-2

எல்லைகளை விரிவாக்குவார்
தொல்லைகள் போக்கிடுவார் (2)
எல்லாமே நமக்கு தந்திடுவார்
இனி தோல்வியில்லை தோல்வியில்லை
வெற்றி வெற்றியே (2) – மகிழ்ந்திருங்கள்

துயரங்களை நீக்கிடுவார்
காயங்கள் ஆற்றிடுவார் (2)
பயங்களை போக்கி நடத்திடுவார்
இனி தோல்வியில்லை தோல்வியில்லை
வெற்றி வெற்றியே (2) – மகிழ்ந்திருங்கள்

ஆசிகளை பொழிந்திடுவார்
சந்தோஷம் தந்திடுவார் (2)
கரங்களைப் பிடித்து நடத்திடுவார்
இனி தோல்வியில்லை தோல்வியில்லை
வெற்றி வெற்றியே (2) – மகிழ்ந்திருங்கள்

Ummandai Devane – உம்மண்டை தேவனே

Ummandai Devane
1. உம்மண்டை தேவனே நான் சேரட்டும்
சிலுவை சுமந்து நடப்பினும்;
என் ஆவல் என்றுமே உம்மண்டை தேவனே
உம்மண்டை தேவனே நான் சேர்வதே

2. தாசன் யாக்கோபைப் போல் ராக்காலத்தில்
திக்கற்றுக் கல்லின் மேல் நான் துயில்கையில்,
எந்தன் கனாவிலே உம்மண்டை தேவனே
உம்மண்டை தேவனே இருப்பேனே

3. நீர் என்னை நடத்தும் பாதை எல்லாம்,
விண் எட்டும் ஏணிபோல் விளங்குமாம்;
தூதர் அழைப்பாரே, உம்மண்டை தேவனே
உம்மண்டை தேவனே நான் சேரவே

4. விழித்தும் உம்மையே நான் துதிப்பேன்
என் துயர்க் கல்லை உம் வீடாக்குவேன்
என் துன்பத்தாலுமே, உம்மண்டை தேவனே
உம்மண்டை தேவனே நான் சேர்வேனே

5. சந்தோஷ சிறகால் வான்கடந்து
கோளங்கள் மேலாக நான் பறந்து
என் பாடல் இதுவே உம்மண்டை தேவனே
உம்மண்டை தேவனே நான் சேர்வேனே

1. Ummandai dhaevanae naan saerattum
Siluvai sumandhu nadappinum;
En aaval endrumae ummandai dhaevanae
Ummandai dhaevanae naan chearvathea

2. Dhaasan yaakkoabai poal raakkaalaththil
Thikkatru kallin mael naan thuyilgaiyil,
Endhan kanaavilae ummandai dhaevanae
Ummandai dhaevanae iruppaenae

3. Neer ennai nadaththum paadhai ellaam,
Vin ettum aenipoal vilangumaam;
Thoodhar azhaippaarae, ummandai dhaevanae
Ummandai dhaevanae naan chearavea

4. Vizhiththum ummaiyae naan thudhippaen
En thuyar kallai um veedaakkuvaen
En thunpaththaalumae, ummandai dhaevanae
Ummandai dhaevanae naan chearveanea

5. Sandhoasha siragaal vaankadandhu
Koalangal maelaaga naan parandhu
En paadal idhuvae ummandai dhaevanae
Ummandai dhaevanae naan chearveanea

Puthu Vaazhvu Thandhavare – புதுவாழ்வு தந்தவரே


Puthu Vaazhvu Thandhavare

புது வாழ்வு தந்தவரே
புது துவக்கம் தந்தவரே – 2

நன்றி உமக்கு நன்றி
முழு மனதுடன் சொல்கின்றோம்
நன்றி உமக்கு நன்றி
மனநிறைவுடன் சொல்கின்றோம் – 2

1. பிள்ளைகளை மறவாமல்
ஆண்டு முழுவதும் போஷித்தீரே – உம் – 2
குறைவுகளை கிறிஸ்துவுக்குள்
மகிமையில் நிறைவாக்கி நடத்தினீரே – என் – 2
அதற்கு (…நன்றி)

2. முந்தினதை யோசிக்காமல்
பூர்வமானதை சிந்திக்காமல் – 2
புதியவைகள் தோன்ற செய்தீர்
சாம்பலை சிங்காரமாக்கிவிட்டீர் – 2
அதற்கு (…நன்றி)

3. கண்ணீருடன் விதைத்தெல்லாம்
கெம்பீரத்தோடே அறுக்கச் செய்தீர் – 2
ஏந்தி நின்ற கரங்கள் எல்லாம் (என் கரங்களையும்)
கொடுக்கும் கரங்களாய் மாற்றிவிட்டீர் – 2 (…நன்றி)

Pudhu Vaazhvu Thandhavare
Pudhu Thuvakkam Thandhavare – 2

Nandri Umakku Nandri
Muzhu Manadhudan Solgindrom
Nandri Umakku Nandri
Mana Niraivudan Solgindrom – 2

1. Pillaigalai Maravaamal
Aandu Muzhuvadhum Boshiththeere – Um – 2
Kuraivugalai Kiristhuvukkul
Magimaiyil Niraivaakki Nadathineere – En – 2
Adharku (…Nandri)

2. Mundhinadhai Yosikkaamal
Poorvamaanadhai Sindhikkaamal – 2
Pudhiyavaigal Thondra Seidheer
Saambalai Singaaramaakkivitteer – 2
Adharku (…Nandri)

3. Kanneerudan Vidhaiththadhellaam
Kembeeraththode Arukka Seidheer – 2
Yendhi Nindra Karangal Ellaam (En Karangalaiyum)
Kodukkum Karangalaai Maatrivitteer – 2 (…Nandri)

https://www.youtube.com/watch?v=gCgXOvcn6tA

Pani Kaalam Oru Naal Iravil – பனி காலம் ஓர் நள்ளிரவில்

Pani Kaalam Oru Naal Iravil
பனி காலம் ஓர் நள்ளிரவில்
பெத்லகேமில் ஓர் சத்திரத்தில்
மாட்டுக் கொட்டிலின் முன்னனையில்
பிறந்தார் ஓர் பாலகன்
கன்னி மரியின் மடியிலே
கந்தை துணிகள் நடுவிலே
பிறந்த பாலனை சந்திப்போமா
அவர் பொற் பாதம் பணிவோமா

பெத்லகேம் அருகில் வயல்வெளி
மேய்ப்பர் காத்தனர் மந்தைகளை
அதன் கூறினான் நற்செய்தியை
பிறந்தார் ஓர் பாலகன்
கன்னி மரியின் மடியிலே
கந்தை துணிகள் நடுவிலே
பிறந்த பாலனை சந்திப்போமா
அவர் பொற் பாதம் பணிவோமா

வானத்தில் ஓர் நட்சத்திரம்
கண்டனர் மூன்று சாஸ்திரிகள்
அறிந்தார் பேரோர் உண்மைதனை
பிறந்தார் ஓர் பாலகன்
கன்னி மரியின் மடியிலே
கந்தை துணிகள் நடுவிலே
பிறந்த பாலனை சந்திப்போமா
அவர் பொற் பாதம் பணிவோமா

பாலகனின் பிறந்த நாள்
கேட்போம் அந்நற்செய்திதனை
திறப்போம் இதய கதவினை
பிறப்பார் ஓர் பாலகன்
கன்னி மரியின் மடியிலே
கந்தை துணிகள் நடுவிலே
பிறந்த பாலனை சந்திப்போமா
அவர் பொற் பாதம் பணிவோமா

Nambikkayum Neer Thane – நம்பிக்கையும் நீர் தானே

Nambikkayum Neer Thane
நம்பிக்கையும் நீர் தானே நங்கூரமும்
நீர் தானே நாங்கள் நம்பும்
தெய்வம் நீர் தானே நீர் தானே

நம்பிக்கை நங்கூரம்
நான் நம்பும் தெய்வம்
நம்பினோரைக் காக்கும் இயேசுவே
பரம பரிசுத்த தேவனை பரலோக ராஜனை
பாடல் பாடி கொண்டாடிடுவோம்

1. பார்வோனை வென்றவரை துதிப்போம்
எகிப்தியரை வென்றவரை துதிப்போம்
ஆயிரம் பார்வோன்கள் வந்தாலும்
எகிப்தியர் வந்தாலும்
பாடல் பாடி முன்னேறிடுவோம்

2. கன்மலையைப் பிளந்தவரை துதிப்போம்
நீரூற்றைத் தந்தவரை துதிப்போம்
பஞ்சம் பட்டினியே வந்தாலும்
வறட்சிகள் என்றாலும்
பாடல் பாடி முன்னேறிடுவோம்

3. கல்லறையை பிளந்தவரைத் துதிப்போம்
மரணத்தை வென்றவரைத் துதிப்போம்
மரண இருளுள்ள பள்ளத்தாக்கின்
சூழ்நிலைகள் வந்தாலும்
பயமின்றி முன்னேறிடுவோம்

Ennai Azhaithavar Neer – என்னை அழைத்தவர் நீர்

Ennai Azhaithavar Neer

என்னை அழைத்தவர் நீர் என்று சொன்னால்

நடத்துபவர் நீர் தானே

என்னை கண்டவர் நீர் என்று சொன்னால்

பாதுகாப்பவர் நீர் தானே (2)

நம்புவேன் என்னை நடத்திடும்

எந்தன் ஜீவிய காலமெல்லாம் (2)

 

1.  உந்தன் முகத்தின் வெளிச்சம்

எந்தன் மேல் பிரகாசிக்க செய்யுமே

இருள் நிறைந்த உலகமிதுவே

நீதி தேவன் எனக்கு அரனே (2)

முன்னறிந்து என்னை நடத்தி வந்தீர்

முடிவு வரையும் நடத்திடுமே (2)

நம்புவேன் என்னை நடத்திடும்

எந்தன் ஜீவிய காலமெல்லாம் (2)

 

2. மாம்சமான எந்தன் மேல்

உம் ஆவியை ஊற்றுமே

உமக்காக எழும்பிட

நல்ல சாட்சி என்னில் வேண்டுமே (2)

நம்புவேன் என்னை நடத்திடும்

எந்தன் ஜீவிய காலமெல்லாம் (2)

 

3. என்னை அழைத்தவர் நீர் என்று சொன்னால்

நடத்துபவர் நீர் தானே

என்னை கண்டவர் நீர் என்று சொன்னால்

பாதுகாப்பவர் நீர் தானே (2)

நம்புவேன் என்னை நடத்திடும்

எந்தன் ஜீவிய காலமெல்லாம் (2)

Um Anbu Ethanai – உம் அன்பு எத்தனை

Um Anbu Ethanai
உம் அன்பு எத்தனை பெரிதைய்யா
இயேசைய்யா உம் அன்பு பெரிதைய்யா
எப்படி நான் மறப்பேன் -3
உம் அன்பை (2)
1. பாவத்தின் பாரத்தால் சோர்ந்து நான் போகையில்
பாசமாய் வந்தென்னை இரத்தத்தால் மீட்டீர்
எப்படி நான் மறப்பேன் -3
உம் அன்பை (2)
உம் அன்பு எத்தனை பெரிதைய்யா
இயேசைய்யா உம் அன்பு பெரிதைய்யா
2. தனிமையில் கண்ணீரில் கலங்கி நான் நிற்கையில்
வலக்கரம் கொண்டென்னை மார்பில் அனைத்தீர்
எப்படி நான் மறப்பேன் -3
உம் அன்பை (2)
உம் அன்பு எத்தனை பெரிதைய்யா
இயேசைய்யா உம் அன்பு பெரிதைய்யா
3. துரோகி நான் உம்மையே பரியாசம் செய்தேனே
நேசமாய் வந்தென்னை சேர்த்துக் கொண்டீரே
எப்படி நான் மறப்பேன் -3
உம் அன்பை (2)
உம் அன்பு எத்தனை பெரிதைய்யா
இயேசைய்யா உம் அன்பு பெரிதைய்யா

Natha Natha Intha Jeeviyam – நாதா நாதா இந்த ஜீவியமே

Natha Natha Intha Jeeviyam
நாதா.. நாதா.. நாதா…
இந்த ஜீவியமே வெறும் மாயையோ
இது சஞ்சலம் நிறைந்ததோ

1. காரிருள் சூழும் நேரமதில் – என்
கரம் பிடித்தென்னை நடத்திய நாதன்
மாராவின் மதுரமாம் இருளில் வெளிச்சமாம்
ஆதரவே என் தேற்றரவாளனே
உம் கிருபையன்றி யாதொன்றுமியலேன்
வனாந்திரப் பாதையில் ஆருயிர் நாதா – நாதா

2. நிந்தைகள் பழிகள் பெருகிடும் போது
வாக்குத்தத்தம் தந்து நடத்திடும் நாதன்
என் கன்மைலையே என் அடைக்கலமே
தகர்ந்த என் ஜீவியம் வனைந்த என் பரனே
நீர் அல்லால் ஆசை இப்பூவினில் இல்லை
உம்மில் நான் சாருவேன் என்றென்றும் நாதா – நாதா

Parathil Ulla Engal Pidhave – பரத்திலுள்ள எங்கள் பிதாவே

Parathil Ulla Engal Pidhave

பரத்திலுள்ள எங்கள் பிதாவே
உம் ராஜ்யம் வருக
உம் சித்தம் நிறைவேற

1. நீல் இல்லா உலகம் வெறுமையதே
அற்பமும் குப்பையுமதே
நீர் இல்லா வாழ்க்கை சுமையானதே
வாரும் தேவா இந்த வேளை } -2 – பரத்திலுள்ள

2. மன்னியும் எங்கள் மீறுதல்களை
நீக்கிடும் எங்கள் ஏக்கங்களை நீர்
பிறரின் குறைகள் பாராமல் நாங்கள்
கிருபையிலே என்றும் நிலைத்திடவே } -2 – பரத்திலுள்ள

3. காத்திடும் தீய சூழ்நிலையிலே
நிரப்பிடும் உந்தன் ஆவியால் இன்றே
சாத்தானின் சூழ்ச்சிகள் உலகத்தின் நிந்தைகள்
எல்லாவற்றையும் ஜெயித்திடவே } -2 – பரத்திலுள்ள

 

Parathil Ulla Engal Pidhave
Um raajyam varuga
Um sitham niraivera } -2

1. Neer illaa ulagam verumaiyathe
arpamum kuppaiyumathe
neer illaa vaazhkai sumaiyaanathe
vaarum dheva intha velai } -2 – Parathil Ulla

2. Mannium engal meerudhalgalai
Neekidum engal yekkangalai neer
Pirarin kuraigal paaraamaal naangal
Kirubaiyile endrum nilaithidave } -2 – Parathil Ulla

3. Kaathiduvaar theeya soozhnilaiyile
Nirappidum unthan aaviyaal indru
Saathanin soozhchigal ulagathin ninthaigal
Ellavatraiyum jeyithidave } -2 – Parathil Ulla

Vizukuthu vizukuthu Eriko – விழுகுது விழுகுது எரிகோ கோட்டை

Vizukuthu vizukuthu Eriko
விழுகுது விழுகுது எரிகோ கோட்டை
விழுகுது விழுகுது எரிகோ கோட்டை
எழும்புது எழும்புது இயேசுவின் படை

துதிப்போம் சாத்தானை ஜெயிப்போம்
துதிப்போம் தேசத்தைச் சொந்தமாக்குவோம்

யோசுவாவின் சந்ததி நாமே
தேசத்தைச் சுதந்தரிப்போமே
உடன்படிக்கை பெட்டி நம்மோடு
ஊர் ஊராய் வலம் வருவோமே – துதிப்போம்

கால் மிதிக்கும் எவ்விடத்தையும்
கர்த்தர் தந்திடுவாரே
எதிர்த்து நிற்க எவராலுமே
முடியாதென்று வாக்குரைத்தாரே

மோசேயோடு இருந்ததுபோல
சேனைகளின் கர்த்தர் நம்மோடு
தளபதியாய் முன் செல்கிறார்
தளர்ந்திடாமல் பின் தொடர்வேம்

அச்சமின்றி துணிந்து செல்வோமே
அறிக்கை செய்து ஆர்ப்பரிப்போமே
கர்த்தர் வார்த்தை நம் வாயிலே
நிச்சயமாய் வெற்றி பெறுவோம்

தேசத்து எதிரிகளெல்லாம்
திகில் பிடித்து நடுங்குகின்றனர்
கர்த்தர் செய்யும் அற்புதங்களை
கேள்விப்பட்டு கலங்குகின்றனர்

செங்கடலை வற்றச் செய்தவர்
சீக்கிரத்தில் வெற்றி தருவார்
யோர்தானை நிற்கச் செய்தவர் – நம்
பாரதத்தை ஆளுகை செய்வார்