Song Category: Tamil

Puthu Vaazhvu Thandhavare – புதுவாழ்வு தந்தவரே


Puthu Vaazhvu Thandhavare

புது வாழ்வு தந்தவரே
புது துவக்கம் தந்தவரே – 2

நன்றி உமக்கு நன்றி
முழு மனதுடன் சொல்கின்றோம்
நன்றி உமக்கு நன்றி
மனநிறைவுடன் சொல்கின்றோம் – 2

1. பிள்ளைகளை மறவாமல்
ஆண்டு முழுவதும் போஷித்தீரே – உம் – 2
குறைவுகளை கிறிஸ்துவுக்குள்
மகிமையில் நிறைவாக்கி நடத்தினீரே – என் – 2
அதற்கு (…நன்றி)

2. முந்தினதை யோசிக்காமல்
பூர்வமானதை சிந்திக்காமல் – 2
புதியவைகள் தோன்ற செய்தீர்
சாம்பலை சிங்காரமாக்கிவிட்டீர் – 2
அதற்கு (…நன்றி)

3. கண்ணீருடன் விதைத்தெல்லாம்
கெம்பீரத்தோடே அறுக்கச் செய்தீர் – 2
ஏந்தி நின்ற கரங்கள் எல்லாம் (என் கரங்களையும்)
கொடுக்கும் கரங்களாய் மாற்றிவிட்டீர் – 2 (…நன்றி)

Pudhu Vaazhvu Thandhavare
Pudhu Thuvakkam Thandhavare – 2

Nandri Umakku Nandri
Muzhu Manadhudan Solgindrom
Nandri Umakku Nandri
Mana Niraivudan Solgindrom – 2

1. Pillaigalai Maravaamal
Aandu Muzhuvadhum Boshiththeere – Um – 2
Kuraivugalai Kiristhuvukkul
Magimaiyil Niraivaakki Nadathineere – En – 2
Adharku (…Nandri)

2. Mundhinadhai Yosikkaamal
Poorvamaanadhai Sindhikkaamal – 2
Pudhiyavaigal Thondra Seidheer
Saambalai Singaaramaakkivitteer – 2
Adharku (…Nandri)

3. Kanneerudan Vidhaiththadhellaam
Kembeeraththode Arukka Seidheer – 2
Yendhi Nindra Karangal Ellaam (En Karangalaiyum)
Kodukkum Karangalaai Maatrivitteer – 2 (…Nandri)

https://www.youtube.com/watch?v=gCgXOvcn6tA

Pani Kaalam Oru Naal Iravil – பனி காலம் ஓர் நள்ளிரவில்

Pani Kaalam Oru Naal Iravil
பனி காலம் ஓர் நள்ளிரவில்
பெத்லகேமில் ஓர் சத்திரத்தில்
மாட்டுக் கொட்டிலின் முன்னனையில்
பிறந்தார் ஓர் பாலகன்
கன்னி மரியின் மடியிலே
கந்தை துணிகள் நடுவிலே
பிறந்த பாலனை சந்திப்போமா
அவர் பொற் பாதம் பணிவோமா

பெத்லகேம் அருகில் வயல்வெளி
மேய்ப்பர் காத்தனர் மந்தைகளை
அதன் கூறினான் நற்செய்தியை
பிறந்தார் ஓர் பாலகன்
கன்னி மரியின் மடியிலே
கந்தை துணிகள் நடுவிலே
பிறந்த பாலனை சந்திப்போமா
அவர் பொற் பாதம் பணிவோமா

வானத்தில் ஓர் நட்சத்திரம்
கண்டனர் மூன்று சாஸ்திரிகள்
அறிந்தார் பேரோர் உண்மைதனை
பிறந்தார் ஓர் பாலகன்
கன்னி மரியின் மடியிலே
கந்தை துணிகள் நடுவிலே
பிறந்த பாலனை சந்திப்போமா
அவர் பொற் பாதம் பணிவோமா

பாலகனின் பிறந்த நாள்
கேட்போம் அந்நற்செய்திதனை
திறப்போம் இதய கதவினை
பிறப்பார் ஓர் பாலகன்
கன்னி மரியின் மடியிலே
கந்தை துணிகள் நடுவிலே
பிறந்த பாலனை சந்திப்போமா
அவர் பொற் பாதம் பணிவோமா

Nambikkayum Neer Thane – நம்பிக்கையும் நீர் தானே

Nambikkayum Neer Thane
நம்பிக்கையும் நீர் தானே நங்கூரமும்
நீர் தானே நாங்கள் நம்பும்
தெய்வம் நீர் தானே நீர் தானே

நம்பிக்கை நங்கூரம்
நான் நம்பும் தெய்வம்
நம்பினோரைக் காக்கும் இயேசுவே
பரம பரிசுத்த தேவனை பரலோக ராஜனை
பாடல் பாடி கொண்டாடிடுவோம்

1. பார்வோனை வென்றவரை துதிப்போம்
எகிப்தியரை வென்றவரை துதிப்போம்
ஆயிரம் பார்வோன்கள் வந்தாலும்
எகிப்தியர் வந்தாலும்
பாடல் பாடி முன்னேறிடுவோம்

2. கன்மலையைப் பிளந்தவரை துதிப்போம்
நீரூற்றைத் தந்தவரை துதிப்போம்
பஞ்சம் பட்டினியே வந்தாலும்
வறட்சிகள் என்றாலும்
பாடல் பாடி முன்னேறிடுவோம்

3. கல்லறையை பிளந்தவரைத் துதிப்போம்
மரணத்தை வென்றவரைத் துதிப்போம்
மரண இருளுள்ள பள்ளத்தாக்கின்
சூழ்நிலைகள் வந்தாலும்
பயமின்றி முன்னேறிடுவோம்

Ennai Azhaithavar Neer – என்னை அழைத்தவர் நீர்

Ennai Azhaithavar Neer

என்னை அழைத்தவர் நீர் என்று சொன்னால்

நடத்துபவர் நீர் தானே

என்னை கண்டவர் நீர் என்று சொன்னால்

பாதுகாப்பவர் நீர் தானே (2)

நம்புவேன் என்னை நடத்திடும்

எந்தன் ஜீவிய காலமெல்லாம் (2)

 

1.  உந்தன் முகத்தின் வெளிச்சம்

எந்தன் மேல் பிரகாசிக்க செய்யுமே

இருள் நிறைந்த உலகமிதுவே

நீதி தேவன் எனக்கு அரனே (2)

முன்னறிந்து என்னை நடத்தி வந்தீர்

முடிவு வரையும் நடத்திடுமே (2)

நம்புவேன் என்னை நடத்திடும்

எந்தன் ஜீவிய காலமெல்லாம் (2)

 

2. மாம்சமான எந்தன் மேல்

உம் ஆவியை ஊற்றுமே

உமக்காக எழும்பிட

நல்ல சாட்சி என்னில் வேண்டுமே (2)

நம்புவேன் என்னை நடத்திடும்

எந்தன் ஜீவிய காலமெல்லாம் (2)

 

3. என்னை அழைத்தவர் நீர் என்று சொன்னால்

நடத்துபவர் நீர் தானே

என்னை கண்டவர் நீர் என்று சொன்னால்

பாதுகாப்பவர் நீர் தானே (2)

நம்புவேன் என்னை நடத்திடும்

எந்தன் ஜீவிய காலமெல்லாம் (2)

Um Anbu Ethanai – உம் அன்பு எத்தனை

Um Anbu Ethanai
உம் அன்பு எத்தனை பெரிதைய்யா
இயேசைய்யா உம் அன்பு பெரிதைய்யா
எப்படி நான் மறப்பேன் -3
உம் அன்பை (2)
1. பாவத்தின் பாரத்தால் சோர்ந்து நான் போகையில்
பாசமாய் வந்தென்னை இரத்தத்தால் மீட்டீர்
எப்படி நான் மறப்பேன் -3
உம் அன்பை (2)
உம் அன்பு எத்தனை பெரிதைய்யா
இயேசைய்யா உம் அன்பு பெரிதைய்யா
2. தனிமையில் கண்ணீரில் கலங்கி நான் நிற்கையில்
வலக்கரம் கொண்டென்னை மார்பில் அனைத்தீர்
எப்படி நான் மறப்பேன் -3
உம் அன்பை (2)
உம் அன்பு எத்தனை பெரிதைய்யா
இயேசைய்யா உம் அன்பு பெரிதைய்யா
3. துரோகி நான் உம்மையே பரியாசம் செய்தேனே
நேசமாய் வந்தென்னை சேர்த்துக் கொண்டீரே
எப்படி நான் மறப்பேன் -3
உம் அன்பை (2)
உம் அன்பு எத்தனை பெரிதைய்யா
இயேசைய்யா உம் அன்பு பெரிதைய்யா

Natha Natha Intha Jeeviyam – நாதா நாதா இந்த ஜீவியமே

Natha Natha Intha Jeeviyam
நாதா.. நாதா.. நாதா…
இந்த ஜீவியமே வெறும் மாயையோ
இது சஞ்சலம் நிறைந்ததோ

1. காரிருள் சூழும் நேரமதில் – என்
கரம் பிடித்தென்னை நடத்திய நாதன்
மாராவின் மதுரமாம் இருளில் வெளிச்சமாம்
ஆதரவே என் தேற்றரவாளனே
உம் கிருபையன்றி யாதொன்றுமியலேன்
வனாந்திரப் பாதையில் ஆருயிர் நாதா – நாதா

2. நிந்தைகள் பழிகள் பெருகிடும் போது
வாக்குத்தத்தம் தந்து நடத்திடும் நாதன்
என் கன்மைலையே என் அடைக்கலமே
தகர்ந்த என் ஜீவியம் வனைந்த என் பரனே
நீர் அல்லால் ஆசை இப்பூவினில் இல்லை
உம்மில் நான் சாருவேன் என்றென்றும் நாதா – நாதா

Parathil Ulla Engal Pidhave – பரத்திலுள்ள எங்கள் பிதாவே

Parathil Ulla Engal Pidhave

பரத்திலுள்ள எங்கள் பிதாவே
உம் ராஜ்யம் வருக
உம் சித்தம் நிறைவேற

1. நீல் இல்லா உலகம் வெறுமையதே
அற்பமும் குப்பையுமதே
நீர் இல்லா வாழ்க்கை சுமையானதே
வாரும் தேவா இந்த வேளை } -2 – பரத்திலுள்ள

2. மன்னியும் எங்கள் மீறுதல்களை
நீக்கிடும் எங்கள் ஏக்கங்களை நீர்
பிறரின் குறைகள் பாராமல் நாங்கள்
கிருபையிலே என்றும் நிலைத்திடவே } -2 – பரத்திலுள்ள

3. காத்திடும் தீய சூழ்நிலையிலே
நிரப்பிடும் உந்தன் ஆவியால் இன்றே
சாத்தானின் சூழ்ச்சிகள் உலகத்தின் நிந்தைகள்
எல்லாவற்றையும் ஜெயித்திடவே } -2 – பரத்திலுள்ள

 

Parathil Ulla Engal Pidhave
Um raajyam varuga
Um sitham niraivera } -2

1. Neer illaa ulagam verumaiyathe
arpamum kuppaiyumathe
neer illaa vaazhkai sumaiyaanathe
vaarum dheva intha velai } -2 – Parathil Ulla

2. Mannium engal meerudhalgalai
Neekidum engal yekkangalai neer
Pirarin kuraigal paaraamaal naangal
Kirubaiyile endrum nilaithidave } -2 – Parathil Ulla

3. Kaathiduvaar theeya soozhnilaiyile
Nirappidum unthan aaviyaal indru
Saathanin soozhchigal ulagathin ninthaigal
Ellavatraiyum jeyithidave } -2 – Parathil Ulla

Vizukuthu vizukuthu Eriko – விழுகுது விழுகுது எரிகோ கோட்டை

Vizukuthu vizukuthu Eriko
விழுகுது விழுகுது எரிகோ கோட்டை
விழுகுது விழுகுது எரிகோ கோட்டை
எழும்புது எழும்புது இயேசுவின் படை

துதிப்போம் சாத்தானை ஜெயிப்போம்
துதிப்போம் தேசத்தைச் சொந்தமாக்குவோம்

யோசுவாவின் சந்ததி நாமே
தேசத்தைச் சுதந்தரிப்போமே
உடன்படிக்கை பெட்டி நம்மோடு
ஊர் ஊராய் வலம் வருவோமே – துதிப்போம்

கால் மிதிக்கும் எவ்விடத்தையும்
கர்த்தர் தந்திடுவாரே
எதிர்த்து நிற்க எவராலுமே
முடியாதென்று வாக்குரைத்தாரே

மோசேயோடு இருந்ததுபோல
சேனைகளின் கர்த்தர் நம்மோடு
தளபதியாய் முன் செல்கிறார்
தளர்ந்திடாமல் பின் தொடர்வேம்

அச்சமின்றி துணிந்து செல்வோமே
அறிக்கை செய்து ஆர்ப்பரிப்போமே
கர்த்தர் வார்த்தை நம் வாயிலே
நிச்சயமாய் வெற்றி பெறுவோம்

தேசத்து எதிரிகளெல்லாம்
திகில் பிடித்து நடுங்குகின்றனர்
கர்த்தர் செய்யும் அற்புதங்களை
கேள்விப்பட்டு கலங்குகின்றனர்

செங்கடலை வற்றச் செய்தவர்
சீக்கிரத்தில் வெற்றி தருவார்
யோர்தானை நிற்கச் செய்தவர் – நம்
பாரதத்தை ஆளுகை செய்வார்

Nambikkaikku Uriyavare – நம்பிக்கைக்கு உரியவரே

Nambikkaikku Uriyavare
நம்பிக்கைக்கு உரியவரே
நம்பி வந்தேன் உம் சமூகம்
நம்புகிறேன் உம் வசனம் – ( 2 )

1. சொந்த ஆற்றலை நம்பவில்லை
தந்தை உம்மையே சார்ந்து விட்டேன் (2)
வாக்குத்தத்தம் செய்தவரே
வாழ்க்கையெல்லாம் உம் வார்த்தை தானே (2)
பாதைக்கு தீபம் பேதைக்கு வெளிச்சம் உந்தன் வசனமே
ஆற்றல் மிக்கது ஜீவன் உள்ளது உந்தன் அருள்வாக்கு

2. உம்மை நம்புகின்ற மனிதர்களை
உமது அன்பு என்றும் சூழ்ந்து கொள்ளும் (2)
உள்ளமெல்லாம் மகிழுதையா
உம் வசனம் நம்புவதால் (2)
பாதைக்கு தீபம்…

3. தீமை அனைத்தையும் விட்டு விலகி
உமக்கு அஞ்சி நான் நடந்து கொண்டால் (2)
எலும்புகள் உரம் பெறும்
என் உடலும் நலம் பெறும் (2)

4. புயலின் நடுவிலே பக்தன் பவுல்
வார்த்தை வந்ததால் திடன் கொண்டான் (2)
கைதியாக கப்பல் ஏறி
கப்டனாக செயல் பட்டான் (2)

5. வார்த்தை நம்பியதால் வலைகள் வீசி
திரளாய் பேதுரு மீன் பிடித்தார்
உம் வலையில் பிடிபட்டார்
தலைவனாக செயல்பட்டார்

6. உமது வார்த்தைகள் கைக் கொண்டு
உமக்கு உகந்தவற்றை செய்து வந்தால்
கேட்பதெல்லாம் பெற்றுக் கொள்வேன்
ஊற்று நீராய் பொங்கிடுவேன்

 

Nambikaikku Uriyavare
Nambikaikku Uriyavarae
Nambi Vanthaen Um Samookam
Nampukiraen Um Vasanam – ( 2 )

1. Sontha Aatralai Nambavillai
Thanthai Ummaiyae Saarnthu Vittaen (2)
Vaakuthatham Seithavarae
Vaalkaiyellaam Um Vaarthai Thaanae (2)
Paathaiku Theebam Paethaiku Velicham Unthan Vasanamae
Aatral Mikkathu Jeevan Ullathu Unthan Arulvaakku

2. Ummai Nambukintra Manithargalai
Umathu Anbu Entrum Soolnthu Kollum (2)
Ullamellaam Makiluthaiyaa
Um Vasanam Nampuvathaal (2)
Paathaikku Theepam…

3. Theemai Anaithaiyum Vittu Vilagi
Umakku Anji Naan Nadanthu Kondaal (2)
Elumpukal Uram Perum
En Udalum Nalam Perum (2)

4. Puyalin Naduvilae Pakthan Pavul
Vaarththai Vanthathaal Thidan Kondaan (2)
Kaithiyaaka Kappal Aeri
Kapdanaaka Seyal Pattan (2)

5. Vaarthai Nambiyathaal Valaikal Veesi
Thiralaai Paethuru Meen Pitithaar
Um Valaiyil Pidipattar
Thalaivanaaka Seyalpattar

6. Umathu Vaarthaikal Kai Kondu
Umakku Uganthavattai Seithu Vanthaal
Kaetpathellaam Pettu Kolvaen
Oottu Neeraai Pongiduvaen

 

 

Katru Thanthu Nadathugireer – கற்றுத் தந்து நடத்துகிறீர்

Katru Thanthu Nadathugireer
கற்றுத் தந்து நடத்துகிறீர்
கண்டித்து உணர்த்தி போதிக்கிறீர்
ஆவியானவரே தூய ஆவியானவரே

1. என்றென்றைக்கும் எங்களுடன்
எப்போதும்கூட இருக்கின்றீர்
சத்திய ஆவியானவரே
சாட்சியாய் வாழச் செய்பவரே

2. போதிக்கின்றீர் சத்தியங்களை
நினைவூட்டுகின்றீர் வசனங்களை
அனைத்தையும் சொல்லித் தருகின்ற
ஆலோசகர் நீர்தானய்யா

3. தேவனுக்குகந்த பலியாக
அர்ப்பண வாழ்வு நான் வாழ
மகிமைமேல் மகிமை தருகின்றீர்
மறுரூபமாக்கி மகிழ்கின்றீர்

4. ஊழியம் செய்ய பிரித்தெடுத்து
உலகெங்கும் தூது அனுப்புகிறீர்
நற்செய்தி அருளும் நாயகரே
உற்சாகப்படுத்தும் உன்னதரே

5. முழு உண்மை நோக்கி நடத்துகிறீர்
வரப்போகும் அனைத்தும் தெரிவிக்கிறீர்
தினம் தினம் தேற்றும் துணையாளரே
எனையாண்டு நடத்தும் மணவாளரே

6. உலகம் உம்மை அறிவதில்லை
பெற்றுக் கொள்ள முடிவதில்லை
எங்களுக்குள் நீர் ஜீவிக்கின்றீர்
இதயத் துடிப்பாய் இயங்குகின்றீர்