Thanimaiyil Ummai – தனிமையில் உம்மை

Thanimaiyil Ummai

D maj – T78 – 4/4
தனிமையில் உம்மை ஆராதிக்கின்றேன்
தன்னந்தனியாக ஆராதிக்கின்றேன்
எல்லோரும் இருந்த போதும் ஆராதித்தேனே
யாரும் இல்லா வேளையிலும் ஆராதிப்பேனே

அந்நாளில் தோழரோடு ஆராதித்தேனே
இந்நாளில் தனிமரமாய் ஆராதிக்கின்றேன்
சந்தோஷமாய் இருந்தபோது ஆராதித்தேனே
சுக்கு நூறாய் உடைந்தபோதும் ஆராதிப்பேனே

நிறைவாக வாழ்ந்தபோது ஆராதித்தேனே
நிலைமாறி விழுந்தபோதும் ஆராதிப்பேனே
சுகத்தோடு வாழ்ந்தபோது ஆராதித்தேனே
சுகவீனமானபோதும் ஆராதிப்பேனே

நல்லவரே உம்மை ஆராதிக்கின்றேன்
நன்றி சொல்லி உம்மை ஆராதிக்கின்றேன்
ஆண்டவரே உம்மை ஆராதிக்கின்றேன்
ஆறுதலே உம்மை ஆராதிக்கின்றேன்
உன்னதரே உம்மை ஆராதிக்கின்றேன்
உயிர் உள்ளவரையில் உம்மை ஆராதிக்கின்றேன்..

Thanimaiyil ummai aaraadhikkindrayn
Thannandhaniyaaga aaraadhikindrayn
Ellorum irundha podhu aaraadhithaenay
Yaarum illaa velaiyilum aaraadhippaenay

1. Annaalil tholarodu aaraadhithaenay
Innaalil thanimaramaai aaraadhikkindrayn
Sandhoshamaai irundha podhu aaraadhithaenay
Sukku nooraai udaindha podhum aaraadhippaenay

2. Niraivaaga vaazhndha podhu aaraadhithaenay
Nilaimaari vizhundha podhum aaraadhippaenay
Sugathodu vaazhndha podhu aaraadhithaenay
Sugaveenamaana podhum aaraadhippaenay

3. Nallavaray ummai aaraadhikkindrayn
Nandri solli ummai aaraadhikkindrayn
Aandavaray ummai aaraadhikkindrayn
Aarudhalay ummai aaraadhikkindrayn
Unnadharay ummai aaraadhikkindrayn
Uyir ulla varaiyil aaraadhikkindrayn

Anaadhaigalin Dheivamay – அனாதைகளின் தெய்வமே

Anaadhaigalin Dheivamay

D min – T84 – 4/4
அனாதைகளின் தெய்வமே
ஆதரவற்றோரின் தெய்வமே
சகாயர் இல்லாதவர்க்கு சகாயரே
தகப்பன் இல்லாதவர்க்கு நீரே தகப்பனே

எளியவரை உயர்த்தினீர் சிறியவனை எழுப்பினீர்
பிரபுக்கள் நடுவில் அமர்த்தினீர் தகப்பனே
பிள்ளைகள் இல்லா மலடியை
பிள்ளைத்தாய்ச்சியாய் மாற்றினீர் – அவள்
நிந்தைகள் எல்லாம் நிவிர்த்தி செய்யும் தகப்பனே

சத்துவம் இல்லாத மனிதருக்கு சத்துவத்தை அளிக்கிறீர்
பெலத்தினாலே நிரப்பினீர் தகப்பனே
திக்கற்று நிற்கும் விதவையின் விண்ணப்பங்களை கேட்கிறீர் – அவள்

எல்லைகள் எங்கும் தொல்லைகள் நீக்கும் தகப்பனே
ஏழையினை நினைக்கிறீர் அழுதிடும்போது
அணைக்கிறீர்
இடுக்கண் அனைத்தும் அகற்றினீர் தகப்பனே
உடைந்து சிதறிய மனதினை உள்ளங்கையிலே ஏந்தினீர் – அதன்
காயங்கள் ஆற்றும் அன்றாடம் தேற்றும் தகப்பனே

Anaadhaigalin dheivamay
Aadharavatrorin dheivamay
Sagaayar illadhavarku sagaayaray
Thagappan illaadhavarku neeray thagappanay

1. Eliyavarai uyarthineer siriyavanai ezhuppineer
Prabukkal naduvil amarthineer thagappanay
Pillaigal illaa maladiyai pillaithaaichiyaai
maatrineer
Nindhaigal ellaam nivirthi seyyum
thagappanay

2. Sathuvam illaadha manidharukku sathuvathai alikkireer
Belathinaalay nirappineer thagappanay
Dhikkatru nirkum vidhavaiyin vinnappangalai kaetkireer
Ellaigal engum thollaigal neekkum thagappanay

3. Yezhaiyinai ninaikireer azhudhidumbodhu anaikireer
Idukkan anaithum agatrineer thagappanay
Udaindhu sidhariya manadhinai ullangaiyilay yaendhineer
Kaayangal aatrum andraadam thaetrum thagappanay

Ummaal Azhaikkappattu – உம்மால் அழைக்கப்பட்டு

Ummaal Azhaikkappattu
min – T95 – 4/4
உம்மால் அழைக்கப்பட்டு உம்மில் அன்பு வைக்கும்
உமது பிள்ளைகளுக்கு
எல்லாம் நன்மையாய் நடத்தி தந்திடும்
அன்பு தெய்வம் நீரே

நடந்ததோ நடப்பதோ
நடக்கவிருக்கும் காரியமோ
எதுவுமே உமதன்பை
என்னிடமிருந்து பிரிக்குமோ

முன்னறிந்தீரே முன்குறித்தீரே உமது
பிள்ளைகளை அழைத்தீரே
அழைக்கப்பட்ட எம்மை நீதிமானாக்கி
மகிமைப்படுத்தி மகிழ்ந்தீரே

எங்களுக்காக இயேசுவைகூட
மாசற்ற பலியாய் தந்துவிட்டீர்
ஏங்கி நிற்கும் உம் பிள்ளைகட்கு
மற்றவை எல்லாம் தந்தருள்வீர்

Ummaal azhaikkappattu ummil anbu vaikkum umadhu pillaigalukku
Ellaam nanmaiyaai nadathi thandhidum anbu dheivam neeray

Nadandhadho nadappadho nadakkavirukkum kaariyamo
Yedhuvumae umadhanbai ennidam irundhu pirikkumo

Munnarindheeray munkuritheeray umadhu pillaigalai azhaitheeray
Azhaikkappattta emmai needhimaanaaki magimai paduthi magizhndheeray

Engalukkaaga yesuvai kooda maasatra baliyaai thandhuvitteer
Yaengi nirkum undhan pillaikatku matravai ellaam thandharulveer

Buthiyulla Sthree – புத்தியுள்ள ஸ்திரீ

Buthiyulla Sthree
D min – T110 – 6/8
புத்தியுள்ள ஸ்திரீ தன் வீட்டை கட்டுகிறாள்
புத்தியில்லாதவளோ அதை இடித்து போடுகிறாள்
தேவனை முதலில் தேடுகிறாள்
வசனத்தை தினம் நாடுகிறாள்

1. கணவன் தலையில் க்ரீடம் கீழ்ப்படிகிற
இப்படிபட்ட மனைவிதான் புருஷனுக்கு வேணும்
இவள் பிள்ளைகளுக்கோ என்றும் பாக்யவதி
கணவனுக்கு இவள் என்றும் குணசாலி ஆகிறாள்

2. நடக்கையிலே பணிவு வார்த்தையிலே கனிவு
கர்த்தரை இவள் நம்புவதால் வாழ்க்கையிலே
இவள் வாய் திறந்தால் ஞானம் விளங்க திறக்கிறாள்
சோம்பலின் அப்பத்தை புசிப்பதில்லை
உழைத்து மகிழ்கிறாள்

3. பயபக்தியிலே வளர்ப்பு குடும்ப பொறுப்பில்
வளரும் பெண்பிள்ளைகளுக்கு இவள் வாழ்க்கை நல்ல
இவள் நாணத்தினால் தன்னை
அலங்கரித்துகொள்ளுகிறாள்
அடக்கம் அன்பு அமைதியாலே வெற்றி வாழ்க்கை வாழ்கிறாள்

Buthiyulla sthree than veetai kattugiraal
Buthiyilladhavalo adhai idithu poedugiraal
Dhevanai mudhalil thaedugiraal – avar
Vasanathai dhinam naadugiraal

1. Kanavan thalayil kreedam keelpadigira madam
Ippadi patta manaivithaan purushanukku venum
Ival pillaigalukko endrum baakyavadhi aagiraal
Kanavanukku ival ival endrum gunasaali aagiraal

2. Nadakkaiyilay panivu vaarthaiyilay kanivu
Kartharai ival nambuvadhaal vaazhkaiyilay magizhvu
Ival vaai thirandhaal gnaanam vilanga thirakkiraal
Sombalin appathai pusippadhillai uzhaithu magizhgiraal

3. Bayabakthiyilay valarpu kudumba poruppil sirappu
Valarum pen pillaigalukku ival vaazhkai nalla padippu
Ival naanathinaal thannai alangarithu kollugiraal
Adakkam anbu amaidhiyaalay vetri vaazhkai vaazhgiraal

Anbin Uruvaanavaray – அன்பின் உருவானவரே

Anbin Uruvaanavaray
maj – T85 – 4/4
அன்பின் உருவானவரே அல்பா ஒமேகாவே
உன்னதரே உத்தமரே உள்ளம் கவர்ந்தவரே
உம்மைத் தானே தேடி வந்தோம் உண்மையோடே

ஐயா ஸ்தோத்ரம் ஐயா ஸ்தோத்ரம்
ஐயா எந்நாளும் உமக்கே ஸ்தோத்ரம்

1. மகிமை விடுத்து மரணம் சகித்து
மந்தை காத்த மேய்ப்பன் நீரே
உயிரோடெழுந்து எனக்காய் பரிந்து பேசும் தெய்வமே

2. துயரம் நிறைந்து அழகை இழந்து
காயப்பட்ட தெய்வம் நீரே
பிரியாதிருந்த பரனை பிரிந்து பாடுபட்டீரே

3. வஞ்சம் இல்லாமல் கொடுமை இல்லாமல்
வாழ்ந்து காட்டிய தெய்வம் நீரே
கடமை உணர்ந்து சிலுவை சுமந்து பாவம் தீர்த்தீரே

Anbin uruvaanavaray albaa omegavae
Unnadharay uthamaray ullam kavarndhavaray
Ummaithanay thaedi vandhom unmaiyodae

Ayyaa sthothram ayyaa sthothram
Ayyaa ennaalum umakkae sthothram

1. Magimai viduthu maranam sagithu mandhai
kaatha meippan neeray
Uyirodezhundhu enakkaai parindhu paesum dheivamae

2. Thuyaram niraindhu azhagai izhandhu
kaayappatta dheivam neeray
Piriyaadhirundha paranai pirindhu paadupatteeray

3. Vanjam illaamal kodumai illaamal vaazhndhu
kaatiya dheivam neeray
Kadamai unarndhu siluvai sumandhu paavam
theertheeraae

En Ennangalai Maatrum – என் எண்ணங்களை

En Ennangalai Maatrum
என் எண்ணங்களை D maj – T75 – 4/4
என் எண்ணங்களை மாற்றும்
என் விருப்பங்களை மாற்றும்
என்னை உடைத்து என்னை வனைந்து
என்னை புதிதாக்கும்
என்னை உடைத்து என்னை வனைந்து
என்னை உமதாக்கும்

1. கைகளை கட்டினேன் கண்களை கட்டினேன்
எண்ணங்களை கட்ட முடியல
நான் என்ன செய்வேனோ தெரியல

2. வார்த்தையை ஏற்கிறேன் வாழத்தான் பார்க்கிறேன்
ஆனாலும் ஏனோ தினம் தோற்கிறேன்
உம் கிருபை மட்டும் எதிர்பார்க்கிறேன்

3. சிறுவரைப் போலவே சிந்தனை மாற்றுமே
சிற்றின்ப மாயை அதை நீக்குமே
பற்றோடு என்னை கண்ணோக்குமே

En Ennangalai Maatrum
En viruppangalai maatrum
Ennai udaithu ennai vanaindhu ennai pudhidhaakum
Ennai udaithu ennai vanaindhu ennai umadhaakum

1. Kaigalai kattinayn kangalai kattinayn
Ennangalai katta mudiyala
Naan enna seivaeno theriyala

2. Vaarthayai yaerkirayn vaazhaththaan paarkirayn
Aanaalum yaeno dhinam thoerkirayn
Um kirubai mattum yedhirpaarkirayn

3. Siruvarai polavae sindhanai maatrumae
Sitrinba maayai adhai neekumae
Patrodu ennai kan noekkumae

Yedho Kirubaiyila – ஏதோ கிருபையில

Yedho Kirubaiyila D min – T115 – 6/8
ஏதோ கிருபையில வாழ்க்க ஓடுது
உங்க இரக்கத்தையே உள்ளம் நாடுது
எசமான் உங்களத்தானே நம்பி வாழுறேன்
மாறாத கிருபையத்தான் நம்பி ஓடுறேன்

சுய நீதிய கழட்டி வெச்சேன்
உங்க நீதிய உடுத்திகிட்டேன்
நீதிமானா மாத்துனீங்களே என்ன
நீதிமானா மாத்துனீங்களே
செஞ்ச பாவத்த ஒத்துக்கிட்டேன்
சாஷ்டாங்கமா விழுந்துபுட்டேன்
மன்னிச்சு அணைக்குறீங்களே
என்ன மன்னிச்சு அணைக்குறீங்களே..

பசிக்கும்போது உணவு தந்து
ஜெபிக்கும்போது இரங்கி வந்து
ஆசீர்வதிக்கிறீங்களே – என்ன
ஆசீர்வதிக்கிறீங்களே
அதிசயமா நடத்துறீங்க
ஆலோசனைய கொடுக்குறீங்க
பிள்ளையா ஏத்துக்கிட்டீங்களே – என்ன
பிள்ளையா ஏத்துக்கிட்டீங்களே

உள்ளதில் வசனம் விதைக்கிறீங்க
உள்ளங்கையில் என்ன வரையுறீங்க
தகப்பன் நீங்கதானய்யா என்
தகப்பன் நீங்கதானய்யா
தவறும்போது திருத்துறீங்க
தடுக்கும்போது புடிக்கிறீங்க
தாயும் நீங்கதானய்யா – என்
தாயும் நீங்கதானய்யா

Yedho kirubaiyila vaazhka oedudhu
Unga irakkathaiyae ullam naadudhu
Yesamaan ungalathaanay nambi vaazhurayn
Maaradha kirubaiyathaan nambi oeduren

1. Suyaneedhiya kazhatti vechaen
Unga needhiya uduthikittaen
Needhimaanaa maathuneengalay – enna
Needhimaanaa maathuneengalay
Senja paavatha othukittaen
Saashtaangamaa vizundhuputtaen
Mannichu anaikkureengalay – enna
Mannichu anaikkureengalay

2. Pasikkum podhu unavu thandhu
Jebikkumbodhu irangivandhu
Aaseervadhikkireengalay – enna
Aaseervadhikkireengalay
Adhisayamaa nadathureenga
Aalosanaiya kodukkureenga
Pillaiyaa yethukiteengalay – enna
Pillaiyaa yethukiteengalay

3. Ullathil vasanam vedhekkireenga
Ullangaiyil enna varaiyureenga
Thagappan neengadhaanaiyaa – yen
Thagappan neengadhaanaiyaa
Thavarumbodhu thiruthureenga
Thadukkumbodhu pudikkireenga
Thaayum neengadhaanaiyaa – en
Thaayum neengadhaanaiyaa

Sugam Belan – சுகம் பெலன் எனக்குள்ளே

Sugam Belan

சுகம் பெலன் எனக்குள்ளே பாய்ந்து செல்லுதே
வல்லமை நதியாய் பரவி பாயுதே -2

இரத்த குழாய்கள் கண்கள் செவி வாய்
தமனி எங்கும் பாய்கின்றதே -2

உம் வல்லமையால் சுகமானேன்
உம் வார்த்தையால் சுகமானேன்
உம் தழும்புகளால் சுகமானேன்
உம் தயவினால் சுகமானேன்

இயேசையா இரட்சகரே
சுகம் தரும் என் தெய்வமே – 2 (…உம்)

1. முதுகு தண்டு இதயம் மூளை நரம்பு இரத்தம்
வல்லமை பாய்கின்றதே – 2
குடல் தோல் கணையம் இரைப்பை வயிறு
சதை எங்கும் பாய்கின்றதே – 2 (…இயேசையா)

2. முட்டு ஈரல் மூட்டு கை கால் திசுக்கள்
வல்லமை பாய்கின்றதே – 2
எலும்பு நரம்புகள் சிறுநீரகங்கள்
தலையெங்கும் பாய்கின்றதே – 2 (…இயேசையா)

3. கர்ப்பப்பை கட்டி காயங்கள் புண்கள்
வல்லமை பாய்கின்றதே – 2
முடக்கு வாதங்கள் நுரையீரல்கள்
சுவாசமெங்கும் பாய்கின்றதே – 2 (…இயேசையா)

4. புதிய படைப்பு நானே தேவ புத்திரன் ஆனேன்
இயேசுவே என் குடும்ப மருத்துவர் – 2
அவர் நாமத்தினால் இரத்தத்தினால் சுகமானேன் – 2 (…இயேசையா)

Sugam Belan Enakkulle Paainthu Selluthe
Vallamai Nathiyaai Paravi Paayuthe – 2

Raththa Kuzhaaigal Kangal Sevi Vaai
Thamani Engum Paaikindrathe – 2

Um Vallamaiyaal Sugamaanen
Um Vaarththaiyaal Sugamaanen
Um Thazhumbugalaal Sugamaanen
Um Thayavinaal Sugamaanen

Yesaiyaa Ratchagare
Sugam Tharum En Deivame – 2 (…Um)

1. Muthugu Thandu Ithayam Moolai Narambu Raththam
Vallamai Paaikindrathe – 2
Kudal Thol Kanaiyam Iraipai Vayiru
Sathai Engum Paaikindrathe – 2 (…Yesaiyaa)

2. Muttu Eeral Moottu Kai Kaal Thisukkal
Vallamai Paaikindrathe – 2
Elumbu Narambugal Siruneeragangal
Thalaiyengum Paaikindrathe – 2 (…Yesaiyaa)

3. Karbappai Katti Kaayangal Pungal
Vallamai Paaikindrathe – 2
Mudakku Vaathangal Nuraiyeeralgal
Suvaasamengum Paaikindrathe – 2 (…Yesaiyaa)

4. Puthiya Padaippu Naane Deva Puththiran Aanen
Yesuve En Kudumba Maruththuvar – 2
Avar Naamaththinaal Raththaththinaal Sugamaanen – 2 (…Yesaiyaa)

Itho Manithargal – இதோ மனிதர்கள் மத்தியில்

Itho Manithargal Mathiyil
இதோ மனிதர்கள் மத்தியில் வாசம் செய்பவரே
எங்கள் நடுவிலே வசித்திட விரும்பிடும் தெய்வமே(தேவனே)

1. உமக்கு சிங்காசனம் அமைத்திட
உம்மை துதிக்கிறோம் இயேசுவே
பரிசுத்த அலங்காரத்துடனே
உம்மை தொழுகிறோம் இயேசுவே

எங்கள் மத்தியில் உலாவிடும்
எங்களோடு என்றும் வாசம் செய்யும்

Itho manithargal mathiyil
Vasam seibavarae
Enggal naaduvile vasithidae
Virimbidum theivamae (devanae)

1. Umakku singhasanam ammaithida
Ummai thuthikindrom yesuvae
Parisutha alangarathudanae
Ummai tholugindrom yesuvae

Enggal mathiyil ulavidoam
Enggalodu yendrum vasam seiyum

Appa Pithave Konjam Parunga – அப்பா பிதாவே கொஞ்சம்

Appa Pithave Konjam Parunga
அப்பா பிதாவே கொஞ்சம் பாருங்க
உன் செல்ல பிள்ளை வந்திருக்கேன் சேர்த்துக்கொள்ளுங்க

1. காசு பணம் பாவ சுகம் வேண்டாம் ஐயா
உன் காலடியில் தூசு போல கிடந்தா போதும்
வேறு எங்கிலும் போக மனசில்லப்பா
ஒரு வேலை காரன் போல கூட இருந்தா போதும்

2. கூச்சப்பட்டேன் நான் உங்க முகம் பார்க்கவே
முழு மனசா வந்து முத்தமிட்டிங்க
பார்த்துக் கிட்டிங்க என்ன பரிவொடவே
பாச தந்தை எப்போதும் நீங்க தானே

3. ஏதேதோ இன்பமூனு அலைஞ்சேன் ஐயா
எல்லாமே நீர்தானு புரிங்சுக்கிட்டேன்
காயப்பட்டிங்க என்னை கரை சேர்க்கவே
புரிஞ்சுக்கிட்டேன் ரொம்ப தாமதமாவே