All Songs by Fr. S. J. Berchmans - ஜே. பெர்க்மான்ஸ்

Karuvil Irundhae – கருவில் இருந்தே

Karuvil Irundhae
கருவில் இருந்தே தாங்கி வந்தீர் கிருபையினாலே
இந்நாள் வரை தாங்குகிறீர் இரக்கத்தினாலே

தாங்கினீர் தப்புவித்தீர் சுமந்தீர் சுகம் தந்தீர்

1. தகப்பன் போல தூக்கி தினம் சுமந்து வருகிறீர்
தாயை போல ஆற்றி தினம் தேற்றி வருகிறீர்

நன்றி ஐயா இயேசய்யா – 4

2. கழுகு போல சுமந்து தினம் பறக்க செய்கின்றீர்
கண்மணி போல் கறைபடாமல் காத்து வருகின்றீர்

3. மேய்ப்பன் போல கரங்களாலே ஏந்தி மகிழ்கின்றீர்
மடியில் வைத்து தினம்தினம் உணவு ஊட்டுகின்றீர்

4. துக்கங்கள் பாடுகள் பெலவீனங்கள்
பாவங்கள் நோய்கள் சுமந்து தீர்த்த்தீர்

Karuvil Irunthe Thaangi Vantheer Kirubaiyinaale
Inaal Varai Thaangukireer Irakkathinaale

Thaangineer Thappuvitheer Sumantheer Sugam Thantheer

1. Thagapan Pola Tooki Thinam Sumanthu Varugireer
Thaayaipola Aartri Thinam Thetri Varugireer

Nandri Iyaa Yesaiyaa

2. Kalugu Pola Sumanthu Thinam Parakka Seikinreer
Kanmani Pola Karaipadaamal Kaathu Varuginreer

3. Meitpan Pola Karangalaale Yenthi Magizhkinreer
Madiyil Vaithu Thinam Thinam Unavu Ootukireer

4. Thukkangal Paadugal Belaveenangal
Paavangal Noigal Sumanthu Theerthire

Jebamegam Ezhumbanum Yeluputhal – ஜெபமேகம் எழும்பனும் எழுப்புதல் மழை இறங்கனும்

Jebamegam Ezhumbanum Yeluputhal

ஜெபமேகம் எழும்பனும் எழுப்புதல் மழை இறங்கனும்
என் தேச எல்லையெங்கும்
மன்றாடி ஜெபிக்கிறேன்
திறப்பின் வாசலில் நின்று

1.இறுதி நாளில் மாம்சமான
யாவர்மேலும்
எழுப்புதல் பெருமழையாய்
இறங்கவேண்டும்
உன்னதரின் வல்லமை
உயிர்ப்பிக்கும் வல்லமை
ஊற்ற வேண்டும் உலகமெங்கிலும்

பொழிந்தருளும் பூமியெங்கும்
அபிஷேகம் பெருமழையாய்- 2
மன்றாடி ஜெபிக்கிறேன்
திறப்பின் வாசலில் நின்று

2.புதல்வர்கள் புதல்வியர் தீர்க்கதரிசனம்
சொல்லவேண்டும் அனுதினமும் ஆவியில் நிறைந்து
வாலிபர்கள் தரிசனங்கள் முதியோர்கள் கனவுகள்
காண வேண்டும் அதிகமதிகமாய்

3.அயல்மொழிகள் பேச வேண்டும் ஆவியில் நிறைந்து
அதன் அர்த்தம் சொல்ல வேண்டும் பரிசுத்தவான்கள்
பேதுருக்கள் பவுல்கள் ஸ்தேவான்கள் பிலிப்புக்கள்
தேசமெங்கும் எழும்ப வேண்டும்

4.ஆதிசபை அற்புதங்கள் அடையாளங்கள்
அன்றாடம் நடக்க வேண்டும் இயேசு நாமத்தில்
குருடர்கள் பார்க்கனும் செவிடர்கள் கேட்கனும்
முடவர்கள் நடக்கனுமே

5.வறுமையே இல்லாத தமிழ்நாடு
வன்முறையே இல்லாத தமிழ்நாடு
நீதியும் நேர்மையும் தூய்மையும் அன்பும்
நிறைந்த தமிழ்நாடு

பொழிந்தருளும் தமிழ்நாடு எங்கும்
அபிஷேகம் பெருமழையாய்-2
மன்றாடி ஜெபிக்கிறேன்
திறப்பின் வாசலில் நின்று

6.பஞ்சமே இல்லாத பாரத தேசம்
பாவமே இல்லாத பாரத தேசம்
ஊழல்கள் குற்றங்கள் சாபங்கள் நோய்கள்
இல்லாத பாரத தேசம்

பொழிந்தருளும் தேசமெங்கும்
அபிஷேகம் பெருமழையாய்-2
மன்றாடி ஜெபிக்கிறேன்
திறப்பின் வாசலில் நின்று

Thagappane Thandhaiye – தகப்பனே தந்தையே

Thagappane Thandhaiye

தகப்பனே தந்தையே
தலைநிமிரச் செய்பவர் நீரே – 2 (1)

கேடகம் நீரே மகிமையும் நீரே
தலை நிமிரச் செய்பவர் நீரே – 2 (2)

1. எதிரிகள் எவ்வளவாய் பெருகிவிட்டனர்
எதிர்த்தெழுவோர் எத்தனை மிகுந்துவிட்டனர் – 2
ஆனாலும் சோர்ந்து போவதில்லை தளர்ந்து விடுவதில்லை – 2

தகப்பன் நீர் தாங்குகிறீர்
என்னைத் தள்ளாட விடமாட்டீர் – 2 (…கேடகம் நீரே)

2. படுத்துறங்கி மகிழ்வுடனே விழித்தெழுவேன்
ஏனெனில் கர்த்தர் என்னை ஆதரிக்கின்றீர் – 2
அச்சமில்லையே கலக்கமில்லையே – 2

வெற்றி தரும் கர்த்தர் என்னோடு
தோல்வி என்றும் எனக்கில்லையே – 2 (…கேடகம் நீரே)

3. ஒன்றுக்கும் நான் கலங்காமல் ஸ்தோத்தரிப்பேன்
அறிவுக்கெட்டா பேர் அமைதி பாதுகாக்குதே – 2
நீர் விரும்பத்தக்கவை தூய்மையானவை – 2

அவைகளையே தியானம் செய்கின்றேன்
தினம் அறிக்கை செய்து ஜெயம் எடுப்பேன் – 2 (…கேடகம் நீரே)

Thagappane thandhaiye
thalai nimira cheibavar neere – 2 (1)

kedagam neere magimaiyum neere
thalai nimira cheibavar neere – 2 (2)

1. Edhirigal evvalavaai perugivittanar
edhirththezhuvor eththanai migunthuvittanar – 2
aanaalum sorndhu povadhillai thalarndhu viduvadhillai – 2

thagappan neer thangugireer
ennai thallada vidamaatteer – 2 (…kedagam neere)

2. Paduththurangi magizhvudane vizhiththezhuven
yenenil karthar ennai aadharikkindreer – 2
achchamillaiye kalakkamillaye – 2

vettri tharum karththar ennodu
tholvi endrum enakkillaye – 2 (…kedagam neere)

3. Ondrukkum naan kalangaamal sthotharippen
arivukettaa per amaidhi paadhugaakkudhe – 2
neer virumbaththakkavai thooymaiyaanavai – 2

avaigalaiye dhyaanam seigindren
dhinam arikkai seidhu jeyam eduppen – 2 (…kedagam neere)

En Uthadu Ummai Thuthikkum – என் உதடு உம்மை துதிக்கும்

En Uthadu Ummai Thuthikkum

என் உதடு உம்மை துதிக்கும்
ஜீவனுள்ள நாட்களெல்லாம் -2 (சங் 63:3)
உம் சமுகம் மேலானது
உயிரினும் மேலானது -2

1. நீர் எனக்கு துணையாய் இருப்பதால்
உம் நிழலில் அகமகிழ்கின்றேன் -2 (சங் 63:7)
இறுதிவரை உறுதியுடன்
உம்மையே பற்றிக்கொண்டேன்
தாங்குதையா உமது கரம் -2 (சங் 63:8)

என் உதடு உம்மை துதிக்கும்
ஜீவனுள்ள நாட்கள் எல்லாம் -4 – உம் சமுகம்

2. என் தகப்பன் நீர்தானையா (சங் 63:1)
தேடுகிறேன் அதிகமதிகமாய் -2
ஜீவன் தரும் தேவநிதி வற்றாத நீரூற்று
உம்மில் நான் தாகம் கொண்டேன் -2 – என் உதடு

3. அறுசுவை உணவு உண்பதுபோல்
திருப்தி தினம் அடைகின்றேன் -2
ஆனந்த களிப்புள்ள (சங் 63:5)
உதடுகளால் துதிக்கின்றேன்
ஆனந்தம் ஆனந்தமே -2 – என் உதடு

En Uthadu Ummai Thuthikkum
Jeevanulla Natkalellam -2
Um Samugam Melaanathu
Uyirinum Melaanathu -2

1. Neer Enakku Thunayaai Iruppathaal
Um Nizhalil Agamagizhgindraen -2
Iruthivarai Uruthiyudan
Ummaiyae Patrikkondaen
Thaanguthaiyaa Umathu Karam -2

En Uthadu Ummai Thuthikkum
Jeevanulla Natkalellam -4 – Um Samugam

2. En Thagappan Neerthaanayya
Thedugiraen Athigamathigamaai -2
Jeevan Tharum Devanathi Vatraatha Neerootru
Ummil Naan Thaagam Kondaen -2 – En Uthadu

3. Arusuvai Unavu Unbathu Pol
Thirupthi Thinam Adaigindraen -2
Aanantha Kalippulla
Uthadukalaaal Thuthikkindraen
Aanantham Aaananthamae -2 – En Uthadu

Naan Paadumpothu – நான் பாடும் போது

Naan Paadumpothu
நான் பாடும் போது என் உதடு கெம்பீரித்து மகிழும்
நீர் மீட்டுக் கொண்ட என் ஆன்மா (சங் 71:23)
அக்களித்து அகமகிழும்

1. நான் பாடுவேன் நான் துதிப்பேன் (சங் 71:14)
இரவு பகல் எந்நேரமும்
உம் துதியால் என் நாவு
நிறைந்து இருக்கிறது

நாள்தோறும் உம்மை துதிப்பேன் (சங் 71:14)
நம்பிக்கையோடு துதிப்பேன்

2. எப்போதும் நான் தேடும் (சங் 71:3)
கன்மலை நீர் தானே
புகலிடமும் காப்பகமும்
எல்லாம் நீர்தானே

3. கருவறையில் இருக்கும் போது (சங் 71:6)
கர்த்தர் என்னை பராமரித்தீர்
குறைவின்றி குழந்தையாக
வெளியே கொண்டுவந்தீர்

4. இளமை முதல் இதுவரையில் (சங் 71:5)
நீரே என் எதிர்காலம்
நீர் தானே என் தலைவர்
நோக்கமும் நம்பிக்கையும்

5. முதிர்வயது ஆனாலும் (சங் 71:9)
தள்ளிவிடாதவரே
பெலன் குன்றி போகும் போது
கைவிடாதவரே

Thulluthaiyaa Um Naamam Solla Solla – துள்ளுதையா உம் நாமம் சொல்ல சொல்ல

Thulluthaiyaa Um Naamam Solla Solla

துள்ளுதையா.. உம் நாமம் சொல்ல சொல்ல
துதித்து துதித்து தினம்
மகிழ்ந்து மகிழ்ந்து மனம் துள்ளுதையா

1. அன்பு பெருகுதையா
என் அப்பாவின் நிழல்தனிலே
அபிஷேகம் வளருதையா
எபிநேசர் பார்வையிலே

2. உள்ளங்கள் மகிழுதையா
உம்மோடு இருக்கையிலே
பள்ளங்கள் நிரம்புதையா
பாடி துதிக்கையிலே

3. நம்பிக்கை வளருதையா
நாதா உம் பாதத்திலே
நன்மைகள் பெருகுதையா
நாள்தோறும் துதிக்கையிலே

4. நோய்கள் நீங்குதையா
உம்மை நோக்கிப் பார்க்கையிலே
பேய்கள் அலறுதையா
பெரியவர் நாமத்திலே

5. கண்ணீர்கள் மறையுதையா
கர்த்தர் உம் சமூகத்திலே
காயங்கள் ஆறுதையா
கருத்தோடு துதிக்கையிலே

Thulluthaiyaa.. Um Naamam Solla Solla
Thuthiththu Thuthiththu Thinam
Makizhnthu Makizhnthu Manam Thulluthaiyaa

1. Anbu Perukuthaiyaa
En Appaavin Nizhalthanile
Abishekam Valaruthaiyaa
Ebinesar Paarvaiyile

2. Ullankal Makizhuthaiyaa
Ummodu Irukkaiyile
Pallankal Nirambuthaiyaa
Paadi Thuthikkaiyile

3. Nambikkai Valaruthaiyaa
Naathaa Um Paathaththile
Nanmaikal Perukuthaiyaa
Naalthorum Thuthikkaiyile

4. Noykal Neenkuthaiyaa
Ummai Nokkip Paarkkaiyile
Peykal Alaruthaiyaa
Periyavar Naamaththile

5. Kanneerkal Maraiyuthaiyaa
Karththar Um Samookaththile
Kaayankal Aaruthaiyaa
Karuththodu Thuthikkaiyile

Nithiya Niththiyamaai – நித்திய நித்தியமாய்

Nithiya Niththiyamaai

நித்திய நித்தியமாய்
உம் நேம் நிலைத்திருக்கும்
தலைமுறை தலைமுறைக்கும்
உம் பேம் பேசப்படும் – 2

நித்தியமே என் சத்தியமே
நிரந்தரம் நீர்தானையா – 2 (…நித்திய நித்தியமாய்)

1. யாக்கோபை உமக்கென்று தெரிந்தெடுத்தீரே
இஸ்ரவேலை பிரித்தெடுத்து துதிக்கச் செய்தீரே – 2
வல்லவர் நீர்தானே
நல்லவர் நீர்தானே – 2

நான் பாடும் பாடல் நீர்தானே
தினம் தேடும் தேடல் நீர்தானே – 2 (…நித்தியமே)

2. வானத்திலும் பூமியிலும் உம் விருப்பம் செய்கின்றீர்
மேகங்கள் எழச்செய்து மழை பொழிகின்றீர் – 2
பெரியவர் நீர்தானே
(என்) பிரியமும் நீர்தானே – 2 (…நான் பாடும்)

3. வார்த்தையினால் வானங்கள் தோன்றச் செய்தீரே
உம் சுவாசத்தினால் விண்மீன்கள் மிளிரச் செய்தீரே – 2
சகலமும் படைத்தவரே
சர்வ வல்லவரே – 2 (…நான் பாடும்)

4. வருடத்தை நன்மையினால் முடிசூட்டுகிறீர்
பாதையெல்லாம் நெய்யாகப் பொழியச் செய்கின்றீர் – 2
காண்பவர் நீர் தானே
தினம் காப்பவர் நீர்தானே – 2 (…நான் பாடும்)

5. மண்ணுலகை விசாரித்து மகிழச் செய்கின்றீர்
தானியங்கள் விளையச் செய்ய தண்ணீர் பாய்ச்சுகிறீர் – 2
மீட்பர் நீர்தானே
என் மேய்ப்பர் நீர்தானே – 2 (…நான் பாடும்)

Nithiya Niththiyamaai
Un Name Nilaiththirukkum
Thalaimurai Thalaimuraikkum
Un Fame Pesappadum – 2

Niththiyame En Saththiyame
Nirantharam Neerthaan Aiyaa (…Niththiya Niththiyamaai)

1. Yaakkobai Umakkendru Therintheduththeere
Isravelai Piriththeduththu Thuthikka Cheitheere – 2
Vallavar Neerthaane
Nallavar Neerthaane – 2

Naan Paadum Paadal Neerthaane
Thinam Thedum Thedal Neerthaane – 2 (…Niththiyame)

2. Vaanaththilum Boomiyilum Um Viruppam Seikindreer
Megangal Ezha Seithu Mazhai Pozhikindreer – 2
Periyavar Neerthaane
(En) Piriyamum Neerthaane – 2 (…Naan Paadum)

3. Vaarththaiyinaal Vaanangal Thondra Cheitheere
Um Suvasaththaal Vinmeengal Miliracheitheere – 2
Sagalamum Padaiththavare
Sarva Vallavare – 2 (…Naan Paadum)

4. Varudaththai Nanmaiyinaal Mudisoottukireer
Paathaiyellaam Neiyaaga Pozhiya Seikindreer – 2
Kaanbavar Neer Thaane
Thinam Kaappavar Neerthaane – 2 (…Naan Paadum)

5. Mannulagai Visariththu Magizha Cheikindreer
Thaaniyangal Vilaya Seiyya Thanneer Paaichchukireer – 2
Meetpar Neerthaane
En Meippar Neerthaane – 2 (…Naan Paadum)

Nandri Bali Nandri Bali – நன்றி பலி நன்றி பலி

Nandri Bali Nandri Bali

நன்றி பலி, நன்றி பலி
நல்லவரே உமக்குத்தான்
அதிகாலை (ஆராதனை) ஆனந்தமே – என்
அப்பா உம் திருப்பாதமே

1. நேற்றைய துயரமெல்லாம்
இன்று மறைந்ததையா
நிம்மதி பிறந்ததையா – அது
நிரந்தரமானதையா

கோடி கோடி நன்றி டாடி (3)

2. இரவெல்லாம் காத்தீர்
இன்னும் ஓர் நாள் தந்தீர்
மறவாத என் நேசரே – இன்று
உறவாடி மகிழ்ந்திடுவேன்

3. ஊழியப் பாதையிலே
உற்சாகம் தந்தீரையா
ஓடி ஓடி உழைப்பதற்கு
உடல் சுகம் தந்தீரையா

4. வேதனை துன்பமெல்லாம்
ஒரு நாளும் பிரிக்காதையா
நாதனே உம் நிழலில்
நாள்தோறும் வாழ்வேனையா – இயேசு

5. ஜெபத்தைக் கேட்டீரையா
ஜெயத்தைத் தந்தீரையா
பாவம் அணுகாமலே
பாதுகாத்து வந்தீரையா

6. என் நாவில் உள்ளதெல்லாம்
உந்தன் புகழ்தானே
நான் பேசி மகிழ்வதெல்லாம்
உந்தன் பெருமை தானே

7. புதிய நாள் தந்தீரையா
புது கிருபை தந்தீரையா
அதிசயமானவரே
ஆறுதல் நாயகனே

Nandri Bali, Nandri Bali
Nallavare Umakkuththaan
Athikaalai (Aaraathanai) Aananthame – En
Appaa Um Thiruppaathame

1. Nettraya Thuyaramellaam
Indru Marainthathaiyaa
Nimmathi Piranthathaiyaa – Athu
Nirantharamaanathaiyaa

Kodi Kodi Nandri Daaddy (3)

2. Iravellaam Kaaththeer
Innum Or Naal Thantheer
Maravaatha En Nesare – Indru
Uravaadi Magizhnthiduven

3. Oozhiyap Paathaiyile
Urchaagam Thantheeraiyaa
Odi Odi Uzhaippatharku
Udal Sugam Thantheeraiyaa

4. Vedhanai Thunbamellaam
Oru Naalum Pirikkaathaiyaa
Naathanae Um Nizhalil
Naalthorum Vaalvenaiyaa – Yesu

5. Jepaththaik Kettiraiyaa
Jeyaththaith Thantheeraiyaa
Paavam Anukaamale
Paathukaaththu Vantheeraiyaa

6. En Naavil Ullathellaam
Unthan Pugazhthaane
Naan Pesi Magizhvathellaam
Unthan Perumai Thaane

7. Puthiya Naal Thantheeraiyaa
Puthu Kirubai Thantheeraiyaa
Athisayamaanavare
Aaruthal Naayakane

Maha Maha Periyathu – மகா மகா பெரியது

Maha Maha Periyathu

மகா மகா பெரியது உம் இரக்கம்
ஒவ்வொரு நாளும் புதியது உம் கிருபை

தேற்றிடும் கிருபை
உயிர்ப்பிக்கும் கிருபை
விலகாத மாறாத கிருபை

1. மிகக் கொடிய வேதனையில்
இடுக்கண்கள் மத்தியில்
விழுந்து விட்டேன் உம் கரத்தில் – 2
கொள்ளைநோய் விலகனும்
ஜனங்கள் வாழனும்
உம் நாமம் உயரனுமே – 4

உம் இரக்கம் உம் தயவு அளவிட முடியாதைய்யா – 2

2. பெலவீனங்களைக் குறித்து
பரிதவிக்கும் மிகப்பெரிய
பிரதான ஆசாரியரே – 2
ஏற்ற வேளை உதவி செய்யும்
கிருபையை நான் நம்பியே
கிருபாசனம் வந்திருக்கிறேன் – 4

உம் இரக்கம் உம் தயவு அளவிட முடியாதைய்யா – 2

3. கிழக்கு மேற்கு உள்ள தூரம்
குற்றங்கள் அகற்றுகின்ற
கிருபையுள்ள நல்ல தகப்பனே – 2
பூலோகம் பரலோகம்
எவ்வளவு உயர்ந்ததோ
அவ்வளவு கிருபை உயர்ந்தது. -4

உம் இரக்கம் உம் தயவு அளவிட முடியாதைய்யா – 2

4. திருப்பாதம் காத்திருந்து
மன்றாடும் பிள்ளைகள் மேல்
மனதுருகும் நல்ல தகப்பனே – 2
பஞ்சத்திலே பசியாற்ற
நோயிலிருந்து காப்பாற்ற
நோக்கமாய் இருப்பவரே – 4

உம் இரக்கம் உம் தயவு அளவிட முடியாதைய்யா – 2

Aathumavae Kartharaiye Nokki – ஆத்துமாவே கர்த்தரையே நோக்கி

Aathumavae Kartharaiye Nokki
ஆத்துமாவே கர்த்தரையே
நோக்கி அமர்ந்திரு -2
நான் நம்புவது அவராலே (கர்த்தராலே)
வருமே வந்திடுமே -2 -ஆத்துமாவே

1. விட்டுவிடாதே நம்பிக்கையை
வெகுமதி உண்டு…
விசுவாசத்தால் உலகத்தையே
வெல்வது நீதான் -2
உனக்குள் வாழ்பவர் உலகை ஆள்பவர் -2

நான் நம்புவது அவராலே (கர்த்தராலே)
வருமே வந்திடுமே -2 -ஆத்துமாவே

2. உன்னதமான கர்த்தர் கரத்தின்
மறைவில் வாழ்கின்றோம்…
சர்வ வல்லவர் நிழலில் தினம்
வாசம் செய்கின்றோம் -2
வாதை அணுகாது
தீங்கு நேரிடாது -2 -நான் நம்புவது

3. பாழாக்கும் கொள்ளை நோய்
மேற்கொள்ளாமல்…
பாதுகாத்து பயம் நீக்கி
ஜெயம் தருகின்றார் -2
சிறகின் நிழலிலே
மூடி மறைக்கின்றார் -2 -நான் நம்புவது

4. கர்த்தர் நமது அடைக்கலமும்
புகலிடமானார்…
நம்பியிருக்கும் நம் தகப்பன்
என்று சொல்லுவோம் -2
சோதனை ஜெயிப்போம்
சாதனை படைப்போம் -2 -நான் நம்புவது

5. நமது தேவன் என்றென்றைக்கும்
சதாகாலமும்….
இறுதிவரை வழி நடத்தும்
தந்தை அல்லவா -2
இரக்கம் உள்ளவர்
நம் இதயம் ஆள்பவர் -2 -நான் நம்புவது

Aathumaavae Karththaraiye
Nokki Amarnthiru -2
Naan Nambuvathu Kartharale
Varumae Vanthidumae -2 -Aathumaavae

1. Vittuvidathae Nambikaiyai Vegumathi Undu
Visuvasathaal Ulagaththaiye Velvathu Neethan
Unakkul Vaazhbavar Ulagai Aazhbavar

2. Unnathamaana Karathin Maraivil Vaazhkintrom
Sarva Vallavr Nizhali Thinam Vaasam Seikintrom
Vaathai Anugathu Theengu nearidathu

3. Paazhakkum Kollai Nooi Mearkollamal
Paathukaathu Bayam Neekki Jeyam Tharukintraar
Sirakin Nilalilae Moodimaraikintraar

3. Karthar Namathu Adaikalam Pugalidamanaar
Nambiyirukkum Nam Thagappan Entru Solluvom
Sothanai Jeyippom saathanai Padaippom

4. Namathu Devan Entratraikkum Sathakaalamum
Iruthivarai Vazhi Nadathum Thanthai Allava
Erakkamullavar Nam Idhayam Aazhbavar