Naan Paadumpothu – நான் பாடும் போது

Naan Paadumpothu
நான் பாடும் போது என் உதடு கெம்பீரித்து மகிழும்
நீர் மீட்டுக் கொண்ட என் ஆன்மா (சங் 71:23)
அக்களித்து அகமகிழும்

1. நான் பாடுவேன் நான் துதிப்பேன் (சங் 71:14)
இரவு பகல் எந்நேரமும்
உம் துதியால் என் நாவு
நிறைந்து இருக்கிறது

நாள்தோறும் உம்மை துதிப்பேன் (சங் 71:14)
நம்பிக்கையோடு துதிப்பேன்

2. எப்போதும் நான் தேடும் (சங் 71:3)
கன்மலை நீர் தானே
புகலிடமும் காப்பகமும்
எல்லாம் நீர்தானே

3. கருவறையில் இருக்கும் போது (சங் 71:6)
கர்த்தர் என்னை பராமரித்தீர்
குறைவின்றி குழந்தையாக
வெளியே கொண்டுவந்தீர்

4. இளமை முதல் இதுவரையில் (சங் 71:5)
நீரே என் எதிர்காலம்
நீர் தானே என் தலைவர்
நோக்கமும் நம்பிக்கையும்

5. முதிர்வயது ஆனாலும் (சங் 71:9)
தள்ளிவிடாதவரே
பெலன் குன்றி போகும் போது
கைவிடாதவரே

One thought on “Naan Paadumpothu – நான் பாடும் போது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *