Maha Maha Periyathu – மகா மகா பெரியது

Maha Maha Periyathu

மகா மகா பெரியது உம் இரக்கம்
ஒவ்வொரு நாளும் புதியது உம் கிருபை

தேற்றிடும் கிருபை
உயிர்ப்பிக்கும் கிருபை
விலகாத மாறாத கிருபை

1. மிகக் கொடிய வேதனையில்
இடுக்கண்கள் மத்தியில்
விழுந்து விட்டேன் உம் கரத்தில் – 2
கொள்ளைநோய் விலகனும்
ஜனங்கள் வாழனும்
உம் நாமம் உயரனுமே – 4

உம் இரக்கம் உம் தயவு அளவிட முடியாதைய்யா – 2

2. பெலவீனங்களைக் குறித்து
பரிதவிக்கும் மிகப்பெரிய
பிரதான ஆசாரியரே – 2
ஏற்ற வேளை உதவி செய்யும்
கிருபையை நான் நம்பியே
கிருபாசனம் வந்திருக்கிறேன் – 4

உம் இரக்கம் உம் தயவு அளவிட முடியாதைய்யா – 2

3. கிழக்கு மேற்கு உள்ள தூரம்
குற்றங்கள் அகற்றுகின்ற
கிருபையுள்ள நல்ல தகப்பனே – 2
பூலோகம் பரலோகம்
எவ்வளவு உயர்ந்ததோ
அவ்வளவு கிருபை உயர்ந்தது. -4

உம் இரக்கம் உம் தயவு அளவிட முடியாதைய்யா – 2

4. திருப்பாதம் காத்திருந்து
மன்றாடும் பிள்ளைகள் மேல்
மனதுருகும் நல்ல தகப்பனே – 2
பஞ்சத்திலே பசியாற்ற
நோயிலிருந்து காப்பாற்ற
நோக்கமாய் இருப்பவரே – 4

உம் இரக்கம் உம் தயவு அளவிட முடியாதைய்யா – 2

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *