Naan Potri Paduvaen
நான் போற்றிப் பாடுவேன் என் இயேசு இராஜாவை
துதிக்கு பாத்திரரே என் துதிக்கு பாத்திரரே (2)
உமக்கே நன்றி இராஜா (4)
துதிக்குப் பாத்திரரே
என் துதிக்கு பாத்திரரே
நான் உம்மைப் புகழ்வேன் என் ஜீவ நாளெல்லாம்
மகிமைக்குப் பாத்திரரே நீர் மகிமைக்குப் பாத்திரரே (2)
உமக்கே நன்றி இராஜா (4)
மகிமைக்குப் பாத்திரரே
நீர் மகிமைக்குப் பாத்திரரே
Imaipoluthum Ennai
இமைப்பொழுதும் என்னை கைவிடமாட்டீர்
ஒரு நாளும் விட்டு விலகமாட்டார்
நீர் கைவிடா கன்மலையே
நித்தமும் காப்பவரே
நீரே என் அடைக்கலம்
என் கோட்டை என் கேடகம்
நான் நம்பும் தெய்வம் என்று சொல்லுவேன் (2)
வேடனுடைய கண்ணிக்கும்
பாழாக்கும் கொள்ளை நோய்க்கும்
தப்புவித்து சிறகால் மூடி மறைக்கிறீர் (2)
நீர் கைவிடா கன்மலையே
நித்தமும் காப்பவரே
கர்த்தர் என் மேய்ப்பர் நான் தாழ்ச்சியடையேனே
புல்லுள்ள இடங்களில் என்னை மேய்க்கிறீர்
அமர்ந்த தண்ணீரண்டையில் என்னை
கொண்டு போய்விடுகிறீர்
ஆத்துமாவை தேற்றி திருப்தியாய் நடத்துகிறீர்
நீர் கைவிடா கன்மலையே
நித்தமும் காப்பவரே
பயமில்லை பயமில்லை எந்தன் குடும்பம் உந்தன் கையில்
பயமில்லை பயமில்லை என் வாழ்க்கை உந்தன் கையில்
என்னை பலுகச் செய்வீர் பெருகச் செய்வீர்
நீண்ட ஆயுள் தந்து காப்பீர்
குடும்பத்தை பேழைக்குள் வைத்து காப்பாற்றுவீர் (2)
என் குடும்பத்தை வேலி அடைத்து காப்பாற்றுவீர்
குடும்பத்தை பேழைக்குள் வைத்து காப்பாற்றுவீர்
நீர் கைவிடா கன்மலையே
நித்தமும் காப்பவரே
Um Anbu Ethanai Perithaiya
உம் அன்பு எத்தனை பெரிதைய்யா
இயேசைய்யா உம் அன்பு பெரிதைய்யா
எப்படி நான் மறப்பேன் -3
உம் அன்பை (2)
பாவத்தின் பாரத்தால் சோர்ந்து நான் போகையில்
பாசமாய் வந்தென்னை இரத்தத்தால் மீட்டீர்
எப்படி நான் மறப்பேன் -3
உம் அன்பை (2)
உம் அன்பு எத்தனை பெரிதைய்யா
இயேசைய்யா உம் அன்பு பெரிதைய்யா
தனிமையில் கண்ணீரில் கலங்கி நான் நிற்கையில்
வலக்கரம் கொண்டென்னை மார்பில் அனைத்தீர்
எப்படி நான் மறப்பேன் -3
உம் அன்பை (2)
உம் அன்பு எத்தனை பெரிதைய்யா
இயேசைய்யா உம் அன்பு பெரிதைய்யா
துரோகி நான் உம்மையே பரியாசம் செய்தேனே
நேசமாய் வந்தென்னை சேர்த்துக் கொண்டீரே
எப்படி நான் மறப்பேன் -3
உம் அன்பை (2)
உம் அன்பு எத்தனை பெரிதைய்யா
இயேசைய்யா உம் அன்பு பெரிதைய்யா
Devareer Neer Sagalamum Seiya Vallavar
தேவரீர் நீர் சகலமும் செய்ய வல்லவர்
தேவனே உமக்கு ஒப்பான தேவன் யார் -2
நீர் செய்ய நினைத்தது நிறைவேறும்
நீர் செய்வதை தடுப்பவன் யார் -2 -தேவரீர்
1. தரிசனம் தந்தவர் நீர் அல்லவோ
தவறாமல் நிறைவேற்றி முடிப்பீரே
சவால்கள் என்றும் ஜெயித்திடுவேன்
சர்வ வல்லவர் நீர் தானே -2 -தேவரீர்
2. தடைகளை உடைப்பவர் நீர் தானே
தடுப்பவர் எவரும் இங்கில்லையே
கடலையும் ஆற்றையும் கடந்திடுவேன்
கன்மலையே உம்மை துதித்திடுவேன் -2 -தேவரீர்
உமக்கு ஒப்பானவர் யார்
உமக்கு ஒப்பானவர் யார் -2
(இந்த) வானத்திலும் பூமியிலும்
உமக்கு ஒப்பானவர் யார் -2 – நீர் செய்ய நினைத்தது