Song Category: Tamil

Naan Potri Paduvaen – நான் போற்றிப் பாடுவேன்

Naan Potri Paduvaen
நான் போற்றிப் பாடுவேன் என் இயேசு இராஜாவை
துதிக்கு பாத்திரரே என் துதிக்கு பாத்திரரே (2)
உமக்கே நன்றி இராஜா (4)
துதிக்குப் பாத்திரரே
என் துதிக்கு பாத்திரரே

உம்மை ஆராதனை செய்கிறேன்
உமக்கே ஆராதனை செய்கிறேன் (2)
நீரே இருந்தவரே இருப்பவரே வருபவரே (2)

நான் உம்மைப் புகழ்வேன் என் ஜீவ நாளெல்லாம்
மகிமைக்குப் பாத்திரரே நீர் மகிமைக்குப் பாத்திரரே (2)
உமக்கே நன்றி இராஜா (4)
மகிமைக்குப் பாத்திரரே
நீர் மகிமைக்குப் பாத்திரரே

உம்மை ஆராதனை செய்கிறேன்
உமக்கே ஆராதனை செய்கிறேன் (2)
நீரே பரிசுத்தரே பரிசுத்தரே பரிசுத்தரே (2)

Kuppayana Ennai – குப்பையான என்னை கோபுரத்தில்

Kuppayana Ennai
குப்பையான என்னை கோபுரத்தில் வைத்தீரே
உதவாத என்னை உமக்காய் தெரிந்தீரே
நீங்கதான் எல்லாம் இயேசப்பா
என் இயேசப்பா
உம்மை விட யாருமில்லப்பா

1. கலங்கின எனக்கு ஆறுதல் அளித்தீரே
கண்ணீரில் எனக்கு கிருபை தந்தீரே
சோர்ந்துப் போய் இருந்தேனப்பா
என் இயேசப்பா
சோகங்கள் தீர்த்தீரப்பா

2. தனிமையில் எனக்கு துணையாய் நீன்றீரே
ஆனாதை எனக்கு அடைக்கலம் தந்தீரே
தாகத்தால் தவித்தேனப்பா
என் இயேசப்பா
ஜீவ தண்ணீர் தந்தீரப்பா

Kuppayana Ennai Koburathil vaitheere
Uthavana ennai umakai therintheerea
Neengatha Yellam Yesapa,
En Yesapa
Ummai vitta yaarumillapa -2x

1. Kalagina enakku Aaruthal alitheere
Kanneril enakku Kirubai thantheere
Sornthupoi irunthenappa,
En Yesapa
Sogangal theertheerappa

2. Thanimaiyil ennakku thunayayai nindreere
Anathai ennakku adaikalam thanthire
Thaagathal thavithenappa,
En Yesapa
Jeeva thaneer thantheerappa

Imaipoluthum Ennai – இமைப்பொழுதும் என்னை கைவிடமாட்டீர்

Imaipoluthum Ennai
இமைப்பொழுதும் என்னை கைவிடமாட்டீர்
ஒரு நாளும் விட்டு விலகமாட்டார்
நீர் கைவிடா கன்மலையே
நித்தமும் காப்பவரே

நீரே என் அடைக்கலம்
என் கோட்டை என் கேடகம்
நான் நம்பும் தெய்வம் என்று சொல்லுவேன் (2)
வேடனுடைய கண்ணிக்கும்
பாழாக்கும் கொள்ளை நோய்க்கும்
தப்புவித்து சிறகால் மூடி மறைக்கிறீர் (2)

நீர் கைவிடா கன்மலையே
நித்தமும் காப்பவரே

கர்த்தர் என் மேய்ப்பர் நான் தாழ்ச்சியடையேனே
புல்லுள்ள இடங்களில் என்னை மேய்க்கிறீர்
அமர்ந்த தண்ணீரண்டையில் என்னை
கொண்டு போய்விடுகிறீர்
ஆத்துமாவை தேற்றி திருப்தியாய் நடத்துகிறீர்
நீர் கைவிடா கன்மலையே
நித்தமும் காப்பவரே

பயமில்லை பயமில்லை எந்தன் குடும்பம் உந்தன் கையில்
பயமில்லை பயமில்லை என் வாழ்க்கை உந்தன் கையில்

என்னை பலுகச் செய்வீர் பெருகச் செய்வீர்
நீண்ட ஆயுள் தந்து காப்பீர்
குடும்பத்தை பேழைக்குள் வைத்து காப்பாற்றுவீர் (2)

என் குடும்பத்தை வேலி அடைத்து காப்பாற்றுவீர்
குடும்பத்தை பேழைக்குள் வைத்து காப்பாற்றுவீர்
நீர் கைவிடா கன்மலையே
நித்தமும் காப்பவரே

Marakka Paduvathillai Naan – மறக்கப்படுவதில்லை நான்

Marakka Paduvathillai Naan

மறக்கப்படுவதில்லை நான்
உம்மால் மறக்கப்படுவதில்லை – 2
கலக்கமில்ல கவலையில்ல
கைவிட நீர் மனிதனல்ல – 2

1. தாய் மறந்தாலும்
தந்தை வெறுத்தாலும்
நீர் என்னை மறப்பதில்லை – 2
உம் கண்முன்னே நான்தானே
என்னை நீர் உறுவாக்கினீர் – கலக்கமில்ல

2. உள்ளங்கையிலே
பொறிந்து வைத்துள்ளீர்
எதிர்கால பயமில்லையே – 2
ஏக்கமெல்லாம் ஈடேறும்
கொடுத்த வாக்குத்தத்தம் நிறைவேறும் – கலக்கமில்ல

Um Anbu Ethanai Perithaiya – உம் அன்பு எத்தனை பெரிதைய்யா

Um Anbu Ethanai Perithaiya
உம் அன்பு எத்தனை பெரிதைய்யா
இயேசைய்யா உம் அன்பு பெரிதைய்யா
எப்படி நான் மறப்பேன் -3
உம் அன்பை (2)

பாவத்தின் பாரத்தால் சோர்ந்து நான் போகையில்
பாசமாய் வந்தென்னை இரத்தத்தால் மீட்டீர்
எப்படி நான் மறப்பேன் -3
உம் அன்பை (2)
உம் அன்பு எத்தனை பெரிதைய்யா
இயேசைய்யா உம் அன்பு பெரிதைய்யா

தனிமையில் கண்ணீரில் கலங்கி நான் நிற்கையில்
வலக்கரம் கொண்டென்னை மார்பில் அனைத்தீர்
எப்படி நான் மறப்பேன் -3
உம் அன்பை (2)
உம் அன்பு எத்தனை பெரிதைய்யா
இயேசைய்யா உம் அன்பு பெரிதைய்யா

துரோகி நான் உம்மையே பரியாசம் செய்தேனே
நேசமாய் வந்தென்னை சேர்த்துக் கொண்டீரே
எப்படி நான் மறப்பேன் -3
உம் அன்பை (2)
உம் அன்பு எத்தனை பெரிதைய்யா
இயேசைய்யா உம் அன்பு பெரிதைய்யா

Ratchanya Magimai – இரட்சண்யம் மகிமை

Ratchanya Magimai
இரட்சண்யம் மகிமை
துதி கன வல்லமை
இயேசுவுக்கு சொந்தமல்லவா
ஆவியின் வல்லமை
கிருபை மேல் கிருபை
தருகின்ற தேவன் அல்லவா(2)

நான் பாடி ஸ்தோத்தரிப்பேன்
சங்கீர்த்தனம் பண்ணிடுவேன் (2)
உம்மில் என்றும் மகிழ்ந்திடுவேன் (2)

1. சாரோனின் ரோஜா நீரே
சீயோனில் பெரியவரே
சாத்தானை ஜெயிக்க
சத்துவம் அளிப்பீர்
பாடுவேன் அல்லேலூயா

2. காருண்யம் உள்ளவரே
கரம் பற்றி நடத்திடுமே
கண்மணி போல
காத்திட்டதாலே
பாடுவேன் அல்லேலூயா

3. சாலேமின் ராஜா நீரே
சமாதான காரணரே
ஷாலோம் என்றாலே
சமாதானம் தானே
பாடுவேன் அல்லேலூயா

4. மரணத்தை வென்றவரே
மறைவிடமானவரே
வசனத்தை அனுப்பி
குணமாக்குவீரே
பாடுவேன் அல்லேலூயா

Pagal Nera Paadal Neerae – பகல் நேரப் பாடல் நீரே

Pagal Nera Paadal Neerae
பகல் நேரப் பாடல் நீரே
இரவெல்லாம் கனவு நீரே
மேலான சந்தோஷம் நீரே
நாளெல்லாம் உமைப் பாடுவேன் – என்

1. எருசலேமே உனை மறந்தால்
வலக்கரம் செயல் இழக்கும்
மகிழ்ச்சியின் மகுடமாய் கருதாவிடில்
நாவு ஒட்டிக் கொள்ளும் என்

மகிழ்ச்சியின் மகுடம் நீர்தானைய்யா
என் மணவாளரே உமை மறவேன்

2. கவலைகள் பெருகி கலங்கும்போது
மகிழ்வித்தீர் உம் அன்பினால்
கால்கள் சறுக்கி தடுமாறும் போது
தாங்கினீர் கிருபையினால் என் – மகிழ்ச்சியின்

3. தாய்மடி தவழும் குழந்தைபோல
மகிழ்ச்சியாய் இருக்கின்றேன்
இப்போதும் எப்போதும் நம்பியுள்ளேன்
உம்மையே நம்பியுள்ளேன் மகிழ்ச்சி – மகிழ்ச்சியின்

4. பார்வையில் செருக்கு எனக்கில்லை
இறுமாப்பு உள்ளத்தில் என்றுமில்லை
பயனற்ற உலகத்தின் செயல்களிலே
பங்கு பெறுவதில்லை – மகிழ்ச்சியின்

Pagalnera Paadal Neerae
Iravellaam Kanavu Neerae
Maelaana Santhosham Neerae
Naalellaam Ummai Paaduvaen – En

1. Yerusalaemae Unnai Maranthaal
Valakaram Seyal Ilakkum
Makilchiyin Makudamaai Karuthaavidil
Naavu Otti Kollum En

Makilchiyin Makudam Neerthaanaiyaa
En Manavaalarae Ummai Maravaen

2. Kavalaigal Peruki Kalangumpothu
Makilvitheer Um Anbinaal
Kaalkal Saruki Thadumaarum Pothu
Thaangineer Kirubaiyinaal En – Makilchiyin

3. Thaaymadi Thavalum Kulanthaipola
Makilchiyaai Irukindren
Ippothum Eppothum Nambiyullaen
Ummaiyae Nambiyullaen – Makilchiyin

4. Paarvaiyil Seruku Enakkillai
Irumaappu Ullathil Endrumillai
Payanatra Ulakathin Seyalkalilae
Pangu Peruvathillai – Makilchiyin

Puthiya Varudathile – El-Hannora – புதிய வருடத்திலே

புதிய வருடத்திலே, என் தேவன் என்னோடு இருக்கிறார்
புதிய வாக்குதத்தங்கள்,
என் தேவன் எனக்கு தருகிறார்

புல்லுள்ள இடங்களிலே
கர்த்தர் என்னை நடத்துகிறார்
அமர்ந்த தண்ணீரண்டை
நித்தமும் சுகமாய் நடத்துகிறார்
El – Hanora (2) வல்லமையுள்ள தேவனே
El – Hanora(2) கிருபையுள்ள தேவனே

1. என் தலையை அபிஷேகம் செய்து
என்னை உயர்த்துவீரே
மேலான வரங்களினாலே
என்னை நிரப்புவீரே (2)

2. இஸ்ரவேலை காக்கும் தேவன் நீர்
இன்றும் என்னோடு இருக்கிறீர்
தேவரீர் என் விளக்கை ஏற்றி என்
இருளை வெளிச்சமாய் மாற்றுவீர் (2)

Oru Magimayin Megam – ஒரு மகிமையின் மேகம்

Oru Magimayin Megam

ஒரு மகிமையின் மேகம்
இந்த இடத்தை மூடுதே
ஒரு மகிமையின் மேகம்
என் ஜனத்தை மூடுதே

விலகாத மேகம் நீர்
முன் செல்லும் மேகம் நீர்

ஆவியானவரே அன்பின் ஆவியானவரே
வல்ல ஆவியானவரே தெளிவின் ஆவியானவரே
மகிமையின் ஆவியானவரே அன்பின் ஆவியானவரே
வல்ல ஆவியானவரே தெளிவின் ஆவியானவரே

என் பேச்சில என் மூச்சில
என் சொல்லுல என் செயலுல கலந்திருக்கீங்க
என் நினைவுல என் நடத்தையில
என் உணர்வுல என் உயிரில கலந்திருக்கீங்க

அன்பின் ஆவியானவரே
விலையேறப் பெற்றவரே
எனை ஆளும் பரிசுத்தரே
நன்றி ஐயா

ஒரு மகிமையின் மேகம்
இந்த இடத்தை மூடுதே
ஒரு மகிமையின் மேகம்
என் ஜனத்தை மூடுதே

விலகாத மேகம் நீர்
முன் செல்லும் மேகம் நீர்

ஆவியானவரே அன்பின் ஆவியானவரே வல்ல ஆவியானவரே தெளிவின் ஆவியானவரே
மகிமையின் ஆவியானவரே
அன்பின் ஆவியானவரே வல்ல ஆவியானவரே தெளிவின் ஆவியானவரே

Devareer Neer Sagalamum Seiya Vallavar – தேவரீர் நீர் சகலமும் செய்ய வல்லவர்

Devareer Neer Sagalamum Seiya Vallavar
தேவரீர் நீர் சகலமும் செய்ய வல்லவர்
தேவனே உமக்கு ஒப்பான தேவன் யார் -2
நீர் செய்ய நினைத்தது நிறைவேறும்
நீர் செய்வதை தடுப்பவன் யார் -2 -தேவரீர்

1. தரிசனம் தந்தவர் நீர் அல்லவோ
தவறாமல் நிறைவேற்றி முடிப்பீரே
சவால்கள் என்றும் ஜெயித்திடுவேன்
சர்வ வல்லவர் நீர் தானே -2 -தேவரீர்

2. தடைகளை உடைப்பவர் நீர் தானே
தடுப்பவர் எவரும் இங்கில்லையே
கடலையும் ஆற்றையும் கடந்திடுவேன்
கன்மலையே உம்மை துதித்திடுவேன் -2 -தேவரீர்

உமக்கு ஒப்பானவர் யார்
உமக்கு ஒப்பானவர் யார் -2
(இந்த) வானத்திலும் பூமியிலும்
உமக்கு ஒப்பானவர் யார் -2 – நீர் செய்ய நினைத்தது

Scale: F-Major