Rajathi Rajave – ராஜாதி ராஜாவே

Rajathi Rajave
ராஜாதி ராஜாவே
கர்த்தாதி கர்த்தாவே
அழகில் சிறந்தவரே
ஆராதனை செய்கிறோம்

துதிக்கு பாத்திரரே
கிருபை நிறைந்தவரே
ஆராதனை ஆராதனை

வெண் அங்கி தரித்தவரே
வெண்மை ஆனவரே
ஆராதனை ஆராதனை

பரலோகம் திறந்தவரே
பாதாளம் வென்றவரே
ஆராதனை ஆராதனை

எங்களை படைத்தவரே
உயிருள்ள தேவன் நீரே
ஆராதனை ஆராதனை

உண்மையும் சத்தியமும்
நீதியும் நிறைந்தவரே
ஆராதனை ஆராதனை

வார்த்தைகள் போதாதையா
உம் நாமம் உயர்த்திடுவேன்
ஆராதனை ஆராதனை

Ummai Nesikka – உம்மை நேசிக்க கற்று தாரும்

Ummai Nesikka
உம்மை நேசிக்க கற்று தாரும்
உள்ளத்தால் முழு பெலத்தால்
உம்மை நேசிக்க கற்று தாரும்

உலகை மறந்து உம்மை நேசிக்க
என்னை மறந்து உம்மை நேசிக்க
சிலுவை சுமக்கையில் நேசிக்க
மரணம் சந்திக்கையில் நேசிக்க

துன்பமான நேரத்தில் நேசிக்க
இன்பமான நேரத்தில் நேசிக்க
கண்ணீரின் மத்தியில் நேசிக்க
தனிமையான நேரத்தில் நேசிக்க

Come see the beauty of the Lord

Come see the beauty of the Lord
Come see the beauty of His face
See the lamb that once was slain
See on His plains is carved your name
See how our pain has pierced His heart
And on his brow He bears our pride
A crown of thorns

But only love pours from His heart
As silently He takes the blame
He has my name upon his lips
My condemnation falls on Him
This love is marvellous to me
His sacrifice has set me free
And now I live
Come see the beauty of the Lord
Come see the beauty of His face

Ummai Pola Yarundu – உம்மை போல யாருண்டு

Ummai Pola Yarundu
உம்மை போல யாருண்டு
நன்மை செய்ய நீருண்டு
உம்மைத் தானே நம்புவேன்
என் தேவா

1. உம்மைதான் எந்தன் வாழ்வில்
ஆதாரமாய் நினைத்து உள்ளேன்
நீர் இல்லா எந்தன் வாழ்க்கை
வீணாய் தானே போகுதைய்யா – உம்மை போல

2. எல்ஷடாய் ஆராதிப்பேன்
எலோஹிம் ஆராதிப்பேன்
அடோனாய் ஆராதிப்பேன்
இயேசுவே ஆராதிப்பேன் – உம்மை போல

3. கலங்கி நின்ற என்னைக் கண்டு
கண்ணீரைத் துடைத்தவரே
காலமெல்லாம் கண்மணிபோல
கரம்பிடித்து காத்தவரே – உம்மை போல

4. மரணத்தின் பாதைதனில்
மனம் தளர்ந்து நின்ற என்னை
மருத்துவராய் நீரே வந்து
மறுவாழ்வு தந்தீரைய்யா – உம்மை போல

Ummai Pola Yaarundu
Nanmai Seiya Neerundu
Ummai Thaane Nampuven
En Theva

1. Ummai Thaan Enthen Vaalvil
Aathaaramaai Ninaithu Ullen
Neer Illa Enthen Vaalkai
Veenaai Thaane Poguthaiya – Ummai Pola

2. Elshadaai Aarathipen
Elohim Aarathipen
Adonaai Aarathipen
Yeshuva Aarathipen – Ummai Pola

3. Kalangi Nintra Ennai Kandu
Kaneerai Thudaithavare
Kaalamellaam Kanmani Pola
Karam Pidithu Kaathavare – Ummai Pola

4. Maranathin Paathaithanil
Manam Thalarnthu Nintra Ennai
Maruthuvaraai Neere Vanthu
Maruvaalvu Thantheeraiya – Ummai Pola

Athikalayil Ummai – அதிகாலையிலுமைத் தேடுவேன்

Athikalayil Ummai
அதிகாலையிலுமைத் தேடுவேன் முழுமனதாலே
தேவாசீர்வாதம் பெற நாடுவேன்
ஜெப தபத்தாலே
இதுகாறும் காத்த தந்தை நீரே
இனிமேலும் காத்தருள் செய்வீரே
பதிவாக உம்மிலே நான் நிலைக்கவே
பத்திரமாயெனை உத்தமனாக்கிடும் – தேவே

1. போன ராமுழுவதும் பாதுகாத்தருளின போதா!
எப்போதும் எங்களிடனிருப்பதா யுரைத்த நல் நாதா!
ஈனப் பாவிக்கேது துணை லோகிலுண்டு பொற்பாதா!
எனக்கான நீசனே! வான ராசனே!
இந்த நாளிலுமொரு பந்தமில்லாமல் காரும் நீதா! – அதிகாலையிலுமை

2. பல சோதனைகளால் சூழ்ந்து நான் கலங்கிடும் போது
தப்பாது நின் கிருபை தாங்கிட வேணுமப்போது
விலகாது என் சமூகம் என்ற வாக்கில் தவறேது?
விசுவாசங்கொண்டு மெய்ப்பாசமூண்டிட
விக்கினம் யாவிலும் வெற்றி காணுவேன் மலைவேது – அதிகாலையிலுமை

3. நரர் யாவர்க்குமுற்ற நண்பனாய் நடத்திடவையே – தீ
நாவின் பாவமற்ற நன்மைகள் மொழிந்திட செய்யே
பரலோக ஆவியை நல் மாரி போலெனில் பெய்யே
புகழான நாதனே! வேத போதனே! பூரணமாயுனைப்
போற்றுவேன் தினம் தினம் மெய்யே – அதிகாலையிலுமை

Chandirane Suriyane – சந்திரனே சூரியனே

Chandirane Suriyane
சந்திரனே சூரியனே
கர்த்தருக்கு கைத்தாளம் போடுங்க
வானங்களே பூமிகளே
கர்த்தருக்கு எக்காளம் ஊதுங்க
அல்லேலூயா அல்லேலூயா
அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா
என துதிகள் பாடி நம்ம இயேசு ராஜவ துதியிங்க
அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா
என மகிழ்ந்து பாடி
வரம் தரும் கனி தரும் அருள் தரும் பெலன் தரும்
ஆவி தூய ஆவி எங்கள நிரப்பி தாருமே

யோசேப்பை போல பயந்திடுவேன்
சாமுவேல் போல பேசிடுவேன்
தாவீதை போல ஆடிடுவேன்
தானியேல் போல ஜெபிப்பேன்
வானத்தின் நட்சத்திரமே
மேகத்தின் பனி மழையே
எப்போதுமே எந்நாளுமே
சாரோனின் ரோஜாக்கள் நாங்க
பரலோகத்தின் ராஜாக்கள் நாங்க

கர்த்தருக்கு புது பாடல் பாடிடுவேன்
அவர் நல்லவர் வல்லவர் என்று
சொல்லி பாடுவேன்
ஆதியும் அவரே என் அந்தமும் அவரே
துள்ளி துள்ளி மகிழ்ச்சியோடு
கரங்கள் தட்டி ஆடி பாடி ஸ்தோதரிப்பேனே

யோசுவா போல சென்றிடுவேன்
யூதா போல எழும்பிடுவேன்
ஈசாக்கை போல விதைத்திடுவேன்
சிம்சோன் போல கிழிப்பேன்
பள்ளத்தாக்கின் லீலியே
சாரோனின் ரோஜாவே
என்றென்றைக்கும் எந்நேரமும்
கர்த்தரின் கரத்தில் நாங்க
இயேசுவின் கரத்தில் நாங்க

Chandhiranae sooriyanae
kartharukku kaithaalam poadunga
Vaanangalae poomigalae
kartharukku ekkaalam oodhunga
Allaelooyaa allaelooyaa
Allaelooyaa allaelooyaa allaelooyaa
Ena thudhigal paadi namma yaesu raajava thudhiyunga
Allaelooyaa allaelooyaa allaelooyaa
Ena magizhnthu paadi
Varam tharum kani tharum arul tharum belan tharum
Aavi thooya aavi engala nirappi thaarumae

Yoaseappai poala payanthiduvaen
Saamuvaelai poala paesiduvaen
Dhaaveedhai poala aadiduvaen
Dhaaniyaelai poala jebippaen
Vaanathin natchathiramae
Maegathin pani mazhaiyae
Eppoadhumae ennaalumae
Saaroanin roajaakkal naanga
Paraloakathin raajaakkal naanga

Kartharukku pudhu paadal paadiduvaen
Avar nallavar vallavar endru
Solli paaduvaen
Aadhiyum avarae en antdamum avarae
Thulli thulli magizhchiyoadu
Karangal thatti aadi paadi sthoatharippaenae

Yoasuvaa poala chendriduvaen
Yoodhaa poala ezhumbiduvaen
Eesaakkai poala vidhaithiduvaen
Simsoan poala kizhippaen
Pallathaakkin leeliyae
Saaroanin roajaavae
Endrendraikkum ennaeramum
Kartharin karathil naanga
Yaesuvin karathil naanga

En Nesar Yesuve – என் நேசர் இயேசுவே

En Nesar Yesuve
என் நேசர் இயேசுவே
என் அன்பு இரட்சகா
நீரே வழி நீரே சத்யம்
நீரே எந்தன் தஞ்சம் அன்றோ (2)

உம்மையல்லாமல் எங்கே நான் போவேன்
நீரே என் ஜீவனன்றோ (2)
நீர் இல்லாமல் நான் இங்கு இயலேனய்யா
உம் துணையின்றி நான் வாழ இயலாதய்யா
என் பேச்சும் நீரே மூச்சும் நீரே – என் நேசர்

மனிதரின் அன்பால் கைவிடப்பட்டேன்
நோவுக்குள் தள்ளப் பட்டேன்
மாந்தரின் அன்பால் நொருக்கப் பட்டேன்
உம் நேசத்தினால் என்னை அனைத்தீரே
நீர் இல்லாமல் நான் இங்கு இயலேனய்யா
உம் துணையின்றி நான் வாழ இயலாதய்யா
என் பேச்சும் நீரே மூச்சும் நீரே – என் நேசர்

Santhosham Venuma – சந்தோஷம் வேணுமா

Santhosham Venuma

சந்தோஷம் வேணுமா சமாதானம் வேணுமா
இயேசுவிடம் வாருங்களே
துன்பங்கள் நீங்கிட துயரங்கள் மாறிட
இயேசுவிடம் வாருங்களே (2)
இயேசு இயேசு இயேசுவாலே எல்லாம் கூடும்
நம் இயேசு இயேசு இயேசுவாலே எல்லாம் கூடும் (2) – சந்தோஷம்

பாவங்கள் போக்கிடுவாரே
புது வாழ்வு தந்திடுவாரே (2)
பரிசுத்தம் தந்து பரலோகம் சேர்ப்பார் -2
இயேசு விடம் வாருங்களே
நம் இயேசு விடம் வாருங்களே – சந்தோஷம்

கண்ணீரைத் துடைத்திடுவாரே
கரங்களை பிடித்திடுவாரே (2)
கவலைகள் நீக்கி களிகூர செய்வார் -2
இயேசு விடம் வாருங்களே
நம் இயேசு விடம் வாருங்களே – சந்தோஷம்

சாத்தானை துரத்திடுவாரே
சாபத்தை முறித்திடுவாரே (2)
அன்பாலே தேற்றி அபிஷேகம் செய்வார் -2
இயேசு விடம் வாருங்களே
நம் இயேசு விடம் வாருங்களே – சந்தோஷம்

Nee Malaimel – நீ மலைமேல்

Nee Malaimel
நீ மலைமேல் உள்ள பட்டணம்
மறைந்து வாழாதே
நீ மறைந்திருக்கும் காலமல்ல
எழும்பிப் பிரகாசி – 2
நீ மலைமேல் உள்ள பட்டணம்
மறைந்து வாழாதே
நீ மறைந்திருக்கும் காலமல்ல

எழுந்து ஒளி வீசு – 2
1. உலகின் ஒளியாய் வாழ தேவன் உன்னை அழைத்தார்
அவர்க்காய் சாட்சியாய் வாழ தேவன் உன்னை அழைத்தார்
கர்த்தரே தேவன் என்று ஜாதிகள் அறிந்திட
சாட்சியாய் நீ வாழ்வாய்
நீ மலைமேல் உள்ள பட்டணம்
மறைந்து வாழாதே
நீ மறைந்திருக்கும் காலமல்ல

எழும்பிப் பிரகாசி (எழுந்து ஒளி வீசு) – 2
2. அழிகின்ற ஜனங்களை மீட்க தேவன் உன்னை அழைத்தார்
திறப்பின் வாசலில் நிற்க தேவன் உன்னை அழைத்தார்
அறுவடை மிகுதி வேலையாள் குறைவு
தேவ ஊழியம் செய்வாய்
நீ மலைமேல் உள்ள பட்டணம்
மறைந்து வாழாதே
நீ மறைந்திருக்கும் காலமல்ல

எழும்பிப் பிரகாசி (எழுந்து ஒளி வீசு) – 2
3.  இருளின் அதிகாரம் உடைக்க வல்லமை உனக்களித்தார்
பூமியில் அக்கினியை இறக்க வரங்களை உனக்களித்தார்
பாதாளத்தை வெறுமையாக்கி பரலோகத்தை நிரப்ப
திறவுகோல் உனக்களித்தார்
நீ மலைமேல் உள்ள பட்டணம்
மறைந்து வாழாதே
நீ மறைந்திருக்கும் காலமல்ல

எழும்பிப் பிரகாசி – 2
நீ மலைமேல் உள்ள பட்டணம்
மறைந்து வாழாதே
நீ மறைந்திருக்கும் காலமல்ல

எழுந்து ஒளி வீசு – 2

Naan En Nesarudaiyavan – நான் என் நேசருடையவன்

Naan En Nesarudaiyavan
நான் என் நேசருடையவன் என் நேசர் என்னுடையவர்
சாரோனின் ரோஜா பள்ளத்தாக்கின் லீலி
இவரே என் நேசர் இவரே என் சிநேகிதர்
இவரே என் பிரியமானவர்

1. பாவியான என்னையும் அவர் தேடி வந்தாரே
மணவாளனும் என் தோழனும் எனக்கெல்லாமானாரே
அவர் சேவை செய்வேன்
அவர்க்காகவே வாழ்வேன்

2. தனிமையான நேரத்தில் என் துணையாய் வந்தாரே
பெலவீனமான நேரத்தில் தம் கிருபை தந்தாரே
அவர் நாமம் உயர்த்துவேன்
அவர் சாட்சியாய் வாழ்வேன்

3. எனக்காகவே யாவையும் அவர் செய்து முடித்தாரே
ஏற்ற நேரத்தில் என் தேவைகள் யாவும் சந்தித்தார்
உயிருள்ள நாளெல்லாம்
அவர் நாமம் பாடுவேன்

4. என்னையும் அவருடன் அழைத்துச் சென்றிட
மேகங்கள் மீதிலே வேகம் வருவாரே
அவரோடு வாழ்வேன்
நான் நித்ய நித்தியமாய்

Naan en naesarudaiyavan en naesar ennudaiyavar
Saaroanin roajaa pallthaakkin leeli
Ivarae en naesar ivarae en sinaegithar
Ivarae en piriyamaanavar

1. Paaviyaana ennaiyum avar thaedi vandhaarae
Manavaalanum en thoazhanum enakkellaamaanaarae
Avar saevai seivaen
Avarkkaagavae vaazhvaen

2. Thanimaiyaana naerathil en thunaiyaai vandhaarae
Belaveenamaana naerathil tham kirubai thandhaarae
Avar naamam uyarthuvaen
Avar saatchiyaai vaazhvaen

3. Enakkaagavae yaavaiyum avar seidhu mudiththaarae
Aetra naeraththil en thaevaigal yaavum sandhiththaar
Uyirulla naalellaam
Avar naamam paaduvaen

4. Ennaiyum avarudan azhaiththu sendrida
Maegangal meedhilae vaegam varuvaarae
Avaroadu vaazhvaen
Naan nithya niththiyamaai