Chandirane Suriyane – சந்திரனே சூரியனே

Chandirane Suriyane
சந்திரனே சூரியனே
கர்த்தருக்கு கைத்தாளம் போடுங்க
வானங்களே பூமிகளே
கர்த்தருக்கு எக்காளம் ஊதுங்க
அல்லேலூயா அல்லேலூயா
அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா
என துதிகள் பாடி நம்ம இயேசு ராஜவ துதியிங்க
அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா
என மகிழ்ந்து பாடி
வரம் தரும் கனி தரும் அருள் தரும் பெலன் தரும்
ஆவி தூய ஆவி எங்கள நிரப்பி தாருமே

யோசேப்பை போல பயந்திடுவேன்
சாமுவேல் போல பேசிடுவேன்
தாவீதை போல ஆடிடுவேன்
தானியேல் போல ஜெபிப்பேன்
வானத்தின் நட்சத்திரமே
மேகத்தின் பனி மழையே
எப்போதுமே எந்நாளுமே
சாரோனின் ரோஜாக்கள் நாங்க
பரலோகத்தின் ராஜாக்கள் நாங்க

கர்த்தருக்கு புது பாடல் பாடிடுவேன்
அவர் நல்லவர் வல்லவர் என்று
சொல்லி பாடுவேன்
ஆதியும் அவரே என் அந்தமும் அவரே
துள்ளி துள்ளி மகிழ்ச்சியோடு
கரங்கள் தட்டி ஆடி பாடி ஸ்தோதரிப்பேனே

யோசுவா போல சென்றிடுவேன்
யூதா போல எழும்பிடுவேன்
ஈசாக்கை போல விதைத்திடுவேன்
சிம்சோன் போல கிழிப்பேன்
பள்ளத்தாக்கின் லீலியே
சாரோனின் ரோஜாவே
என்றென்றைக்கும் எந்நேரமும்
கர்த்தரின் கரத்தில் நாங்க
இயேசுவின் கரத்தில் நாங்க

Chandhiranae sooriyanae
kartharukku kaithaalam poadunga
Vaanangalae poomigalae
kartharukku ekkaalam oodhunga
Allaelooyaa allaelooyaa
Allaelooyaa allaelooyaa allaelooyaa
Ena thudhigal paadi namma yaesu raajava thudhiyunga
Allaelooyaa allaelooyaa allaelooyaa
Ena magizhnthu paadi
Varam tharum kani tharum arul tharum belan tharum
Aavi thooya aavi engala nirappi thaarumae

Yoaseappai poala payanthiduvaen
Saamuvaelai poala paesiduvaen
Dhaaveedhai poala aadiduvaen
Dhaaniyaelai poala jebippaen
Vaanathin natchathiramae
Maegathin pani mazhaiyae
Eppoadhumae ennaalumae
Saaroanin roajaakkal naanga
Paraloakathin raajaakkal naanga

Kartharukku pudhu paadal paadiduvaen
Avar nallavar vallavar endru
Solli paaduvaen
Aadhiyum avarae en antdamum avarae
Thulli thulli magizhchiyoadu
Karangal thatti aadi paadi sthoatharippaenae

Yoasuvaa poala chendriduvaen
Yoodhaa poala ezhumbiduvaen
Eesaakkai poala vidhaithiduvaen
Simsoan poala kizhippaen
Pallathaakkin leeliyae
Saaroanin roajaavae
Endrendraikkum ennaeramum
Kartharin karathil naanga
Yaesuvin karathil naanga

En Nesar Yesuve – என் நேசர் இயேசுவே

En Nesar Yesuve
என் நேசர் இயேசுவே
என் அன்பு இரட்சகா
நீரே வழி நீரே சத்யம்
நீரே எந்தன் தஞ்சம் அன்றோ (2)

உம்மையல்லாமல் எங்கே நான் போவேன்
நீரே என் ஜீவனன்றோ (2)
நீர் இல்லாமல் நான் இங்கு இயலேனய்யா
உம் துணையின்றி நான் வாழ இயலாதய்யா
என் பேச்சும் நீரே மூச்சும் நீரே – என் நேசர்

மனிதரின் அன்பால் கைவிடப்பட்டேன்
நோவுக்குள் தள்ளப் பட்டேன்
மாந்தரின் அன்பால் நொருக்கப் பட்டேன்
உம் நேசத்தினால் என்னை அனைத்தீரே
நீர் இல்லாமல் நான் இங்கு இயலேனய்யா
உம் துணையின்றி நான் வாழ இயலாதய்யா
என் பேச்சும் நீரே மூச்சும் நீரே – என் நேசர்

Santhosham Venuma – சந்தோஷம் வேணுமா

Santhosham Venuma

சந்தோஷம் வேணுமா சமாதானம் வேணுமா
இயேசுவிடம் வாருங்களே
துன்பங்கள் நீங்கிட துயரங்கள் மாறிட
இயேசுவிடம் வாருங்களே (2)
இயேசு இயேசு இயேசுவாலே எல்லாம் கூடும்
நம் இயேசு இயேசு இயேசுவாலே எல்லாம் கூடும் (2) – சந்தோஷம்

பாவங்கள் போக்கிடுவாரே
புது வாழ்வு தந்திடுவாரே (2)
பரிசுத்தம் தந்து பரலோகம் சேர்ப்பார் -2
இயேசு விடம் வாருங்களே
நம் இயேசு விடம் வாருங்களே – சந்தோஷம்

கண்ணீரைத் துடைத்திடுவாரே
கரங்களை பிடித்திடுவாரே (2)
கவலைகள் நீக்கி களிகூர செய்வார் -2
இயேசு விடம் வாருங்களே
நம் இயேசு விடம் வாருங்களே – சந்தோஷம்

சாத்தானை துரத்திடுவாரே
சாபத்தை முறித்திடுவாரே (2)
அன்பாலே தேற்றி அபிஷேகம் செய்வார் -2
இயேசு விடம் வாருங்களே
நம் இயேசு விடம் வாருங்களே – சந்தோஷம்

Nee Malaimel – நீ மலைமேல்

Nee Malaimel
நீ மலைமேல் உள்ள பட்டணம்
மறைந்து வாழாதே
நீ மறைந்திருக்கும் காலமல்ல
எழும்பிப் பிரகாசி – 2
நீ மலைமேல் உள்ள பட்டணம்
மறைந்து வாழாதே
நீ மறைந்திருக்கும் காலமல்ல

எழுந்து ஒளி வீசு – 2
1. உலகின் ஒளியாய் வாழ தேவன் உன்னை அழைத்தார்
அவர்க்காய் சாட்சியாய் வாழ தேவன் உன்னை அழைத்தார்
கர்த்தரே தேவன் என்று ஜாதிகள் அறிந்திட
சாட்சியாய் நீ வாழ்வாய்
நீ மலைமேல் உள்ள பட்டணம்
மறைந்து வாழாதே
நீ மறைந்திருக்கும் காலமல்ல

எழும்பிப் பிரகாசி (எழுந்து ஒளி வீசு) – 2
2. அழிகின்ற ஜனங்களை மீட்க தேவன் உன்னை அழைத்தார்
திறப்பின் வாசலில் நிற்க தேவன் உன்னை அழைத்தார்
அறுவடை மிகுதி வேலையாள் குறைவு
தேவ ஊழியம் செய்வாய்
நீ மலைமேல் உள்ள பட்டணம்
மறைந்து வாழாதே
நீ மறைந்திருக்கும் காலமல்ல

எழும்பிப் பிரகாசி (எழுந்து ஒளி வீசு) – 2
3.  இருளின் அதிகாரம் உடைக்க வல்லமை உனக்களித்தார்
பூமியில் அக்கினியை இறக்க வரங்களை உனக்களித்தார்
பாதாளத்தை வெறுமையாக்கி பரலோகத்தை நிரப்ப
திறவுகோல் உனக்களித்தார்
நீ மலைமேல் உள்ள பட்டணம்
மறைந்து வாழாதே
நீ மறைந்திருக்கும் காலமல்ல

எழும்பிப் பிரகாசி – 2
நீ மலைமேல் உள்ள பட்டணம்
மறைந்து வாழாதே
நீ மறைந்திருக்கும் காலமல்ல

எழுந்து ஒளி வீசு – 2

Naan En Nesarudaiyavan – நான் என் நேசருடையவன்

Naan En Nesarudaiyavan
நான் என் நேசருடையவன் என் நேசர் என்னுடையவர்
சாரோனின் ரோஜா பள்ளத்தாக்கின் லீலி
இவரே என் நேசர் இவரே என் சிநேகிதர்
இவரே என் பிரியமானவர்

1. பாவியான என்னையும் அவர் தேடி வந்தாரே
மணவாளனும் என் தோழனும் எனக்கெல்லாமானாரே
அவர் சேவை செய்வேன்
அவர்க்காகவே வாழ்வேன்

2. தனிமையான நேரத்தில் என் துணையாய் வந்தாரே
பெலவீனமான நேரத்தில் தம் கிருபை தந்தாரே
அவர் நாமம் உயர்த்துவேன்
அவர் சாட்சியாய் வாழ்வேன்

3. எனக்காகவே யாவையும் அவர் செய்து முடித்தாரே
ஏற்ற நேரத்தில் என் தேவைகள் யாவும் சந்தித்தார்
உயிருள்ள நாளெல்லாம்
அவர் நாமம் பாடுவேன்

4. என்னையும் அவருடன் அழைத்துச் சென்றிட
மேகங்கள் மீதிலே வேகம் வருவாரே
அவரோடு வாழ்வேன்
நான் நித்ய நித்தியமாய்

Naan en naesarudaiyavan en naesar ennudaiyavar
Saaroanin roajaa pallthaakkin leeli
Ivarae en naesar ivarae en sinaegithar
Ivarae en piriyamaanavar

1. Paaviyaana ennaiyum avar thaedi vandhaarae
Manavaalanum en thoazhanum enakkellaamaanaarae
Avar saevai seivaen
Avarkkaagavae vaazhvaen

2. Thanimaiyaana naerathil en thunaiyaai vandhaarae
Belaveenamaana naerathil tham kirubai thandhaarae
Avar naamam uyarthuvaen
Avar saatchiyaai vaazhvaen

3. Enakkaagavae yaavaiyum avar seidhu mudiththaarae
Aetra naeraththil en thaevaigal yaavum sandhiththaar
Uyirulla naalellaam
Avar naamam paaduvaen

4. Ennaiyum avarudan azhaiththu sendrida
Maegangal meedhilae vaegam varuvaarae
Avaroadu vaazhvaen
Naan nithya niththiyamaai

Nandri Solli Paaduven – நன்றி சொல்லி பாடுவேன்

Nandri Solli Paaduven
நன்றி சொல்லி பாடுவேன் துதி சொல்லி பாடுவேன்
நீங்க செய்த நன்மைகளை சொல்லி சொல்லி பாடுவேன்

நன்றி இயேசு ராஜா

என் ஜீவன் உமக்கு அருமையாய் இருந்ததினால்
தீங்கு நாளில் என்னை காத்துக் கொண்டீர்

ஒரு வழியாய் வந்த எந்தன் எதிரிகளை
ஏழு வழியாய் என் முன்ஓட செய்தீர்

என் சமூகம் உனக்கு முன்பாக செல்லும் என்றீர்
போக்கிலும் வரத்திலும் என் கூட நீர் இருந்தீர்

இம்மட்டும் காத்தீர் இனியும் காத்திடுவீர்
இன்னல்கள் நீக்கி இன்பமாய் வாழ வைப்பீர்

Kalanguvathen – கலங்குவதேன் கண்ணீர்

Kalanguvathen
கலங்குவதேன் கண்ணீர் விடுவதேன்
நேசரின் கரங்களே தேற்றுமே
இயேசுவின் காயங்கள் ஆற்றுமே..

சோர்ந்து போன உன் உள்ளம் பார்க்கிறார்
உடைந்து போன உன் நெஞ்சம் காண்கிறார்
அழைத்த தேவன் உன்னை நடத்தி செல்வார்
கண்ணீரை துடைப்பார் கவலைகள் மாற்றுவார்..
புது ஜீவன் ஊற்றுவார் புது சிருஷ்டி ஆக்குவார்!

அவருக்கான உன் இழப்புகள் பார்க்கிறார்
அவருக்கான உன் அலைச்சல்கள் காண்கிறார்
நீதி தேவன் உனக்கு நியாயம் செய்வார்
நிச்சயம் பலன் தருவார் உறுதியாய் உயர்த்திடுவார்
தோல்வியில் ஜெயம் தருவார்
வியாதியில் சுகம் தருவார்

Ootrungayya Ootrungayya – ஊற்றுங்கையா ஊற்றுங்கையா

Ootrungayya Ootrungayya
ஊற்றுங்கையா ஊற்றுங்கையா பெருமழையாக
நிரப்புங்கையா நிரப்புங்கையா எங்க வாழ்க்கைய

உம்மைப்போல் மழை உண்டாக்க தேவர்கள் உண்டோ
வானமும் தானாகவே மழையை பொழியுமோ
நீரல்லவோ

வயல்களும் ஆறுகளும் வற்றி போய் இருக்கும்
ஆவி ஊற்றப்பட்டால் வனாந்தரம் செழிக்கும்
நீரல்லவோ

ராஜாவின் முக களையில் வீரம் இருக்கும்
உங்க தயவுக்குள்ள பின் மாரி இருக்கும்
நீரல்லவோ

En Vaazhvil Yesuve – என் வாழ்வில் இயேசுவே

En Vaazhvil Yesuve
என் வாழ்வில் இயேசுவே எந்நாளும் இங்கே
எல்லாமும் நீயாக வேண்டும்
எந்தன் எல்லாமும் நீயாக வேண்டும்

சோகங்கள் பாராமல் நான் வாழும் போது
தாயாக நீ மாற வேண்டும்
அன்புத் தாயாக நீ மாற வேண்டும்
பாரங்கள் தாங்காமல் நான் சாயும் போது
பாதங்கள் நீயாக வேண்டும்
எந்தன் பாதங்கள் நீயாக வேண்டும்

காலங்கள் எல்லாம் என் நெஞ்சின் வீட்டில்
தீபங்கள் நீயாக வேண்டும் சுடர் தீபங்கள் நீயாக வேண்டும்
தாகங்கள் தீராமல் நான் ஏங்கும் போது
மேகங்கள் நீயாக வேண்டும்
மழை மேகங்கள் நீயாக வேண்டும்

Then Inimaiyilum Yesuvin – தேன் இனிமையிலும்

Then Inimaiyilum Yesuvin
தேன் இனிமையிலும் இயேசுவின் நாமம்
திவ்விய மதுரமாமே – அதைத்
தேடியே நாடி ஓடியே வருவாய், தினமும் நீ மனமே

1. காசினிதனிலே நேசமதாகக்
கஷ்டத்தை உத்தரித்தே – பாவக்
கசடதை அறுத்துச் சாபத்தைத் தொலைத்தார்
கண்டுனர் நீ மனமே – தேன்

2. பாவியை மீட்கத் தாவியே உயிரைத்
தாமே ஈந்தவராம் – பின்னும்
நேமியாம் கருணை நிலைவரமுண்டு
நிதம் துதி என் மனமே – தேன்

3. காலையில் பனிபோல் மாயமாய் யாவும் (உலகம்)
உபாயமாய் நீங்கிவிடும் – என்றும்
கர்த்தரின் பாதம் நிச்சயம் நம்பு
கருத்தாய் நீ மனமே – தேன்

4. துன்பத்தில் இன்பம் தொல்லையில் நல்ல
துணைவராம் நேசரிடம் – நீயும்
அன்பதாய்ச் சேர்ந்தால் அணைத்துனைக் காப்பார்
ஆசை கொள் நீ மனமே – தேன்

5. பூலோகத்தாரும் மேலோகத்தாரும்
புகழ்ந்து போற்று நாமம் – அதைப்
பூண்டுகொண்டால்தான் பொன்னகர் வாழ்வில்
புகுவாய் நீ மனமே – தேன்

Then Inimaiyilum Yesuvin Naamam
Dhivya Madhuramaamae – Adhaith
Thediyae Naadi Odiyae Varuvaai
Dhinamum Nee Manamae

1. Kaasini Thenilae Nesamathaagak
Kastaththai Uththariththae – Paavak
Kasadadhai Aruththu Saabaththai Tholaiththaar
Kandunar Nee manamae – Then

2. Paaviyai Meetkkath Thaaviyae Uyiraith
Thaamae Eendhavaraam – Pinnum
Nemiyaam Karunai Nilaivaramudae
Nidham Thuthi En Manamae – Then

3. Kaalaiyil Panipol Maayamaai Yaavum (ulagam)
Ubaamayaai Neengividum – Endrum
Kartharin Paadham Nitchayam Nambu
Karuththaai Nee Manamae – Then

4. Thunbaththil Inbam Thollaiyil Nalla
Thunaivaraam Nesaridam – Neeyum
Anbadhaai Serndhaal
Anaiththu Kaappaar Aasaikol Nee Manamae – Then

5. Boologaththaarum Melogaththaarum
Pugazhndhu Pottrum Naamam – Adhaip
Poondu Kondaal than Ponnagar Vaazhvil
Puguvaai Nee Manamae – Then