Song Category: Tamil

Parisuthar Kootam Yesuvai Potri – பரிசுத்தர் கூட்டம் இயேசுவைப் போற்றி

Parisuthar Kootam Yesuvai Potri
பரிசுத்தர் கூட்டம் இயேசுவைப் போற்றி
பாடி மகிழ்ந்தாடி அங்கே கூடிட
பரமானந்த கீதமங்கெழும்ப
நீ அங்கிருப்பாயோ?
நீ அங்கிருப்பாயோ?
நீ அங்கிருப்பாயோ? சொல் என் மனமே

2.ஆட்டுக்குட்டியும் அரசாட்சி செய்ய
அண்டினோரெவரும் அவரைச் சேர
அன்பர் அன்றெல்லார் கண்ணீரும் துடைக்க
நீ அங்கிருப்பாயோ?
நீ அங்கிருப்பாயோ?
நீ அங்கிருப்பாயோ? சொல் என் மனமே

3. பேதுரு பவுலும் யோவானும் அங்கே
பின்னும் முற்பிதாக்கள் அப்போஸ்தலரும்
இரத்த சாட்சிகளும் திரளாய்க் கூட
நீ அங்கிருப்பாயோ?
நீ அங்கிருப்பாயோ?
நீ அங்கிருப்பாயோ? சொல் என் மனமே

4. ஜெகத்தில் சிலுவை சுமந்தோரெல்லாம்
திருமுடியணிந்திலங்கிடவும்
தேவ சேயர்களாயெல்லாரும் மாற
நீ அங்கிருப்பாயோ?
நீ அங்கிருப்பாயோ?
நீ அங்கிருப்பாயோ? சொல் என் மனமே

5. சோதனைகளை வென்றவர் எவரும்
துன்பம் தொல்லைகளைச் சகித்தவரும்
ஜோதி ரூபமாய் சொர்கலோகில் ஜொலிக்க
நீ அங்கிருப்பாயோ?
நீ அங்கிருப்பாயோ?
நீ அங்கிருப்பாயோ? சொல் என் மனமே

6. கன்னிகையைப் போல் கர்த்தர் சபையன்று
மன்னர் மணாளனேசுவை மணந்து
பின்னும் சொல்லரிதாம் நிலை ருசிக்க
நீ அங்கிருப்பாயோ?
நீ அங்கிருப்பாயோ?
நீ அங்கிருப்பாயோ? சொல் என் மனமே
நான் அங்கிருப்பேனே நான் அங்கிருப்பேனே
நான் அங்கிருப்பேனே என் யேசுவுடன்

1. Parisuthar Kootam Yesuvai Potri
Paadi Mahizhnthodi Ange Koodida
Paramaanandha Geethamangezhumba
Nee Anggirupaayo?
Nee Anggirupaayo?
Nee Anggirupaayo? – Sol En Maname

2. Aattukkutiyum Arasatchi Seiya
Andinor Evarum Avarai Chera
Anbar Andrellaar Kanneerum Thudaikka
Nee Anggirupaayo?
Nee Anggirupaayo?
Nee Anggirupaayo? – Sol En Maname

3. Pedhuru, Pavulum, Yovaanum Ange
Pinnum Murpidhakkal Apposthalarum
Raththa Saatchigalum Thiralaikooda
Nee Anggirupaayo?
Nee Anggirupaayo?
Nee Anggirupaayo? – Sol En Maname

4. Jagathil Siluvai Sumanthorellam
Thirumudiyanin dhilangidavum
Deva seyargallai Yelloorum Maara
Nee Anggirupaayo?
Nee Anggirupaayo?
Nee Anggirupaayo? – Sol En Maname

5. Sothanaigalai Vendravar Evarum
Thunbam Thollaigalai Sagiththavarum
Jothi Roobamai Sorgalogil Jolikka
Nee Anggirupaayo?
Nee Anggirupaayo?
Nee Anggirupaayo? – Sol En Maname

6. Kannigaiyai Pol Karthar Sabai Andru
Mannar Manaalan Yesuvai Manandhu
Pinnum Sollaritham Nillai Rusikka
Nee Anggirupaayo?
Nee Anggirupaayo?
Nee Anggirupaayo? – Sol En Maname

Naan Anggirruppene Naan Anggiruppene
Naan Anggiruppene En Yesuvudan

Kartharaiyum Avar Vasanathaiyum – கர்த்தரையும் அவர் வசனத்தையும்

Kartharaiyum Avar Vasanathaiyum
கர்த்தரையும் அவர் வசனத்தையும் – 2
ரசிப்போமா கொஞ்சம் ருசிப்போமா – 2

1. வானமும் பூமியும் ஒழிந்துபோகும் – 2
வார்த்தை ஒழியுமோ – 2
பூக்களும் உலரும் – 2
புல்லும் அழியும் – 2
வசனம் அழியுமோ – 2
ஆண்டவரின் வசனம் – 2
அது நிலைத்து நின்றிடுமே – 2
கட்டளைகளும் கற்பனைகளும் – 2
நித்தியம் நித்தியமே – 2
கர்த்தரையும் அவர் வசனத்தையும் – 2
ரசிப்போமா கொஞ்சம் ருசிப்போமா – 2

2. காலுக்கு தீபம் – 2
பாதைக்கு வெளிச்சம் வசமல்லவோ – 2
தங்கத்தை விட தேனையும் விட உசந்ததல்லவோ – 2
ஆண்டவரின் வசனம் மனது மகிழுமே – 2
கீழ்ப்படிந்து நடந்தா
என்றும் நன்மை நிகழுமே – 2
கர்த்தரையும் அவர் வசனத்தையும் – 2
ரசிப்போமா கொஞ்சம் ருசிப்போமா – 2

3. குற்றங்கள் இல்லா குறையும் இல்லா வசனப் புத்தகமே -2 ஆத்துமாவுக்கு இரட்சிப்பை தரும் பொக்கிஷ பெட்டகமே – 2 பேதைகளுக்கு எல்லாம் அது ஞானம் கொடுக்குமே – 2 சத்தியத்தை விரும்புவோர்க்கு அழைப்பு கொடுக்குமே – 2 கர்த்தரையும் அவர் வசனத்தையும் – 4 ரசிப்போமா கொஞ்சம் ருசிப்போமா – 4

Ithu Mutharkondu – இது முதற்க்கொண்டு போக்கையும்

Ithu Mutharkondu

இது முதற்க்கொண்டு போக்கையும் வரத்தையும் ஆசீர்வதிப்பேன் என்று சொன்னவரே -2
எந்தன் கோட்டையே எந்தன் தஞ்சமேஇயேசு என் பரிகாரியே -2

பகலிலே வெயிலாகிலும் இரவிலே நிலவாகிலும் -2
உன்னை காக்கின்றவர் வலப்பக்கத்தில் நிழலாய் இருக்கின்றவர் -2

அற்புதம் செய்கின்றவர் உன்னை அதிசயமாய் நடத்துவார் -2
நிச்சயமாகவே முடிவு உண்டு உன் நம்பிக்கை வீண் போகாது (2)

இது முதற்க்கொண்டு போக்கையும் வரத்தையும் ஆசீர்வதிப்பேன் என்று சொன்னவரே – (2)
எந்தன் கோட்டையே எந்தன் தஞ்சமே
இயேசு என் பரிகாரியே

Ithu Mutharkondu Pokkaiyum Varathaiyum
Aasirvathipean Endru Sonnavarae – 2
Enthan Kottaiye Enthan Thanjame
Yesu En Parikariye – 2

Ithu Mutharkondu Pokkaiyum Varathaiyum
Asirvathipen Endru Sonnavarae

Pagalile Veyilagilum Iravile Nilavagilum – 2
Unnai Kakindravar Valapakkathil
Nizhalai Irukindravar – 2

Ithu Mutharkondu Pokkaiyum Varathaiyum
Asirvathipen Endru Sonnavarae

Arputham Seikindravar
Unnai Athisayamai Nadathuvar – 2
Nichayamagave Mudivu Undu
Un Nambikkai Veen Pogathu – 2

Ithu Mutharkondu Pokkaiyum Varathaiyum
Asirvathipen Endru Sonnavarae
Enthan Kottaiye Enthan Thanjame
Yesu En Parikariye – 2

En Aasthibaram Yesuvin Mel – என் அஸ்திபாரம் கிறிஸ்துவின் மேல்

En Aasthibaram Yesuvin Mel

என் அஸ்திபாரம் கிறிஸ்துவின் மேல் இருப்பதினால்
அசைவதில்லை நான் அசைவதில்லை
அல்லேலூயா ஆனந்தமே
இயேசு கிறிஸ்துவினால் ஜெயம் பெறுவேன்

1. யோசேப்பை அறியாத பார்வோன்கள் வரலாம்
போஷித்த காகங்கள் பறந்து போகலாம்
யோர்தானின் கரைகள் தாண்டி போனபின்
வானத்து மன்னாவும் ஒழிந்து போகலாம்

கவலையில்லை கலக்கமில்லை
கிறிஸ்துவுக்குள் இருப்பதால் தோல்வியில்லை

2. மாராவின் நீரூற்று கசந்து போகலாம்
சாராளின் அடிமைப்பெண் இகழ்ந்து பேசலாம்
ஆரோனும் மீரியாமும் எழும்பி எதிர்க்கலாம்
கோராகின் கூட்டங்கள் கலைந்து போகலாம்

3. சமுத்திர மீன் உன்னை விழுங்கி போகலாம்
பசித்த சிங்கங்கள் கெபியில் உலவலாம்
சேவல் கூவுகின்ற மூன்று வேளைக்குள்
சீமோனைப்போல் சிலர் மாறிபோகலாம்

Neerallal Ivullaginille – நீரல்லால் இவ்வுலகினிலே

Neerallal Ivullaginille

நீரல்லால் இவ்வுலகினிலே
சொந்தமாய் நான் வாழ்ந்திடேனே உம்மையன்றி சார்ந்திடவே மேன்மையேதும் இங்கில்லையே

1. அழைத்தீரே உந்தனுக்காய்
தாயின் கருவினில் தோன்றுமுன்னே
புது நாமத்தை எனக்களித்து
உமதாவியால் நடத்துகிறீர்

2. சிலுவையில் தொங்கினீரே
பாவ ரோகத்தை அகற்றிடவே
எனக்காக நீர் உயிர் கொடுத்தீர்
உமக்காக நான் உயிர் வாழ்ந்திட

3. கிலேசங்கள் சூழும்போது
நேச அனல் என்னை அணைத்திடுமே
அந்த நிறைவான ஆறுதலை
நித்தம் வாஞ்சித்து ஏங்குகிறேன்

4. ஆத்தும நங்கூரமாய்
என்னோடென்றும் இருப்பவரே
திசை மாறாமல் என் படகை
கரை சேர்ப்பீரே எனதாண்டவா!

Kadaisi Kaala Yeluputhalai – கடைசி கால எழுப்புதலை

Kadaisi Kaala Yeluputhalai
கடைசி கால எழுப்புதலை
காண வாஞ்சிக்கிறேன்
உலர்ந்த எலும்புகள் எழும்பட்டுமே
உமக்காக ஓடிடவே – 2

ஊற்றும் வல்லமையை
பொழியும் ஆவியை
தாரும் அக்கினியை
இந்நேரமே, இப்பொழுதே, இன்றைக்கே தாருமே -2

1. எழுப்புதல் தேசத்தில்
வேண்டும் அக்கினியாய் -2
சிறைச்சாலை கதவுகள் உடைந்திட வேண்டுமே காவலில் உள்ளவர்கள் விடுதலை பெறனுமே -2

2. அக்கினி நாவுகள் இறங்கிட வேண்டுமே -2
மரித்தோர் எழும்பட்டும், சத்தியம் பேசட்டும், தரிசனம் காணட்டும், இயேசுவின் நாமத்தில் -2

3. இந்தியா இயேசுவை அறிந்திட வேண்டுமே -2
சபைகள் எழும்பட்டும், சாட்சிகள் பெருகட்டும், வாலிபர் எழும்பட்டும், உம் நாமம் சொல்லட்டும் -2

Kadaisi Kala Ezhuputhalai
Kaana Vanjikiren
Ularndha Elumbugal Ezhumbatume
Umakaga Oodidave – 2

Oottrum Valamaiyai
Pozhiyum Aaviyai
Thaarum Akiniyai

Innerame, Ippozhudhe, Indraike, Thaarume -2

1. Ezhuputhal Desathil
Vendume Akiniyai -2
Siraichalai Kadhavugal
Udaindhida Vendume
Kavalil Ulavargal
Viduthalai Peranumd

2. Akini Naavigal
Irangida Vendume
Marithor Exhumbatum
Sathiyama Pesatum
Darisanam Kanatum
Yesuvin Namathil

3. Indhiya Yesuvai
Arindhida Vendume
Sabaigal Exhimbatum
Satchigal Perugatum
Valibar Exhumbatum
Um Naman Solatum

Ummaiyandri Ennaku Engu Yaarum – உம்மையன்றி எனக்கு இங்கு யாரும்

Ummaiyandri Ennaku Engu Yaarum
உம்மையன்றி எனக்கு இங்கு யாரும் இல்லப்பா
உம்மைவிட்டா எனக்கு ஒரு விருப்பம் இல்லப்பா

நீர் எங்கே போனாலும் நான் அங்கே வருவேன்
நீர் எங்கே இருந்தாலும் நான் அங்கே இருப்பேன்

வானத்துக்கு ஏறினாலும்
பூமிக்குள்ள பொதஞ்சாலும்
அங்கேயும் உம் சமூகம் என்னை தேற்றுமே
ஊரு சனம் (ஜெனம்) மறந்தாலும்
உலகமே வெறுத்தாலும்
உந்தன் கரம் என்னை தாங்குமே

உங்க சொல்ல கேட்காம
எண்ணம் போல நான் அலஞ்சேன்
ஆனாலும் நீங்க என்ன விட்டு விலகலயே
ஆழ்க்கடலின் ஆழத்துல
என்னத் தூக்கி எறிஞ்சாலும்
அங்கும் வந்து என்னைத் தூக்கினீர்

Anbae Anbae Ennai Kavarnthu Konda – அன்பே அன்பே என்னை கவர்ந்து கொண்ட

Anbae Anbae Ennai Kavarnthu Konda
அன்பே அன்பே என்னை கவர்ந்து கொண்ட அன்பே-2

திசை மாறி அலைந்தேன் நான் செல்லும்வழி காண்பித்தீரே-2

உம் சிலுவையே உம் சிலுவையே மாறா உம் அன்பின் சிலுவையே-2

பாவத்தில் மரித்தேன் நான் திரு இரத்தம் கழுவினதே-2

உம் கிருபையே உம் கிருபையே மாறா உம் அன்பின் கிருபையே-2 –அன்பே

கல்வாரி நாயகரே உம் கரம் உயர்த்தினதே-2

கரம் பிடித்தீரே பிடித்தீரே வழுவாமல் பிடித்துக்கொண்டீரே-2

உம் சிலுவையே உம் சிலுவையே மாறா உம் அன்பின் சிலுவையே-2

இயேசுவே இயேசுவே உம்மோடு சேர்த்துக்கொண்டீரே-2

Aatham Purintha Pavathale – ஆதம்புரிந்த பாவத்தாலே மனுடனாகி

Aatham Purintha Pavathale

ஆதம்புரிந்த பாவத்தாலே மனுடனாகி
வேதம் புரிந்த சிறை விடுவித்தீரோ பரனே

ஏவை பறித்த கனியாலே விளைந்த எல்லாப்
பாவத்துக்காகப் பழியானீரோ பரனே

வேத கற்பனையனைத்தும் மீறிநரர் புரிந்த
பாதகந் தீரப்பாடுபட்டீரோ பரனே

தந்தைப் பிதாவுக் கும்மைத் தகனப்பலியளித்து
மைந்தரை மீட்கமனம் வைத்தீரோ பரனே

சிலுவை சுமைபொறாமல் தியங்கித் தரையில் விழக்
கொலைஞர் அடர்ந்து கோட்டி கொண்டாரோ பரனே

வலிய பாவத்தை நீக்கி மனுடரை ஈடேற்றிச்
சிலுவை சுமந்திறங்கித் திகைத்தீரோ பரனே

சென்னியில் தைத்தமுடிச்சிலுவையின் பாரத்தினால்
உன்னியழுந்தத் துயர் உற்றீரோ பரனே

வடியும் உதிரமோட மருகித் தவித்துவாடிக்
கொடிய குருசில் கொலையுண்டீரோ பரனே

வானம் புவிபடைத்த வல்லமைப் பிதாவின் மைந்தர்
ஈனக்கொலைஞர் கையாலிறந்தீரோ பரனே

சங்கையின் ராஜாவே சத்ய அனாதி தேவே
பங்கப்பட்டுமடிப் பட்டீரோ பரனே

Aatham Purintha Paavaththaalae Manudanaaki
Vaetham Purintha Sirai Viduviththeero Paranae

Aevai Pariththa Kaniyaalae Vilaintha Ellaap
Paavaththukkaakap Paliyaaneero Paranae

Vaetha Karpanaiyanaiththum Meerinarar Purintha
Paathakan Theerappaadupattiro Paranae

Thanthaip Pithaavuk Kummaith Thakanappaliyaliththu
Maintharai Meetkamanam Vaiththeero Paranae

Siluvai Sumaiporaamal Thiyangith Tharaiyil Vilak
Kolainjar Adarnthu Kotti Konndaaro Paranae

Valiya Paavaththai Neekki Manudarai Eetaettich
Siluvai Sumanthirangith Thikaiththeero Paranae

Senniyil Thaiththamutichchiluvaiyin Paaraththinaal
Unniyalunthath Thuyar Uttaro Paranae

Vatiyum Uthiramoda Marukith Thaviththuvaatik
Kotiya Kurusil Kolaiyunnteero Paranae

Vaanam Puvipataiththa Vallamaip Pithaavin Mainthar
Eenakkolainjar Kaiyaalirantheero Paranae

Sangaiyin Raajaavae Sathya Anaathi Thaevae
Pangappattumati Pattiro Paranae

En Yesu Raajanae – என் இயேசு ராஜனே

En Yesu Raajanae

என் இயேசு ராஜனே
உம்மைப் பார்க்கையிலே
உள்ளம் உடையுதப்பா

கொல்கோதா மேட்டினில்
பாரமான சிலுவை
சுமந்து சென்ற பாதம்
எத்தனை அழகுள்ளது

சிலுவையில் தொங்கினீர்
உதிரம் சிந்தினீர்
எந்தன் பாவத்திற்காய்
இரத்தம் வழிந்தோடுதே

கைகளில் கால்களில்
ஆணிகள் பாய்ந்தே
ஜீவனை தந்தீர்
என்னை மீட்டிடவே

En Yesu Raajanae
Ummaip Paarkkaiyilae
Ullam Utaiyuthappaa

Kolkothaa Maettinil
Paaramaana Siluvai
Sumanthu Senta Paatham
Eththanai Alakullathu

Siluvaiyil Thongineer
Uthiram Sinthineer
Enthan Paavaththirkaay
Iraththam Valinthoduthae

Kaikalil Kaalkalil
Aannikal Paaynthae
Jeevanai Thantheer
Ennai Meettidavae