மறக்கப்படுவதில்லை நீ
என்னால் மறக்கப்படுவதில்லை – 2
கலங்காதே என் மகனே(மகளே)
கைவிட நான் மனிதனல்ல – 2
தாய் மறந்தாலும் தந்தை வெறுத்தாலும்
நான் உன்னை மறப்பதில்லை – 2
என் கண்முன்னே நீதானே
உன்னை நான் உருவாக்கினேன் – 2 -கலங்காதே
உள்ளங்கையிலே பொறித்து வைத்துள்ளேன்
எதிர்கால பயம் வேண்டாம் – 2
உன் ஏக்கமெல்லாம் ஈடேறும்
கொடுத்த வாக்குத்தத்தம் நிறைவேறும் – 2
மலைகள் குன்றுகள் விலகிப் போகலாம்
விலகாது என் கிருபை – 2
விலை கொடுத்து வாங்கி உள்ளேன் – உன்னை
எனக்கே நீ சொந்தம் – 2
ஏசேக்கு சித்னா முடிந்து போனது
ரெகோபோத் தொடங்கிவிட்டது – 2
நீ பலுகி பெருகிடுவாய்
நீ குறுகி போவதில்லை – 2
Veppamigu Naatkalil
வெப்பமிகு நாட்களில் அச்சமில்லையே
வறட்சி காலத்தில் பயம் இல்லையே – 2
என் வேர்கள் தண்ணீருக்குள்
இலையுதிரா மரம் நான் – 2
எப்போதும் பசுமை நானே
தப்பாமல் கனி கொடுப்பேன் – 2
Unnatha Maanavarae
உன்னதமானவரே என் உறைவிடம் நீர்தானே – 2
நீர்தானே என் உறைவிடம்
நீர்தானே என் புகலிடம்
ஆதலால் ஆபத்து நேரிடாது
எந்த தீங்கும் மேற்கொள்ளாது
கால் கல்லில் மோதாமலே
காக்கும் தூதன் எனக்கு உண்டு – நீர்தானே
சகலமும் படைத்தவரே
சர்வ வல்லவரே – 2
சிங்கத்தின் மேலும் பாம்பின் மேலும்
நடக்கச் செய்பவரே – 2 – ஆதலால்
நான் நம்பும் தகப்பன் நீர் என்று
நான் தினம் சொல்லுவேன் – 2
வேடனின் கண்ணி பாழாக்கும் கொள்ளை நோய்
தப்புவித்து காப்பாற்றுவீர் – 2
மன்றாடும் போதெல்லாம்
பதில் தந்து மகிழ்கின்றீர் – 2 -நான்
ஆபத்து நேரம் என்னோடு இருந்து
தப்புவித்து கனப்படுத்துவீர்
நீடிய ஆயுள் தந்து
திருப்தியாக்குகிறீர்
உமது சிறகால் மூடி மூடி
மறைத்து பாதுகாக்கின்றீர்
வாஞ்சையாய் இருப்பதால்
விடுதலை எனக்குண்டு
உம்திரு நாமம் அறிந்ததால்
எனக்கு உயர்வு நிச்சயமே
Sarva Valla Devan
சர்வ வல்ல தேவன் பிறந்திட்டார்
நமக்காகவே பிறந்திட்டார்
இந்த உலகிலே பிறந்திட்டார்
நம்மை மீட்கவே பிறந்திட்டார்
நம் பாவம் கழுவ
நம் சாபம் சுமக்க
நம் வாழ்வின் ஒளியாய்
இவ்வுலகத்தின் பிள்ளையை
அவர் தேவனே படுவேன்
எல்ஷடாய் உம்மை உயர்த்திடுவேன்
பிறந்தார் (2) நம் இயேசு பிறந்தார்
பிறந்தார் (2) நமக்காகவே அவர் பிறந்தார்
பிறந்தார் (2) தூய தேவன் பிறந்தார்
பிறந்தார் (2) இரட்சகர் அவர் பிறந்தார்
1. தாவீதின் ஊரிலே நமக்காகவே அவர் வந்தாரே
ஏழ்மையின் கோலம் எடுத்து பனி இரவினிலே அவர் வந்தாரே
என் வாழ்வில் சமாதானம் அவர் தந்தாரே (2)
என் வாழ்வில் சந்தோஷம் அவர் தந்தாரே(2)
| அவர் நல்லவர் அழகுள்ளவர் வர்ணிக்க |
| வார்த்தை இலையே |
2. உன்னதத்தில் மகிமை Hey உண்டாகும்படிக்கு அவர் உதித்தாரே
இந்த பூமியில் இரட்சிப்பை நிலைநிறுத்தவே அவர் உதித்தாரே
என் வாழ்நாள் முழுவதும் அவர் பரிசுத்தர்(2)
என்று சொல்லி அவரையே துதித்திடுவேன்(2)
| அவர் நல்லவர் அழகுள்ளவர் வர்ணிக்க |
| வார்த்தை இலையே |
Ulagathin Thotrathin
உலகத்தின் தோற்றத்தின் முன்பென்னை கண்டீர்
தாயின் கருவிலுள்ளே என்னை நினைத்தீர்
வளர்கின்ற பிராயத்தில் கூடவே இருந்து
சிந்தை முழுவதிலும் நிறைந்து வந்தீர்
நீரின்றி யாரும் இல்லை உம்மை நினைக்காத நாளேயில்லை
சுவாசிக்கும் காற்றிலும் நீரே ஒவ்வொரு மூச்சிலும் நீரே – 2
என் ஆசையெல்லாம் நீரே என் ஆறுதலும் நீரே – 2
வாழ்கின்ற வாழ்க்கையின் அர்த்தமும் நீரே
இதயத்தின் ஏக்கத்தை தீர்ப்பவர் நீரே-2
சாதிப்பதெல்லாம் உம் கிருபையினாலே
உயர்விற்கும் வாழ்விற்கும் காரணரே
நீரின்றி யாரும் இல்லை உம்மை உணராத நாளேயில்லை
சுவாசிக்கும் காற்றிலும் நீரே ஒவ்வொரு மூச்சிலும் நீரே-2
என் ஆசையெல்லாம் நீரே என் ஆறுதலும் நீரே-2 } -2