Parisuthar Kootam Yesuvai Potri
பரிசுத்தர் கூட்டம் இயேசுவைப் போற்றி
பாடி மகிழ்ந்தாடி அங்கே கூடிட
பரமானந்த கீதமங்கெழும்ப
நீ அங்கிருப்பாயோ?
நீ அங்கிருப்பாயோ?
நீ அங்கிருப்பாயோ? சொல் என் மனமே
2.ஆட்டுக்குட்டியும் அரசாட்சி செய்ய
அண்டினோரெவரும் அவரைச் சேர
அன்பர் அன்றெல்லார் கண்ணீரும் துடைக்க
நீ அங்கிருப்பாயோ?
நீ அங்கிருப்பாயோ?
நீ அங்கிருப்பாயோ? சொல் என் மனமே
3. பேதுரு பவுலும் யோவானும் அங்கே
பின்னும் முற்பிதாக்கள் அப்போஸ்தலரும்
இரத்த சாட்சிகளும் திரளாய்க் கூட
நீ அங்கிருப்பாயோ?
நீ அங்கிருப்பாயோ?
நீ அங்கிருப்பாயோ? சொல் என் மனமே
4. ஜெகத்தில் சிலுவை சுமந்தோரெல்லாம்
திருமுடியணிந்திலங்கிடவும்
தேவ சேயர்களாயெல்லாரும் மாற
நீ அங்கிருப்பாயோ?
நீ அங்கிருப்பாயோ?
நீ அங்கிருப்பாயோ? சொல் என் மனமே
5. சோதனைகளை வென்றவர் எவரும்
துன்பம் தொல்லைகளைச் சகித்தவரும்
ஜோதி ரூபமாய் சொர்கலோகில் ஜொலிக்க
நீ அங்கிருப்பாயோ?
நீ அங்கிருப்பாயோ?
நீ அங்கிருப்பாயோ? சொல் என் மனமே
6. கன்னிகையைப் போல் கர்த்தர் சபையன்று
மன்னர் மணாளனேசுவை மணந்து
பின்னும் சொல்லரிதாம் நிலை ருசிக்க
நீ அங்கிருப்பாயோ?
நீ அங்கிருப்பாயோ?
நீ அங்கிருப்பாயோ? சொல் என் மனமே
நான் அங்கிருப்பேனே நான் அங்கிருப்பேனே
நான் அங்கிருப்பேனே என் யேசுவுடன்
Ummaiyandri Ennaku Engu Yaarum
உம்மையன்றி எனக்கு இங்கு யாரும் இல்லப்பா
உம்மைவிட்டா எனக்கு ஒரு விருப்பம் இல்லப்பா
நீர் எங்கே போனாலும் நான் அங்கே வருவேன்
நீர் எங்கே இருந்தாலும் நான் அங்கே இருப்பேன்
வானத்துக்கு ஏறினாலும்
பூமிக்குள்ள பொதஞ்சாலும்
அங்கேயும் உம் சமூகம் என்னை தேற்றுமே
ஊரு சனம் (ஜெனம்) மறந்தாலும்
உலகமே வெறுத்தாலும்
உந்தன் கரம் என்னை தாங்குமே
உங்க சொல்ல கேட்காம
எண்ணம் போல நான் அலஞ்சேன்
ஆனாலும் நீங்க என்ன விட்டு விலகலயே
ஆழ்க்கடலின் ஆழத்துல
என்னத் தூக்கி எறிஞ்சாலும்
அங்கும் வந்து என்னைத் தூக்கினீர்