Ullamellam Uruguthaiyoo – உள்ளமெல்லாம் உருகுதையோ

Ullamellam Uruguthaiyoo
1. உள்ளமெல்லாம் உருகுதையோ
உத்தமனை நினைக்கையிலே
உம்மையல்லால் வேறே தெய்வம்
உண்மையாய் இங்கில்லையே
கள்ளனென்று தள்ளிடாமல்
அள்ளி என்னை அணைத்தவா
சொல்லடங்கா நேசத்தாலே
சொந்தமாக்கிக் கொண்டீரே

2. எத்தன் என்னை உத்தமனாக்க
சித்தம் கொண்டீர் என் ஏசையா
எத்தனையாம் துரோகம் நான் செய்தேன்
அத்தனையும் நீர் மன்னித்தீர்
இரத்தம் சிந்த வைத்தேனே நான்
அத்தனையும் என் பாவமன்றோ
கர்த்தனே உம் அன்புக்கீடாய்
நித்தம் உம்மையே சேவிப்பேன்

3. மேக மீதில் இயேசு ராஜன்
வேகம் வரும் நாள் என்றோ
லோகமீதில் காத்திருப்போர்
ஏக்கமெல்லாம் தீர்ந்திட
தியாக ராஜன் இயேசுவை நான்
முகமுகமாய் தரிசிக்க
ஆவலோடு ஏங்கும் தாசன்
சோகம் நீங்கும் நாள் எப்போ

Vanthen Mel Irangum – வந்தென் மேல் இறங்கும்

Vanthen Mel Irangum
வந்தென் மேல் இறங்கும் வல்ல ஆவியே
தந்தேன் என்னை இன்று உந்தன் கையிலே
சுட்டெரிக்கும் வல்ல அக்கினியாலே
சுத்திகரித்தென்னை மாற்றிடுவீரே

வல்லமை தாரும் வரங்கள் தாரும்
தாகம் தீர்த்து அபிஷேகியும்

1. சத்தியத்தில் நடத்தும் சத்தியாவியே
கேள்விப்பட்ட யாவையும் சொல்பவரே
கீழ்ப்படிவோர் பெற்றிடும் உந்தன் வல்லமை
சீக்கிரமாய் பெற்றிட அருள் தாருமே

2. காத்திருப்போம் உந்தன் சமூகத்திலே
உன்னதத்தின் பெலனால் நிரப்பும் மட்டும்
வாக்குத்தத்தம் செய்த உந்தன் ஆவியை
வல்லமையாய் பெற்றிட அருள் தாருமே

3. சாட்சியாக மாற உந்தன் பெலத்தால்
மாற்றுவீரே என்னை உந்தன் ஆவியால்
தந்தேன் என்னை முற்றும் உந்தன் சொந்தமாய்
வரங்களால் பெற்றிட அருள் தாருமே

Azhaganavar Yesu Azhaganavar – அழகானவர் இயேசு அழகானவர்

Azhaganavar Yesu Azhaganavar
அழகானவர் இயேசு அழகானவர் (2)
இனிமையானவர் இயேசு இனிமையானவர்
நேசமானவர் என் சுவாசமானவர்

1. ரோஜா தோட்டம் லீலிபுஷ்பம்
நேசர் மடியிலே என்றும் பக்கம்

2. தலை மயிர் சுருள்சுருளானவர்
வெண்மையும் சிவப்புமானவர்

3. தாலாட்டுவார் சீராட்டுவார்
அணைக்கும் கரங்களால் அரவணைப்பார்

Naanum En Veetaarumovendral – நானும் என் வீட்டாருமோவென்றால்

Naanum En Veetaarumovendral
நானும் என் வீட்டாருமோவென்றால்
கர்த்தரையே சேவிப்போம்
நீயும் சேவிப்பாயா – நீயும் சேவிப்பாயா?

1. கர்த்தரையே சேவிப்பது
ஆகாத தென்று கண்டால்
யாரை நீ சேவிப்பாய் யென்பதை
இன்றே தீர்மானம் செய்வாய்

2. அடிமையான நம்மையுமே
தேவாதி தேவன் மீட்டார்
மாபெரும் அடையாளங்கள் செய்திட்ட
கர்த்தரை சேவிப்பாயா?

3. நம் பாதையில் காப்பாற்றியே
கர்த்தர் நடத்தினாரே
கர்த்தர் தந்த ஆசீர் யாவும் கண்டு
நன்றியாய் சேவிப்பாயா?

4. நன்மையான ஈவுகளை
தேவாதி தேவன் தந்தார்
கீழ்படிந்தே அவர் சப்தம் கேட்டு
சாட்சியாய் ஜீவிப்பாயா?

Naanum en veetaarumovendral
Kartharaiye sevippom
neeyum sevippaayaa – neeyum sevippaayaa

Kartharaiye sevippathu
aagaatha thendru kandaal
yaarai nee sevippaai enbathai
indre theermaanam seivaai

Adimaiyaana nammaiyume
thevaathi thevan meetaar
maaperum adaiyaalangalai seithitta
kartharai sevippaayaa?

Nam paadhaiyil kaapaattriye
karththar nadathinaare
karththar thantha asir yaavum kandu
nadriyaai sevippaayaa?

Nanmaiyaana eevugalai
thevaathi thevan thanthaar
Keezhpadinthe avar saptham kettu
saatchiyaai jeevippaayaa?

Kirubaiyethe Deva Kirubaiyethe – கிருபையிதே தேவ கிருபையிதே

Kirubaiyethe Deva Kirubaiyethe

கிருபையிதே தேவ கிருபையிதே
தாங்கி நடத்தியதே
இயேசுவிலே பொன் நேசரிலே
அகமகிழ்ந்தே நாம் ஆனந்திப்போம்

1. ஆருயிர் அன்பராய் எங்….களுடனே
ஜீவியப் பாதையிலே – இயேசு பரன்
அனுதினமும் வழி நடந்தே
அவரது நாமத்தில் காத்தனரே – கிருபையிதே

2. வார்த்தையினால் அவர் தீர்த்….தார் எந்தன்
வியாதியும் வேதனையும் வைத்தியராய்
இயேசுவல்லால் சார்ந்திடவோ
இகமதில் வேறெமக் காருமில்லை – கிருபையிதே

3. அன்பின் அக….லமும் நீ….ளம் உயரமும்
ஆழமும் அறிந்துணர – அனுக்கிரகித்தார்
கிறிஸ்துவிலே ஒரு மனையாய்
சிருஷ்டித்தே நிறுத்தினார் அவர் சுதராய் – கிருபையிதே

4. நல்ல போராட்டம் போரா….டி ஜெயித்தே
நித்திய ஜீவனை நாம் – பற்றிடவே
விசுவாசத்தில் நிலைத்திடுவோம்
அசையாது அழைப்பினைக் காத்துக் கொள்வோம் – கிருபையிதே

5. ஆவியும் மணவாட்டியும்… ஆவலுடன்
வாருமென்றழைக்கின்றாரே – வாருமென்பீர்
சீயோனே நீ பார் உனக்காய்
நாயகன் இயேசு தாம் வெளிப்படுவார் – கிருபையிதே

6. எத்தனையோ பரிசுத்தர்கள் மறைந்தே
மகிமை சேர்த்தனரே – பூரணமாய்
காத்தனரே கர்த்தர் எமை
கருணையினால் தூய சேவை செய்ய – கிருபையிதே

Kirubaiyidhe Deva Kirubaiyithe
Thaangi Nadatthiyathe
Yesuvile Pon Nesarile
Agamagizhnthe Naam Aananthippom

1. Aaruyir Anbaraai Eng…aludane
Jeeviya Paadhayile – Yesu Paran
Anuthinamum Vazhi Nadanthe
Avarathu Naamathil Kaathanare – Kirubayidhe

2. Vaartthayinaal Avar Theerth…thaar Endhan
Vyathiyum Vedhanayum Vaithiyaraai
Yesuvallaal Saarnthidavo
Igamadhil Veremak Kaarumillai – Kirubayidhe

3. Anbin Aga…lamum Nee…lam Uyaramum
Aazhamum Arinthunara – Anukkrakitthaar
Kiristhuvile Oru Manayaai
Sirushtitthe Niruthinaar Avar Sudharaai – Kirubayidhe

4. Nalla Poraattam Poraa…di Jeyitthe
Nithiya Jeevanai Naam Pattridave
Visuvaasatthil Nilaitthiduvom
Asaiyaathu Azhaippinai Kaathukkolvom – Kirubayidhe

5. Aaviyum Manavaattiyum… Aavaludan
Vaarumendrazhaikkindraare – Vaarumenpeer
Siyone Nee Paar Unakkaai
Naayagan Yesu Thaam Velippaduvaar – Kirubayidhe

6. Eththanaiyo Parisuththargal Marainthe
Magimai Serththanare – Pooranamaai
Kaaththanare Karththar Emai
Karunaiyinaal Thooya Sevai Seiyya – Kirubayidhe

 

Sthothiram Paadiye Potriduven – ஸ்தோத்திரம் பாடியே

Sthothiram Paadiye Potriduven
ஸ்தோத்திரம் பாடியே போற்றிடுவேன்
தேவாதி தேவனை ராஜாதி ராஜனை
வாழ்த்தி வணங்கிடுவேன்

1. அற்புதமான அன்பே – என்னில்
பொற்பரன் பாராட்டும் தூய அன்பே
என்றும் மாறா தேவ அன்பே
என்னுள்ளம் தங்கும் அன்பே – ஸ்தோத்திரம்

2. ஜோதியாய் வந்த அன்பே – பூவில்
ஜீவன் தந்து என்னை மீட்ட அன்பே
தியாகமான தேவ அன்பே
திவ்விய மதுர அன்பே – ஸ்தோத்திரம்

3. மாய உலக அன்பை – நம்பி
மாண்ட என்னைக் கண்டழைத்த அன்பே
என்னை வென்ற தேவ அன்பே
என்னில் பொங்கும் பேரன்பே – ஸ்தோத்திரம்

4. ஆதரவான அன்பே – நித்தம்
அன்னை போல் என்னையும் தாங்கும் அன்பே
உன்னத மா தேவ அன்பே
உள்ளங் கவரும் அன்பே – ஸ்தோத்திரம்

5. வாக்கு மாறாத அன்பே – திரு
வார்த்தை உரைத்தென்னைத் தேற்றும் அன்பே
சர்வ வல்ல தேவ அன்பே
சந்ததம் ஓங்கும் அன்பே – ஸ்தோத்திரம்

Intha Kaalam Pollathathu – இந்த காலம் பொல்லாதது

Intha Kaalam Pollathathu
இந்த காலம் பொல்லாதது
உன்னைக் கர்த்தர் அழைக்கிறார்
நீ வாழும் உலகம் தான்
அது வாடகை வீடு தான்

1. உன்னை ரட்சிக்க உன் கூடவே இருக்கிறேன்
என்று வாக்கு அளித்தவர்
இன்னும் காத்து வருகிறார்

2. வாலிப நாட்களில் உன் தேவனைத் தேடிவா
சாத்தான் களத்தினில் போராட
ஜெய வீரனாய் திகழ வா

3. பாவத்தின் சம்பளம் எரிநரகம் தான் திண்ணமே
சத்திய தேவனின் கிருபையோ
நித்திய ஜீவனை அருளுமே

4. காலமோ முடியுதே தேவ ராஜ்ஜியம் நெருங்குதே
மனம் திரும்பி நீ வாழவே
மன்னன் இயேசுன்னை அழைக்கிறார்

Neere Vali Neere Sathyam – நீரே வழி நீரே சத்தியம்

Neere Vali Neere Sathyam
நீரே வழி நீரே சத்தியம் நீரே ஜீவன்
வேறே ஒரு தெய்வம் இல்லை நீரே தேவன்
விண்ணிலும் மண்ணிலும் மெய்நாமம் உந்தன் நாமம் ஐயா
உமக்கு நிகர் என்றும் நீர் தான் ஐயா

1. கல்லுமல்ல மண்ணுமல்ல கல்லான ஓர் சிற்பமல்ல
ஜீவனுள்ள தேவன் என்றால் நீர் தானையா
ரூபங்கள் உமக்கில்லை சொரூபமும் உமக்கி;ல்லை
ஆவியாய் இருக்கின்றீர் ஆண்டவரே

2. உண்டானது எல்லாமே உம்மாலே உண்டானது
உம்நாமம் மகிமைக்கே உண்டாக்கினீர்
படைப்பு தெய்வமல்ல பார்பதெல்லாம் தெய்வமல்ல
கர்த்தர் நீர் ஒருவரே தெய்வம் ஐயா

3. எல்லாம் வல்ல தெய்வம் நீரே எல்லை இல்லாதவரே
உம்மாலே ஆகாதது ஒன்றுமில்லையே
வானம் உம் சிங்காசனம் பூமி உந்தன் பாதப்படி
நடப்பதெல்லாம் உம் விருப்பப்படி

Neere Vali Neere Sathyam Neere Deivam
Veru Oru Devam Illai Neerae Devan

Vinnilum Malilum Mei
Naamam Undhan Naamam Ayya (2)
Umakku Nigar Endrum Neer Than Ayya

1. Kallum Alla Mannum Alla Kallaal Oar
Sirppam Alla Jeevanulla Devan Endral Neer Than Ayya
Roobangal Umakillai Sorubangal Umakillai
Aaviyaai Irukkireer Aandavare – 2 – Neerae

2. Undaanadhu Ellame Ummale Undanadhu
Um Naama Magimaikku Undaakkineer
Padaippu Deivamalla Paarppadhellam Deivamalla
Karththar Neer Oruvare Kadavulaiyya -2 – Neerae

3. Ellam Valla Deivam Neere Ellai Illaadhavare
Ummalae Aagadhadhu Ondru Millaye
Vaanaam Um Singaasanam Boomi
Undhan Paadhap Padi
Nadappadhellam Um Viruppappadi – 2 – Neerae

Lyrics By : Ravi Bharath

Anbe Anbe Anbe Aaruyir Urave – அன்பே அன்பே அன்பே

Anbe Anbe Anbe Aaruyir Urave

அன்பே.. அன்பே..
அன்பே ஆருயிர் உறவே
ஆனந்தம் ஆனந்தமே (2)

1 . ஒரு நாள் உம் தயை கண்டேனையா
அந்நாளென்னை வெறுத்தேனையா
உம் தயை பெரிதையா – என்மேல் (2)

2. அலைந்தேன் பலநாள் உமையும் அறியா
மறந்தே திரிந்த துரோகியை
அணைத்தீர் அன்பாலே – எனையும் (2)

3. பூலோகத்தின் பொருளின் மகிமை
அழியும் புல்லின் பூவைப்போல்
வாடாதே ஐயா – அன்பு (2)

4. பரலோகத்தின் அருமைப் பொருளே
நரலோ கரிலன்பேனையா?
ஆழம் அறிவேனோ – அன்பின் (2)

5. இப்பாரினில் உம் அன்பின் இனிமை
இயம்பற் கியலாதாகில் யான்
இசைக்கவும் எளிதாமோ – பரத்தில் (2)

Anbe Anbe
Anbe Aaruyir Urave
Aanandham Aanandhame (2)

1. Oru Naal Um Dhayai Kandenaiyaa
Annaal Ennai Veruththen Aiyaa
Um Dhayai Peridhaiyaa – En Mel (2)

2. Alaindhen Palanaal Umaiyum Ariyaa
Marandhe Thirindha Throgiyai
Anaiththeer Anbaale – Enaiyum (2)

3. Poologaththin Porulin Magimai
Azhiyum Pullin Poovai Pol
Vaadaadhe Aiyaa – Anbu (2)

4. Paralogaththin Arumai Porule
Naralo Garilanbenaiyaa
Aazham Ariveno – Anbin (2)

5. Ippaarinil Um Anbin Inimai
Iyambar Kiyalaathaagil Yaan
Isaikkavum Elidhaamo – Paraththil (2)

Kathiravan Thondrum – கதிரவன் தோன்றும் காலையிதே

Kathiravan Thondrum
கதிரவன் தோன்றும் காலையிதே
புதிய கிருபை பொழிந்திடுதே – நல்
துதி செலுத்திடுவோம் இயேசுவுக்கே

1. வான சுடர்கள் கானக ஜீவன்
வாழ்த்திடவே பரன் மாட்சிமையே
காற்று பறவை ஊற்று நீரோடை
கர்த்தருக்கே கவி பாடிடுதே – கதிரவன்

2. காட்டில் கதறி கானக ஓடை
கண்டடையும் வெளி மான்களைப் போல்
தாகம் தீர்க்கும் ஜீவத் தண்ணீராம்
தற்பரன் இயேசுவைத் தேடிடுவோம் – கதிரவன்

3. கர்த்தர் கிருபை என்றென்றும் ஓங்க
கர்த்தரே நல்லவர் என்றுரைப்போம்
கேருபீன்கள் மத்தியில் வாழும்
கர்த்தர் இக்காலையில் எழுந்தருள்வார் – கதிரவன்

4. எந்தன் உதடும் உந்தனைப் போற்றும்
என் கரங்கள் குவிந்தே வணங்கும்
பாக்கியம் நான் கண்டைந்தேனே
யாக்கோபின் தேவனே என் துணையே – கதிரவன்

5. காலை விழிப்பே கர்த்தரின் சாயல்
கண்களும் செவியும் காத்திருக்கும்
பாதம் அமர்ந்து வேதமே ருசித்து
கீதங்கள் பாடியே மகிழ்ந்திடுவேன் – கதிரவன்

6. வானம் பூமி யாவையும் படைத்தீர்
வானம் திறந்தே தோன்றிடுவீர்
ஆவல் அடங்க என்னையும் அழைக்க
ஆத்தும நேசரே வந்திடுவீர் – கதிரவன்