Song Tags: Meipar Chellappa Song Lyrics

Kartharai Thuthipathum – கர்த்தரை துதிப்பதும் கீர்த்தனம்

Kartharai Thuthipathum
கர்த்தரை துதிப்பதும் கீர்த்தனம்
பண்ணுவதும் பலியிலும் மேலானது
அவரின் நாமத்தை பாடிக் கொண்டாடுங்கள்
அதுவே நலமானது

1. நம்முடைய ஆண்டவர் பெரியவராவார்
மகா பெலமுள்ளவர்
அவரின் அறிவு அளவில்லாதது
அவரையே புகழ்ந்திடுவோம்

2. தண்ணீரைக் கடந்தும் தீயினில் நடந்தும்
சேதமின்றிக் காத்தவர்
சேனையின் தேவன் நம்முடனிருந்து
ஜெயமுடன் நடத்திடுவார்

3. துதித்தலே இன்னமும் ஏற்றதுமாகும்
துதித்தே மகிழ்ந்திருப்போம்
எருசலேமே உன் கர்த்தரை ஸ்தோத்திரி
சீயோனே உன் தேவனைத் துதி