All Songs by Prabhu Isaac

Andavar Yesuvin – ஆண்டவர் இயேசுவின் அருள்மொழி

Andavar Yesuvin
ஆண்டவர் இயேசுவின்
அருள்மொழி கூறிடுவேன் – நற்செய்தி

1. இயேசென்று சொன்னாலே
யார் என்று கேட்டிடும்-2
எண்ணற்ற மாந்தர்க்கு
நற்செய்தி யார் சொல்லுவார்?
என்னை நான் தருகின்றேன்
ஏற்றுக்கொள்ள மாதூயார் ஆ… ஆ…
பார்புகழ் போற்றும் எங்கள் இயேசு
தேவன் அன்பினையே – நற்செய்தி

2. அறிந்தும் அறியாமல்
தெரிந்தும் தெரியாமல்-2
வாழும் மாந்தர்க்கு
சத்தியத்தை யார் சொல்வார்
உன்னையே தந்திடுவாய்
எழும்பி நீ புறப்படுவாய்
பார் புகழ் போற்றும் இயேசுநாதன்
அன்பை என்றும் சொல் – நற்செய்தி

Karthar Periyavar Engal – கர்த்தர் பெரியவர் எங்கள்

Karthar Periyavar
கர்த்தர் பெரியவர் – எங்கள்
இயேசு பெரியவர்
வானிலும் பூவிலும்
இந்த தேவனே பெரியவரே!
சர்வ சிருஷ்டியே
உன் சிருஷ்டிகரை ஸ்தோத்தரி
சகல ஜனங்களே
கெம்பீரமாய் பாடுங்கள் – 1

1. தம் வார்த்தையால் படைத்தாரே
இந்த சூரியனை சந்திரனை
தம் விரல்களின் செயலினால்
நீல வானத்தை விரித்தாரே! – சர்வ

2. மலைகளே, குன்றுகளே
தேவமகிபனைப் போற்றுங்கள்
அழகு மலர்களே, மச்சங்களே
இயேசு மன்னவனை வாழ்த்துக்கள் – சர்வ

3. பசும்புல்லின் பள்ளத்தாக்கில்
நம்மை நடத்தும் மேய்ப்பனிவர்
அமர்ந்த தண்ணீ்களின் ஓரத்தில்
இளைப்பாறுதல் தருபவர் – சர்வ

Megangalil Aaravarathodu – மேகங்களில் ஆரவாரத்தோடு

Megangalil Aaravarathodu

மேகங்களில் ஆரவாரத்தோடு
தோன்றப் போகிறவரே – வாரும்!
இயேசுவே விரைவில் வாரும்!
விரைவில் விரைவில் நீர் வாரும்!
வாரும்! வாரும்! நீர் வாரும்
விரைவில் விரைவில் நீர் வாரும்!

எக்காள தொனியோடே வாரும்
இயேசு வேந்தனே வாரும்-2
ஏக்கம், எதிர்பார்ப்பை எல்லாம் எங்கள்
விரைவில் தீர்க்கவே வாரும் – எங்கள் – மேகங்களில்

கருணையின் கடலே வாரும்
கண்ணிமைப் பொழுதில் மாற்ற
மறுரூபமாக்கிட வாரும்
மகிமையின் சாயலாய் மாற்ற – மேகங்களில்

மகிமையின் மன்னவா வாரும்
நடுவானில் உம்மோடு சேர
ஆயத்தமாகவே நாங்கள்
வரவேற்று மகிழ்வோம் வாரும் – எங்கள் – மேகங்களில்

மேகங்களில் ஆரவாரத்தோடு
தோன்றப் போகிறவரே வாழ்க
வாழ்க! வாழ்க! நீர் வாழ்க!
வாழ்க! வாழ்க! நீர் வாழ்க!
வாரும்! வாரும்! நீர் வாரும்
விரைவில் விரைவில் நீர் வாரும்!

Unnil Narkiriyai – உன்னில் நற்கிரியை

Unnil Narkiriyai

உன்னில் நற்கிரியை தொடங்கினவர்
உன்னை இறுதிவரை நடத்திடுவார்
கலங்காதே! திகையாதே!
கரம்பிடித்து நடத்திடுவார்-3

1. சோதனை, வேதனைகள், வரட்டுமே!
சோர்ந்துபோக இயேசு விடமாட்டாரே!
கலங்காதே! திகையாதே!
கரம்பிடித்து நடத்திடுவார்-2 – உன்னில்

2. சத்துரு வெள்ளம் போல வரட்டுமே!
சேனைகளின் கர்த்தர் வெற்றி தருவாரே!
கலங்காதே! திகையாதே!
கரம்பிடித்து நடத்திடுவார்-2 – உன்னில்

3. சுகவீனம், பெலவீனம் வரட்டுமே!
யேகோவா ராஃபா அற்புத சுகம் தருவாரே!
கலங்காதே! திகையாதே!
கரம்பிடித்து நடத்திடுவார்-2 – உன்னில்

Ulaga Gana Magimai Yellam – உலக கன மகிமை எல்லாம்

Ulaga Gana Magimai Yellam
உலக கன மகிமை எல்லாம்
துதி கன மகிமை எல்லாம்
இயேசு உமக்கே தானே!
என்றென்றும் துதித்திடுவேன்-2
நீர் நல்லவர்
நீர் வல்லவர்
நீர் மகத்துவமானவர்-2
இயேசு ராஜா! மகிமை உமக்கே! – துதி கன மகிமை

1. உம் கண்களின் வெளிச்சம்
சூரிய ஒளியைப் போல்
என்றென்றும் ஜொலித்திடுதே
நீர் நல்லவர் – இயேசு ராஜா

2. உம் பாதங்கள் வெண்கலம்
உந்தன் குரல் பெருவெள்ளம்போல்
எங்கெங்கும் தொனித்திடுதே
நீர் நல்லவர் – இயேசு ராஜா

Deva Aaviye Yengal – தேவ ஆவியே எங்கள்

Deva Aaviye Yengal

தேவ ஆவியே!
எங்கள் தூய ஆவியே!- 2
உமது வல்லமையால் எங்களை நிரப்புமே!
உமது வல்லமையே இன்றே நிரப்புமே! – தேவ

1. துக்கத்தை மாற்றியே – ஆனந்த
தைலத்தால் நிரப்புமே!
தாகத்தை தீர்த்திடும்
ஜீவ தண்ணீரும் நீரே!-2 – தேவ

2. அனலாக ஜொலித்திட
உந்தன் அபிஷேகம் ஊற்றுமே -2
எழும்பிப் பிரகாசிக்க
புதிய எண்ணெயால் நிரப்புமே – 2 – தேவ

3. உலகத்தின் சாட்சியாய் எந்தன்
உயிருள்ள நாளெல்லாம் -2
உமக்காய் வாழ்ந்திட
உம் பெலனால் நிரப்புமே -2 – தேவ

Neer Enthan Kottai – நீர் எந்தன் கோட்டை

Neer Enthan Kottai

1. நீர் எந்தன் கோட்டை
நீர் எந்தன் துருகம்
நீர் எந்தன் தஞ்சம் – இயேசுவே
நீர் எங்கள் ராஜா
சாரோனின் ரோஜா – இயேசுவே

உம்மைப்போல் ஒருவர் இல்லை
உமக்கு ஈடாய் தேவன் இல்லை (2) – நீர்
உம்மையே நான் போற்றுவேன்
உம்மையே நான் புகழுவேன்-2

2. நீர் பரிசுத்த தேவன்
நீர் மகத்துவ தேவன்
நீர் வல்லமை தேவன் – இயேசுவே
நீர் எங்கள் சத்தியம்
நீர் எங்கள் நித்தியம்
நீர் எங்கள் ஜீவன் – இயேசுவே

உம்மைப்போல் ஒருவர் இல்லை
உமக்கு ஈடாய் தேவன் இல்லை (2) – நீர்
உம்மையே நான் வாழ்த்துவேன்
உம்மையே நான் வணங்கிடுவேன்-2

Kartharukkaga Porumaiyudan – கர்த்தருக்காக பொறுமையுடன்

Kartharukkaga Porumaiyudan

கர்த்தருக்காக பொறுமையுடன் நான்
காத்திருந்தேன் பல காலங்களாய்
அவர் என்னிடமாய் சாய்ந்து
கூப்பிடும் குரல் கேட்டு
விடுதலை செய்திட்டாரே பாடிடுவேன் – கர்த்தருக்காக

1. சிறியவர்களை அவர் புழுதி விட்டு எடுப்பவர்-2
எளியவர்களை அவர் குப்பைவிட்டு தூக்குபவர்
பிரபுக்களோடும் கூட அமர்ந்திடச் செய்திட்டாரே பாடிடுவேன் – கர்த்தருக்காக

2. மரணக்கட்டுகள் என்னை
சுற்றிக்கொண்ட அறுத்து என்னை (நம்மை)
விடுவித்த தேவன் அவர்
கர்த்தர் எனக்காக செய்த உபகாரங்களுக்காக
உயிருள்ள நாட்களெல்லாம் பாடிடுவேன் – கர்த்தருக்காக

3. ஆத்துமாவை மரணத்திற்கும்
கண்களை என் கண்ணீருக்கும்
கால்களை இடறலுக்கும்
தப்புவித்த தேவன் அவர்
அவருக்கே செய்த எந்தன்
பொருத்தனைகளை எல்லாம்
நிறைவேற்றி சாட்சி சொல்வேன் என்றென்றுமே – கர்த்தருக்காக

Maranam Thuthiyathu – மரணம் துதியாது பாதாளம்

Maranam Thuthiyathu

மரணம் துதியாது பாதாளம் துதியாது
உயிரோடிருக்கிறவனே உம்மை என்றும் துதிப்பேன்

1. உன்னதமானவர் – நீர் உத்தமமானவர்
நீர் உண்மையுள்ளவர்
நீர் வாக்கு மாறாதவர்-2
போற்றுவேன் புகழுவேன்
வாழ்த்துவேன் உம்மை வணங்குவேன் – அல்லேலூயா

2. நீர் மகிமையானவர்
நீர் மகத்துவமானவர்
நீர் அருமையானவர்
நீர் அழகில் சிறந்தவர்
போற்றுவேன் புகழுவேன்
வாழ்த்துவேன் உம்மை வணங்குவேன் – அல்லேலூயா

Aarathanai Seyvome – ஆராதனை செய்வோமே

Aarathanai Seyvome

Paava Setril
ஆராதனை செய்வோமே
பாவ சேற்றில் சிக்கித் தவித்த வேளையில்
என்னைத் தூக்கி எடுத்த
கிருபைக்கு நன்றி
படுகுழியில் உயர்த்தி வைத்த
கிருபைக்கு நன்றி
இயேசுவே (3)
உங்க கிருபைக்கு நன்றி
இயேசுவே (3)
உங்க கிருபைக்கு நன்றி

1. நான் சோர்ந்து போன வேளையில் எல்லாம்
என்னைத் தேற்றி ஆற்றிய கிருபைக்கு நன்றி
என் பெலவீன நேரத்தில் எல்லாம்
என்னைப் பெலப்படுத்தின கிருபைக்கு நன்றி – இயேசுவே (3)

2. நான் தள்ளாடின வேளையில் எல்லாம்
என்னை சுமந்து வந்த கிருபைக்கு நன்றி
நான் கடந்து வந்த பாதையில் எல்லாம்
என்னை வழிநடத்தின கிருபைக்கு நன்றி – இயேசுவே (3)

3. நான் கண்ணீர் சிந்திய வேளையில் எல்லாம்
அதைத் துடைத்துவிட்ட கிருபைக்கு நன்றி
என் வியாதியின் வேதனை எல்லாம்
நீர் சுகப்படுத்திய கிருபைக்கு நன்றி – இயேசுவே (3)