Kartharai Thuthiyungal Avar Yendrum Nallavar – கர்த்தரை துதியுங்கள்

Kartharai Thuthiyungal Avar Yendrum Nallavar
கர்த்தரை துதியுங்கள்
அவர் என்றும் நல்லவர்
அவர் பேரன்பு என்றுமுள்ளது
1. ஒருவராய் மாபெரும்
அதிசயங்கள் செய்தாரே
வானங்களை ஞானமாய்
உண்டாக்கி மகிழ்ந்தாரே
இன்று போற்றி புகழுவோம்
நாம் உயர்த்தி மகிழுவோம் – 2
2. பகலை ஆள்வதற்கு
கதிரவனை உண்டாக்கினார்
இரவை ஆள்வதற்கு
சந்திரனை உண்டாக்கினார்
3. செங்கடலை இரண்டாக
பிரித்து நடக்கச் செய்தார்
வனாந்திர பாதையிலே
ஜனங்களை நடத்திச் சென்றார்
4. தாழ்மையில் இருந்த
நம்மையெல்லாம் நினைவுகூர்;ந்தார்
எதிரியின் கையினின்று
விடுவித்துக் காத்துக் கொண்டார்

Mugamalarinthu Kodupavarai Karthar – முகமலர்ந்து கொடுப்பவரை

Mugamalarinthu Kodupavarai Karthar
முகமலர்ந்து கொடுப்பவரை கர்த்தர் நேசிக்கிறார்
உற்சாக மனதுடனே கொடுத்திடுவோம்

1. வருத்தத்தோடல்ல, கட்டாத்தாலல்ல
இருப்பதை விருப்பமுடன், கொடுத்திடுவோம்
விதை விதைத்திடுவோம், அறுவடைசெய்வோம்
2. அதிகமாய் விதைத்தால் அதிக அறுவடை
ஏழ்மை நிலையிலிருந்து இன்றே விடுதலை
அளவின்றி கொடுத்து செல்வர்களாவோம்
அமுக்கி குலுக்கி மடியில் அளந்து போடுவார்
3. ஏழைக்கு இரங்கி கொடுக்கும்போதெல்லாம்
கர்த்தருக்கு கடன் கொடுத்து திரும்ப பெற்றிடுவோம்
எந்த நிலையிலும் தேவையானதெல்லாம்
எப்போதும் நமக்கு தந்திடுவாரே
4. நற்செயல் செய்ய வேண்டிய அனைத்தும்
மிகுதியாகவே தந்திடுவாரே
எல்லா நன்மைகளால் நிரப்ப வல்லவர்
குறைகளை நிறைவாக்கி நடத்திடுவார்

Thiruthiyaki Nadathiduvar – திருப்தியாக்கி நடத்திடுவார்

Thiruthiyaki Nadathiduvar

திருப்தியாக்கி நடத்திடுவார்
தேவைகளை சந்திப்பார்
மீதம் எடுக்க வைப்பார்
பிறருக்கு கொடுக்க வைப்பார்

பாடி கொண்டாடுவோம்
கோடி நன்றி சொல்லுவோம் – 2

1. ஐந்து அப்பங்களை
ஆயிரமாய் பெருகச் செய்தார் – 2
ஐயாயிரம் ஆண்களுக்கு
வயிராற உணவளித்தார் – 2 (…பாடி)

2. பொன்னோடும் பொருளோடும்
புறப்படச் செய்தாரே – 2
பலவீனம் இல்லாமலே
பாதுகாத்து நடத்தினாரே – ஒரு – 2 (…பாடி)

3. காடைகள் வரவழைத்தார்
மன்னாவால் உணவளித்தார் – 2
கற்பாறையை பிளந்து
தண்ணீர்கள் ஓடச்செய்தார் – 2 (…பாடி)

4. நீடிய ஆயுள் தந்து
நிறைவோடு நடத்திடுவார் – 2
முதிர் வயதானாலும்
பசுமையாய் வாழச் செய்வார் – 2 (…பாடி)

5. கெம்பீர சத்தத்தோடு
ஆரவார முழக்கத்தோடு – 2
தெரிந்து கொண்ட தம் மக்களை
தினமும் நடத்தி சென்றார் – 2 (…பாடி)

6. துதிக்கும்போதெல்லாம்
சுவையான உணவு அது – 2
ஆத்மா திருப்தியாகும்
ஆனந்த ராகம் பிறக்கும் – 2 (…பாடி)

Thirupthiyaakki Nadaththiduvaar
Thevaikalai Santhippaar
Meetham Edukka Vaippaar
Pirarukku Kodukka Vaippaar

Paadi Kondaaduvom
Kodi Nandri Solluvom – 2

1. Ainthu Appangalai
Aayiramaay Perukach Seythaar – 2
Aiyaayiram Aankalukku
Vayiraara Unavaliththaar – 2 (…Paadi)

2. Ponnodum Porulodum
Purappadach Seythaare – 2
Palaveenam Illaamale
Paathukaaththu Nadaththinaare – Oru – 2 (…Paadi)

3. Kaadaikal Varavazhaiththaar
Mannaavaal Unavaliththaar – 2
Karpaaraiyai Pilanthu
Thanneerkal Odachcheythaar – 2 (…Paadi)

4. Neediya Aayul Thanthu
Niraivodu Nadaththiduvaar – 2
Muthir Vayathaanaalum
Pasumaiyaay Vaazhach Seyvaar – 2 (…Paadi)

5. Kembeera Saththaththodu
Aaravaara Muzhakkaththodu – 2
Therinthu Konda Tham Makkalai
Thinamum Nadaththi Sendraar – 2 (…Paadi)

6. Thuthikkumpothellaam
Suvaiyaana Unavu Athu – 2
Aathmaa Thirupthiyaakum
Aanantha Raagam Pirakkum – 2 (…Paadi)

Aravaram Arpattam Appa – ஆரவாரம் ஆர்ப்பாட்டம்

Aravaram Arpattam Appa
ஆரவாரம் ஆர்ப்பாட்டம்
அப்பா சந்நிதியில்
நாளெல்லாம் கொண்டாட்டம்
நல்லவர் முன்னிலையில்
நன்றிபாடல் தினமும் பாடுவோம்
நல்ல தேவன் உயர்த்திப் பாடுவோம்
1. கல்வாரி சிலுவையிலே கர்த்தர்
இயேசு வெற்றிச்சிறந்தார்
கண்ணீரை மாற்றி நம்மை
காலமெல்லாம் மகிழச் செய்தார்
2. கிறிஸ்துவை நம்பினதால்
பிதாவுக்கு சொந்தமானோம்
அப்பான்னு கூப்பிடப்பண்ணும்
ஆவியாலே நிரப்பப்பட்டோம்
3. உயிர்த்த கிறி;ஸ்து நம்ம
உள்ளத்திலே வந்துவிட்டார்
சாவுக்கேதுவான நம்ம
சரீரங்களை உயிர்ப்பிக்கின்றார்
4. ஆவிக்கேற்ற பலி செலுத்தும்
ஆசாரிய கூட்டம் நாம்
வெளிச்சமாய் மாற்றியவர்
புகழ்ச்சிதனை பாடிடுவோம்

Yaar Pirikka Mudiyum Naathaa – யார் பிரிக்க முடியும்

Yaar Pirikka Mudiyum Naathaa
யார் பிரிக்க முடியும் நாதா
உந்தன் அன்பிலிருந்து தேவா
1. என் சார்பில் நீர் இருக்க
எனக்கெதிராய் யார் இருப்பார்
மகனையே நீர் தந்தீரய்யா
மற்ற அனைத்தும் தருவீர் ஐயா
2. தெரிந்து கொண்ட உம் மகன்(கள்)
குற்றம் சாட்ட யார் இயலும்
நீதிமானாய் ஆக்கிவிட்டீர்
தண்டனை தீர்ப்பு எனக்கில்லையே
3. நிகழ்வனவோ வருவனவோ
வாழ்வோ சாவோ பிரித்திடுமோ
அன்பு கூர்ந்த கிறிஸ்துவினால்
அனைத்திலும் நான் வெற்றி பெறுவேன்
4. வேதனையோ நெருக்கடியோ
சோதனையோ பிரித்திடுமோ
பகைமைகளோ பழிச்சொல்லோ
பொறாமைகளோ பிரித்திடுமோ

Nambikkaiyinaal Nee – நம்பிக்கையினால் நீ

Nambikkaiyinaal Nee
நம்பிக்கையினால் நீ வாழ்வு பெறுவாய்
நண்பனே நீ பயப்படாதே
பயம் வேண்டாம் திகில் வேண்டாம்
படைத்தவர் உன்னை நடத்திச்செல்வார்
1. அதிசயக் கல்வாரி சிலுவையிலே
அனைத்தையும் செய்து முடித்துவிட்டார்
தழும்புகளால் நீ சுகமானாய்
தயவினால் மறுபடி பிறந்துவிட்டாய்
2. ஆடையை தொட்டால் நலம்பெறுவேனே
அறிக்கை செய்து சுகமடைந்தாள்
ஒருத்துளி சந்தேகமில்லாமலே
ஓடிவா இயேசு இன்று சுகம் தருவார்
3. ஆபிரகாம் சாராள் குழந்தைப்பெற
ஆற்றல் பெற்றது நம்பிக்கையினால்
வாக்குதத்தம் செய்தவர் நம்பதக்கவர்
ஏக்கமெல்லாம் எப்படியும் நிறைவேற்றுவார்
4. கட்டாந்தரையிலே நடப்பது போல்
கடலைக் கடந்தனர் நம்பிக்கையினால்
எரிகோ மதில்கள் விழுந்தனவே
ஏழுநாள் ஊர்வலம் வந்ததினால்
5. உலகிலே இருக்கும் அவனை விட
உனக்குள் இருப்பவர் பெரியவரே
துணை நின்று உனக்காய் யுத்தம் செய்வார்
துரிதமாய் வெற்றி காணச் செய்வார்
6. மலையைப் பார்த்து கடலில் விழு
என்று சொன்னால் நடந்திடுமே
உன்னாலே கூடாதது ஒன்றுமில்லையே
நம்பினால் எல்லாம் நடந்திடுமே

Ummai Naan – உம்மை நான் போற்றுகிறேன்

Ummai Naan
உம்மை நான் போற்றுகிறேன் இறைவா
உம்மை நான் புகழ்கின்றேன் தேவா
போற்றி புகழ்கின்றேன்
வாழ்த்தி வணங்குகின்றேன்
1. என்னைக் கைதூக்கிவிட்டீர்
எதிரியின் மேல் வெற்றி தந்தீர்
உதவி தேடி வந்தேன்
உடல் சுகம் தந்தீரய்யா- ஆஆ
புகழ்ந்து பாடுவேன்
மகிழ்ந்து கொண்டாடுவேன்
2. மாலைநேரம் அழுகையென்றால்
காலை நேரம் ஆனந்தமே
நொடிப்பொழுது உந்தன் கோபம்
தயவோ வாழ்நாளெல்லாம்
3. சாக்கு துணி களைந்துவிட்டீர்
மகிழ்ச்சி உடை உடுத்திவிட்டீர்
புலம்பலை நீக்கிவிட்டீர்
புதுப்பாடல் நாவில் வைத்தீர்
4. மலைபோல் நிற்கச் செய்தீர்
மாவேந்தன் உம் அன்பினால்
நிலைகலங்கி போனேன் ஐயா
நின்முகம் மறைந்தபோது
5. என் உள்ளம் புகழ்ந்து பாடும்
இனி மௌனமாய் இருப்பதில்லை
கர்த்தாவே என் தெய்வமே
கரம்பிடித்த மெய் தீபமே
6. புழுதி உம்மை புகழ முடியுமா?
சத்தியம் சொல்ல அதனால் இயலுமா?
என் மீது இரங்கும் ஐயா
எனக்குத் துணையாய் இரும்

Magizhnthu Kalikooru – மகிழ்ந்து களிகூரு

Magizhnthu Kalikooru
மகிழ்ந்து களிகூரு மகனே (ளே)
பயம் வேண்டாம்
மன்னவன் இயேசு உன் (நம்) நடுவில்
பெரியகாரியம் செய்திடுவார்

1. தேவையை நினைத்து கலங்காதே
தெய்வத்தைப் பார்த்து நன்றிசொல்லு
கொஞ்சத்தைக் கண்டு புலம்பாதே
கொடுப்பவர் உண்டு கொண்டாடு

2. அப்பாவின் புகழை நீ பாடு
அதுவே உனக்கு Safeguard டு
தப்பாமல் மகிழ்ந்து உறவாடு
எப்போதும் வாழ்வாய் சுகத்தோடு

3. மீனின் வயிற்றில் யோனா போல்
கூனி குறுகி போனாயோ
பலியிடு துதியை சப்தத்தோடு
விலகிடும் எல்லாம் வெட்கத்தோடு

4. நிலையான நகரம் நமக்கில்லை
வரப்போகும் நகரையே நாடுகிறோம்
இயேசுவை உயர்த்தும் ஸ்தோத்திரபலி
இப்போதும் எப்போதும் செலுத்திடுவோம்

5. துதிக்கும் போது நம் நடுவில்
உட்கார நாற்காலி போடுகிறோம்
துதிகளை அரியணைக்கிடுவார்
வந்து அமர்ந்து மகிழ்ந்திடுவார்

Magizhnthu Kalikooru
Makilnthu Kalikooru Makanae(Lae)
Bayam Vaendaam
Mannavan Yesu Un (Nam) Naduvil
Periyakaariyam Seythiduvaar

1. Thaevaiyai Ninaiththu Kalangaathae
Theyvathai Paarththu Nandrisollu
Konjathai Kandu Pulambaathae
Koduppavar Undu Kondaadu

2. Appaavin Pugalai Nee Paadu
Athuvae Unakku Safeguardu
Thappaamal Magkilnthu Uravaadu
Eppothum Vaalvaai Sukathodu

3. Meenin Vayatril Yonaa Pol
Kooni Kuruki Ponaayo
Paliyidu Thuthiyai Sapthathodu
Vilakidum Ellaam Vetkathodu

4. Nilaiyaana Nakaram Namakkillai
Varappokum Nakaraiyae Naadukirom
Yesuvai Uyarthum Sthothirapali
Ippothum Eppothum Seluthiduvom

5. Thuthikum Pothu Nam Naduvil
Utkaara Naarkaali Podukirom
Thuthikalai Ariyannaikiduvaar
Vanthu Amarnthu Makilnthiduvaar

Isravaelae Unnai – இஸ்ரவேலே உன்னை

Isravaelae Unnai
இஸ்ரவேலே உன்னை எப்படிக் கைவிடுவேன்
எப்பிராயீமே உன்னை எப்படிக் கைநெகிழ்வேன்
என் மகனே உன்னை எப்படிக் கைவிடுவேன்
என் மகளே உன்னை எப்படிக் கைநெகிழ்வேன்
1. என் இதயம் உனக்காய் ஏங்குகின்றது
என் இரக்கம் பொங்கிபொங்கி வழிகின்றது
எப்படி கைவிடுவேன்
எப்படி கைநெகிழ்வேன் – உன்னை
2. நானே தான் உன்னை குணமாக்கினேன்
ஏனோ நீ அறியாமல் போனாயோ
3. கையிலே ஏந்தி நடத்துகிறேன்
கரம்பிடித்து நடக்க உன்னைப் பழக்குகிறேன்
4. பரிவு என்னும் கயிறுகளால் பிணைத்துக் கொண்டேன்
பக்கம் சாய்ந்து உணவு நான் ஊட்டுகிறேன்
5. முடிவில்லாத அன்பு நான் காட்டியுள்ளேன்;
பேரன்பால் உன்னை ஈர்த்துக் கொண்டேன்

Iranthorai – இறந்தோரை வாழவைக்கும்

Iranthorai
இறந்தோரை வாழவைக்கும் வல்லவர்
எனக்குள் வந்து தங்கிவிட்டார்
இல்லாதவரை இருக்கசெய்யும் நல்லவர்
மனக்கண் திறந்துவிட்டார்
அல்லேலூயா ஆனந்தமே
1. செடியான கிறிஸ்துவோடு இணைந்து விட்டேன்
கொடியாக அவருக்காய் படர்ந்திடுவேன்
2. பாவம் சாவு இவற்றினின்று மீட்கப்பட்டவன்
இனி எனக்கு தண்டனை தீர்ப்பே இல்லை
3. இயேசுகிறிஸ்து பெயராலும் ஆவியாலும்
நீதிமானாய் கழுவப்பட்டு தூய்மையானேன்
4. மூலைக்கல்லாம் கிறிஸ்துவின் மேல் கட்டப்பட்டவன்
ஆவி தங்கும் ஆலயமாய் வளர்கின்றவன்
5. கர்த்தரின் கைவேலைப்பாடு நான் அல்லவா
அவர் சாயல் காட்டும் கண்ணாடி நான் அல்லவா
6. புதிதாய் பிசைந்து புளிப்பில்லா மாவு நானே
துர்க்குணங்களை தீமைகள் தவிர்த்துவிட்டேன்
7. பழைய மனிதன் சிலுவையிலே அறையப்பட்டதால்
பாவத்திற்கு அடிமையாக வாழ்வதில்லை
8. தூய ஆவி துணையாலே வாழ்கின்றவன்
ஆவிகாட்டும் நெறியிலே நடக்கின்றவன்