Anaithaiyum Seithu – அனைத்தையும் செய்து

Anaithaiyum Seithu Mudikum
அனைத்தையும் செய்து முடிக்கும் ஆற்றலுல் உள்ளவரே
நீர் நினைத்தது ஒரு நாளும் தடைபடாதையா
1. நீர் முடிவெடுத்தால் யார்தான் மாற்றமுடியும்
எனக்கென முன்குறித்த எதையுமே
எப்படியும் நிறைவேற்றி முடித்திடுவீர்
உமக்கே ஆராதனை உயிருள்ள நாளெல்லாம்
2. நான் எம்மாத்திரம் ஒரு பொருட்டாய்
எண்ணுவதற்கு
காலைதோறும் கண்ணோக்கி பார்க்கிறீர்
நிமிடந்தோறும் விசாரித்து மகிழ்கிறீர்
3. என்னைப் புடமிட்டால் பொன்னாக துலங்கிடுவேன்
நான் போகும் பாதைகளை அறிந்தவரே
உந்தன் சொல்லை உணவு போலக் காத்துக்
கொண்டேன்
4. நான் எண்ணிமுடியா அதிசயம் செய்பவரே
காயப்படுத்தி கட்டுப்போடும் கர்த்தரே
அடித்தாலும் அணைக்கின்ற அன்பரே
5. என் மீட்பரே உயிரோடு இருப்பவரே
இறுதி நாளில் மண்ணில் வந்து நிற்பதை
என் கண்கள்தானே அந்நாளில் காணுமே

எப்போது வருவீரையா
என் உள்ளம் ஏங்குதையா

Kartharukkul Kathirunthu – கர்த்தருக்குள் களிகூர்ந்து

Kartharukkul Kathirunthu
கர்த்தருக்குள் களிகூர்ந்து மகிழ்கிறேன்
கவலைகளை மறந்து துதிக்கிறேன்
ஆர்ப்பரித்து ஆரவார பலிதனையே
அப்பாவுக்கு ஆனந்தமாய் செலுத்துகிறேன்
ஆனந்த பலி ஆனந்த பலி
(என்) அப்பாவுக்கு அப்பாவுக்கு-2
1. பாவ, சாபம் எல்லாமே பறந்து போச்சு
பரிசுத்த வாழ்வு என்னுள் வந்தாச்சு-இன்று
2. பயமும், படபடப்பும் ஓஞ்சுப் போச்சு
பாடுகளை தாங்கும் பெலன் வந்தாச்சு
3. நோய்நொடி எல்லாமே நீங்கிப் போச்சு
பேய்களை விரட்டும் ஆற்றல் வந்தாச்சு
4. நேசக்கொடி என்மேலே பறக்குதையா..என்
நேசருக்காய் பணிசெய்ய துடிக்குதையா
5. கடன்தொல்லை கஷ்டமெல்லாம் கடந்து
போச்சு..என்
கண்ணீர்கள் எல்லாமே முடிஞ்சுப்போச்சு

Pudiya Valu Tharum Punitha Aviae – புதிய வாழ்வு தரும்

Pudiya Valu Tharum Punitha Aviae
புதிய வாழ்வு தரும் புனித ஆவியே
பரிசுத்த தெய்வமே பரலோக தீபமே
1. இருள் நிறைந்த உலகத்திலே
வெளிச்சமாய் வாருமையா
பாவ இருள் நீக்கி பரிசுத்தமாக்கும்
பரமனே வாருமையா
வரவேண்டும் வல்லவரே
வரவேண்டும் நல்லவரே
வரவேண்டும் வரவேண்டும்
2. தடைகள் நீக்கும் தயாபரரே
உடையாய் வாருமையா
ஒடுங்கிப் போன எங்கள் ஆவியை விரட்டி
உற்சாகம் தாருமையா
3. எண்ணெய் அபிஷேகம் எங்கள் மேலே
நிரம்பி வழியணுமே
மண்ணான உடலைவெறுத்து வெறுத்து என்றும்
பண்பாடி மகிழணுமே
4. உலகம் எங்கிலும் சுவைத்தரும் வெண்ணிற
உப்பாய் மாறணுமே
இலைகள் உதிராமல் கனிகள் தந்திடும்
மரமாய் வளரணுமே
5. துரயம் நீக்கி ஆறுதல் அளிக்கும்
துயவர் வரவேணுமே
புலம்பல் மாற்றி மகிழ்ச்சியூட்டும்
புனிதரே வரவேணுமே

Thuthi Eduthal Sathan Oduvan – துதி எடுத்தால்

Thuthi Eduthal Sathan Oduvan
துதி எடுத்தால் சாத்தான் ஓடுவான்
முறுமுறுத்தால் திரும்பி வருவான்
துதித்துப் பாடி மதிலை இடிப்போம்
மகிழ்ந்து பாடி எரிகோ பிடிப்போம்
1. டேவிட்ட பாடினான் சவுலுக்கு விடுதலை
கலக்கம் நீங்கியது ஆறுதல் வந்தது
2. துதிக்கும் தாவீதுக்கோ கொஞ்சமும் பயமில்லை
விசுவாச வார்த்தையால் கோலியாத்தை முறியடிப்போம்
3. ஆடுகள் மேய்த்தவன் அரசனாய் மாறினான்
ஆராதனை வீரனுக்கு Promotion நிச்சயம்
4. மீனின் வயிற்றிலே யோனா துதித்தான்
கட்டளை பிறந்தது போனான் நினிவே
5. வாயிலே எக்காளம் கையிலே திருவசனம்
சுயத்தை உடைத்து ஜெயத்தை எடுப்போம்
6. கர்த்தரை நம்புவோம் அவர்நம்மை தாங்குவர்
வார்த்தையை நம்புவோம் வருமே விடுதலை
7. பெராக்காவில் கூடுவோம் நன்றி செலுத்துவோம்
கர்த்தர் நல்லவர் கிருபை உள்ளவர்

Idaivida Nandri Umakku Thane – இடைவிடா நன்றி

Idaivida Nandri Umakku Thane
இடைவிடா நன்றி உமக்குத்தான்
இணையில்லா தேவன் உமக்குத்தான்

1. என்ன நடந்தாலும் நன்றி ஐயா
யார் கைவிட்டாலும் நன்றி ஐயா
நன்றி… நன்றி…

2. தேடி வந்தீரே நன்றி ஐயா
தெரிந்துகொண்டீரே நன்றி ஐயா

3. நிம்மதி தந்தீரே நன்றி ஐயா
நிரந்தரமானீரே நன்றி ஐயா

4. என்னைக் கண்டீரே நன்றி ஐயா
கண்ணீர் துடைத்தீரே நன்றி ஐயா

5. நீதி தேவனே நன்றி ஐயா
வெற்றி வேந்தனே நன்றி ஐயா

6. அநாதி தேவனே நன்றி ஐயா
அரசாளும் தெய்வமே நன்றி ஐயா

7. நித்திய ராஜாவே நன்றி ஐயா
சத்திய தீபமே நன்றி ஐயா

Idaividaa nandri umakkuthaanae
Inaiyillaa dhaevan umakkuthaanae (2)

Enna nadandhaalum nandri aiyaa
Yaar kaivittaalum nandri aiyaa (2)
Nandri nandri – Idaividaa

1. Thaedi vandheerae nandri aiyaa
Therindhu kondeerae nandri aiyaa (2)
Nandri nandri – Idaividaa

2. Nimmadhi thandheerae nandri aiyaa
Nirandharam aaneerae nandri aiyaa (2)
Nandri nandri – Idaividaa

3. Ennai kandeerae nandri aiyaa
Kanneer thudaitheerae nandri aiyaa (2)
Nandri nandri – Idaividaa

4. Needhi dhaevanae nandri aiyaa
Vetri vaenthanae nandri aiyaa (2)
Nandri nandri – Idaividaa

5. Anaadhi dhaevanae nandri aiyaa
Arasaalum dheivamae nandri aiyaa (2)
Nandri nandri – Idaividaa

6. Nithiya raajaavae nandri aiyaa
Sathiya dheebamae nandri aiyaa (2)
Nandri nandri – Idaividaa

Thuthiyin Aadai Aninthu – துதியின் ஆடை அணிந்து

Thuthiyin Aadai Aninthu
துதியின் ஆடை அணிந்து துயரம் எல்லாம் மறந்து
துதித்து மகிழ்ந்திருப்போம் – நம்
தூயவரில் மகிழ்ந்திருப்போம்

1. இந்த நாள் கர்த்தர் தந்த நாள்
இதிலே களிகூறுவோம்
புலம்பல் இல்ல இனி அழுகையில்ல
இன்று புசித்து கொடுத்து கொண்டாடுவோம்
துதித்து துதித்து மகிழ்ந்திருப்போம்
துயரம் அனைத்தும் மறந்திருப்போம்

2. கர்த்தருக்குள் நாம் மகிழ்ந்திருந்தால்
அது தானனே நமது பெலன்
எத்தனையோ நன்மை செய்தவரை
இன்று ஏற்றி போற்றி புகழ்ந்திடுவோம்

3. நன்றியோடும் புகழ் பாடலோடும்
அவர் வாசலில் நுழைந்திடுவோம்
நல்லவரே கிருபையுள்ளவரே
என்று நாளெல்லாம் உயர்த்திடுவோம்

4. புலம்பலுக்கு பதில் ஆனந்தமே
இன்று ஆனந்தம் ஆனந்தமே
ஒடுங்கிப் போன ஆவி ஓடிப்போச்சு
இன்று உற்சாக ஆவி வந்தாச்சு

5. துயரத்துக்கு பதில் ஆறுதலே
இன்று ஆறுதல் ஆறுதலே
சாம்பலுக்கு பதில் சிங்காரமே
இன்று சிங்காரம் சிங்காரமே

6. கர்த்தர் தாமே நம்மை உண்டாக்கினார்
அவரின் ஜனங்கள் நாம்
அவர் தாமே நம்மை நடத்துகின்றார்
அவரின் ஆடுகள் நாம்

Thuthiyin Aadai Aninthu
Thuyaram Ellaam Maranthu
Thuthithu Magilnthiruppom – Nam
Thooyavaril Makilnthiruppom

1. Intha Naal Karthar Thantha Naal
Ithilae Kalikooruvom
Pulambal Illa Inni Alugaiyilla
Indru Pusithu Koduthu Konndaaduvom
Thuthithu Thuthithu Makilnthiruppom
Thuyaram Anaithum Maranthiruppom

2. Kartharukkul Naam Makilnthirunthaal
Athu Thaananae Namathu Belan
Ethanaiyo Nanmai Seithavarai
Indru Yetti Potti Pukalnthiduvom

3. Nandriyodum Pugal Paadalodum
Avar Vaasalil Nulainthiduvom
Nallavarae Kirubaiyullavarae
Endru Naalellaam Uyarthiduvom

4. Pulambalukku Pathil Aananthamae
Indru Aanantham Aananthamae
Odungi Pona Aavi Otippochu
Indru Ursaaga Aavi Vanthaachu

5. Thuyarathukku Pathil Aaruthalae
Indru Aaruthal Aaruthalae
Saampalukku Pathil Singaaramae
Indru Singaaram Singaaramae

6. Karthar Thaamae Nammai Undaakinaar
Avarin Janangal Naam
Avar Thaamae Nammai Nadathukindrar
Avarin Aadukal Naam

Nandri Nandri Endru – நன்றி நன்றி என்று

Nandri Nandri Endru
நன்றி நன்றி என்று நன்றி நன்றி என்று
நாள்முழுதும் துதிப்பேன்
நாதா உம்மைத் துதிப்பேன்
1. காலையிலும் துதிப்பேன்
மாலையிலும் துதிப்பேன்
மத்தியத்திலும் துதிப்பேன்
இரவினிலும் துதிப்பேன்
2. உண்ணும்போதும் துதிப்பேன்
உறங்கும் போதும் துதிப்பேன்
அமரும்போதும் துதிப்பேன்
நடக்கும் போதும் துதிப்பேன்
3. வாழ்த்தும் போதும் துதிப்பேன்
தாழ்த்தும்போதும் துதிப்பேன்
நெருக்கத்திலே துதிப்பேன் -பிறர்
வெறுக்கும் போதும் துதிப்பேன்
4. சகாயரே தயாபரரே
சிநேகிதரே என் சிருஷ்டிகரே
5. சத்தியமே என் நித்தியமே
என் ஜீவனே நல் ஆயனே
6. உன்னதரே உயர்ந்தவரே
என் பரிகாரியே பலியானீரே

Jebam Kelum – ஜெபம் கேளும்

Jebam Kelum

ஜெபம் கேளும்.. பதில் தாரும்
அதிசயம் செய்யும் ஐயா – 2

1. நூறு கோடி என் ஜனங்கள்
ஏழு லட்சம் கிராமங்கள்
இயேசுவை காண வேண்டும் – 2

2. உமக்கெதிராய் செயல்படுவோர்
உம் பாதம் வர வேண்டும்
உமக்காய் வாழ வேண்டும் – 2

3. இந்தியாவை பாழாக்கும்
அந்தகார வல்லமைகள்
அகன்று போக வேண்டும் – 2

4. நாடாளும் தலைவர்களை
நாள்தோறும் பாதுகாத்து
ஞானத்தால் நிரப்ப வேண்டும் – 2

5. மரித்துப்போன மனிதரெல்லாம்
உம் குரலைக் கேட்டு இன்று
மறுவாழ்வு பெற வேண்டும் – 2

6. மிஷனரி ஊழியங்கள்
மென்மேலும் பெருக வேண்டும்
உண்மையாய் உழைக்க வேண்டும் – 2

7. சிலைகள் வழிபாடு
செயலற்றுப் போக வேண்டும்
நற்செய்தி பரவ வேண்டும் – 2

8. ஆளும் தலைவர்கள் கூட்டம்
உம் நாமம் சொல்ல வேண்டும்
உமக்கே அஞ்ச வேண்டும் – 2

Jebam Kelum.. Pathil Thaarum
Adhisayam Seiyum Iyya – 2

1. Nooru Kodi En Janangal
Yezhu Latcham Kraamangal
Yesuvai Kaana Vendum – 2

2. Umakkethiraai Seyalpaduvor
Um Paatham Vara Vendum
Umakkaai Vaazha Vendum – 2

3. Indhiyaavai Paazhaakkum
Anthakaara Vallamaigal
Agandru Poga Vendum – 2

4. Naadaalum Thalaivargalai
Naalthorum Paathukaathu
Gnanaththaal Nirappa Vendum – 2

5. Mariththupona Manitharellaam
Um Kuralaik Kettu Indru
Maruvaazhvu Pera Vendum – 2

6. Missionary Oozhiyangal
Menmelum Peruga Vendum
Unmaiyaai Uzhaikka Vendum – 2

7. Silaigal Vazhipaadu
Seyalattru Poga Vendum
Narseithi Parava Vendum – 2

8. Aalum Thalaivargal Koottam
Um Naamam Solla Vendum
Umakke Anja Vendum – 2

Mudiyathu Mudiyathu – முடியாது முடியாது

Mudiyathu Mudiyathu
முடியாது முடியாது
உம்மைப் பிரிந்து எதையும் செய்ய
முடியாது முடியாது -என்னால் (இயேசையா)
1. திராட்சை செடியே உம் கொடி நான்
உம்மோடு இணைந்து உமக்காய் படர்ந்து
உலகெங்கும் கனி தருவேன்
2. மண்ணோடு நான் ஒட்டி உள்ளேன்
உமது வார்த்தையால் இந்நாளில் என்னை
உயிர்ப்பியும் என் தெய்வமே
3. பெலப்படுத்தும் என் கிறிஸ்துவினால்
விருப்பம் போல் வனைந்துக் கொண்டு
உலகெங்கும் பயன்படுத்தும்
4. பெலப்படுத்தும் என் கிறிஸ்துவினால்
எதையும் செய்திட பெலனுண்டு
எல்லாம் நான் செய்திடுவேன்
எல்லாம் நான் செய்திடுவேன்
உம் துணையால், உம் கரத்தால்
எல்லாம் நான் செய்திடுவேன் -இயேசையா
5. பூமியிலே பரதேசி நான் -உமது
வார்த்தையை ஒருபோதும் எனக்கு
மறைத்து விடாதேயும்

Povas Povas – போவாஸ் போவாஸ்

Povas Povas
போவாஸ் போவாஸ்
போர்வையால் என்னை மூடுமையா
இயேசையா இயேசையா உம்
அன்பினால் என்னை மூடுமையா

1. உந்தன் அடிமை நான் ஐயா-என்னைக்
காப்பாற்றும் கடமை உமக்கையா

2. நிறைவான பரிசுத நீர்தானையா – உம்
நிழல் தானே தங்கும் சொர்க்கமையா

3. வேதனையோ வேறு சோதனையோ
எதுவும் என்னை பிரிக்காதையா

4. ஓய்வின்றி கதிர்கள் பொறுக்கிடுவேன்
வேறொரு வயல் நான் போவதில்லை

5. கற்றுத்தாரும் நான் கடைபிடிப்பேன்
சொல்வதை செய்து முடித்திடுவேன்

6. போர்வை விரித்தேன் போடுமையா
கோதுமையால் என்னை நிரப்புமையா

7. திருப்தியாக்கும் என் திரு உணவே
தாகம் தீர்க்கும் ஜீவத்தண்ணீரே