Song Tags: Berchmans Cross Songs

Appa Um Patham – அப்பா உம் பாதம்

Appa Um Patham
அப்பா உம் பாதம் அமர்ந்துவிட்டேன்
அன்பின் தகப்பன் நீர்தானைய்யா
செய்த பாவங்கள் கண்முன்னே
வருந்துகிறேன் நான் கண்ணீரோடு

என்னைக் கழுவி
கழுவி தூய்மையாக்கும்
கல்வாரி இரத்தத்தாலே
நான் பனியைப்
போல வெண்மையாவேன்
முற்றிலும் வெண்மையாவேன் – இயேசையா – 4

துணிகரமாய் நான் தவறு செய்தேன்
துணிந்து பாவம் செய்தேன்
நோக்கிப் பார்க்க பெலனில்லையே
தூக்கி நிறுத்தும் என் தெய்வமே – என்னைக்

கிழக்கு மேற்கு உள்ள தூரம்
உந்தன் இரக்கம் உயர்ந்ததையா
இல்லையே எல்லை உம் அன்பிற்கு
இரக்கத்தின் செல்வந்தர் நீர்தானைய்யா

என் குற்றங்கள் நீர் நினைவு கூர்ந்தால்
உம்முன்னே நிற்க முடியாதையா
தகப்பன் மகனை மன்னிப்பதுபோல்
மன்னிக்கும் தெய்வம் நீர்தானையா

முள்முடி கிரீடம் பார்க்கின்றேன்
முகமெல்லாம் இரத்தம் காண்கின்றேன்
ஜீவன் தந்தல்லோ மீட்டீரையா
தேவனே நான் என்ன சொல்வேன்

அப்பா உம் பாதம் அமர்ந்துவிட்டேன்
அன்பின் தகப்பன் நீர்தானையா
கிருபையின்படியே மனமிரங்கி
மீட்பின் மகிழ்ச்சி தந்தீரையா
இயேசையா நன்றி – 4

Yesu Kirusthuvin Rathame – இயேசு கிறிஸ்துவின் திரு இரத்தமே

Yesu Kirusthuvin Rathame
இயேசு கிறிஸ்துவின் திரு இரத்தமே
எனக்காய் சிந்தப்பட்ட திரு இரத்தமே-2

இயேசுவின் இரத்தம் இயேசுவின் இரத்தம்-2
எனக்காய் சிந்தப்பட்ட இயேசுவின் இரத்தம்-இயேசு

1. பாவ நிவிர்த்திச்செய்யும் திரு இரத்தமே
பரிந்து பேசுகின்ற திரு இரத்தமே-2
பரிசுத்தர் சமுகம் அணுகி செல்ல
தைரியம் தரும் நல்ல திரு இரத்தமே-2 -இயேசுவின்

2. ஒப்புரவாக்கிடும் திரு இரத்தமே
உறவாட செய்திடும் திரு இரத்தமே-2
சுத்திகரிக்கும் வல்ல திரு இரத்தமே
சுகம் தரும் நல்ல திரு இரத்தமே-2 -இயேசுவின்

3. வாதை வீட்டிற்குள் வராதிருக்க
தெளிக்கப்பட்ட நல்ல திரு இரத்தமே-2
அழிக்க வந்தவன் தொடாதபடி
காப்பாற்றின நல்ல திரு இரத்தமே-2 -இயேசுவின்

4. புதிய மார்க்கம் தந்த திரு இரத்தமே
புது உடன்படிக்கையின் திரு இரத்தமே-2
நித்திய மீட்பு தந்த திரு இரத்தமே
நீதிமானாய் நிறுத்தின திரு இரத்தமே-2 -இயேசுவின்

Magimai Adaiyum Yesu – மகிமையடையும் இயேசு

Magimai Adaiyum Yesu
மகிமையடையும் இயேசு ராஜனே
மாறாத நல்ல மேய்ப்பனே
உந்தன் திருநாமம் வாழ்க
உலகெங்கும் உம் அரசு வருக – வருக

1. உலகமெல்லாம் மீட்படைய
உம் ஜீவன் தந்தீரையா

2. பாவமெல்லாம் கழுவிடவே
உம் இரத்தம் சிந்தினீரே

3. சாபமெல்லாம் போக்கிடவே
முள்முடி தாங்கினீரே

4. என் பாடுகள் ஏற்றுக் கொண்டார்
என் துக்கம் சுமந்தீரையா

5. கசையடிகள் உனக்காக
காயங்கள் உனக்காக

6. நோய்களெல்லாம் நீக்கிடவே
காயங்கள் பட்டீரையா

Oppukoduthir Ayya – ஒப்புக் கொடுத்தீர் ஐயா

Oppukoduthir Ayya
ஒப்புக்கொடுத்தீர் ஐயா
உம்மையே எனக்காக
உலகின் இரட்சகரே
உன்னத பலியாக

1. எங்களை வாழவைக்க சிலுவையில் தொங்கினீர்
நோக்கிப் பார்த்ததினால்
பிழைத்துக் கொண்டோம் ஐயா

2. நித்திய ஜீவன் பெற நீதிமானாய் மாற
ஜீவன்தரும் கனியாய் சிலுவையில் தொங்கினீர்

3. சுத்திகரித்தீரே சொந்த ஜனமாக
உள்ளத்தில் வந்தீர் ஐயா உமக்காய் வாழ்ந்திட

4. பாவத்திற்கு மரித்து நீதிக்குப் பிழைத்திட
உம் திரு உடலிலே என் பாவம் சுமந்தீர் ஐயா

5. என்னையே தருகிறேன் ஜீவ பலியாக
உகந்த காணிக்கையாய் உடலைத் தருகிறேன்

Oppukoduthir Ayya
Ummaiyae Enakkaaka
Ulakin Iratchakarae
Unnatha Paliyaaka

1. Engalai Vaalavaikka Siluvaiyil Thongineer
Nnokkip Paarththathinaal
Pilaiththuk Konntoom Aiyaa

2. Niththiya Jeevan Pera Neethimaanaay Maara
Jeevantharum Kaniyaay Siluvaiyil Thongineer

3. Suththikariththeerae Sontha Janamaaka
Ullaththil Vantheer Aiyaa Umakkaay Vaalnthida

4. Paavaththirku Mariththu Neethikkup Pilaiththida
Um Thiru Udalilae En Paavam Sumantheeraiyaa

5. Ennaiyae Tharukiraen Jeeva Paliyaaka
Ukantha Kaannikkaiyaay Udalaith Tharukiraen

Manathurugum Deivame – மனதுருகும் தெய்வமே

Manathurugum Deivame
மனதுருகும் தெய்வமே இயேசையா
மனதாரத் துதிப்பேன் ஸ்தோத்தரிப்பேன்
நீர் நல்லவர் சர்வ வல்லவர்
உம் இரக்கத்திற்கு முடிவே இல்லை
உம் அன்பிற்கு அளவே இல்லை
அவை காலைதோறும் புதிதாயிருக்கும்

1. மெய்யாக எங்களது
பாடுகளை ஏற்றுக் கொண்டு
துக்கங்களை சுமந்து கொண்டீர் – ஐயா

2. எங்களுக்கு சமாதானம்
உண்டுபண்ணும் தண்டனையோ
உம்மேலே விழுந்ததையா – ஐயா

3. சாபமான முள்முடியை
தலைமேலே சுமந்து கொண்டு
சிலுவையிலே வெற்றி சிறந்தீர் – ஐயா

4. எங்களது மீறுதலால்
காயப்பட்டீர் நொறுக்கப்பட்டீர்
தழும்புகளால் சுகமானோம் – உந்தன்

5. தேடிவந்த மனிதர்களின்
தேவைகளை அறிந்தவராய்
தினம் தினம் அற்புதம் செய்தீர் – ஐயா

Manathurugum Deivame
Manathurukum Theyvamae Iyaesaiyaa
Manathaarath Thuthippaen Sthoththarippaen
Neer Nallavar Sarva Vallavar
Um Irakkaththirku Mutivae Illai
Um Anpirku Alavae Illai
Avai Kaalaithorum Puthithaayirukkum

1. Meyyaaka Engalathu
Paadukalai Aettuk Konndu
Thukkangalai Sumanthu Konnteer – Iyaa

2. Engalukku Samaathaanam
Unndupannnum Thanndanaiyo
Ummaelae Vilunthathaiyaa – Iyaa

3. Saapamaana Mulmutiyai
Thalaimaelae Sumanthu Konndu
Siluvaiyilae Vetti Sirantheer – Iyaa

4. Engalathu Meeruthalaal
Kaayappattir Norukkappattir
Thalumpukalaal Sukamaanom – Unthan

5. Thaetivantha Manitharkalin
Thaevaikalai Arinthavaraay
Thinam Thinam Arputham Seytheer – Iyaa

Kalangathe Kalangathe Karthar – கலங்காதே கலங்காதே

Kalangathe Kalangathe Karthar
கலங்காதே கலங்காதே
கர்த்தர் உன்னை கைவிடமாட்டார்

1. முள்முடி உனக்காக
இரத்தமெல்லாம் உனக்காக
பாவங்களை அறிக்கையிடு
பரிசுத்தமாகிவிடு – நீ

2. கல்வாரி மலைமேலே
காயப்பட்ட இயேசுவைப் பார்
கரம் விரித்து அழைக்கின்றார்
கண்ணீரோடு ஓடி வா – நீ

3. காலமெல்லாம் உடனிருந்து
கரம்பிடித்து நடத்திச் செல்வார்
கண்ணீரெல்லாம் துடைப்பார்
கண்மணி போல் காத்திடுவார் – உன்னை

4. உலகத்தின் வெளிச்சம் நீ
எழுந்து ஒளி வீசு
மலைமேல் உள்ள பட்டணம் – தம்பி (நீ)
மறைவாக இருக்காதே

5. உன் நோய்கள் சுமந்து கொண்டார்
உன் பிணிகள் ஏற்றுக்கொண்டார்
நீ சுமக்கத் தேவையில்லை
விசுவாசி அது போதும்

6. உலகம் உன்னை வெறுத்திடலாம்
உற்றார் உன்னைத் துரத்திடலாம்
உன்னை அழைத்தவரோ
உள்ளங்கையில் ஏந்திடுவார்

Kalangaathae Kalangaathae
Karththar Unnaik Kaividamaattar

1. Mulmuti Unakkaaka
Iraththamellaam Unakkaaka
Paavangalai Arikkaiyidu
Parisuththamaaki Vidu – Nee

2. Kalvaari Malaimaelae
Kaayappatta Yesuvaip Paar
Karam Viriththu Alaikkintar
Kannnneerodu Oti Vaa – Nee

3. Kaalamellaam Udan Irunthu
Karampitiththu Nadaththich Selvaar
Kannnneerellaam Thutaippaar
Kannmanni Pol Kaaththiduvaar – Unnai

3. Ulakaththin Velichcham Nee
Elunthu Oli Veesu
Malaimael Ulla Pattanam – Thampi (Nee)
Maraivaaka Irukkaathae

4. Un Nnoykal Sumanthu Konndaar
Un Pinnikal Aettuk Konndaar
Nee Sumakkath Thaevaiyillai
Visuvaasi Athu Pothum

5. Ulakam Unnai Veruththidalaam
Uttaar Unnaith Thuraththidalaam
Unnai Alaiththavaro
Ullangaiyil Aenthiduvaar